Sunday, May 23, 2010

மங்களூர் விமான விபத்து



இறந்தவர்களுக்கு எனது அஞ்சலிகள். அவர்களின் ஆத்மாக்களுக்கு இறைவன் சாந்தி அளிக்கட்டும்.

Saturday, May 15, 2010

Learn to say "No"

"A 'No' uttered from the deepest conviction is better than a 'Yes' merely uttered to please, or worse, to avoid trouble." – Mahatma Gandhi

பொதுவாக யாருக்குமே "இல்லை", "கிடையாது", "முடியாது" போன்ற சொற்களை சொல்ல பிடிப்பதே இல்லை, என்னையும் சேர்த்து. முதல் காரணம் யாரையும் காயப்படுத்தவோ இல்லை ஏமாற்றவோ விரும்பாத மனம், இரண்டாம் காரணம் உறவுகள் முறிந்துவிடுமோ என்ற பயம். அதனாலேயே "சரி" என்று கூறுவது நமக்கு இலகுவாகிறது. ஆனால் "சரி" என்ற பதில் அதனுடன் முடிந்து விடுவதில்லை. "முடியாது" என்று கூறுவதில் சில சங்கடங்கள் உள்ளது போலவே "சரி" என்று சொல்வதிலும் சில சங்கடங்கள் உள்ளது. என்ன பல நேரங்களில் அது நமக்கு தெரிவதில்லை.

நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு முறை ஏதோ ஒன்றுக்கு நாம் "சரி" என்று கூறும் பொழுதும் வேறு ஏதோ ஒன்றுக்கு "முடியாது" என்ற மறைமுக பதிலை அளிக்கிறோம்.

உதாரணத்திற்கு,

1. நமக்கு பிடிக்காத ஒரு திருமணத்திற்கு "சரி" என்று கூறும் பொழுது, நமக்கு பிடித்த திருமணத்திற்கு "முடியாது" என்று கூறி மறுத்தளிக்கிறோம்.
2. நமக்கு பிடிக்காத ஒரு வேலைக்கு "சரி" என்று கூறும் பொழுது, நமக்கு பிடித்த வேலைக்கு "முடியாது" என்று கூறி மறுத்தளிக்கிறோம்.
3. வார இறுதியில் வேலைக்கு வர மேலாளரிடம் "சரி" என்று கூறும் பொழுது, வீட்டில் உள்ளவர்களிடம் நேரம் ஒதுக்க "முடியாது" என்று கூறி மறுத்தளிக்கிறோம்.
4. தேவை இல்லாத செயல்களுக்கு "சரி" என்று கூறும் பொழுது தேவையான செயல்களுக்கு "முடியாது" என்று கூறி மறுத்தளிக்கிறோம்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் பலரது வாழ்க்கையை கூர்ந்து கவனித்தோமானால் அவர்கள் சரியான நேரத்தில் கிடைத்த வாய்ப்பிற்கு "சரி" கூறியதுடன் நில்லாமல் தவறான பல வாய்ப்புகளுக்கு சரியாக "முடியாது" என்ற பதிலை அளித்திருப்பார்கள்.

நீங்கள் உங்களை நேசிக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையை நேசிக்கிறீர்களா? உங்கள் கனவுகளை நேசிக்கிறீர்களா? உங்கள் தொழிலை நேசிக்கிறீர்களா? உங்கள் குடும்பத்தை நேசிக்கிறீர்களா? உங்கள் நேரத்தை நேசிக்கிறீர்களா? இதற்கான பதில் "ஆம்" என்றால், இவற்றினை மதிக்காத எந்த ஒரு செயலுக்கும் நீங்கள் "முடியாது" என்ற பதிலையே அளிக்க வேண்டும்.



இனி எவ்வாறு இலகுகாக "முடியாது" என்று மறுத்தளிப்பது என்பதை பார்க்கலாம்.

1. உங்கள் சிந்தனையில் தெளிவாக இருங்கள்

பல நேரங்களில் நாம் "சரி" என்று கூறுவதன் காரணம், நமக்கு "முடியாது" என்று மறுத்தளிக்க போதுமான காரணம் தெரியாதது தான். கவனிக்கவும், "முடியாது" என்று மறுத்தளிக்க நமக்கு காரணம் இல்லாமல் இல்லை. ஆனால் அது என்ன என்று தெரியாததினால் பல நேரங்களில் "சரி" என்று கூறிவிடுகிறோம். அதனால் தான் சொன்னேன் உங்கள் சிந்தனையில் தெளிவாக இருங்கள் என்று. உங்களுக்கு தெளிவான சிந்தனை இருந்தால், ஒரு செயலை தொடங்கு முன், இது தேவையா? இல்லையா? அவசியமா? அவசியம் இல்லையா? என்று பகுத்தறிந்து பதிலை அளிக்க முடியும்.

2. "சரி" என்று கூறுவதன் பின்விளைவுகளை உணர்ந்து கொள்ளுங்கள்

பல நேரங்களில் நாம் சிறு சிறு செயல்கள் தானே என்று நம்மால் இயலாது என்ற நிலையிலும் "சரி" என்று சொல்லிவிடுகிறோம். அதன் பின்விளைவுகளை பற்றி அறிந்து கொள்ளாமல். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல பல சிறு செயல்கள் சேர்ந்து பெரியதாகி நம்மால் நமக்கு தேவையான எந்த முக்கியமான செயலையும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம். இன்னும் சில நேரங்களில் "சரி" என்று ஒப்புக் கொண்டு நம்மால் செய்ய முடியாமல் போனால் தேவை இல்லாத வருத்தங்களும், ஏமாற்றங்களும் ஏற்படும்.

3. "முடியாது" என்று கூறுவது ஒன்றும் பெரிய பாவம் இல்லை என்பதை உணருங்கள்

நம்மிடம் முடியுமா? இல்லை முடியாதா? என்ற ஒரு கேள்வி கேட்கப்படும் பொழுது "முடியும்" என்று சொல்வதற்கு நமக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமை "முடியாது" என்று சொல்வதற்கும் இருக்கிறது. அப்படி சொல்வதினால் நம்மை தவறாக நினைப்பார்களோ? நம் மீது கோபம் கொள்வார்களோ? நம்மை பற்றிய அவதூறாக பேசுவார்களோ? அவர்கள் மனது புண்பட்டு விடுமோ? என்ற கவலையெல்லாம் தேவையற்றது. வாழ்வில் இன்பமும், துன்பமும் கலந்து இருப்பதை போலவே, கேள்விகளுக்கு "சரி", தவறு", "முடியும்", "முடியாது" போன்ற பதில்களும் கலந்தே இருக்கின்றன. ஒருவரால் வாழ்நாள் முழுதும் "சரி" என்ற பதிலை எல்லா கேள்விகளுக்கும் அளித்துக் கொண்டே இருக்க முடியாது. அப்படி ஒரு வேளை யாராவது நீங்கள் அளித்த "முடியாது" என்ற பதிலால் உங்கள் மீது கோபம் கொண்டாலும், அதனால் வருந்த தேவை இல்லை. நூறு முறை "முடியும்" என்று சொல்லி விட்டு நூற்றியோராவது முறை "முடியாது" என்று சொல்லி நட்பை கெடுத்துக் கொள்வதை விட முதல் முறையே அப்படி சொல்லி கெடுத்துக் கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறில்லை.

4. மரியாதையாக மறுத்தளியுங்கள்

"இல்லை", "கிடையாது", "முடியாது" போன்ற பதில்கள் கத்தியின் மீது நடப்பதினை போன்றது. சரியாக சொல்லத் தவறினால் அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். "முடியாது" என்று கூறுவதினாலேயே மற்றவரின் மீது நமக்கு மரியாதை இல்லை என்று பொருள் இல்லை. அதனால் மிகவும் மரியாதையுடன் மறுத்தளியுங்கள். தன்மையாக கூறுங்கள். எழுத்தின் மூலம் தெரியப் படுத்த வேண்டும் என்றால் முதலில் எழுதியதை ஒருமுறைக்கு நான்கு முறை படித்து பாருங்கள். தொலைப் பேசியிலோ, நேரிலோ தெரியப் படுத்த வேண்டும் என்றால் குரலில் அமைதி தெரியவேண்டும். பதட்டத்துடனோ இல்லை கோபமாகவோ எதையும் மறுக்க கூடாது. முடிந்தால் அவர்களுக்கு மாற்று ஆலோசனை கூறுங்கள். தாங்கள் மறுப்பதற்கான காரணத்தையும் அமைதியாக கூறுங்கள்.

5. மாற்று பதில்களை தேடுங்கள்

பல நேரங்களில் நமக்கு முன் பின் தெரியாதவர்கள் அல்லது நன்கு பழக்கம் இல்லாதவர்கள் நம்மால் அளிக்க முடியாத உதவியை கேட்க நேரிடும். அத்தகைய நேரங்களில் பதிலை தாமதமாக அனுப்பியோ இல்லை பதிலே அனுப்பாமலோ கூட நமது மறுமொழியை அளிக்கலாம். No reply is also a form of reply.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், "முடியாது" என்று மறுத்தளிப்பது பல நேரங்களில் அவசியமான ஒன்று. அதை எப்படி செய்வது என்று புறிந்து செய்யுங்கள். வெற்றி உங்களுக்கே.

Sunday, April 18, 2010

நியூசிலாந்து - 4

Christchurch

A view from Christchurch gondala.

Christchurch

Cathedral Square

Christchurch

Taken during a trip from Christchurch to Greymouth.

Queenstown

Taken from Lake Wakatipu.

Queenstown

Taken during trip to Milford Sound.

Queenstown

Another view of lake Wakatipu.

Queenstown

Lake Wakatipu again.

Queenstown

Lake Wakatipu taken from the top of Queenstown gondala.

Milford Sound

On the way to Milford Sound from Queenstown.

Milford Sound

Another view from Milford Sound.

Milford Sound

A view from Milford Sound.

Milford Sound

Milford Sound near Queenstown.

Orewa Beach

Beautiful Orewa Beach near Auckland.

Muriwai Beach

My nephew Abhishek playing in Muriwai Beach.

Muriwai Beach

A small rock in the Muriwai Beach near Auckland.

Saturday, April 10, 2010

நியூசிலாந்து - 3

Queenstown விமான நிலையத்திலிருந்து Wakatipu ஏரிக்கரையில் இருக்கும் எங்களின் ஹோட்டலுக்கு செல்லும் வழியெல்லாம் பசுமை பசுமை பசுமை. கண்கொள்ளா காட்சி. ஹோட்டலுக்கு சென்று பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள Gondala ride செல்லலாம் என்று இருந்தோம். ஆனால் அன்று ஒரே மழை. அதனால் எனது மனைவியும் அவரது சகோதரியும் ஷாப்பிங் சென்று விட, நானும், எனது மனைவியின் சகோதரியின் கணவரும் பஞ்ஜீ ஜம்பிங் சென்றோம்.

அது உலகின் முதலில் உருவான பஞ்ஜீ ஜம்பிங் இடம். Kawarau Bridge என்று பெயர். குஷி படத்தில் "மொட்டு ஒன்று மலர்ந்திட" பாடலுக்கு முன்னர் விஜய் குதிப்பாரே அந்த இடம் தான் அது. எனது முதல் அனுபவம். அருமையாக இருந்தது.

அன்று இரவு Gondala ride சென்று பின்னர் ஒரு படகு சவாரியும் சென்றோம். மறுநாள் முழுதும் Milford Sound பயணம். ஒரே நாளில் சென்று திரும்பினோம். முழுதும் கண்ணாடியினால் ஆன ஒரு பேரூந்தில் நான்கு மணி நேர பயணம். பின்னர் இரண்டு மணி நேரம் படகில் பயணம். வழி முழுதும் அருமையான காட்சிகள்.

மொத்தத்தில் அதுவும் ஒரு இனிமையான பயணமாக அமைந்தது. ஆனால் ஒரே குறை. நாங்கள் Queenstown இல் இருந்தெ அந்த மூன்று நாட்களில் தான் மும்பை தாக்குதல்கள் நடந்தன. பலர் கொன்று குவிக்கப்பட்டனர். நாங்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும் அங்கே உள்ள அனைவரும் மும்பையை பற்றி எங்களிடம் விசாரித்துக் கொண்டே இருந்தனர்.

மறுநாள் அங்கிருந்து கிளம்பி Auckland சென்றோம். நியூசிலாந்தில் இருக்கும் மிகப் பெரிய நகரம் இது. இங்கும் எங்களுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம் ஏற்பட்டது. முதல் நாள் நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து Auckland நகரத்திற்கு வருவதற்கு பேரூந்தில் பயணம் செய்தோம். ஓட்டுனரிடம் வழி விசாரித்தோம். அதற்கு அவர், நகரத்தின் பிரதான சாலையில் வண்டியை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி வந்து எங்களுக்கு வழி காட்டிவிட்டு பின்னர் சென்றார். சுமார் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வண்டி அங்கே நின்றிருக்கும். அவ்வளவு தோழமையுடன் பழகுகிறார்கள் நியூசிலாந்து மக்கள்.

அங்கே உள்ள Sky Tower உலகின் உயரமான கட்டிடங்களில் ஒன்று. அதன் மேலே சென்று நகரின் அழகை கண்டு ரசித்தோம். மேலும் அங்கே பல கடற்கரைகள் உள்ளன. Muriwai Beach அங்கே உள்ள மிக அழகான ஒரு கடற்கரை.

பத்துநாட்கள் சந்தோஷமாக கழித்துவிட்டு மனம் நிறைய மகிழ்ச்சியுடன் அமெரிக்கா வந்து சேர்ந்தோம். வாழ்வில் மறக்க முடியாத ஒரு பயண அனுபவமாக இது அமைந்தது.

அங்கு நான் எடுத்த புகைப்படங்களை முன்னரே எனது புகைப்பட பதிவில் ஏற்றி இருக்கிறேன். இருந்தாலும் அடுத்த பதிவில் இங்கும் அளிக்கிறேன்.

Wednesday, March 10, 2010

நியூசிலாந்து - 2

சரியாக நாங்கள் ஊர் கிளம்பும் அந்த நாளில் எனது மனைவிக்கு உட்ல நிலை சரியில்லை. கடுமையான இடுப்பு வலி. எதனால் என்றே தெரியவில்லை. நாங்கள் வரவில்லை என்றும் எனது மனைவியின் சகோதரியை கிளம்பும் படியும் கூறிவிட்டோம். அடுத்த நாள் அதிகாலை கிளம்ப வேண்டும். முதல் நாள் நள்ளிரவு எனது மனைவி தான் வருகிறேன் என்று கூறினார்.

உடனே துணிகளை மூட்டையாக்கி பெட்டிகளில் அடுக்கி ஒரு வழியாக கிளம்பி விட்டோம். Los Angeles மாநகரத்தில் சுமார் ஏழு மணிநேர காத்திருப்பு. அந்த நேரத்தில் நகரினை சுற்றி பார்க்க முடிவு செய்தோம். முன்னரே ஒரு முறை சென்றிருந்தாலும் இம்முறையும் அழகான அனுபவமாக அது அமைந்தது.

ஊர் சுற்றி பார்த்து விட்டு, திரும்பி வந்து, அமெரிக்க டாலர்களை நியூசிலாந்து டாலர்களாக மாற்றி ஒரு வழியாக நியூசிலாந்து செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்தோம். ஏர் நியூசிலாந்தில் இதுவே எங்கள் முதல் பயணம். எகனாமி க்ளாஸே படு அமர்களமாக இருந்தது. நல்ல லெக் ஸ்பேஸ், அருமையான உணவு, பொழுதை கழிக்க பல நல்ல படங்களின் தொகுப்பு என்று குறையே இல்லாமல் கொடுத்த காசிற்கு மேல் கூவினார்கள்.

போய் இறங்கிய இடம் Auckland. அங்கே இருந்து அடுத்த அரை மணி நேரத்தில் Christ Church செல்லும் விமானம். போய் இறங்கிய உடன் தான் தெரிந்தது எனது மனைவியின் சகோதரியின் ஒரு பெட்டி காணவில்லை என்று. உடனே அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்து விட்டு எங்கள் ஹோட்டலுக்கு வந்தோம். அங்கே நாங்கள் Ridges என்ற ஹோட்டலில் தங்கி இருந்தோம்.

Cathedral Square, Antartic Center, Gondola Ride, Tram ride என்று இரண்டு நாட்கள் பல இடங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தோம். இதற்கிடையே எங்கள் பெட்டியும் வந்து சேர்ந்தது. அடுத்த நாள் Christ Church இல் இருந்து Greymouth செல்ல ரயில் பயணம். வழி நெடுக அழகான இயற்கை காட்சிகள். மீண்டும் Greymouth இல் இருந்து Christ Church பயணம். மறக்கவே முடியாத ஒரு அனுபவம்.

அடுத்த நாள் அங்கிருந்து Queenstown செல்ல வேண்டும். அப்பொழுது எங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம் நடந்தது. முதல் நாளிரவு நாங்கள் ஊர் சுற்றிவிட்டு இரவு சுமார் 12 மணிக்கு வந்தோம். மறு நாள் காலை 4 மணிக்கு நாங்கள் கிளம்ப வேண்டும். எங்களை இறக்கிவிட்ட கார் டிரைவரையே மீண்டும் வர முடியுமா என்று கேட்டோம். அதற்கு அவர் தன்னால் வர முடியாதென்றும் ஆனால் தான் வேறு ஒருவரை அனுப்புவதாகவும் கூறினார். சிறிது அவ நம்பிக்கையுடனேயே அறைக்கு திரும்பினோம். ஆனால் சரியாக அடுத்த நாள் அதிகாலை 3:50 மணிக்கு வந்து விட்டார் அந்த டிரைவர். நாங்கள் அனைவரும் வண்டியில் அமர்ந்த உடன், அந்த டிரைவருக்கு ஒரு ஃபோன் வந்தது. அது முதல் நாள் எங்களை இறக்கிவிட்ட டிரைவரிடமிருந்து. அவர் சரியாக வந்து விட்டாரா? எங்களை ஏற்றி விட்டாரா? என்பதை அறிந்து கொள்ள. அசந்து விட்டோம்.

பின்னர் அங்கிருந்து கிளம்பி Queenstown வந்து சேர்ந்தோம்.