Saturday, June 19, 2010

ஆண்டு நிறைவு

பதிவுகள் தொடங்கி இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. பதிவுகள் தொடங்கிய முதல் மூன்றாண்டுகள் நிறைய எழுதினேன். ஆனால் இப்பொழுது அதிகம் எழுத நேரம் இல்லை. திரட்டிகளில் இருந்து விலகியும் விட்டேன். பின்னூட்டங்களும் அதிகம் இடுவதில்லை. நட்பு வட்டமும் அவ்வளவாக இப்பொழுது இல்லை.

இருந்தாலும் தமிழில் எழுதும் ஆர்வம் மட்டும் இன்னும் குறையவில்லை. தமிழ்மணத்தில் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். இப்பொழுது எழுதும் பலர் இன்னும் சிறப்பாக எழுதுகிறார்கள். முன் போல அரசியல் அவ்வளவாக இல்லை. மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.