Saturday, March 01, 2008


அஞ்சலி!!!


பிரிவோம் சந்திப்போமின் மதுமிதா இனி பிறக்கப்போவதில்லை. தற்கால இளைஞர்களின் கனவுகளில் இனி ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் வரப்போவதில்லை. கொலையுதிர் காலம் இலையுதிர் காலமானது. கணேஷும் வசந்தும் இனி குற்றப் புலனாய்வு செய்யப் போவதில்லை. கனவுத் தொழிற்சாலை கனவாகி போனது.

இவருக்கெல்லாம் மரணம் வருமா? அதனால் என்ன? இவர் உருவாக்கிய பாத்திரங்களும் படைப்புகளும் கடைசி தமிழனின் நினைவுகளில் வாழும்.

0 Comments: