Showing posts with label பொடிமாஸ். Show all posts
Showing posts with label பொடிமாஸ். Show all posts

Monday, August 03, 2015

பொடிமாஸ் - 08/03/2015

கடந்த டிசம்பர் அல்லது ஜனவரியில் ஏதோ ஒரு நாள். தொடர்ந்து ஒரே வாரத்தில் இரு பெரும் பனிப் பொழிவுகள். வழக்கம் போல தங்கமணி உள்ளிருந்து உத்தரவு போட எனது drive way யை தனியாக சுத்தம் செய்து கொண்டிருந்தேன். முன்னரே பெய்த பனியினால் drive way இன் இரு ஓரங்களிலும் இடுப்பளவு பனிக்கட்டிகள் குவிந்து விட்டன.

மனதில் பல சிந்தனைக் குவியல்கள். அப்போது தான் ப்ரணவின் ஆசிரியர் அவன் படிப்பில் இன்னும் ஆர்வம் செலுத்த வேண்டும் என்றும், சரியாக எழுதுவது இல்லை என்றும், வகுப்பில் கவனம் செலுத்துவது இல்லை என்றும், ஏரோப்ளேன் ஓட்ட தெரியவில்லை என்றும், மல்டிபில் ரெக்ரஷன் அனாலிஸிஸ் தெரியவில்லை என்றும், அமிர்த வர்ஷினி க்கும் ஆபேரிக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றும், இப்படி இன்னும் பல இல்லை என்றும் பெரிய பட்டியல் ஒன்றை அளித்திருந்தார்.

சார் அவனுக்கு வயசு நாலு தான் ஆகுது என்று சொல்ல வந்து, ஆனால் சொற்கள் வெளிவராமல் நாவின் அடியில் அடங்கி, பெரு மூச்சாக வெளிப்பட்டது.

நான் சுத்தம் செய்வதை அறையில் இருந்து ப்ரணவ் பார்த்துக் கொண்டே இருந்தான். முன்பே சொன்னது போல அங்கே இருந்த பனிக்குவியலால் அவனுக்கு நான் சுத்தம் செய்வது சரியாக தெரியவில்லை. நான் எங்கள் வீட்டின் பனிக்கட்டிகளை எடுத்து சாலையில் போடுவது போல அவனுக்கு தெரிந்தது. உடனே தடால் புடால் என்று மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தவன், "அப்பா! you can't make a mess like this. Others will fall." என்றான். அவன் ஏன் அப்படி சொல்கிறான் என்பதை விளங்கி கொள்ளவே எனக்கு சில விநாடிகள் ஆனது.

ஒரு தகப்பனாக மிகவும் பெருமையடைந்த தருணம் அது. வெளியில் கடும் குளிர், இவனோ ஒரு மெல்லிய ஷார்ட்ஸ் மற்றும் சட்டை அணிந்திருக்கிறான். அவனுக்கே குளிர் நடுக்குகிறது. இந்த நிலையிலும், தனது தந்தையால் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்று நினைக்கும் அந்த சிவிக் சென்ஸ் இருந்தால் போதும். பெரிய படிப்பு படித்து கிழித்தவர்கள் எல்லாம் நாட்டுக்கு என்ன செய்து விட்டார்கள்?


இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க சுதந்திர தினத்தை தொடர்ந்து இங்கிலாந்து சென்றோம். ஒரு வார சுற்றுப் பயணம். மிகவும் நன்றாக இருந்தது. அதுவும் நாங்கள் சென்ற நேரத்தில் மூன்று முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் நடந்தன, விம்பிள்டன், ஆஷெஸ் கிரிக்கெட், மற்றும் ப்ரிடிஷ் க்ரான்ட் ப்ரி. எங்கு சென்றாலும் நல்ல கூட்டம். முதலில் நுழையும் போதே இமிக்ரேஷன் ஆஃபீசர் மிகுந்த நட்புடன் உரையாடினார். அமெரிக்காவில் செந்திலை பார்க்கும் கவுண்டர் போலவே மூஞ்சியை வைத்துக் கொண்டிருப்பார்கள். உள்ளே நுழையும் போதே எதற்கு இந்த ஊருக்கு வந்தோம் என்று இருக்கும். அடுத்ததாக கட்டிடங்கள் எல்லாம் பெரும்பாலும் கலோனியல் காலத்தின் பதிவுகளாகவே இருக்கின்றன. ஐந்தடுக்கு பாதாள மெட்ரோ ரயில் போக்குவரத்து. சுமார் 12 கிலோ மீட்டர்கள் பாதையை கட்டி முடித்து அது என்னால் முடிந்ததா உன்னால் முடிந்ததா என்று நம்மவர்கள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் லண்டன் மெட்ரோ 1863 ஆம் ஆண்டு தொடங்கியது என்பதை அறியும் போது நமக்கு பிரமிப்பாக இருக்கிறது. "ஊர கொள்ளையடிச்சு உலையில போட்டா ஏன் செய்ய முடியாது?" என்று எனக்கு நானே அதற்கு சமாதானமும் சொல்லிக் கொண்டேன்.

லண்டன் நகரின் பரப்பளவு சுமார் 600 சதுர மைல்கள் தான். அதனை ஒரு வட்டமாக பாவித்தால் சுமார் 25 மைல்கள் பயணம் செய்தால் அதனை முழுதுமாக கடந்து விடலாம். அப்படிப்பட்ட நகரத்தின் அடியில் சுமார் 260 மைல் நீள ரயில் பாதைகள் போடப்பட்டு இருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு காரோ, பஸ்ஸோ, டாக்சியோ தேவையே இல்லை.

பொது வெளியில் மது அருந்துவது சட்டப்படி தவறு என்றாலும் அங்கே பலர் அவ்வாறு செய்வதை பார்க்க முடிந்தது. பக்கிங்காம் மாளிகையின் வெளியே உள்ள ஒரு பகுதியில் பலர் மது அருந்திக் கொண்டிருந்ததை கண்டேன். அது போலவே லண்டனில் இருந்து மில்டன் கெய்னஸ் என்ற பகுதிக்கு வெர்ஜின் விரைவு ரயிலில் பயணம் செய்யும் போது அங்கும் பலர் மது அருந்துவதை கண்டேன்.

அடுத்ததாக என்னை ஆச்சரியப்படுத்தியது அந்நகரின் பசுமை. உலகின் மிகவும் காஸ்ட்லியான நகரில் இருந்து சுமார் 20 மைல்கள் பயணத்தில் என்னால் பல ஆடு, மாடு, மற்றும் குதிரை பண்ணைகளை பார்க்க முடிந்தது. நம்மூராக இருந்திருந்தால் லண்டனுக்கு மிக அருகில் என்று அதிகாலை இரண்டு மணிக்கு யாராவது கூவிக் கூவி விற்றுக் கொண்டிருப்பார்கள்.

அமெரிக்கர்களை விட பலர் அங்கே கட்டுக் கோப்பாக இருக்கிறார்கள். உணவின் அளவு அமெரிக்க அளவில் பாதி கூட இல்லை. சென்ற முதல் நாள் ஒரு கடையில் எக்ஸ்ட்ரா லார்ஜ் பர்ரீடோ வாங்கினோம். அது அமெரிக்க அளவில் பாதி இருந்தது. மாலை ஐந்து மணிக்கே எல்லா கடைகளையும் மூடி விடுகிறார்கள். இப்படி இருந்தால் எப்படி வியாபாரம் நடக்கும், லாபம் வரும்?

நாங்கள் சென்ற நேரம் கோடை காலம் ஆனதால் இரவு 11 மணி வரை வெளிச்சம் இருந்தது. அதனால் இரவு நேர லண்டனை பெரிதாக மகிழ்ந்து அனுபவிக்க இயலவில்லை. அடுத்த முறை டிசம்பர் மாதம் செல்ல வேண்டும். மொத்தத்தில் லண்டன் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.


சென்ற வாரம் கிரீஸ் நாட்டின் வீழ்ச்சிக்கு முதலாளித்துவமே காரணம் என்று பலர் ஜல்லியடித்துக் கொண்டனர். உண்மையில் கிரீஸ் நாட்டின் வீழ்ச்சிக்கு சோஷியலிசமே காரணம். 54 வயதில் ஓய்வு, அதிக அளவு ஓய்வூதியம், வாரத்துக்கு 35 மணி நேரம் மட்டுமே வேலை, என்றெல்லாம் இருந்தால் எப்படி ஒரு நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையும்? இன்னும் 30 ஆண்டுகளில் கிரீஸ் நாட்டில் 60 வயதை கடந்தவர்கள் சுமார் 50 சதவிகிதம் இருப்பார்கள் என்று ஒரு அறிக்கை சொல்கிறது. இப்படி இருக்கும் ஒரு நாட்டில் ஓய்வூதியத்தை அளித்துக் கொண்டே இருந்தால் எப்படி? யாருடைய உழைப்பு அதனை ஈடுகட்டும்?

சோஷியலிசம் ஒரு வித sense of entitlement ஐ மக்கள் மனதில் விதைத்து விடுகிறது. மக்களை பார்த்துக் கொள்வது அரசாங்கத்தின் கடமை தான். நான் மறுக்கவில்லை. ஆனால் அது குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பெற்றோர்களின் கடமை போன்றது. ஒரு வயது வரை நாம் பார்த்துக் கொள்ளலாம், அதன் பின்னர் அவர்கள் தான் தங்கள் காலில் நிற்க வேண்டும். அமெரிக்காவில் அனைத்து குழந்தைகளுக்கும் 12 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி. அதன் பின்னர் நீ என்ன ஆனாலும், நடுத்தெருவில் நின்று பிச்சை எடுத்தாலும் அரசாங்கம் கவலைப்படாது. அதே நேரம் பணக்காரர்களாக பார்த்து அதிக வரி விதித்து அவர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையையும் அமெரிக்க அரசு செய்யாது. ஒருவன் வாழ்ந்தாலும் சரி, வீழ்ந்தாலும் சரி அமெரிக்க அரசு கண்டு கொள்ளாது. அது தான் சரி என்பது தான் என்னுடைய கருத்தும்.


50 before 50 என்பதை இலக்காக வைத்திருக்கிறேன். இது வரை பல நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். குறைந்த பட்சம் ஒரு வாரம் தங்கிய நாடுகள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் அந்த எண்ணிக்கை ஒன்பது. வயதாகிக் கொண்டே போகிறது. குழந்தை, படிப்பு என்றாகிவிட்ட பிறகு முன்பு போல பயணம் செய்ய இயலவில்லை. ஆனாலும் செய்ய வேண்டும் என்ற ஆவல் அப்படியே இருக்கிறது.

சென்ற ஆண்டு தான் ஜே கண்ணையன் பற்றி அறிந்தேன். அமெரிக்காவில் நல்ல வேலை வாய்ப்பு, வசதி என்று இருந்தவர், அவை அனைத்தையும் விட்டு விட்டு தனது மோட்டர் சைக்கிளில் உலகம் முழுதும் பயணம் செய்ய தொடங்கினார். அமெரிக்காவில் தொடங்கி, மெக்சிகோ சென்று, அனைத்து தென் அமெரிக்க நாடுகளையும் கடந்து, தென் கோடிக்கு சென்று அங்கிருந்து ஐரோப்பா கப்பலில் சென்று, அங்கிருந்து ஆப்ரிக்கா வந்து, ஆப்ரிக்காவின் தென் கோடி வரை வந்து, அங்கிருந்து இந்திய தென் கோடிக்கு கப்பலில் வந்து, பின்னர் அங்கிருந்து லடாக் சென்று தனது பயணத்தை முடித்திருக்கிறார். இந்த பயணத்தை மேற்கொள்ள அவருக்கு மூன்று ஆண்டுகள் ஆனது. இப்போது இந்தியாவில் இருந்து இது போன்ற பயணங்களை ஏற்பாடு செய்யும் நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் நான் அறிந்து மிகவும் வியந்த ஒரு நபர்.

அவரை பற்றி அறிந்து கொள்ள http://jamminglobal.com/ தளத்திற்கு செல்லவும்.


Put Chutney தளத்தை முன்பே அறிமுகப்படுத்தி இருக்கிறேனா என்பது தெரியவில்லை. அவர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ. அட்டகாசம். நீங்கள் மார்வெல் காமிக்ஸ் ரசிகராக இருந்தால் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.



Sunday, April 26, 2015

பொடிமாஸ் - 04/26/2015

நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் பீதியை ஏற்படுத்துகிறது. மலை பிரதேசம் என்பதால் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. சுமார் 3000 உயிர்களை இதுவரை பலி வாங்கியுள்ளது. இறந்தவர்களுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தினர் அனைவரும் இதிலிருந்து மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்.


கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் பரிந்துரைத்த திருநங்கைகளுக்கான தனி உரிமை மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. இதில் குறிப்பிட வேண்டியது இது ஒரு தனிநபர் மசோதா என்பது தான். சுமார் 45 ஆண்டுகளுக்கு பின்னர் பாராளுமன்றத்தில் நிறைவேறிய ஒரு தனி நபர் மசோதா இது தான்.

இந்தியாவில் திருநங்கைகளின் வாழ்வு மிகவும் கவலைக்கிடமாகவே இருக்கிறது. திருநங்கைகளின் முன்னேற்றத் திட்டங்களுக்கு தேசிய அளவிலான கொள்கை உருவாக்கவும், அவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளைத் தடுக்கவும் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா பெரிதும் உறுதுணையாக இருக்கும்.

திருச்சி சிவா திருச்சியை சேர்ந்தவர் மட்டும் அல்ல, நான் படித்த ஈ. ரெ. மேல்நிலை பள்ளியில் படித்தவர். சென்ற ஆண்டு தான் அவரது துணைவியார் தனது இன்னுயிரை நீத்தார். அந்த நிலையிலும் பொது வாழ்க்கையில் இருந்து விலகாமல் தொடர்ந்து அவர் உழைப்பது எனக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது.

சக திருச்சிக்காரனாக மட்டும் அல்ல, சக பள்ளி மாணவனாகவும் அவரது சாதனைக்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.


கடந்த முறை இந்தியா சென்ற பொழுது பல நாவல்களை வாங்கி வந்தேன். அவற்றில் ஆறு சுஜாதா நாவல்களும் அடக்கம். அவை அனைத்தும் முன்னரே படித்தது தான் என்றாலும் படித்து நெடு நாட்கள் (இன்னும் சொல்ல போனால் பல வருடங்கள்) ஆகி விட்டதால் வாங்கினேன். அவற்றை படிக்க இப்போதுதான் நேரம் கிடைத்தது. அவரது கொலையுதிர் காலம் அப்போது படிக்கும் போது எனக்கு மிகவும் பிடித்தது. இப்போது மிகவும் தட்டையாக இருப்பது போல தோன்றியது. சுத்தமாக பிடிக்கவில்லை. அதே நேரத்தில் வாய்மையே சில சமயம் வெல்லும் அப்போது படிக்கும் போது ஏற்படுத்திய அதே உணர்வுகளை இப்போதும் ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் அதை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். சுஜாதா எப்போதுமே ஒரு புதிர் தான். இன்னும் இரண்டாவது காதல் கதை, பிரிவோம் சந்திப்போம் (2 பாகங்கள்), ஸ்ரீரங்கத்து தேவதைகள் எல்லாம் இருக்கின்றன. விரைவில் படித்துவிட வேண்டும்.


தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் வரும் என்பது உறுதியாகி விட்டது. தளபதியா அல்லது கேப்டனா என்பது தான் கேள்வி. கேப்டன் காய் நகர்த்த தொடங்கிவிட்டார். ஒரே நாளில் நேற்று கலைஞர், ஸ்டாலின், இளங்கோவன், வைகோ, வாசன், தமிழிசை சௌந்தர்ராஜன் என்று பல தலைவர்களை சந்தித்து பேசி இருக்கிறார். மேகதாது அணை தொடர்பாகவும், ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழர்கள் தொடர்பாகவும் பிரதமர் மோதியை சந்திக்க தலைமையேற்று இருக்கிறார். தளபதி முதல்வர் போட்டியில் இருந்தாலும் தமிழக நன்மையை ஒட்டி கனிமொழி மற்றும் திருச்சி சிவா இருவரும் கேப்டன் தலைமையில் செல்வார்கள் என்று உறுதியளித்துள்ளார். இது ஆரோக்கியமான செயலாக தெரிகிறது. நமக்குள் பல கருத்து வேறுபாடு இருந்தாலும் பொது நன்மை என்று வரும் போது நாம் ஒன்று கூடுவது அவசியம். தமிழக அரசியலில் இந்த மாற்றம் மகிழ்ச்சியை தருகிறது.


சென்ற முறை போல் இல்லாமல் இம்முறை CSK அட்டகாசமாக விளையாடி வருகிறது. இப்போது இருக்கும் ஃபார்மில் ப்ளே ஆஃபுக்கு நாம் தகுதி பெறுவது நிச்சயம் என்றே நம்புகிறேன். முரளி விஜய் இல்லாதது சற்று வருத்தம் அளித்தாலும், மெக்கல்லமும், ஸ்மித்தும் அட்டாகாசமாக விளையாடுகிறார்கள். தோனிக்கு வயசாகி விட்டது நன்றாக தெரிகிறது. முன்பு விளையாடியது போல ஷார்ட் பால்களை விளையாட அவரால் முடியவில்லை. ஆனாலும் அவரது விக்கெட் கீப்பிங்கும், தலைமையும் அட்டகாசம். லெக் ஸ்லிப், லெக் கல்லி, ஸில்லி மிட் ஆன் போன்ற இடங்களில் எல்லாம் இப்போது டெஸ்ட் போட்டிகளிலேயே ஆட்களை வைப்பது இல்லை. இவரோ T20 யில் ஆட்களை வைத்து பேட்ஸ்மேனை அவுட் ஆக்குகிறார். பேட்ஸ்மேனின் உடலசைவை வைத்தே அவரது நோக்கத்தை அறியும் இவரது திறமை அட்டகாசம்.

MS is undoubtedly the best captain in today's contemporary cricket.


சமீபத்தில் பார்த்த படங்களிலேயே மிகவும் பிடித்திருந்தது Furious 7. பால் வால்கரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஜேசன் ஸ்டேதமை கொல்லாமல் விட்டு விட்டதால் அடுத்த பகுதியிலும் அவர்தான் வில்லன் என்பது உறுதியாகி விட்டது. நான்கு வாரங்களில் உலகலவில் $1.32 பில்லியன் டாலர்கள் (சுமார் எட்டாயிரம் கோடி) கலெக்க்ஷன் செய்திருக்கிறது. தற்பொழுது உலகலவில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் மூன்றாம் இடத்துக்கு சென்றுவிடும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த படம் விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்.


சமீபத்தில் பார்த்ததில் என்னை மிகவும் கவர்ந்த வீடியோ. நீங்களும் நிச்சயம் இதனை ரசிப்பீர்கள். பார்த்து ரசியுங்கள்.



Tuesday, May 21, 2013

பொடிமாஸ் - 05/21/2013

1999 ஆம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி போட்டியில் வெல்ல முடியாமல் போனதை பற்றி லான்ஸ் க்ளூஸ்னரிடம் கேள்வி கேட்ட போது, "அதனால் என்ன? யாராவது செத்து விட்டார்களா?" என்று திருப்பி கேள்வி கேட்டாராம். உண்மையோ, பொய்யோ, நாம் அறியோம். ஆனால் இப்போது ஒன்றும் இல்லாத விஷயங்களுக்கெல்லாம் குய்யோ முறையோ என்று ஓசையிடும் நபர்களை பார்த்தால் இது தான் சொல்ல தோன்றுகிறது.

IPL மேட்சுகளில் பெட்டிங் பிரச்சனை பற்றி ஆளாளுக்கு உணர்ச்சிவசப்பட்டு ஓலமிடுகிறார்கள். IPL மேட்சுகளில் எல்லாம் பெட்டிங் இல்லாமல் இருந்தால் தான் அது செய்தி. இது போன்ற மேட்சுகள் எல்லாம் முன்கூட்டியே கொரியோக்ராஃப் செய்யப்பட்டு நமது அட்ரினல் பம்பை ஏற்றுவது போல இருக்க வேண்டும். சும்மா டொச்சு போல முதல் டீம் 200 ரன், இரண்டாவது டீம் 90 ரன் என்று இருந்தால் எவன் பார்ப்பான்.

துப்பாக்கி படத்தில் விஜய் கடைசியில் தோற்பாரா ஜெயிப்பாரா என்றா யோசிப்போம்? அவர் ஜெயிப்பார் என்று தான் குழந்தைக்கு கூட தெரியுமே. எப்படி ஜெயிப்பார் என்று தானே யோசிப்போம்.

IPL என்பது ஒரு சிலருக்கு பொழுதுபோக்கு, ஒரு சிலருக்கு பிசினஸ். யாரும் விளையாட்டுக்கு சேவை செய்ய அதை பல ஆயிரம் கோடி செலவு செய்து நடத்தவில்லை. இந்த பெட்டிங் செய்பவர்களை பிடிக்க முயற்சிக்கும் நேரத்தில் ஜாதி சண்டை போடுபவர்களையும், பிரிவினையை தூண்டுபவர்களையும், தீவிரவாதம் செய்பவர்களையும் பிடித்து தொலைக்க முயற்சி செய்தால் நலம்.

இன்னும் சொல்லப்போனால் புக்கிகளின் பணம் எல்லாம் இந்தியாவிற்குள் வருவது நன்மையே. கொஞ்சமே கொஞ்சம் கருப்பு வெளுப்பாக மாறும் வாய்ப்பு உள்ளது. இல்லை, இம்மாதிரி சூதாட்டத்தால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உங்கள் வாதமானால், டாஸ்மாக்கினால் ஏற்படும் பாதிப்பை விட சூதாட்டத்தினால் ஏற்படும் பாதிப்பு மிகவும் குறைவு என்பது எனது பதில்.

Legalize betting and tax the income.


"IPL is the tournament in which the rest of the teams compete among themselves to gain a slot in the final match against Chennai Super Kings." என்று இரண்டாண்டுகளுக்கு முன்னர் எனது நண்பர் ஒருவர் விளையாட்டாக குறிப்பிட்டார். இம்முறையும் அது உண்மையாகிவிடும் போல உள்ளது. சென்ற முறை போல இல்லாமல் இம்முறை தடுமாற்றம் ஏதும் இல்லாமல் சென்னை அரையிறுதிக்கு தேர்வாகி இருக்கிறது. இம்முறை ராஜஸ்தான் ஜெயிக்க வேண்டும் என்று நான் ஆசை படுகிறேன். டிராவிட் கோப்பையை வெல்வது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். நீங்கள் யாராவது ஷில்பா ஷெட்டியினால் தான் நான் ராஜஸ்தானை சப்போர்ட் செய்கிறேன் என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.


இப்போதெல்லாம் அம்மாவின் அரசியல் சந்தானத்தின் காமெடியை போல இருக்கிறது. ஒரு சில படங்களில் அபாரமாக இருக்கிறது, ஒரு சில படங்களில் செல்ஃப் எடுக்க மறுக்கிறது. அம்மா உணவகம் சூப்பராக இருப்பதாக நான் இந்தியா சென்ற போது ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள் சொன்னார்கள். ஒரு டீ 8 ரூபாய் விற்கிற காலத்தில் 10 ரூபாய்க்குள் காலை உணவினை முடித்துக் கொள்ளலாம் என்பது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஸ்ரீரங்கத்தில் அடுத்த உணவகம் தொடங்கப்பட இருக்கிறது என்று திருச்சியில் உள்ளவர்களும் அதனை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதே போல தொடக்கப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியும் கூடுதலாக கிடைக்கும் என்பது மகிழ்ச்சியே. ஆனால் பெயரளவில் ஆங்கில வழி கல்வி என்று இல்லாமல், ஆசிரியர்களுக்கும் முறையான பயிற்சி அளித்தால் அனைவரும் பயனடைவார்கள். இப்படி நல்லதாக ஒன்றிரண்டு இருக்க, நூறு கோடி ரூபாய் செலவில் தமிழண்ணைக்கு சிலை என்று காமெடி பீஸாக சில நேரம் மாறி விடுகிறார். கலைஞருக்கு வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர் சிலை என்று இருப்பது போல இவருக்கும் ஏதாவது தேவை படுகிறதோ என்னமோ. கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது போல அரசு பணத்தை எடுத்து செலவழிக்கிறார்.


இம்முறை இந்தியா சென்ற போது வழக்கம் போலவே, எங்கள் குல தெய்வமான குமரமலை முருகன் கோவிலுக்கு சென்றேன். கோவில் புதுக்கோட்டையிலிருந்து விராலி மலை செல்லும் வழியில் இருக்கிறது. இம்முறை சென்ற போது சித்தன்னவாசலுக்கு அருகே வெக்காளியம்மனுக்கும், வேலாங்கன்னிக்கும் கடும் போட்டியே நடந்தது. புதிதாக ஏதோ மதக் கலவரம் என்று நினைத்து விடாதீர்கள். நான் சொல்வது இரண்டு இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கிடையே நடக்கும் விளம்பர போட்டி. சாலை முழுவதும் தட்டிகள். சித்தன்னவாசலை கடந்து திருச்சி-மதுரை சாலையை தொடும் போது, மஹாத்மா காந்திக்கும் அண்ணை தெரசாவுக்கும் போட்டி. "புற்றீசல் போல" என்று சொல்லுவார்கள். ஆனால் இது அதை விட மோசமாக இருக்கிறது. எனது நண்பர் SRM பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். அவர் சொன்ன தகவலின் படி நான்கு ஆண்டு இஞ்சினியரிங் படிப்புக்கு 12 லட்சத்திலிருந்து 25 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது என்பது கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது.


நல்ல தமிழ் படம் பார்த்து நெடு நாட்களாகி விட்டது போல ஒரு தோற்றம். பரதேசிக்கு பின்னர் எதுவும் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அப்படியே ஏதாவது பார்த்திருந்தாலும் எனது நினைவில் இல்லை. சூது கவ்வும், நேரம் இரண்டும் பார்க்க ஆவல். ஆனால் இங்கே வெளியிடப்படவில்லை. தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் வரையோ அல்லது DVD வரும் வரையோ காத்திருக்க வேண்டும். இப்போது ஆவலுடன் காத்திருப்பது தலைவா மற்றும் சிங்கம் 2 படங்களுக்கு தான்.


ஒரு படத்தின் பெயர் சொன்னால் அப்படத்தின் தொடர்புடைய ஏதாவது ஒன்று, அது நல்லதோ கெட்டதோ, சட்டென்று நமக்கு நியாபகம் வரும். அது அப்படம் பார்த்த போது நடந்த நிகழ்வாக இருக்கலாம் அல்லது அப்படத்தின் காட்சிகளாக இருக்கலாம். அதுபோல ஆண் பாவம் என்றால் எனக்கு உடனே நியாபகம் வருவது இளையராஜாவின் புல்லாங்குழல் இசை. காதுகளில் உடனே ஒலிக்க தொடங்கும். நெட்டில் தேடியபோது கிடைத்தது. உங்கள் காதுகளுக்கு விருந்து.


Sunday, February 10, 2013

பொடிமாஸ் - 02/10/2013

டோண்டு சாரின் மரணம் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. தமிழ் வலையுலகமே அதை கண்டு அதிர்ந்து கொண்டிருக்கிறது. கடைசியாக எனக்கு தெரிந்து தேன் கூடு சாகரன் அவர்களின் மறைவுக்கு தான் வலையுலகம் இப்படி அதிர்ந்தது. டோண்டு - போலி டோண்டு - இரவுக் கழுகார் - ஸ்பெஷல் ஆப்பு - விடாது கருப்பு - ஸல்மா அயூப் - முரளி மனோஹர் - எல்லாவற்றுக்கும் மேலாக "தலித் கம்னாட்டி" இதையெல்லாம் நீங்கள் கடந்து வந்திருந்தால் டோண்டு கடந்து வந்த பாதையின் வீரியம் உங்களுக்கு விளங்கும்.

ஆனால் ஒன்று, இந்த போலி விவகாரத்தை பெரிதாக வளர்த்து விட்டதும் அவரே, அதனால் அதிகம் பாதிக்கப்பட்டதும் அவரே என்று மட்டும் நான் நிச்சயம் நம்புகிறேன். இந்த விவகாரத்தை அவர் சிறிது நாசூக்காகவும், டிப்ளமடிக்காகவும் கையாண்டிருக்க வேண்டும், ஆனால் செய்ய தவறி விட்டார். அவரும் பல பதிவர்களும் மூன்றாண்டுகளுக்கும் மேலாக சந்தித்த மன உளைச்சலுக்கு போலி டோண்டு எவ்வளவு காரணமோ, அதே அளவு அவரும் காரணம்.

Sir, You should have been remembered for your prodigious command over English, alluring memory power, abundant experience you carry, art of ruthlessly combining confrontation with negotiation, stubborn nature and many more.

Alas, it’s preposterous that you have been remembered for your jingoistic arguments with “Poli” Dondu and blatant display of abysmal craving for the lime light aka hits to your blog. The rationales behind which though are still unknown, I believe it is a sheer victory for “Poli” Dondu.

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச:

பொருள்: எல்லா பற்றுகளையும் விட்டு விட்டு என்னை தஞ்சம் அடை. உன்னை எல்லா பாவங்களில் இருந்தும் நான் காத்து உனக்கு மோக்ஷத்தை அளிக்கிறேன்.

டோண்டு சார், உங்கள் பெருமாள் பாபம் செய்தவர்களுக்கு கூட வைகுண்ட பதவி அளிக்கிறார். உங்களுக்கா அளிக்க மாட்டார். அங்கும் யாராவது பாப்பானை திட்டினால் அவனுடன் சண்டைக்கு போகாமல் அங்காவது நிம்மதியாக இருங்கள். RIP, good Sir.


இந்த வாரம் Parker மற்றும் Bullet to the head இரண்டு படங்களும் பார்த்தேன். இரண்டுமே ஒரு முறை பார்க்கலாம். வழக்கமான ஆக்க்ஷன் படங்கள். அடுத்த வாரம் Die Hard வெளியாகிறது. Skyfall DVD யும் வெளியாகிறது. இரண்டையும் பார்த்துவிட வேண்டும். இன்னும் ஒரு வார காலம் எவ்வளவு அராஜகம் செய்ய முடியுமோ அவ்வளவும் செய்து விட வேண்டும். ஆறு வார விடுப்புக்கு பின் தங்கமணி அடுத்த வாரம் வருகிறார். அதன் பிறகு கப் சிப் காரா பூந்தி தான்.


கடந்த வாரம் அலுவல் நண்பர் ஒருவருடன் (ஆந்திராவை சேர்ந்தவர்) பேசிக் கொண்டிருந்த போது அவர் "விஷ்வரூபம் தெலுங்கில் பார்க்க வேண்டும், படம் எப்படி இருக்கிறது?" என்று கேட்டார். நான் "நன்றாக இருக்கிறது, ஒரு முறை பார்க்கலாம்" என்று சொன்னேன். அவர் "குழந்தைகளை அழைத்து செல்லலாமா?" என்று கேட்டார். அதற்கு நான், "படத்தில் கையை வெட்டுவது, கழுத்தை அறுப்பது, நெஞ்சில் குத்தி கொல்வது போன்ற காட்சிகள் இருக்கின்றன, நீங்களே முடிவு செய்யுங்கள்" என்று சொன்னேன். உடனே அவர், "அதெல்லாம் பாதகம் இல்லை, செக்ஸ் காட்சிகள் இல்லையே?" என்றார்.

எனக்கு சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியவில்லை. வன்முறையையை விடவா, சக மனிதனை வெட்டிக்கொல்வதை விடவா செக்ஸ் ஆபத்தானது? செக்ஸ் என்றாலே கெட்ட வார்த்தை என்று கூறியே குழந்தைகளை வளர்ப்போம், பின்னர் கற்பழிப்பு குற்றங்கள் நடக்கும் போது அதனை கண்டித்து பதிவெழுதுவோம்.


அஜ்மல் கசாபை தொடர்ந்து அஃப்சல் குருவையும் போட்டாகி விட்டது. நமது அரசாங்கத்துக்கு இப்போது தான் முதுகெலும்பு இருக்கிறது என்பது கொஞ்சமாவது தெரிகிறது. இதை செயல்படுத்திய அரசாங்கத்துக்கு எனது நன்றிகள். பாராளுமன்ற தாக்குதலில் இறந்த ஏழு அப்பாவிகளின் குடும்பத்தினரும் இனி துளியாவது மகிழ்ச்சி அடைவார்கள். வழக்கம் போலவே ஒரு கூட்டம் இந்த தூக்கிற்கும் எதிராக கூச்சல் போட தொடங்கி இருக்கிறது. இந்த தூக்கு தண்டனை எதிர்ப்பாளர்கள் எல்லோரும் மேனகா காந்தி வகை பார்ட்டிகள். தெரு நாயினால் கடித்து குதறப்படும் சிறுமியின் பாதுகாப்புக்கு வராமல், நாயின் பாதுகாப்புக்கு வரும் கூட்டம் அது.


Dell நிறுவனம் தனது வீழ்ச்சியை சமாளிக்க இயலாத காரணத்தால் பங்கு வர்த்தகத்திலிருந்து வெளியேறி முழூ தனியார் நிறுவனமாக மாற இருக்கிறது. இதற்காக ஒரு தனியார் எக்விட்டியிடம் சுமார் 24 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வாங்கி இருக்கிறது. 1997 ஆம் ஆண்டு Steve Jobs Apple நிறுவனத்தில் சேர்ந்த போது பத்திரிக்கையாளர்கள் "நீங்கள் Steve Jobs இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்ட கேள்விக்கு Michael Dell பின்வருமாறு கூறினார்.

What would I do? I'd shut it down and give the money back to the shareholders.

அப்போது Apple நிறுவனம் வீழ்ச்சியின் உச்சியிலும், Dell நிறுவனம் வெற்றியின் உச்சியிலும் இருந்தன. ஆனால் இப்போது நிலைமை தலை கீழ்.

06-Aug-1997Today
Apple (price per share)$25.25$474.98
Dell (price per share)$81.62$13.63
Apple (market cap)$2.58B$446.03B
Dell (market cap)$27.3B$23.68B

"யாகாவாராயினும் நா காக்க" என்று அய்யன் வள்ளுவன் சொன்னது எவ்வளவு உண்மை.


சென்ற வாரம் முழுதும் தொலைக்காட்சியில் புரட்சி தலைவர் படங்களாக ஒளிபரப்பி தள்ளினார்கள். ஒரு நாள் நினைத்ததை முடிப்பவன், மறு நாள் குடியிருந்த கோவில், அதற்கு மறு நாள் பெரிய இடத்து பெண் என்று ஒரே ரகளையாக இருந்தது. அடிமை பெண் மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. இணையத்தில் தேடிப் பார்க்க வேண்டும்.

இதை பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, MGR படங்கள் எல்லாமா பார்ப்பீர்கள்? என்று வியப்புடன் கேட்டார். அவர் தலைவர் படங்களை பார்த்ததே இல்லையாம். அவரிடம் தலைவர் பற்றி என்ன கூறுவது. சிரித்துக் கொண்டேன். ஒரு சில அனுபவங்களை எல்லாம் வார்த்தைகளில் விவரிக்க இயலாது. அனுபவிக்க வேண்டும்.

அதிலும் பெரிய இடத்து பெண் படத்தில் "கட்டோடு குழலாட ஆட" பாட்டில் இரண்டு மாமன் பெண்களுடன் விரசமே இல்லாமல் கெட்ட ஆட்டம் போடுகிறார் தலைவர். என்ன ஆர்கெஸ்ட்ரேஷன், என்ன கொரியோக்ராஃபி, அடடா அருமையிலும் அருமை. P. சுசீலாவும் L. R. ஈஸ்வரியும் சேர்ந்து பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது தான். புரட்சி தலைவரின் படங்களே பார்க்காத எனது நண்பரை போன்றவர்களுக்கு ஸ்டார்டராக "அன்பே வா" படத்தை பரிந்துரைக்கிறேன். நடிகர் திலகம் படங்களில் பரிந்துரைப்பது "ராஜபார்ட் ரெங்கதுரை".

Monday, January 28, 2013

பொடிமாஸ் - 01/28/2013

இந்த வாரம் படம் பார்க்கும் வாரம் என்று எனக்கு ஆகிவிட்டது. விஷ்வரூபம் இரண்டு முறையும், Race 2 ஒரு முறையும் பார்த்து விட்டேன். Race 2 வழக்கமான அப்பாஸ் மஸ்தான் படம். யார் யாருக்கு ஆப்பு வைப்பார்கள் என்று பார்க்கும் போதே நமக்கு தலை சுற்றுகிறது. நல்ல திரைக்கதை. மேக்கிங் கூட நன்றாக இருந்தது. ஒரு முறை பார்க்கலாம். சுமார் 200 பேர் அமரக்கூடிய அரங்கில் நாங்கள் மூன்று பேர் மட்டுமே அமர்ந்து படம் பார்த்தோம். அமெரிக்கா அளிக்கும் ஒரு சில வித்தியாசமான அனுபவங்களில் இதுவும் ஒன்று. இது கூட ஒன்றும் இல்லை, 'சில்லென்று ஒரு காதல்' படம் நான் மட்டுமே தனியாக அமர்ந்து பார்த்தேன். காலியான அரங்கின் புகைப்படம் கீழே உங்கள் பார்வைக்கு.



விஷ்வரூபம் குறித்த எனது விமர்சனத்துக்கு நண்பர்கள் பலர் கோபித்துக் கொண்டார்கள். படத்தை இரண்டு முறை காசு கொடுத்து அரங்கில் பார்த்தவன் என்ற முறையிலும், கமலின் தீவிர ரசிகன் என்ற முறையிலும் எனக்கு இப்படத்தை விமர்சிக்க முழூ உரிமை உள்ளது. நான் முன்னரே சொன்னது போல மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார் கமல். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. ஆனால் மேக்கிங் மட்டும் போதுமா?

2000 ஆண்டுக்கு பின்னர் வெளி வந்த தமிழ் படங்களில் மேக்கிங்கில் மிரட்டிய தமிழ் படங்கள் எனது நினைவில் இருந்து ஆளவந்தான், ஹே ராம்!, விருமாண்டி, ராவணன், எந்திரன், நான் ஈ போன்றவை. இதில் விருமாண்டி, எந்திரன், நான் ஈ மூன்றும் வெற்றி. மற்ற படங்கள் தோல்வி. இதுவே மேக்கிங் மட்டுமே ஒரு படத்தை வெற்றியடைய செய்யாது என்பதற்கு சாட்சி.

ஒரு நண்பர் எழுதிய விஷ்வரூப விமர்சனத்தில் படத்தில் எங்கெல்லாம் கமலின் ஜீனியஸ் வெளிப்படுகிறதோ அங்கெல்லாம் திரைக்கதை தோய்வடைகிறது என்று சொன்னார். அதையே தான் நானும் சொல்கிறேன். கமலின் ட்ரான்ஸ்ஃபார்மெஷனுக்கு பிறகு கமலின் ஜீனியஸ் தலை தூக்க ஆரம்பித்ததில் திரைக்கதை அதல பாதாளத்தில் விழுந்து விட்டது. இதை ஒரு காம்ப்லிமென்டாகவும் எடுத்துக் கொள்ளலாம், விமர்சனமாகவும் எடுத்துக் கொள்ளலாம். அது எடுத்துக் கொள்பவரின் மனநிலையை பொருத்தது.

திரைக்கதையில் எனக்கு எழுந்த சில கேள்விகள் கீழே.

1.கமல் ஏன் ஆப்கான் போகிறார்?
2.அமெரிக்க கைதிகளை விடுவிப்பது தான் அவரது நோக்கம் என்றால் அவர்கள் நேட்டோ படையினரால் விடுவிக்கப்பட்ட பிறகும் கூட அவர் அங்கு இருக்கிறாரே?
3.ஒசாமாவை பிடிப்பது தான் அவரது நோக்கம் என்றால் அவர் ஆப்கானை விட்டு வெளிவந்து அமெரிக்காவில் இருக்கும் போது தானே ஒசாமா கொல்லப்படுகிறான்.
4.கமல் ஏன் அமெரிக்க படையினருக்கு ஆப்கானில் இருந்து தகவல்களை அனுப்புகிறார்?
5.ஆப்கானில் எதிரிகளின் நடுவில் இருக்கும் போது அமெரிக்கர்களுக்கு தகவலகளை அளித்த கமல், நியூயார்க்கில் இருக்கும் போது ஏன் அளிக்காமல் தானே ஆபத்தை தடுக்க முயல்கிறார்?
6.நியூயார்க் போன்ற நகரத்தில் நியூக்ளியர் வெப்பன் டெட்டொனேட் செய்யப் படும் நேரத்தில் இப்படித்தான் மொக்கை தனமாக FBI நடந்து கொள்ளுமா?
7.தனது விமானம் டேக் ஆஃப் ஆகும் நேரத்தில் எந்த மாக்கானாவது அதே நகரில் நியூக்ளியர் வெப்பனை டெட்டொனேட் செய்வானா?
8.நூற்றுக்கணக்கான ஜிஹாதிகள் நியூயார்க் நகரத்தில் ஊடுருவியது கமலுக்கு தெரிந்திருக்கும் போது அது FBI க்கு தெரியாமல் போனது எப்படி?
9.ஆண்ட்ரியா படத்தில் என்ன செய்கிறார், கமல் புகழ் பாடுவதை தவிர?

இந்த கேள்விகளை எல்லாம் கூட விட்டு விடலாம். ஆனால் முக்கியமான கேள்வி, கமல் உளவாளி என்பது ஓமருக்கு எப்படி தெரிந்தது? படத்தின் முக்கிய ப்ரொடகானிஸ்ட் மற்றும் ஆன்டகானிஸ்ட் இருவருக்கும் ஏற்படும் உறவு சிக்கலை விளக்கும் பகுதி இது தான். அதையே திரைக்கதையில் அவர் கூறவில்லை. படத்தின் முக்கியமான முடிச்சுகளை கூட பார்வையாளர்களின் கற்பனைக்கு விடுவது த்ரில்லர் மற்றும் ஆக்ஷன் படங்களுக்கு உதவாது.

ஒருவேளை இவை எல்லாவற்றுக்கும் விடை படத்தின் இரண்டாம் பகுதியில் தான் கிடைக்கும் என்றால், இந்த படம் விஷ்வரூபத்தின் இரண்டாம் பகுதிக்கு 95 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட டிரைலர் அவ்வளவு தான்.

எது எப்படியோ, திரைக்கதையில் கோட்டை விட்டாலும் கமல் தான் இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர்களுள் ஒருவர் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் என்பது மட்டும் யாராலும் மறுக்க முடியாத உண்மை.


தீவிரவாதம் செய்பவர்கள் இஸ்லாமியர்களே அல்ல என்றும் அவர்கள் மார்கத்தை தவறாக புரிந்து கொண்டவர்கள் என்றும் சொல்பவர்கள் தீவிரவாதம் செய்பவர்களை பற்றி படமெடுத்தால் அது இஸ்லாமியர்களை குறி வைத்து எடுக்கப்படும் படம் என்று கூறுவது சரியான நகைமுரண். இந்த சண்டையில் யார் ஜெயித்தாலும், யார் தோற்றாலும் உண்மையில் தோற்றது இஸ்லாமே. படத்தின் தடையை வெறுக்கும், கலாச்சார தீவிரவாதத்தை வெறுக்கும், மத நல்லிணக்கத்தை போற்றும் பெரும்பாலான இஸ்லாமிய சகோதரர்களுக்காக உண்மையிலேயே மிகவும் வருந்துகிறேன்.


மனைவி குழந்தை இல்லாமல் தனியாக இருப்பதால் நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து நேரத்திற்கு சாப்பிடுகிறேனா என்று விசாரிக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு சாப்பிட அழைக்கிறார்கள். நான் போகவில்லை என்றால் உரிமையுடன் கோபித்துக் கொள்கிறார்கள். வீட்டிற்கே வந்து உணவை தர தயாராக இருக்கிறார்கள். அதிலும் அழைத்த ஒரு நண்பருக்கு ப்ரணவ் வயதில் ஒரு மகனும், பிறந்து இரண்டு மாதங்களே ஆன மகளும் இருக்கிறார்கள். பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் பத்திரமாக கார் ஓட்டும் படி அறிவுருத்துகிறார்கள். நாடு விட்டு நாடு வந்தால் பாசத்துக்காக ஏங்க வேண்டும் என்று யார் சொன்னார்கள்? இங்கே அன்புக்கு ஒரு குறைச்சலும் இல்லை.


இந்த வார நீயா நானா ஒரு சரியான ஐ ஓப்பனர். எவ்வளவு பேர் ஏமாந்திருக்கிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள், கிராமத்தினர், நகரத்தினர், இளம் வயதினர், வயசானவர்கள் என்று சகலரும் ஏமாந்திருக்கிறார்கள். There is nothing called free lunch. "நமது பணம் எவ்வளவு வேண்டுமானாலும் அடுத்தவரிடம் இருக்கலாம். ஆனால் அடுத்தவர் பணம் ஒரு ரூபாய் கூட நம்மிடம் இருக்க கூடாது." என்பார் எனது தந்தை. அடுத்தவர் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை திருடி விட்டு எப்படி இவர்களால் சாப்பிட முடிகிறது?


இது என்னுடைய 200 வது பதிவு. 2006 ஆம் ஆண்டில் பதிவெழுத தொடங்கிய போது இருந்த உற்சாகம் இப்போதும் சற்றும் குறையவில்லை. ஏழு ஆண்டுகளாக பதிவுலகில் இருக்கிறேன் என்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பதிவுலகில் பெற்ற நட்புகள் பல. நான் பதிவெழுத தொடங்கிய போது எனது நட்பு வட்டத்தில் இருந்த பலர் இப்போது பதிவுலகில் இல்லை என்றாலும், அதனால் அவர்கள் இப்போது எனது தொடர்பில் இல்லாமல் போனாலும் அவர்கள் என் மீது ஆரம்பத்தில் காட்டிய நம்பிக்கையையும், அளித்த உற்சாகத்தையும் என்றும் என்னால் மறக்க முடியாது. பள்ளி முடிந்த உடன் அற்று விட்ட தாய் மொழியில் எழுதும் அனுபவத்தை மீண்டும் எனக்கு புதுப்பித்து கொடுத்த பதிவுலகுக்கு எனது நன்றிகள் கோடி.

Wednesday, January 09, 2013

பொடிமாஸ் - 01/09/2013

விஷ்வரூபம் DTH பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம் என்றிருந்தேன். அரசமரத்தை சுற்றிவிட்டு வயிற்றை தொட்டு பார்த்த கதையாக பழம் பழுக்கும் முன்பே ஒரு சிலர் அதை கடித்து விட்டனர். 30 லட்சம் பேர், 300 கோடி என்ற கதையெல்லாம் படிக்கும் போது எனக்கு சிரிப்பே வந்தது. 30 லட்சம் பேர் முன் பதிவு செய்திருக்கிறார்கள், அதில் பாதிக்கு மேல் தெலுங்கு மற்றும் ஹிந்தி என்றால், எப்படி 300 கோடி வருவாயாகும்? ஹிந்தி மற்றும் தெலுங்கு படத்துக்கு 500 ரூபாய் தான் கட்டணம். அந்த கணக்கின் படி பார்த்தாலும் அதிக பட்சம் 225 கோடி ரூபாய் வசூல் தான்.

ஒரு படத்தின் பட்ஜெட்டோ, வருவாயோ அப்படத்தின் வெற்றியை நிர்ணயிக்காது. 2007 ஆம் ஆண்டு வந்து உலகையே ஆட்டி படைத்த பாராநார்மல் ஆக்டிவிட்டி படத்தின் பட்ஜெட் இந்திய மதிப்பில் 8 லட்சம் ரூபாய். என்னை பொருத்த வரை மக்கள் மனதில் ஒரு படம் காலம் கடந்து நின்றால் அது வெற்றிப் படம், வணிக ரீதியாக அது வெற்றி அடையாமல் இருந்தாலும் கூட.

அந்த வரிசையில் தமிழில் எனது மனதளவில் வெற்றிப் படங்களில் முந்நிலையில் இருப்பது உதிரிப் பூக்கள். கமலின் படங்களை எடுத்துக் கொண்டால் அன்பே சிவம் மற்றும் மகாநதி. இந்த வார இறுதியில் கூட ராஜமௌளி கமலை எடுத்த பேட்டியை பார்த்த பின்னர் சலங்கை ஒலி படத்தை தேடி பிடித்து பார்த்தேன். இது எத்தனையாவது முறை என்பது தெரிய வில்லை. ஆனால் அப்படியே என்னை கட்டிப் போட்டு விட்டது.

கமலின் பெரும்பாலான ரசிகர்கள் அவரது நடிப்பை பார்த்து அவருக்கு ரசிகர்கள் ஆனவர்கள், அவரது வணிக வெற்றியை பார்த்து அல்ல. கமலை சுற்றி இருக்கும் அவருக்கு ஜால்ரா போடும் கூட்டம் இதை உணராத வரை, அவரும் இதை உணர போவதில்லை என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.


டில்லி கற்பழிப்பு சம்பவதை தொடர்ந்து பெண்கள் உடை விஷயத்தில் கருத்து தெரிவித்த பலர் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஒரு கலாச்சாரத்தின் உடை என்பது அவர்கள் இருக்கும் நாடு, அதன் தட்ப வெட்பம் போன்றவற்றை கொண்டே அமையும்.

அமெரிக்கர்களையோ இல்லை ஐரோப்பியர்களையோ எடுத்துக் கொண்டால், அந்நாடுகளில் வாழும் பலர் வெள்ளை தோல் உடையவர்கள். மெலனின் என்ற வஸ்து அவர்கள் தோலில் குறைந்து இருக்கும். தோல் புற்று நோய் வராமல் பாதுகாக்க அதை அதிகரிப்பது அவசியம். அதனை இயற்கையாக அதிகப் படுத்த சூரியனின் வெப்பம் தேவை. ஆனால் அந்நாடுகளிலோ நல்ல சூரியன் வெப்பம் நான்கு மாதங்களுக்கு மேல் இருக்காது. அதற்காக கோடை காலத்தில் அவர்கள் உடலில் பெரும் பாலான இடங்களில் சூரியன் வெப்பம் தாக்கும் படி உடை உடுத்துகிறார்கள்.

அதே நேரத்தில் அரபு தேசத்தை எடுத்துக் கொண்டால், அங்கே தண்ணீர் குறைவு. மணல் புயல் அதிகம். மணல் அதிகம் கேசத்தில் சிக்கிக் கொண்டால் அதனை சுத்தம் செய்ய அதிக தண்ணீர் செலவாகும். அதற்காகவே அவர்கள் தலையை மூடி உடை உடுத்துகிறார்கள்.

இதை தெரிந்து கொள்ளாமல் அமெரிக்கர்கள் அவுத்து போட்டுக் கொண்டு அலைகிறார்கள் என்றோ, அரேபியர்கள் இழுத்து மூடிக் கொண்டு கற்காலத்தில் வாழ்கிறார்கள் என்றோ சொல்வது சரி கிடையாது.

இப்போது இந்திய சூழ்நிலைக்கு வந்தால், இந்தியா ஒரு செக்ஸ் ஸ்டார்விங் நாடு. இங்கே பெரும்பாலானவர்களுக்கு திருமணம் ஆன பிறகு தான் முதல் செக்ஸ் அனுபவம் ஏற்படுகிறது. அந்நிலையில் பல நாள் பட்டினி கிடப்பவன் முன்பு திருமண விருந்து சாப்பிடுவதை போல இந்திய பெண்கள் ரிவீலிங்காக உடை உடுத்தினால் அது பெண்களுக்கே ஆப்பாக வந்து முடிந்து விடுகிறது.

ஆனால் அதே நிலையில் இருக்கும் இந்திய பெண்கள் ஆண்களை ஏன் கற்பழிப்பதில்லை என்பது உளவியல் ரீதியாக பார்க்க வேண்டிய ஒரு செயல். இந்திய ஆண்களுக்கு மரபிலேயே ஷாவனிஸம் கலந்து இருக்கிறது என்று நினைக்கிறேன். ஷாவனிஸத்தின் வெளிப்பாடு வெறிச்செயல்.

1. கற்பழிப்பில் மட்டும் இல்லை, பெண்களுக்கு/குழந்தைகளுக்கு எதிராக எந்த ஒரு வன்முறையில் ஈடு பட்டாலும் குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை அளிக்க வேண்டும்.

2. கற்பழிப்பை ஒரு விபத்தாக இந்திய சமூகம் பார்க்க தொடங்க வேண்டும்.

3. இந்திய ஆண்கள் தங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு அதிக மரியாதை செய்ய வேண்டும். அவர்களை அடிமை போல நடத்த கூடாது. இதை அவர்கள் செய்தால் அதை பார்த்து வளரும் அடுத்த தலைமுறை பெண்களுக்கு இயல்பாகவே மரியாதை செய்ய முயலும்.


திமுகவில் நடக்கும் வாரிசு மோதல்கள் வருத்தம் அளிக்கிறது. ஒரு வேளை திமுக உடைந்தால் அதிமுக-ஜெ மற்றும் அதிமுக-ஜா கட்சிகளுக்கு ஏற்பட்ட நிலையே இங்கும் ஏற்படும். ஸ்டாலின் ஜெயித்து வருவார் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. என்னை கேட்டால் கட்சி உடைவது கூட நல்லது தான், ஏனென்றால் ஒரே கட்சியில் இருந்தால் அழகிரி ஸ்டாலினுக்கு தொடர்ந்த தலைவலியாக இருப்பார். கட்சி உடைந்து பின்னர் ஒன்று சேர்ந்தால் அழகிரியை ஒரேயடியாக அரசியலில் இருந்து ஒதுக்கி விடலாம். கனிமொழி, மாறன் போன்றவர்களை அழகிரியை விட அதிகம் அரவணைத்து போவது ஸ்டாலின் தான். தொண்டர்களும் அதிகம் ஸ்டாலின் பக்கம் தான். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.


ஒவைசியின் பேச்சு குறித்த சர்ச்சை புயல் இப்போது கிளம்பியுள்ளது. இதெல்லாம் அடுத்த சர்ச்சை வரும் வரை தான். நல்ல வேளை தர்மபுரியில் நடந்தது போல ஒரு கூட்டம் இவரது பேச்சை கேட்டு கிளம்பாமல் இருந்தது. என்னை கேட்டால் இதையெல்லாம் இக்னோர் செய்து விட்டு போய்கொண்டே இருக்க வேண்டும். அதிக முக்கியத்துவம் கொடுக்க கொடுக்க இம்மாதிரி நாய்கள் அதிகம் குறைத்துக் கொண்டே இருக்கும்.


ஆர்லான்டோ பயணம் நல்ல முறையில் முடிந்தது. மேஜிக் கிங்டம், அனிமல் கிங்டம், யுனிவர்சல் ஸ்டூடியோஸ் என்று பலவற்றையும் பார்த்து மகிழ்ந்தோம். புகைப்படங்களை பின்னர் தனி பதிவாக பதிகிறேன். மனைவியும், குழந்தையும் ஜனவரி மூன்றாம் தேதி இந்தியாவுக்கு சென்று விட்டனர். இம்முறை சற்று நெடிய விடுமுறை. பிப்ரவரி 17 ஆம் தேதி தான் வருகிறார்கள். அவர்கள் கிளம்புவதற்கு முன்பு எப்போது கிளம்புவார்கள் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். டயாப்பர் மாற்றுவது, குழந்தையை குளிப்பாட்டுவது, அவனுக்கு சாப்பாடு கொடுப்பது, அவனை பார்க்குக்கு அழைத்து செல்வது போன்ற வேலைகள் இல்லாமல் இருக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர்கள் சென்ற பின்னர் தனியாக இருப்பது ஒரே கடியாக இருக்கிறது. அதுவும் நான் வாரத்தில் மூன்று நாட்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வேன். அதனால் வீட்டில் இருக்கும் நாட்களில் படு போராக இருக்கிறது. வார இறுதியில் எங்காவது வெளியூருக்கு நண்பர்களை பார்க்க செல்லலாம் என்றால் மாண்டியை வெளியே விடுவது கஷ்டமாக இருக்கிறது.


இந்த வார இறுதியில் விஷ்வரூபம் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது வெளியீடு தள்ளி போய் விட்டது. அதற்கடுத்த வாரம் அர்னால்டு நடித்த லாஸ்ட் ஸ்டான்ட் படம் வெளி வருகிறது. நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அலெக்ஸ் பாண்டியனோ இல்லை கண்ணா லட்டு திங்க ஆசையா படமோ இங்கே வெளி வருமா என்பது தெரியவில்லை. வெளிவந்தால் பார்த்து விடுவேன்.


இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் கடும் வெப்பம் நிலவுகிறது என்று குறிப்பிடுகிறார்கள். ஒரு சில இடங்களில் 54 டிக்ரீ செல்சியஸ் வெப்பம் பதிவானதாக சொல்கிறார்கள். வட இந்தியாவில் கடும் குளிரினால் 150 பேர் இறந்துவிட்டதாக தெரிகிறது. எல்லாம் க்ரீன் ஹவுஸ் எஃப்பெக்ட் செய்யும் வேலை. உலகம் தானாக அழிகிறதோ இல்லையோ அடுத்த இரு தலைமுறைக்குள் நாமே அழித்து விடுவோம் என்று நினைக்கிறேன்.


இது இந்த புத்தாண்டின் முதல் பதிவு. வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள். 2012 ஆம் ஆண்டு நல்லபடியாக சென்றது. பல இனிப்பான சம்பவங்கள். அது போலவே 2013 ஆம் ஆண்டும் இருக்கும் என்று நம்புகிறேன். அது போலவே உங்கள் அனைவருக்கும் நல்லதொரு ஆண்டாக இது அமைய வாழ்த்துகிறேன்.

Sunday, December 16, 2012

பொடிமாஸ் - 12/16/2012

அமெரிக்க துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து ஆளுக்காள் அமெரிக்க வாழ்க்கையின் பாதுகாப்பின்மை குறித்து கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள், வசதியாக நான்கு நாட்களுக்கு முன்னர் சென்னையில் நான்கு மாணவர்கள் பேரூந்து விபத்தில் இறந்ததை மறந்து விட்டு. இறந்த குழந்தைகளின் ஆசிரியைகள் இருவர் குழந்தைகளை பாதுகாக்க அவர்களை தனி அறையில் அடைத்துவிட்டு, குழந்தைகளுக்கும் கொலைகாரனுக்கும் நடுவில் நின்று, துப்பாக்கி குண்டுகளை தாங்கள் வாங்கிக் கொண்டு இறந்திருக்கிறார்கள். அவர்கள் நினைத்திருந்தால் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி இருக்கலாம்.

சம்பளத்துக்காக வேலை செய்கிறோம் என்றாலும், தங்களது வேலையின் கடமையை உணர்ந்து கொண்டு வேலை செய்யும் இவர்களை போன்றவர்கள் நிச்சயம் கொலைகாரர்களை விட அதிக எண்ணிக்கையில் தான் எந்த ஒரு சமூகத்திலும் இருக்கிறார்கள். இவர்களை போன்றவர்கள் இருக்கும் வரை எந்த சமூகமும் பாதுகாப்பான சமூகம் தான். இறந்தவர்களுக்கு எனது அஞ்சலிகள்.


வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியா குறித்து ஏதாவது கருத்து தெரிவித்தால் உடனே, "இந்தியாவை விட்டு ஓடிப் போனவர்களுக்கு இந்தியா குறித்து என்ன கவலை?" என்ற தேய்ந்த ரெக்கார்டையே தேய்ப்பது சிலருக்கு ஃபேஷனாக இருக்கிறது. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் உள்ள குடும்பத்தினருக்கு மாதா மாதம் பணம் அனுப்பலாம், இந்தியாவில் வீடு, விவசாய நிலம் போன்ற சொத்துக்களை வாங்கலாம், அவற்றை வாடகைக்கு/குத்தகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கலாம், ஏதாவது தொழில் தொடங்கி பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கலாம், அப்படி சம்பாதிக்கும் பணத்திற்கு வருமான வரி கட்டலாம், இந்திய வங்கிகளில் கடன் வாங்கி மாதா மாதம் வட்டியுடன் அசலை சேர்த்து அடைக்கலாம், இந்திய ஷேர் மார்கெட்டில் இன்வெஸ்ட்மென்ட் செய்யலாம் இப்படி இன்னும் பல செய்யலாம்கள் இருக்கும் போது ஒரு சிலர் பொத்தாம் பொதுவாக வெளிநாட்டில் வசிப்பவர்களால் இந்தியாவிற்கு ஒரு நன்மையும் இல்லை என்ற ரீதியில் பேசுவது மிகவும் துரதிருஷ்டவசமானது.


விஸ்வரூப தொலைக்காட்சி வெளியீடு நிச்சயம் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் தான் என்பேன். குறைந்த பட்ஜெட் படங்கள் தயாரித்தவர்களுக்கு அப்படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை வந்தால் இம்மாதிரி மாற்று வெளியீட்டு முயற்சி மிக்க பலன் தரும். ஆனால் அதே நேரத்தில் நூறு கோடி, நூற்றைம்பது கோடி என்ற பட்ஜெட்டில் படம் எடுத்தவர்களுக்கு இதனால் எந்த வகையில் நன்மை கிடைக்கும் என்பது தெரியவில்லை. ஆயிரம் ரூபாய் கொடுத்து எவ்வளவு பேர் தொலைக்காட்சியில் படம் பார்ப்பார்கள்?, அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் பலர் தங்களது இல்லத்தில் HD ப்ரொஜெக்டர், HD ஸ்க்ரீன், சவுண்ட் சிஸ்டம் என்று அட்டகாசமான காட்ஜெட்டுகளை வைத்திருப்பார்கள். அதனால் தியேட்டரில் படம் பார்க்கும் எஃபெக்ட் ஓரளவுக்கு கிடைக்கும் ஆனால் இந்தியாவில் எவ்வளவு பேர் வீட்டில் அப்படி இருக்கும்? குறிப்பாக தமிழகத்தில் எவ்வளவு பேர் வீட்டில் அப்படி இருக்கும்? 50 ரூபாய் கொடுத்து DVD யில் படம் பார்க்கும் போது எனக்கு தியேட்டர் எஃபெக்ட் தேவை இல்லை என்று நான் கருதலாம் ஆனால் ஆயிரம் ரூபாய் கொடுத்து பார்க்கும் போது எப்படி நான் அது தேவை இல்லை என்று கருத முடியும்? SOC என்ற டெக்னாலஜியின் மூலம் ஒளிபரப்பாகும் படத்தை ரெக்கார்ட் செய்ய முடியாமல் தடை செய்ய இயலும், ஆனால் தியேட்டரில் செய்வது போல வீடியோ கேமரா கொண்டு படத்தை ரெக்கார்ட் செய்வதை யாரால் தடுக்க முடியும்? இப்படி பல கேள்விகள் இருக்கின்றன. விஸ்வரூபம் விரைவில் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்லும் என்று நம்புவோம்.


நீதானே என் பொன் வசந்தம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இறுதி அரை மணி நேரம் அட்டகாசம். கிளைமேக்ஸில் ஜீவா மற்றும் சமந்தாவின் நடிப்பு அருமை. இருவரையும் பிரித்து தொலைத்து விடாதே என்று மனதுக்குள் கத்திக் கொண்டே இறுதிக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். இப்படத்தின் மிகப் பெரிய லெட் டவுன் ராஜாவின் இசை. பாடல்கள் நன்றாக இருந்தாலும் பின்னணி இசை படு சொதப்பல். எனக்கு இப்படம் எனது பள்ளி மற்றும் கல்லூரி கால வாழ்க்கையை, அனுஷா, தீபா, காயத்ரி மற்றும் பலரை நன்றாக நினைவுபடுத்தியது. என் வாழ்வில் நடந்த டியூஷன் காட்சிகள், கல்ச்சரல் காட்சிகள் என்று அனைத்தும் என் கண் முன்னே வந்து போனது. எனக்கு இது மீண்டும் ஒரு ஆட்டோகிராஃப். It was nostalgic.

நீதானே என் பொன் வசந்தம் என்று இல்லை, இந்த வருடத்தில் வெளிவந்த பல பலருக்கும் பிடிக்காத படங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. தாண்டவம், பில்லா 2 போன்ற படங்கள் உதாரணம். எனது ரசனை மாறிவிட்டது என்று நினைக்கிறேன்.


கிருஸ்துமஸ் விடுமுறையில் குடும்பத்துடன் ஆர்லான்டோ செல்கிறோம். ஐந்து நாட்கள். டிஸ்னி வோர்ல்ட், யுனிவர்சல் கிங்டம் என்று பல இடங்கள் இருக்கின்றன. LA சென்ற போது முன்னரே பார்த்திருந்தாலும் ஆர்லான்டோவில் இதுவே முதல் முறை. இந்த வருடம் எங்களுக்கு இது மூன்றாவது வெக்கேஷன். இந்த வருட தொடக்கத்தில் பஹாமாஸ் சென்றோம், பின்னர் இந்தியா, இப்போது ஆர்லான்டோ. புகைப்படங்களை வந்த பின்பு பகிர்ந்து கொள்கிறேன். வந்த பிறகு புத்தாண்டுக்கு மீண்டும் நான்கு நாட்கள் விடுமுறை. புத்தாண்டு விடுமுறைக்கு எங்கும் செல்வதாக திட்டம் இல்லை.


சென்ற வாரம் முழுவதும் இந்தியாவில் கால் பதிக்க வால்மார்ட் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் பாராளுமன்றம் ஸ்தம்பித்தது. இது பணிப்பாறையின் துளி மட்டும் தான். சில்லறை வியாபாரிகள் விவசாயிகளை சுரண்டுகிறார்கள் என்பவர்கள் சில்லறை வியாபாரிகளை விட குறைந்த விலைக்கு பொருளை ஒருவன் தர வேண்டும் என்றால் அவர்களை விட அதிகமாக விவசாயிகளை சுரண்டினால் தான் முடியும் என்பதை மறந்தது விந்தை தான்.


ரிக்கி பான்டிங் ஓய்வு பெற்றதை தொடர்ந்து மீண்டும் சச்சின் ஓய்வு கூச்சல் தொடங்கி இருக்கிறது. லாரா, டிராவிட், பான்டிங் வரிசையில் மீதி இருப்பது காலிஸ் மற்றும் சச்சின். காலிஸின் தற்போதைய ஃபார்மை பார்த்தால் அவர் இன்னும் மூன்று ஆண்டுகளுக்காவது தொடர்ந்து விளையாடுவார் என்று தோன்றுகிறது. எஞ்சி இருப்பது சச்சின் தான். சச்சின் போன்ற காலிபர் உள்ளவர்கள் வெளியேற வேண்டும், வெளியேற்றப்படக் கூடாது. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.


இந்த வார இறுதியில் மாண்டிக்கு ஐந்து வேக்சீன்ஸ் கொடுக்க வேண்டி இருந்தது. மருத்துவரிடம் கொண்டு சென்றேன். அடுத்து ஓராண்டுக்கு கவலை இல்லை. இனி கொடுக்க வேண்டியவை அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தான். அவனது பற்களில் மஞ்சள் சற்று அதிகமாகவே படிந்துள்ளது. டென்டிஸ்டிடம் ஜனவரி மாதம் கொண்டு செல்ல வேண்டும். அவனது பற்களை அவர்கள் சுத்தம் செய்து விடுவார்கள்.


மாண்டியை பற்றி பேசும் போது சென்ற வாரம் நடந்தது நினைவுக்கு வருகிறது. ஒரு பின்னூட்டத்தில் பொதுவாக மற்றவர்களை 'நாய்' என்று சொல்லிவிட்டேன் என்று நினைத்து ஒரு பதிவர் வானுக்கும் பூமிக்குமாக குதி குதி என்று குதித்தார். அப்போது அதற்கு காரணம் எனக்கு புரியவில்லை. இப்போது தான் அது புரிகிறது.

சக மனிதர்களை நாய் போல் நடத்தும் சமூகத்தில் வாழ்பவர்களுக்கு 'நாய்' என்றால் கோபம் வரத்தான் செய்யும். நாயை மனிதர்கள் போல் நடத்தும் சமூகத்தில் வாழும் என் போன்றவர்களுக்கு அது புரிவது கொஞ்சம் கஷ்டம் தான்.

Sunday, November 18, 2012

பொடிமாஸ் - 11/18/2012

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகளை தவிர வேறு யாருக்கும் ஜாதியத்தை எதிர்க்கும் வக்கு கிடையாது என்பதை சமீபத்தில் நடந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன. பிராமணாள் ஹோட்டலையும், ஸ்ப்ளென்டர் ஐயரையும், பாரதி ராஜா பிராமணர்களும் தமிழர்கள் தான் என்று கூறியதையும் எதிர்க்கும் வீரியம் உள்ள திராவிடக் கட்சிகளுக்கு தேவர் குரு பூஜை சம்பவத்தையும், தர்மபுரி சம்பவத்தையும் எதிர்க்க வீரியம் கிடையாது. பிராமணர்களை எதிர்த்து பக்கம் பக்கமாக பதிவுகளை எழுதுபவர்கள் இதை கண்டித்து ஒரு வரி கூட எழுதவில்லை. பிராமணர்களை பார்த்தாலே அவர்கள் யார் என்று தெரிந்துவிடும் என்பதால் அவர்களில் ஜாதியம் போற்றுபவர்களை கூட ஒரு வகையில் எளிதாக எதிர்கொண்டு விடலாம், ஆனால் ஜாதியம் போற்றும் இடைநிலை ஜாதி வெறியர்கள் தான் உண்மையில் ஆபத்தானவர்கள் என்பதை தலித்துகள் உணர வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் உத்தபுரத்தில் பிள்ளை சமூகத்தினர் தலித்துகள் மீது வன்கொடுமை செய்த போதும் இப்படித்தான் திராவிட கட்சிகள் கள்ள மௌனம் காத்தனர். பதிவுலக போராளிகளும் அப்படியே. அப்பொழுதும் அதை கண்டித்தது கம்யூனிஸ்ட்களே.

வலையுலக போராளிகளின் பச்சோந்தித் தனத்தை தோலுரித்த இச்சம்பவங்களுக்கு நன்றி.


கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக ட்விட்டினாலே பாய்ந்து வந்து கைது செய்து கடமையாற்றும் காவல் துறை, தனது அராஜக பேச்சால் பலரை தூண்டி, வன்முறை ஏற்படுத்தி, பல தலித்துகளின் வீடுகளை பொசுக்கி, அவர்களது உடைமைகளை திருட காரணமாக இருந்த காடுவெட்டி குரு போன்ற அரசியல் ரவுடிகள் அருகில் கூட செல்ல முடியாத நிலை கேவலமாக இருக்கிறது. ஜாதி வெறிபிடித்த காடுவெட்டிகள் காடுகளில் வாழும் மிருகங்களை விட கொடியவர்கள். இவர்களை போன்றவர்கள் அரசியல் தலைவர்களாக இருப்பது நமது துரதிருஷ்டம். திருமா போன்ற தலைவர்கள் கூட அரசியல் காரணங்களுக்காக இந்த வெறியாட்டங்களுக்கு பாமக மற்றும் வன்னிய சங்கம் காரணம் இல்லை என்று கூறுவது வருத்தமான விஷயம். நல்லவேளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் காரணம் என்று சொல்லாமல் விட்டார்களே, அதுவரை மகிழ்ச்சி.


பால் தாக்ரே இந்த வாரம் இறந்து விட்டார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். அவருக்கு எனது அஞ்சலிகள். மற்றபடி அவரை தேசியவாதியாக சித்தரிப்பதில் எனக்கு சிறிதும் உடன்பாடு கிடையாது. He is anything but a nationalist. அவர் தென்மாநில மற்றும் வடமாநில மக்கள் மீது வெறுப்புகளையே அதிகம் மஹாராஷ்ட்டிர மாநில மக்கள் மனதில் விதைத்துள்ளார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. இம்மாதிரி அரசியல்கள் ஆபத்தானது. மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீடு போன்ற பிரச்சனைகள் உருவாக இம்மாதிரி அரசியல்வாதிகளே காரணம். இம்மாதிரி தலைவர்கள் எல்லாம் தலை தூக்கும் போதே நாம் நிராகரிக்க வேண்டும்.


ஆனால் அதே நேரத்தில் புதுவை ராம்ஜி என்பவர் எம். எஃப். ஹூஸைன் என்ற சிறந்த ஓவியர் இந்தியாவிலிருந்து விரட்டப்பட்டதற்கு பால் தாக்ரே தான் காரணம் என்று தனது பதிவில் கூறியுள்ளார். உண்மையில் அத்தகைய போராட்டத்தை எம். எஃப். ஹூஸைனுக்கு எதிராக நடத்தியதற்காக சிவ சேனைக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் வாழ தகுதி இல்லாதவர் எம். எஃப். ஹூஸைன் என்பதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது.

கிழே உள்ளவை எம். எஃப். ஹுஸைன் படைத்த சர்ச்சையை கிளப்பிய சில ஓவியங்களின் தலைப்புகள்.

1. நிர்வாணமாக பார்வதி
2. நிர்வாணமாக துர்கை சிங்கத்துடன் கலவியில் ஈடுபடுவது
3. நிர்வாணமாக சரஸ்வதி
4. நிர்வாணமாக லக்ஷ்மி விநாயகருடன் கலவியில் ஈடுபடுவது
5. நிர்வாணமாக சீதை ராவணனுடன் கலவியில் ஈடுபடுவது

இதையெல்லாம் மேலோட்டமாக கலையுரிமை என்று எடுத்துக் கொள்ள முடியாது. நூறு கோடி மக்கள் உள்ள நாட்டில் சிறுபான்மையினரை அனுசரித்து செல்வது எப்படி பெரும்பான்மையினரின் கடமையோ அப்படித்தான் பெரும்பான்மையினரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது சிறுபான்மையினரின் கடமை. சல்மான் ருஷ்டிக்கு ஃபத்வா விதித்ததை சரி என்று கூறியவர்கள் எல்லாம் எம். எஃப். ஹுஸைனுக்கு ஜால்ரா தட்டுவது தான் ஆச்சரியமாக இருக்கிறது. இதுவும் ஒரு வகை பச்சோந்தித் தனமே.


துப்பாக்கி படம் நேற்று தான் பார்க்க முடிந்தது. இங்கே ஒரு தியேட்டரில் தான் இந்திய படங்கள் திரையிடுவார்கள். ஜப் தக் ஹைன் ஜான், மற்றும் சன் ஆஃப் சர்தார் இரண்டும் வெளிவந்த காரணத்தால் துப்பாக்கி வார இறுதியில் மட்டுமே திரையிட்டார்கள். அதனால் ஒரு வார காலம் எந்த விமர்சனத்தையுமே படிக்க வில்லை. விமர்சனம் எழுதுகிறேன் என்ற பெயரில் பலரும் படத்தின் முக்கிய காட்சிகளை எல்லாம் சொல்லி விடுகிறார்கள்.

படம் அட்டகாசமாக இருக்கிறது. கதை, திரைக்கதை, சண்டை காட்சிகள், வசனம், கேமரா, விஜய்யின் நடிப்பு என்று அனைத்தும் அட்டகாசம். விஜய்யின் படங்கள் தொடர்ச்சியாக நான்கு படங்கள் எனக்கு மிகவும் பிடித்தது இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன். படத்தை பற்றிய மற்றொரு முக்கிய செய்தி, நான் பார்த்த காட்சி ஹவுஸ்ஃபுல். அமெரிக்கா வந்ததிலிருந்து கடந்த ஏழு ஆண்டுகளில் சிவாஜி, எந்திரன், தசாவதாரம் தவிர்த்து மற்ற படங்கள் ஹவுஸ்ஃபுல் ஆனதை நான் பார்த்ததே இல்லை. இது மனதிற்கு அதிக மகிழ்ச்சி அளிக்கிறது.துப்பாக்கி நிச்சயம் இளைய தளபதியின் உச்சம்.

என்ன, நல்ல படத்திற்கு திருஷ்டி பொட்டு போல சில சர்ச்சைகள் தொடங்கி விட்டன. ஆனால் எனக்கு இந்த படத்திற்கு வந்த எதிர்ப்புகள் நியாயமானவையாகவே தெரிகின்றன. படத்தில் வில்லனின் அடியாட்களை வெளி நாட்டு தீவிரவாதிகள் என்று காட்டி இருந்தால் கூட இவ்வளவு எதிர்ப்புகள் வந்திருக்காது. உள் நாட்டு ஸ்லீப்பர் செல்கள் என்று காட்டியதால் தான் இவ்வளவு எதிர்ப்பு. அதுவும் ஒரு வகையில் நல்லது தான். பார்ப்போம் இனியாவது திரையுலகினரிடம் மாற்றம் வருகிறதா என்று.


இந்த தேங்க்ஸ் கிவிங் வார இறுதியில் நாங்கள் நான்கு நண்பர்கள் சந்திக்க இருக்கிறோம். நாங்கள் நான்கு பேரும் ஒரே நாள் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இன்போசிஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தோம். நாங்கள் நால்வருமே இப்பொழுது அந்த நிறுவனத்தில் இல்லை என்றாலும் எங்கள் நட்பு தொடர்கிறது. பத்து ஆண்டுகள் ஆன நிலையில் நாங்கள் மீண்டும் சந்திப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் ஒருவனை பார்த்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த வார இறுதியை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.


அஹமதாபாத் டெஸ்ட் போட்டி எதிர்பார்த்தபடியே சென்று கொண்டிருக்கிறது. நான்கு நாட்கள் ஆன நிலையில், இன்னும் ஐந்து விக்கெட்டுகளை நாளை லன்சுக்கு முன்பு வீழ்த்தி விட்டால் நாம் எளிதாக வெற்றி பெற்று விடலாம். அம்பெயரிங் எர்ரர்ஸ் அதிகம் இருந்தது தெளிவாக தெரிந்தது. DRS ஒப்புக் கொள்ளாதது BCCI யின் பிடிவாதத்தையே காட்டுகிறது. ஆனால் க்யூரேட்டர்ஸ் மீதான குற்றச்சாட்டு எதுவும் என்னிடம் இல்லை. நாம் இங்கிலாந்து சென்ற பொழுது நல்ல ப்ளாட் ட்ராக்குகளை ப்ராக்டீஸ் மேட்சுக்கு கொடுத்துவிட்டு க்ரீன் டாப் விக்கெட்டுகளை டெஸ்ட் மேட்சுகளுக்கு கொடுத்தனர். அப்பொழுது உலகின் முதல் ரேங்க் டீம் என்றால் எல்லாவித விக்கெட்டுகளிலும் விளையாட வேண்டும் என்று நக்கல் செய்தனர் அந்நாட்டு பத்திரிக்கைகள். என்னை கேட்டால் இன்னும் பிட்சை கொஞ்சம் உழுதுவிட்டு மேட்சை நடத்தலாம். Everything is fair in love and war.


தமிழக அரசியலில் மாற்றம் வருவதற்கான காட்சிகள் தோன்ற தொடங்கி இருக்கின்றன. மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவது திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே தேவை என்ற பொழுதும் அது திமுகவிற்கு சற்று அதிகமாகவே தேவை எனலாம். தளபதி மிகுந்த எழுச்சியுடன் செயல் படுவதாகவே தெரிகிறது. கலைஞர் செய்திகளில் தொடர்ந்து அவர் நடத்தும், தலைமை தாங்கும் போராட்டங்கள், மாநாடுகள், சந்திப்புகள் போன்றவற்றை பற்றிய செய்திகளை ஒளிபரப்புகிறார்கள். ஆனால் தேமுதிகவுடன் கூட்டணி ஏற்படலாம் என்ற செய்தி எனக்கு எரிச்சலாக இருக்கிறது. பாமகவை இரண்டு கட்சிகளும் மாறி மாறி கூட்டணி வைத்து வளர்த்துவிட்டது போல தேமுதிகவையும் வளர்த்துவிட முயல்கிறார்கள். திமுகவிற்கு மாற்று அதிமுக, அதிமுகவிற்கு மாற்று திமுக, இரண்டையும் விரும்பாதவர்களுக்கு கூட்டணிகளை பொருத்து காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்டுகள் என்ற நிலை தான் தமிழகத்திற்கு நல்லது.


நடிகர் கார்த்திக் அவர்களின் பரம ரசிகன் நான். நவரச நாயகன் என்ற பட்டத்திற்கு மிகவும் ஏற்புடையவர் அவர். அவர் நடித்த படங்களில் கோகுலத்தில் சீதை படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படத்தில் இருந்து ஒரு காட்சி கீழே பார்த்து மகிழுங்கள். இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் ரசித்து ரசித்து நடித்திருப்பார் கார்த்திக். மற்றொரு காட்சியில் சுவலக்ஷ்மி இவரை புகழ்ந்து ஒரு நிமிடத்திற்கு வசனங்கள் பேச அதை கேட்டு இவர் மௌனமாக கண்களால் பரவசப்படுவார் பாருங்கள், அட்டகாசம்.


Friday, November 02, 2012

பொடிமாஸ் - 11/02/2012

வட கிழக்கு அமெரிக்காவை சாண்டி புயலும், தமிழகத்தை நீலம் புயலும் தாக்கி ஓய்ந்து விட்டன. தமிழகத்திற்கு பெரிதாக பாதிப்பு இல்லை என்று தெரிகிறது. இங்கும் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. புயல் எங்கே கரையை கடக்கும் என்பது சரியாக தெரியாததாலும், ஒரு வேளை வாஷிங்டன் டிசி பகுதிகளில் புயல் கரையை கடந்தால் இரண்டு மூன்று நாட்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படலாம் என்பதாலும் பல ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருந்தது. மின் இணைப்பு இல்லாவிட்டால் தண்ணீர் வராது, கேஸ் அடுப்பு எரியாது, ஹீட்டர் மற்றும் ஏசி வேலை செய்யாது, பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் கிடைக்காது, ATM வேலை செய்யாது, க்ரெடிட் கார்டுகள் வேலை செய்யாது, இன்னும் பல பாதிப்புகள்.

இதற்காக ஒரு வாரத்திற்கு தேவையான குடி நீர் வாங்கி, ஒரு வாரத்திற்கு தேவையான பால், பிரட், தயிர் ஆகியவற்றை வாங்கி, எல்லா பாத்டப் களிலும் தண்ணீர் பிடித்து, கார்களில் பெட்ரோல் போட்டு, தேவையான பணம் எடுத்துக் கொண்டு, டார்ச் விளக்குகள் ஏற்பாடு செய்து என்று இரண்டு நாட்கள் பரபரப்பாக இருந்தது. நல்ல வேளை பெரிதாக பாதிப்பு ஒன்றும் இல்லை. புயலினால் உயிரிழந்த மக்களுக்கு எனது அஞ்சலிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.


சென்ற வாரம் முழுதும் அமெரிக்காவில் பரபரப்பாக இருந்தது சான்வி வென்னா கொலை வழக்கு. திருமணம் ஆகி வென்னா தம்பதிகளுக்கு பத்து ஆண்டுகளுக்கு பின் பிறந்த அழகு தேவதை சான்வி. ரகுநந்தன் என்ற பரதேசியின் பணத்தாசையால் அழிக்கப்பட்டு விட்டாள். அவனுக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ கிடைக்கக்கூடும். குறைந்த பட்சம் பரோலில் வெளியில் வரமுடியாத 45 ஆண்டுகளாவது கிடைக்கும். அவனது மனைவியும் கருவுற்றிருக்கிறார். அவரது நிலையும் பரிதாபமாக இருக்கிறது. எப்படியோ இரண்டு குடும்பங்களின் மகிழ்ச்சி, நிம்மதி அனைத்தும் ஒரே நாளில் அழிந்து விட்டது.


சென்ற வாரம் இணையத்தில் பரபரப்பாக விவாதிக்கப் பட்டது இரண்டு விஷயங்கள். அதில் ஒன்று சின்மயீ விவகாரம். இணையத்தில் பொதுவாகவே சிவிக் சென்ஸ் சற்று குறைவாகவே இருக்கிறது. நேரில் சொல்ல முடியாத பல கருத்துக்களை இணையத்தில் சொல்ல முடிகிறது. ஆனால் அதே நேரத்தில் சுயக்கட்டுப்பாடு என்று ஒன்று அவசியம். பேராசிரியர்கள் கூட சுயக்கட்டுப்பாட்டை இழப்பது மிகவும் வேதனையான ஒன்று.

நான் முன்னரே சொல்லி இருக்கிறேன், இணையத்தில் போலி பெயரும், முகமூடியும் கிடைக்கின்றன என்பதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தால் இப்படித்தான். கருத்து சுதந்திரம், கத்திரிக்காய், கொத்தமல்லி எல்லாமே வரையரைக்குட்பட்டது. எந்த கருத்தை சொல்வதற்கு முன்பும் ஒரு கேள்வியை உங்களிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இந்த கருத்தை எனது சொந்தப் பெயரில், நானே நேரிடையாக சென்று, எனது குடும்பத்தினர் முன்பு, எனது வாயால், அடுத்தவரிடம் சொல்ல முடியுமா? என்பது தான் அது. முடியும் என்பது உங்கள் விடையானால் அதை இணையத்தில் சொல்லுங்கள். முடியாது என்றால் விட்டு விடுங்கள்.

You are responsible for your life and actions.


சென்ற வாரம் இணையத்தில் பரபரப்பாக விவாதிக்கப் பட்ட மற்றொரு விஷயம் கமல் - முக்தா விவகாரம். கமல் ரசிகர்கள் பலர் இணையத்தில் பொங்கி இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கே யாரும் நாயகன் மட்டமான படம் என்றோ, கமல் மட்டமான நடிகர் என்றோ, அவர் நாயகனுக்காக ஒரு கஷ்டமும் படவில்லை என்றோ சொல்லவில்லை. கமலும், மணியும் அப்படத்திற்காக கஷ்டப் பட்டார்கள், அவர்களே அப்படத்தின் வெற்றியின் பலனை அனுபவித்தார்கள். அவர்களுக்கு பணம், பெயர், புகழ் எல்லாம் கிடைத்தது. முக்தா கஷ்டப் படவில்லை. அவருக்கு அவ்வெற்றியில் பெரிய பங்கு ஒன்றும் கிடைக்க வில்லை. உண்மை இவ்வாறு இருக்க 25 ஆண்டுகள் கழித்து அப்படத்தின் தயாரிப்பாளரை பொதுவில் அசிங்கப் படுத்தி இருக்க வேண்டாம் என்று தான் குறிப்பிடுகிறோம். ஒரு வேளை முக்தா ஒரு கஷ்டமும் படாமலேயே இப்படத்தின் வெற்றியில் பெரிய பலன் அடைந்திருந்து கமலுக்கு ஒன்றும் கிடைக்காமல் போய் இருந்தால் கமலின் ஆதங்கத்தில் ஒரு அர்த்தம் உண்டு என்று சொல்லலாம். கமலின் கடிதம் துவேஷத்தின் வெளிப்பாடு. அவர் படைத்த குணா பாத்திரம் பேசும் "அசிங்கம், அசிங்கம்.." வசனத்தின் ஒட்டு மொத்த எடுத்துக் காட்டு.

அதற்கு சரியான பதில் சொல்வதை விட்டு விட்டு, கமல் செய்தது சரிதான் என்று நிரூபிக்கும் முயற்சியில் உகாண்டாவில் வெளியான நாயகன் விமர்சனத்தை வெளியிடுவதோ அல்லது முக்தா ஒரு நூற்றாண்டுக்கு முன்பு எனக்கு அளித்த பேட்டியில் கமலை புகழ்ந்தார் இப்பொழுது இகழ்கிறார் என்றெல்லாம் கூறுவதோ சிறு பிள்ளை தனமாக இருக்கிறது. நாயகனை நல்ல படம் என்று கூற உகாண்டாவிற்கெல்லாம் போக தேவை இல்லை, நம்ம கேபிள் சங்கரிடம் சொன்னால் அதை விட நல்ல விமர்சனத்தை அவர் எழுதித் தருவார். அதே போல ஒரு நூற்றாண்டுக்கு முன்பு முக்தா கமலை பாராட்டி பேசினார் என்பது அவரது சபை நாகரீகத்தை காட்டுகிறது. ஒரு குழுவில் பணியாற்றும் பொழுது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம். அதை ஒன்று மறந்து விட வேண்டும், அப்படி முடியாவிட்டால் மனதிற்குள் அதனை வைத்துக் கொள்ள வேண்டும். முக்தா அவரது மனக் கசப்புகளை மூட்டை கட்டி வைத்து விட்டு கமலை பாராட்டி இருக்கிறார். இப்பொழுது கமல் தரப்பில் இருந்து அருமையாக பதில் மரியாதை கிடைத்ததால் எதிர்வினையாற்றி இருக்கிறார்.

பொதுவெளியில் மனக் கசப்புகளை அதுவும் 25 ஆண்டுகள் கழித்து வெளியிடுவது நடு வீட்டில் மலம் கழிப்பது போன்றது. நான் அப்படித்தான் நடு வீட்டில் மலம் கழிப்பேன், நீ பொத்திக் கொண்டு அருகில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று கூறுவது எந்த வகை நியாயமோ தெரியவில்லை.

தன்னை புத்திசாலி என்றும் மற்றவர்களை அடி முட்டாள்கள் என்றும் நினைத்துக் கொண்டு மற்றவர்களை தன்னை விட ஒரு படி கீழே வைத்து நோக்குவது கூட ஒரு வகை ஜாதீயம் தான். இந்த உண்மை கமலுக்கு ஒரு வேளை புரிந்தாலும் புரிந்து விடும், ஆனால் அவருக்கு ஜால்ரா தட்டும் உலக சினிமா ரசிகர்களுக்கு புரிவது கொஞ்சம் கஷ்டம் தான்.

உலக சினிமா ரசிகர்களே, பூவை பூவுன்னும் சொல்லலாம், புய்பம்னும் சொல்லலாம், நீங்கள் சொல்வது போலவும் சொல்லலாம்.


சன் டிவி குழுமத்தினர் சென்ற வாரம் ஹைதராபாத் IPL டீமை வாங்கி விட்டார்கள். வாங்கி விட்டார்கள் என்று சொல்வதை விட ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள் என்று சொல்வது தான் சரி. சுமார் 80 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தொலைக்காட்சி, ரேடியோ, அச்சு ஊடகம், சினிமா, விமான சேவை என்று பல துறைகளில் ஈடுபடும் நிறுவனம் இப்பொழுது விளையாட்டிலும் கால் பதித்துள்ளது. இதிலும் அவர்கள் வெற்றி வாகை சூடுவார்கள் என்று நம்புவோம். எனது வாழ்த்துகளை இந்த பதிவின் மூலம் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.


சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியில் ஆஜீத் வென்றதற்கு அவருக்கு எனது வாழ்த்துகள். ப்ரகதி ஆஜீத்தை விட நன்றாக பாடினாலும் மக்கள் சொல்லே மஹேசன் சொல் அல்லவா? நான் இதையும் முன்பே சொல்லி இருக்கிறேன். வைல்டு கார்ட் சுற்றில் மக்கள் வாக்கை பெற்று முதலில் வருபவருக்கு ஒரு unfair advantage கிடைக்கும். பல லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவருக்கே மக்கள் மீண்டும் சைக்கலாஜிகலாக வாக்களிக்க விரும்புவார்கள். போன போட்டியில் சாய்சரன் ஜெயித்ததற்கும் அது தான் காரணம். இந்த போட்டியில் ஆஜீத் ஜெயித்ததற்கும் அது தான் காரணம். ப்ரகதி பாலாவின் பரதேசி படத்தில் ஒரு பாடல் பாடியதாக தெரிகிறது. அவருக்கும் எனது வாழ்த்துகள்.


அம்மாவுக்கும் கேப்டனுக்கும் இடையில் நடக்கும் அரசியல் கேவலமாக இருக்கிறது. சென்ற ஆட்சியில் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட கலைஞர் இம்மாதிரி செயல்களில் ஈடுபட்டதாக தெரியவில்லை. நாட்டில் விலைவாசி உயர்வு, மின் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை என்று பல முக்கியமான விஷயங்கள் இருக்கையில் இம்மாதிரி செயல்களில் ஈடுபடுவது ஒரு மாநில முதல்வருக்கு அழகல்ல. ஆட்சி இது போலவே அமைந்தால் அடுத்த தேர்தலில் தளபதியா, கேப்டனா இல்லை அம்மாவா என்ற கேள்விக்கு மக்கள் தயங்காமல் தளபதி என்று பதில் கூறுவார்கள். தளபதி நிச்சயமாக நல்ல ஆட்சி தருவார் என்று தான் நான் நம்புகிறேன்.

Wednesday, October 10, 2012

பொடிமாஸ் - 10/10/2012

அமெரிக்காவில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. இப்பொழுது தான் நம்ம பதிவர் அண்ணன் மணிக் கூண்டு சிவாவுடன் அவர் சென்ற தேர்தலில் ஒபாமாவிற்கு பிரசாரம் செய்த பொழுது விவாதம் செய்தது போல இருக்கிறது. அதற்குள் நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. நேரம் விரைவாகத்தான் செல்கிறது. அவரிடம் நேரம் கிடைக்கும் பொழுது பேச வேண்டும். இப்பொழுதும் ஓபாமாவை தான் ஆதரிக்கிறாரா என்று கேட்க வேண்டும்.


இப்பொழுதெல்லாம் தமிழ் மண மத சண்டைகள் வயிற்றை குமட்டுகின்றன. மேலாண்மை பாடங்களில் ரூரல் மார்கெட்டிங் மற்றும் அர்பன் மார்கெட்டிங் டெக்னிக்ஸ் என்றொரு பாடம் இருக்கிறது. அதாவது நாம் எதை மார்கெட் செய்கிறோமோ அதை அந்த பொருளின் டார்கெட் ஆடியன்ஸ் முன்பு மட்டுமே மார்கெட் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு ஃபேர் அன்டு லவ்லி என்ற ஒரு ப்ராடெக்டை வெள்ளையர்கள் வசிக்கும் ஒரு நாட்டில் மார்கெட் செய்ய முடியாது. அதே போல டேனிங் ப்ராடக்ட்களை இந்தியாவில் மார்கெட் செய்ய முடியாது. இது மதத்தை மார்கெட் செய்பவர்களுக்கும் பொருந்தும். அந்த மதத்தை எதிர்த்து தொடர்ந்து பதிவெழுதுபவர்களுக்கும் பொருந்தும்.


மஹாராஷ்ட்ராவில் உத்தர பிரதேசத்தவர்களை உதைக்கிறார்கள். லக்னோவில் அஸ்ஸாம் மாநிலத்தவர்களை உதைக்கிறார்கள். பெங்களூரில் வட கிழக்கு மாநில மக்களை உதைக்கிறார்கள். காவிரியில் கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் விட மறுக்கிறது. முல்லை பெரியாரில் கேரளா தமிழகத்துடன் சண்டை போடுகிறது. வட நாட்டானுக்கு தென் நட்டானை கண்டால் ஆகாது. தென் நாட்டானுக்கு வட நாட்டானை கண்டால் ஆகாது. வேற்றுமையில் ஒற்றுமையாம் மண்ணாங்கட்டி. தேசியம் பேசுபவர்களை செருப்பால் அடித்தால் நன்றாக இருக்கும் என்று சில நேரங்களில் தோன்றுகிறது.


ராணி முகர்ஜியின் ஐயா படம் தமிழர்களை கொச்சை படுத்துகிறது என்று ஆளாளுக்கு பொங்கி எழுகிறார்கள். நம்மாட்களுக்கு தமிழுணர்வு ரொம்பவே பொங்கி வழிகிறது. இங்கே இல்லாத சர்தார்ஜி ஜோக்குகளா? இதையெல்லாம் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நம்மாட்களுக்கு தேவை கொஞ்சம் நகைச்சுவை உணர்வு தான். கருப்பன் தான் பிடிக்கும் என்று ராணி முகர்ஜி சொல்வது நமக்கு கேவலமாக தெரிந்தால் கருப்பு நிறத்தை கேவலப் படுத்துவது நாமும் தான் என்பது நமது அறிவுக்கு என்றைக்கு தான் எட்டுமோ? கருப்பை கேவலமாக நாம் பார்ப்பதை முதலில் நிறுத்துவோம். பின்னர் மற்றவர்களை நிறுத்த சொல்வோம்.


சென்ற வாரம் இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் பார்த்தேன். ஸ்ரீ தேவியின் கம் பேக் என்பதுடன் சீனி கம் மற்றும் பா படங்களை இயக்கிய பால்கியின் மனைவி இயக்கும் படம் என்ற எதிர் பார்ப்பும் சேர்ந்து கொள்ள ஒரு வித பதட்டத்துடனேயே படம் பார்த்தேன். ஞாயிறு இரவு காட்சி தான் பார்க்க முடிந்தது. அப்பொழுதும் கூட நல்ல கூட்டம். ஸ்ரீ தேவி வரும் முதல் காட்சியில் பலத்த கைதட்டல். முடிவில் ஸ்டான்டிங் ஓவேஷன். படம் எனது எதிர்பார்ப்பை நன்றாக பூர்த்தி செய்தது. என்ன படத்தின் ஒரே குறை அந்த ராமமூர்த்தி பாத்திரம் தான். பெரிதாக ஒட்டவில்லை. நம்மவர்களுக்கு ஹிந்தி தான் பிரச்சினை. இங்கிலீஷ் என்றால் பூந்து விளையாடுவார்கள்.


நாளை மறுநாள் இங்கே மாற்றான் வெளியாகிறது. கே. வி. ஆனந்த் படங்கள் எனக்கு ஒரு மாதிரியாக பிடிக்கும். அதாவது அவரின் படங்களை ஒரு முறை பார்க்க முடியும். அவ்வளவு தான். அவரது படங்களில் கனா கண்டேன் எனக்கு மிகவும் பிடிக்கும். அயன் சுமாராக பிடிக்கும். கோ பிடிக்கவே இல்லை. ஆனால் மக்களின் ரசனை வேறு மாதிரி இருந்தது. சூர்யாவிற்காக இந்த படத்தை பார்க்கிறேன். நன்றாக இருக்க வேண்டும். விஷ்வரூபம், அலெக்ஸ் பாண்டியன், நீ தானே என் பொன் வசந்தம் இந்த மூன்று படங்கள் கூட மாற்றானுடன் வெளி வரும் என்று செய்திகள் வந்தன. ஆனால் வர வில்லை. அனைத்து படங்களும் ஒரே நாளில் வெளி வந்திருந்தால் நான் இந்த வரிசையில் தான் படங்களை பார்த்திருப்பேன்.

நீ தானே என் பொன் வசந்தம் -> விஷ்வரூபம் -> மாற்றான். அலெக்ஸ் பாண்டியன் சத்தியமாக பார்த்திருக்க மாட்டேன். பின்னே, சுராஜ் படங்களை எல்லாம் திரையில் பார்க்க முடியுமா என்ன?


இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்களுக்கு நாளை 70 ஆவது பிறந்த நாள். அவரை பற்றி புதிதாக கூற என்ன இருக்கிறது. அவரது சுப்கே சுப்கே, நமக் ஹராம், ஜஞ்சீர், டான், தீவார், அக்னீ பத், ஷோலே, கபி கபி போன்ற பெரும் வெற்றி பெற்ற படங்கள் மட்டும் இல்லை தோ அவுர் தோ பான்ச், மர்த் போன்ற மொக்கை படங்களை கூட வியந்து பார்த்திருக்கிறேன். திரையில் அவரது ஆளுமையை பற்றி நான் கூறுவதை விட சமீபத்தில் வெளியான இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஐந்து நிமிட கௌரவ தோற்றத்தில் அமிதாப்பை பாருங்கள். குறிப்பாக அமெரிக்க இமிக்ரேஷன் ஆபீசரிடம் அவர் பேசுவதையும் தல அஜித் பேசுவதையும் ஒப்பிட்டு பாருங்கள். அவரது ஆளுமை தெரியும். தலையை குறைத்து மதிப்பிட இதை சொல்லவில்லை. தலையின் ரசிகர்கள் என் மீது கொலைவெறி கொண்டு பாய வேண்டாம். அந்த இரு காட்சிகளையும் ஒப்பிடும் பொழுது அமிதாப் பல மடங்கு அதிகம் தலையை விட ஸ்கோர் செய்கிறார் என்பது தான் உண்மை. இந்திய திரை ரசிகர்களை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தனது திறமையினால் ஆட்கொண்டிருக்கும் மஹா கலைஞனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.


தங்கமணி ஆப்பிள் ஐஃபோன் 5 வாங்கி இருக்கிறார். முதல் நாளே ப்ரீ ஆர்டர் செய்து சென்ற வாரம் வந்து சேர்ந்தது. ஃபோன் அட்டகாசமாக இருக்கிறது. என்ன ஆப்பிளின் புதிய OS தான் ஆப்படிக்கிறது. அதிலும் ஆப்பிள் மேப்ஸ் படு மொக்கை. அப்பிள் ஸ்டோரில் இருக்கும் போதே நான் எங்கே இருக்கிறேன் என்பதை சொல்ல மறுக்கிறது. அதே போல எந்த இடத்திற்கும் முழூ விலாசத்தை எதிர் பார்க்கிறது. கூகுள் போல பெயரை வைத்தே விலாசத்தை கண்டுபிடிக்க பாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. பார்ப்போம் அடுத்த வெர்ஷனில் சரி செய்கிறார்களா என்று.


சமீபத்தில் தான் தடையற தாக்க படத்தை பார்த்தேன். அட்டகாசமான க்ரைம் த்ரில்லர். இயக்குனர் மகிழ் திருமேனிக்கு எனது பாராட்டுக்கள். அருண் விஜய் நல்ல ஒரு ரவுண்டு வருவார் என்று நம்புவோம்.

Wednesday, August 29, 2012

பொடிமாஸ் - 08/29/2012

பதிவர் சந்திப்பு நன்றாக நடந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி. அதனால் ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது. இனி வரும் காலங்களின் இது மாதிரியான சர்ச்சைகள் ஏற்படாமல் பதிவர் சந்திப்புகள் நடக்கும் என்று நம்புவோம். இந்த சந்திப்பினை மிகவும் நன்றாக நடத்தி முடித்த பதிவர்களுக்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.


சமீப காலமாக அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. கொலராடோவில் தொடங்கியது, விஸ்கான்ஸின் சீக்கிய படுகொலை, நியூயார்க் எம்பயர் ஸ்டேட் பில்டிங் படுகொலை, பால்டிமோர் துப்பாக்கி சூடு என்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என்று நம்புவோம். ஆனால் இவை அனைத்திலுமே காவல் துறையினர் தங்கள் உயிரை பெரிதாக நினைக்காமல் போராடி துப்பாக்கி சூடி நடத்தியவர்களை கொன்றிருக்கிறார்கள் இல்லை உயிருடன் பிடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.


அமெரிக்காவில் பிரபலமான சிபோட்லே மெக்ஸிகன் உணவகத்தில் பில்லை ரவுண்ட் ஆஃப் செய்யும் பொழுது அதிக தொகைக்கு செய்கிறார்கள் என்று புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது நீங்கள் செலுத்த வேண்டிய தொகை $9.24 என்றால் உங்கள் பில் $9.25 என்று காட்டும். இதை பலரும் ஆட்சேபிக்கிறார்கள். நம்ம கேபிள் சங்கர் உணவகத்தில் இது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக சண்டையிடும் பொழுது அவரை பற்றி கேவலமாக பதிவுகளில் திட்டியவர்கள் இனி அமெரிக்கர்களும் அதனை செய்வதால் இதை ஒரு ஸ்டேட்டஸ் ஸிம்பலாக கருத தொடங்குவார்களோ? எனது நிலை இதில் இது தான், "நமது காசு, ஒரு பைசாவோ கோடி ரூபாயோ, நாமாக விரும்பி கொடுக்காமல் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ அவர்களாகவே எடுத்தால் அது திருட்டு தான்."


சமீபத்தில் நான் அதிகம் கேட்பது முகமூடி படத்தின் "வாய மூடி சும்மா இருடா" பாடல் தான். மதன் கார்க்கி யின் வரிகள் ஆலாப் ராஜுவின் குரலில் காதில் தேனாக பாய்கிறது.

கீழே உள்ள வரிகள் ஒரு உதாரணம்.

கன்னம் சுருங்கிட நீயும்;
மீசை நரைத்திட நானும்;
வாழ்வின் கரைகளைக் காணும்;
காலம் அருகினில் தானோ?
கண் மூடிடும் அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!

நாளை மறுநாள் இங்கே படம் வெளியாகிறது. வார இறுதியில் கட்டாயம் பார்த்து விடுவேன். படம் மொக்கையாக இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும்.


டான்ஸ் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டதற்காக தாலிபான்கள் ஆஃப்கானிஸ்தானில் 17 பேரின் தலையை வெட்டி கொன்றிருக்கிறார்கள். டான்ஸ் பார்ட்டியில் கலந்து கொள்வது இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிரானதாம். அதனால் இஸ்லாமிய முறையில் தண்டனை அளித்திருக்கிறார்களாம்.

இம்மாதிரியான நடவடிக்கைகள் தான் சராசரி மனிதர்களை இஸ்லாத்தின் மீது வெறுப்படைய செய்கிறது. இணையத்தில் மார்கத்தை பரப்பும் தோழர்கள் இதை பற்றியெல்லாம் ஒன்றும் பேசியதாக தெரியவில்லை. Choosing to ignore problems is rarely a good way to solve them. தயவுசெய்து இதை பற்றியெல்லாம் பேசுங்கள். அதை செய்வதை விட்டு விட்டு "சினிமாவில் இஸ்லாமியர்களை தவறாக காட்டுகிறார்கள்; இணையத்தில் எங்களை ஒதுக்குகிறார்கள்;" என்றெல்லாம் கூறுவது சிறுபிள்ளை தனமாக இருக்கிறது.


சென்ற வாரம் வீட்டில் ஸ்மார்ட் ஹோம் ஸிஸ்டம் இன்ஸ்டால் செய்தோம். இனி கைதொலைபேசியின் உதவி கொண்டு வீட்டில் உள்ள ஹீட்டர் மற்றும் ஏசி ஆகியவற்றை கட்டுப் படுத்த முடியும். வீட்டில் உள்ள வீடியோ கேமராவில் படமாவதை பார்த்துக் கொள்ள முடியும். விட்டின் தாழ்பாளை கை தொலை பேசியினை கொண்டு திறக்க/மூட முடியும். வீட்டில் உள்ள விளக்குகளை கட்டுப் படுத்த முடியும். வீட்டில் உள்ள ஸ்மோக், ஃப்ளட் மற்றும் பர்க்ளர் அலார்ம்களை கட்டுப் படுத்த முடியும். டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் ஸோ மச்.


இங்கிலாந்து அணிக்கு ஆப்படித்து சென்ற வாரம் தென் ஆப்ரிக்கா அணி டெஸ்ட் தர வரிசையில் முதல் இடத்திற்கு சென்றுவிட்டது. T20 போட்டிகளின் வரிசையில் அது முன்னரே முதல் இடத்தில் தான் இருந்தது. நேற்று நடை பெற்ற ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தை மீண்டும் வெற்றி கொண்டு ஒரு நாள் போட்டிகளின் தர வரிசையிலும் முதல் இடத்திற்கு சென்று விட்டது. இதன் மூலம் ஒரே நேரத்தில் மூன்று தர வரிசையிலும் முதல் இடத்தை பெற்ற அணி என்ற பெருமையை தென் ஆப்ரிக்கா அணி பெற்று விட்டது. அவர்களின் மகுடத்தில் உலக கோப்பை வெற்றி மட்டும் தான் இல்லை. அடுத்த முறை அதையும் வெல்வார்கள் என்று நம்புவோம். வாழ்த்துக்கள் ஸ்மித் மற்றும் டீ வில்லர்ஸ்.



இந்தியா நியூஸியை வென்றதை வைத்து எல்லாரும் இந்திய அணியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள். இப்பொழுது தான் தொடர்ந்து எட்டு டெஸ்ட் போட்டிகளின் தோற்றுவிட்டு வந்தோம். அது மறந்து விட்டது என்று நினைக்கிறேன். நியூஸி அணி ஒரு புள்ள பூச்சி. அதை அடித்துவிட்டு "நானும் ரவுடி தான்" என்று கூவுவது கேவலமாக இருக்கிறது. பார்ப்போம் இங்கிலாந்துக்கு எதிராக என்ன நடக்கிறது என்று.


நண்பர்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த திருநாள் உங்களுக்கு மன மகிழ்ச்சியும், உடல் ஆரோக்கியமும், செல்வ செழிப்பும் கொடுக்கட்டும்.

Sunday, May 06, 2012

பொடிமாஸ் - 05/06/2012

திருச்சியில், புதுக்கோட்டையில், தஞ்சையில் கடந்த பத்து தினங்களாக மின்வெட்டு இல்லை என்று தெரிகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இது தான் நிலை என்று நினைக்கிறேன். மின்வெட்டு நடக்கும் பொழுது ஆட்சியை குறை கூறி குத்து பரோட்டா மொத்து பரோட்டா எல்லாம் போட்ட உடன் பிறப்புகள் இப்பொழுது ஏதாவது எழுதி இருக்கிறார்களா என்று தேடி பார்த்தேன். பூஜ்ஜியம்.

ஒன்று நிச்சயம் தெரிகிறது. இவர்களின் எண்ணம் மின்வெட்டு நீங்க வேண்டும் என்பது இல்லை. மின்வெட்டு தொடர்ந்து ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்து மீண்டும் ஆட்சிக்கு திமுக வர வேண்டும் என்பது தான். என்ன அதனை அரசியல் என்ற பெயரில் செய்து தொலைக்காமல் வேறு ஏதேதோ பெயரில் செய்து தொலைப்பதுதான் எரிச்சலை தருகிறது.

பதிவர் வவ்வால் இதனை பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளார். அவசியம் படியுங்கள். பதிவின் சுட்டி கீழே.

http://vovalpaarvai.blogspot.in/2012/04/blog-post_25.html


முல்லை பெரியார் அணை குறித்த உச்ச நீதி மன்றத்தின் ஐவர் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கை கேரள அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. அணை குறித்த கேரளாவின் பொய்களை உடைத்ததோடு புதிய அணை கட்டினாலும் தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று உறுதிப்படுத்தி விட்டது. குழுவில் இருந்த ஐவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


நம்ம கோவி. கண்ணன் அவர்கள் பெர்ஸ்பெக்டிவ் குறித்த அருமையான பதிவு ஒன்றை இட்டுள்ளார். பல நேரங்களில் அடுத்தவர் நிலையிலிருந்து நாம் யோசித்து பார்த்தால் பல முரண்பாடுகளை தவிர்க்கலாம். குறிப்பாக கணவன் மனைவிக்குள் இந்த நிலை பெரிதும் கை கொடுக்கும். இப்பொழுது தமிழ்மணத்தில் நடக்கும் சண்டைகளுக்கு கூட இது பொருந்தும்.

பதிவின் சுட்டி கீழே. அவசியம் படியுங்கள்.

http://govikannan.blogspot.com/2012/05/blog-post_06.html


தமிழ்மண சண்டைகள் என்றதும் சமீபத்தில் தமிழ்மண நிர்வாகத்தினர் வெளியிட்டிருக்கும் அறிக்கை நியாபகம் வருகிறது. மதம் சம்பந்தப்பட்ட அவதூறு பதிவுகளை நீக்குவதென்று தமிழ்மண நிர்வாகத்தினர் முடிவு செய்திருப்பது நல்ல முடிவு. மத பிரசாரங்களை தவிர்த்தாலே அவதூறுகளை தவிர்த்து விடலாம். அதனால் மத பிரசார பதிவுகளையும் நீக்குவார்கள் என்று நம்புவோம். மத பிரசார பதிவுகளை இடுவோர் ஒன்றை கவனிக்க வேண்டும். "என் மனைவி பத்தினி" அன்று கூறுவதற்கும் "என் மனைவி மட்டுமே பத்தினி" என்று கூறுவதற்கும் வேறுபாடு உண்டு. உங்கள் மதத்தை உங்கள் வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள்.


என்னை பொறுத்தவரையில் நித்தியானந்தா மதுரை ஆதீனமானது நல்ல விஷயம் தான். நித்தியை பற்றி மக்களுக்கு தெரிந்துவிட்டது. ஆதீனங்களை பற்றியும் தெரிய வேண்டாமா? அதற்கு இம்மாதிரி செயல்கள் ஒரு வாய்ப்பு. மக்கள் இம்மாதிரி நிறுவனங்களிடம் பணத்தை கொட்டுவதற்கு பதில் உதவும் கரங்கள் போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு பணம் செலுத்தினால் உண்மையிலேயே புண்ணியம் கிட்டும்.


நாகர்கோவிலில் அரசு மருத்துவர்களின் கவனக்குறைவினால் ருக்மிணி என்ற 34 வயது பெண், இரு குழந்தைகளின் தாய், இறந்து விட்டார். சென்ற வருடம் மார்ச் மாதம் குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்ய ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு வந்த ருக்மிணிக்கு ஆக்ஸிஜன் கொடுப்பதற்கு பதிலாக விஷ வாயுவான நைட்ரஸ் ஆக்ஸைடு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் கோமா நிலைக்கு சென்ற அவர் ஒராண்டுக்கு மேலாக அளிக்கப்பட்ட சிகிச்சை பலனில்லாமல் இந்த வாரம் இறந்து விட்டார். இன்னும் எத்தனை ருக்மிணிகள்?


நேற்று தான் வித்யா பாலனின் கஹானி படம் பார்த்தோம். என்ன படம் சார்? இப்படி ஒரு படம் பார்த்து நெடு நாட்களாகி விட்டன. படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்கள். அடுத்து வழக்கு எண் 18/9 பார்க்க வேண்டும். DVD வருவதற்கு எப்படியும் குறைந்தது இரண்டு மாதங்களாவது ஆகும். வெளி நாட்டில் வாழும் தமிழர்கள் அஜித், விஜய், ரஜினி, கமல் என்று ஓடாமல் இம்மாதிரி படங்களையும் வரவேற்றால் இம்மாதிரி படங்களும் வெளி நாட்டில் வெளியிடப்படும்.


கலைஞர் டிவியில் திருக்குறள் கதைகள் என்று அனிமேஷன் கார்ட்டூன்களை ஒளிபரப்புகிறார்கள். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு குறள். அதனை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு கதை. மிகவும் நன்றாக இருக்கிறது. குழந்தைகள் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இதனை பரிந்துரைக்கிறேன். இது சனிக்கிழமை ஒளிபரப்பபடுகிறது.


பஹாமாஸ் பயணக் கட்டுரையை படித்த வலையுலக நண்பர்கள் பின்னூட்டத்திலும், மின்னஞ்சலிலும், தனி மடலிலும் புகைப் படங்களை எப்பொழுது பதிவேற்றுவேன் என்று கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு நன்றிகள். விரைவில் வலையேற்றுகிறேன்.

Thursday, April 19, 2012

பொடிமாஸ் - 04/19/2012

IPL போட்டிகள் தொடங்கிவிட்டன. எனக்கு பெரிதாக ஈடுபாடு ஒன்றும் இல்லை. ஒரு விதமான சலிப்பே ஏற்படுகிறது. இம்முறை ராஜஸ்தான் ஜெயித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ட்ராவிட் கோப்பையை வென்றால் நன்றாக இருக்கும் என்ற எனது ஆசையே காரணம். பெரிதாக வேறு ஒன்றும் இல்லை. சென்னையில் டிக்கெட் விலை ஆயிரம் ரூபாயிலிருந்து இருபதாயிரம் ரூபாய் வரை போகிறது என்று கூறுகிறார்கள். அதே நேரத்தில் கூட்டம் குறைவாகவே இருக்கிறது என்றும் TRP யும் சரிந்து விட்டது என்றும் கூறுகிறார்கள். IPL என்பது பொன் முட்டையிடும் வாத்தை போன்றது. BCCI தனது பேராசையினால் அதனை அறுக்காமல் இருக்க வேண்டும்.



ஷாருக் கான் அமெரிக்காவில் மீண்டும் சோதனை செய்யப்பட்டதில் இருந்து பலரும் உளறிக் கொட்டி வருகிறார்கள். லேட்டஸ்ட் உளறல் நம்மவர் கமல ஹாசனிடம் இருந்து. ஒரு நாட்டில் யாரை உள்ளே விட வேண்டும் விடக் கூடாது என்று முடிவு செய்வது அந்த நாட்டின் உரிமை. ஷாருக் இந்தியாவில் பெரிய சுண்டைக்காயாக இருக்கலாம். அமெரிக்காவில் அவரும் ஒரு சராசரி பயணி அவ்வளவுதான். ஒன்று பொத்திக் கொண்டு சோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த நாட்டுக்கு வரக் கூடாது. அமெரிக்கா என்ன இந்தியாவா?, தீவிரவாதிகளை உள்ளே விட்டுவிட்டு அவர்கள் பல நூறு அப்பாவி இந்தியர்களை கொன்ற உடன் தீவிரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என்று உள்துறை அமைச்சர் பேட்டி மட்டும் கொடுப்பதற்கு.



மேற்கு வங்காளத்தில் மம்தாவை குறிவைத்து கல்லூரி பேராசிரியர் ஒருவர் ஏதோ ஒரு கார்ட்டூனை தனது ஃபேஸ் புக் தளத்தில் வெளியிட அதனால் வந்து வினை. அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர்களை கேலி செய்தால் சிறை தண்டனை என்றால் கலைஞரை கேலி செய்ததற்காக சோ போன்றவர்கள் பல ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து தொலைக்க வேண்டி இருந்திருக்கும். நல்ல வேளை நாம் தமிழகத்தில் இருக்கிறோம். மம்தா அந்த கார்ட்டூன் உங்களை கேலி செய்யவில்லை, உங்கள் நடத்தை தான் உங்களை கேலி செய்கிறது.



இப்பொழுதெல்லாம் தமிழ் மணத்தை திறப்பதற்கே பயமாக இருக்கிறது. எந்த ஜாதியை சேர்ந்தவன் தமிழன், எந்த மதத்தை சேர்ந்தவன் தமிழன், எந்த இனத்தை சேர்ந்தவன் தமிழன், எந்த ஜாதியை சேர்ந்தவனுக்கு விருது கொடுக்க வேண்டும், எந்த ஜாதியை சேர்ந்தவனுக்கு வீடு கொடுக்க வேண்டும், எந்த ஜாதியை சேர்ந்தவனுக்கு இதையெல்லாம் கொடுக்க கூடாது..... இப்படி இன்னும் பல. அப்பப்பா கொடுமையடா. ஜாதியை பூதக் கண்ணாடி வைத்துக் கொண்டு தேடி அலைகிறார்கள்.

அது சரி.

"சாதிக் கொடுமைகள் வேண்டாம்; அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்."


என்று பாடியவனையே ஜாதி வெறியன் என்று கூறும் உலகு தானே இது. வாழும் குறைந்த காலமான அறுபது எழுபது ஆண்டுகளில் ஒருவரை ஒருவர் வெறுக்காமல் அன்பு செலுத்தி வாழ்வது அவ்வளவு கஷ்டமா?



இந்த லட்சணத்தில் நாளை முதல் தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு வேறு நடக்க இருக்கிறது. எடுத்து என்ன புடுங்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. முன்னரே இருக்கும் ஆயிரம் பிரிவினைகளை லட்சமாக்காமல் விட மாட்டார்கள் போல் இருக்கிறது. "வேற்றுமையில் ஒற்றுமை" என்று படிப்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கிறது. ஆனால் உண்மையில் ஒற்றுமை எங்கே இருக்கிறது. வேற்றுமை மட்டுமே மிஞ்சி இருக்கிறது.



நேற்று முதல்வர் அறிவித்துள்ள அறிக்கையின் படி திருச்சி தஞ்சை வழித்தடத்தில் உள்ள செங்கிப்பட்டியில் புதிய அரசு பொறியியல் கல்லூரி ஒன்று திறக்கப்படும் என்று தெரிகிறது. திருச்சியில் முன்னரே உள்ள IIM, NIT, BIM, KAPVGMC போன்ற உயர் கல்லூரிகளுக்கு மத்தியில் இதுவும் வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு கல்லூரி என்பதால் கட்டணம் அதிகம் இருக்காது. பல ஏழை குழந்தைகள் படித்து பயன் பெற எனது வாழ்த்துக்களை இப்பொழுதே தெரிவித்துக் கொள்கிறேன்.



"ஒரு கல் ஒரு கண்ணாடி" இன்னும் இங்கே வெளியிடப்படவில்லை. DVD வரும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது நான் பெரிதும் எதிர் பார்ப்பது ராம் கோபால் வர்மாவின் டிபார்ட்மென்ட். அமிதாப், சஞ்சய் தத், ரணா தக்குபத்தி, அபிமன்யூ சிங் என்று ஒரு பட்டாளமே நடிக்கிறது. ட்ரைலரின் தொடக்கத்தில் அமிதாப் "மேன் இல்லீகலீ லீகல் காம் கர்தா ஹூன், லீகலி இல்லீகல் காம் நஹீ." என்று கூறுவது அசத்தல். டிப்பிகல் RGV படமாக இருக்கும் என்று நினைக்கிறேன். RGV படங்களில் என்ன பிரச்சனை என்றால் ஒன்று படம் அட்டகாசமாக இருக்கும், இல்லை படம் படு கேவலமாக இருக்கும். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை என்பதே கிடையாது.



அதே படத்தில் நடாலியா கவுர் என்ற ஒரு ப்ரேஸில் நாட்டு அழகியை ஒரு பாடலுக்கு ஆட விட்டிருக்கிறார். கம்பெனி படத்தில் கல்லாஸ் பாடலில் இஷா கோபிகரை அட்டகாசமாக இவர் காட்டியதை நாம் மறந்திருக்க முடியாது. இந்த பாடலின் கூடுதல் சிறப்பு இது தலைவரின் ஆசை நூறு வகை பாடலின் தழுவல். அதையும் பார்த்து ரசியுங்கள்.



Saturday, March 31, 2012

பொடிமாஸ் - 03/31/2012

அம்மாவும் உடன் பிறவா சகோதரியும் மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். எதிர் பார்த்தது தான். அவர்களுக்குள் என்ன நடந்தது என்று அவர்களுக்கே தெரியும். இனி அம்மாவின் செயலை நம்பி சசிகலாவிற்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு ஆப்பு தான். சோ இதற்கு என்ன சொல்வார் என்று தெரிந்து கொள்ள ஆவல். ஏதேனும் சொல்லி பூசி மூடுவார். "தாயுள்ளம் கொண்டு துரோகத்தை மன்னித்தார்" என்று கூறினாலும் வியப்பு இல்லை. அந்த அளவிற்கு இப்பொழுதெல்லாம் அவர் ஜெயலலிதா ஜால்ரா போடுகிறார்.



தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்ந்து விட்டது. இதுவும் எதிர் பார்த்தது தான். இடை தேர்தலுக்காகவே உயர்த்தாமல் இருந்தார்கள். தேர்தல் முடிந்த உடன் உயர்த்தி விட்டார்கள். ஆனாலும் கர்நாடகா மற்றும் ஆந்திராவை ஒப்பிடுகையில் தமிழகத்தில் மின்சார கட்டணம் மிகவும் குறைவு தான். அதிக கட்டணம் வசூலித்தாலும் தடையில்லாத மின்சாரம் அளித்து தொலைத்தால் நல்லது.



அடுத்த வாரம் IPL போட்டிகள் தொடங்குகின்றன. தமிழகத்தில் மின்சார உபயோகம் பல மடங்கு அதிகரிக்கும். நிச்சயம் மின்வெட்டும் அதிகரிக்கும். கோடை காலம் வேறு. நினைத்தாலே பயமாக இருக்கிறது. இந்த மே மாதம் முழுவதும் இந்தியா செல்வதாக ஒரு திட்டம் இருந்தது. இப்பொழுது 10 மணி நேர மின்வெட்டை நினைத்து பயணத்தை வருட இறுதிக்கு ஒத்தி வைத்திருக்கிறோம்.



திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே. என். நேருவின் இளைய சகோதரர் ராமஜயத்தின் மரணம் அதிர்ச்சியை கொடுக்கிறது. அதை விட அதிர்ச்சி தினமலரிலும் தினகரனிலும் அவரது கொலையை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ள திருச்சி மக்களின் மனநிலை. நான் திருச்சியை விட்டு வெளிவந்து பத்தாண்டுகளுக்கு மேலாகிறது. அதனால் திருச்சியின் இன்றைய நிலை குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் கருத்து தெரிவித்துள்ள பலரும் திருச்சியை திருப்பாச்சியில் பேரரசு காட்டிய சென்னைக்கு நிகராக கூறி இருக்கிறார்கள். உண்மையாக இருக்கும் பட்சத்தில் மிகவும் பயமாக இருக்கிறது. விரைவில் குற்றவாளிகள் பிடிபட வேண்டும். அப்பொழுது தான் உண்மை தெரியும்.



ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மனோவிற்கும் புஷ்பவனம் குப்புசாமிக்கும் சண்டை நடப்பது போல ஏதோ ஒன்று காட்டுகிறார்கள். இன்னும் நிகழ்ச்சியை முழுதாக நான் பார்க்கவில்லை. காசுக்காக பிரபலங்கள் தங்களது டிக்னிட்டியை குறைத்துக் கொள்கிறார்கள். மானம் போனால் உயிர் போகும் என்ற காலம் போய், மானம் போனால் மயிர் தான் போகும் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிரபலங்களிடம் மட்டும் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்.



இன்று அமெரிக்காவில் கடந்த ஒரு வார காலமாக இருந்த லாட்டரி மேனியா ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. சுமார் 3200 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள லாட்டரி பரிசு மூன்று பேருக்கு விழுந்திருக்கிறது. இதுவரை உலகில் வழங்கப்பட்டுள்ள லாட்டரி பரிசுகளிலேயே இதுதான் அதிகமானது. உலக சாதனை. டிக்கெட்டை வாங்க அமெரிக்கா முழுதும் மக்கள் வரிசைகளில் அடித்து பிடித்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு நிமிடத்தில் சராசரியாக சுமார் 3 லட்சம் லாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை இந்த குலுக்கலில் பரிசு யாருக்கும் விழாமல் இருந்திருந்தால் அடுத்த குலுக்கலுக்கு பரிசுத்தொகை 5000 கோடியை தொட்டிருக்கும்.





நான் சரக்கடித்து விட்டு வாந்தி எடுத்து நெடுநாட்கள் ஆகிவிட்டன. ஆனால் நேற்று இரவு திடீரென்று அடித்த சரக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஒரே வாந்தி. இன்று முழுதும் ஹேங்கோவர் வேறு. எப்பொழுதும் அடிக்கும் ப்ராண்ட் தான். என்ன எழவோ தெரியவில்லை. இன்று திடீரென்று சுத்தி விட்டது. ஒரு வேளை எனக்கு வயசாகி விட்டதோ என்னவோ.

Puking is the worst side effect of drinking alchohol; probably the best too.



சமீபத்தில் தான் மஹேஷ் பாபு நடித்த அத்தடு படம் முழுதும் பார்த்தேன். படம் அட்டகாசம். மஹேஷ் பாபுவின் ஸ்க்ரீன் ப்ரெஸன்ஸ் அருமை. இது அவருக்கான டெய்லர் மேட் படம். படம் கமர்ஷியலாக பெரிய வெற்றி இல்லை என்று கூறுகிறார்கள். ஒரு வேளை அதனால் தமிழில் விஜய் நடிக்கவில்லையோ என்னவோ. ஒரு வேளை நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


Monday, February 13, 2012

பொடிமாஸ் - 02/13/2012

"தமிழகத்தில் சென்னை நீங்கலாக மற்ற அனைத்து இடங்களிலும் இனி எட்டு மணி நேர மின்வெட்டு" தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு. அது என்ன சென்னை நீங்கலாக? சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் தான் மனிதர்களா? பட்டுக் கோட்டையில் ஒரு லேத்துப் பட்டறை வைத்திருப்பவன், தஞ்சையில் ஒரு ப்ரௌஸிங் சென்டர் வைத்திருப்பவன், திருச்சியில் ஒரு வெல்டிங் கடை வைத்திருப்பவன் எல்லாம் என்ன செய்வது? கடையை மூடிவிட்டு தூக்கில் தொங்க வேண்டியது தானா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே கடும் பனிப்புயல் வீசியது. அதன் விளைவாக பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. அதை தொடர்ந்து தொலைக் காட்சியில் இங்கு மின்சாரம் வழங்கும் PEPCO நிறுவனத்தின் தலைவர் Thomas Graham உரையாற்றினார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் சில.

1.மொத்தம் எவ்வளவு வீடுகளுக்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது?
2.அதில் எவ்வளவு சரி செய்யப் பட்டுள்ளது?
3.மற்ற வீடுகளுக்கு ஏன் இன்னும் மின்வெட்டு சரி செய்யப் படவில்லை?
4.இரண்டு நாட்களாக இவ்வளவு பேர் மின்சாரம் இல்லாமல் இருந்திருக்கிறார்கள், நீங்கள் ஏன் முன்னரே தற்காப்பு நடவடிக்கை எடுக்க வில்லை? பனிப்புயல் வரும் என்றுதான் உங்களுக்கு முன்னரே தெரியுமே?
5.எவ்வளவு பேர் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள்? ஏன் இவ்வளவு குறைவு?
6.மின்சாரம் இல்லாதவர்கள் தொலைபேசி செய்தால் ஏன் ஒருவரும் தொலைபேசியை எடுக்க வில்லை?
7.நீங்கள் எவ்வளவு தொலைபேசி அழைப்புகளை எடுத்தீர்கள்? எடுத்து அவர்களுக்கு என்ன கூறினீர்கள்? எடுக்கவில்லை என்றால் உங்களுக்கு வேறு என்ன வேலை?

இதை எல்லாம் எனது நினைவில் இருந்து எழுதுகிறேன். பாருங்கள் இரண்டு நாட்கள் மின்சாரம் இல்லை என்றால் அமெரிக்காவில் எப்படி விளைவுகள் வருகிறது என்று.

இந்தியா அமெரிக்காவின் 51 ஆவது மாநிலம் அல்ல. அது அமெரிக்கா போல மாறவும் வேண்டாம். இந்தியாவாகவே இருந்தாலே போதும். ஆனால் மக்களின் அடிப்படை வசதிகளை கவனிக்கும் விஷயத்தில் மட்டும் வளர்ந்த நாடுகளை பின்பற்றினால் நல்லது.



சென்னை அணிக்கும் ட்வென்டி ட்வென்டி கிரிக்கெட் போட்டிக்கும் அப்படி என்ன பொருத்தமோ தெரியவில்லை. எல்லா போட்டிகளிலும் அபாரமாக விளையாடுகிறோம். அது IPL ஆக இருந்தாலும் சரி. CCL ஆக இருந்தாலும் சரி. சென்ற ஆண்டு IPL போட்டிகள் நடக்கும் பொழுது ஒரு நண்பர் சொன்னார், "IPL is a tournament in which eight to ten teams compete among each other to play the finals against Chennai Super Kings and lose." கிட்டத்தட்ட இது CCL க்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். நாம் நிஜமாகவே நன்றாகவே ஆடினோம். குறிப்பாக ஸெமி ஃபைனல்ஸிலும் ஃபைனல்ஸிலும் நமது ஆட்டம் அபாரம்.

பொதுவாக பங்கேற்ற அனைத்து அணிகளுமே நல்ல தோழமையுடன் பங்கு பெற்றார்கள். ஆனால் கடைசி போட்டியில் கர்நாடகா தனது கேவலமான நடத்தையினால் கருப்பு புள்ளி ஒன்று அதற்கு வைத்து விட்டது. குண்டப்பா விஷ்வநாத்தின் கிரிக்கெட் ட்ரைனிங் அகாடமியில் நன்றாக விளையாடும் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து, அவர்களை வைத்து ஒரே வாரத்தில் ஒரு திரைப்படம் எடுத்து, அவர்களை நடிகர்களாக சங்கத்தில் பதிவு செய்து, அவர்களை கொண்டு விளையாடிய கேவலத்தை செய்த அணிக்கு ரோஷம் ஒரு கேடா?

கடைசி ஓவரில் விக்ராந்த் செய்ததில் ஒரு தவறும் இல்லை. அதனால் ரோஷம் பொத்துக் கொண்டு பரிசளிப்பு விழாவில் பங்கு பெறாமல் அதை புறக்கணித்த கர்நாடகா அணியினரை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இவர்கள் அடுத்தடுத்து நடக்கப் போகும் CCL போட்டிகளில் தொடர்ந்து தோற்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை இங்கே பதிவு செய்கிறேன்.



நேற்று Dhoni திரைப்படம் பார்த்தேன். படத்தினை பற்றி தனியாக விமர்சனம் எழுத தோன்றவில்லை. ஒரு சில உணர்வுகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. Dhoni யும் அப்படி ஒரு உணர்வு. அவசியம் படத்தை பாருங்கள். அரங்கில் எங்களையும் சேர்த்து ஆறு அல்லது ஏழு பேர் மட்டுமே இருந்தார்கள். அதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஏழாம் அறிவுக்கும், வேலாயுதத்திற்கும் 20 டாலர் கூட கொடுக்க தயராக இருக்கும் கூட்டம் இம்மாதிரி படங்களுக்கு 10 டாலர் கூட கொடுக்காமல் ஓசியில் நொங்கு சாப்பிடவே விரும்புகிறது. ஆனால் அந்த கூட்டத்திடமிருந்து நல்ல படங்கள் தமிழில் வருவதில்லை என்ற விமர்சனம் மட்டும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். தமிழகத்திலாவது கூட்டம் கூடும் என்று எதிர் பார்ப்போம்.



எஸ்.ரா. விழாவில் ரஜின் பங்கேற்றதை பார்த்து சாருவுக்கு பொச்செரிச்சல். கொலைவெறி மற்றும் சச்சின் பாடல்களினால் தனுஷ் பெற்ற புகழை பார்த்து சிம்புவிற்கு பொச்செரிச்சல். இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இது தான். ஒருவருக்கு திறமையினாலோ அல்லது அதிர்ஷ்டத்தினாலோ புகழ் கிடைக்கிறது. மற்றவருக்கு பொச்செரிச்சல் படுவதால் புகழ் கிடைக்கிறது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு சூப்புவதற்கு குச்சி ஐஸ் கூட கிடைப்பதில்லை. Moral of the story, பொச்சு இருப்பவர்கள் எல்லாம் பொச்செரிச்சல் படுங்கள்.



Thalaivar is back. இன்று ஈராஸ் வெளியிட்டுள்ள புதிய போஸ்டர் இது. சிங்கம் சிங்கிளாக வந்தாலே தாங்காது. இம்முறையும் ரெஹ்மான், ரவிகுமார், தீபிகா என்று வலுவான கூட்டணியுடன் வருகிறது. இந்த கூட்டணியில் சவுந்தர்யா உப்புக்கு சப்பாணியா? இல்லை கில்லியா? என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அதே நேரத்தில் கமல், ஷங்கர், ஆஸ்கார் ரவிசந்திரன், ரெஹ்மான் என்ற ஒரு புதிய கூட்டணி உருவாக கூடும் என்றும் செய்தி வருகிறது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதுவும் ஒரு மெகா கூட்டணி தான். பார்ப்போம் நடக்கிறதா என்று.





சட்ட சபையில் பிட்டு படம் பார்த்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா - செய்தி. "பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்" கதையை தவறாக புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். வாழ்க பாரதம், வளர்க ஜனநாயகம்.



பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் காதலர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

Thursday, February 02, 2012

பொடிமாஸ் - 02/02/2012

2G விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மிகச்சரியான ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. விதிகளுக்கு மீறி வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட்டதுடன், அவ்வாறு உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு பெரிதாக அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. புதிதாக உரிமம் வழங்க ஏல முறையை பரிந்துரை செய்திருக்கிறது. 2G விவகாரத்தில் அரசுக்கு நஷ்டமே ஏற்படவில்லை என்று முழு பூசணியை சோற்றில் மறைக்கப் பார்த்த கபில் சிபில் போன்றோர் தங்களது முகத்தை எங்கே வைத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. என்ன விதிகளுக்கு மீறி உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஏலத்தில் பங்கு பெற முடியாது என்றும் ஒரு தீர்ப்பை சேர்த்திருக்கலாம். இது என்னுடைய கருத்து. மற்றபடி தீர்ப்பளித்த நீதிபதிக்கும் வழக்கு தொடர்ந்த சுப்ரமணியம் சுவாமிக்கும் எனது நன்றிகள்.



இரண்டு நாட்களாக தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவிற்கும் விஜயகாந்திற்கும் நடந்த குடுமிப்பிடி சண்டையை பற்றித்தான் பேச்சாக இருக்கிறது. இணையத்தில் வெளிவந்த வீடியோ காட்சிகளை பார்த்தால் தவறு பெரிதாக விஜயகாந்தின் மீது இல்லை என்றே தெரிகிறது. ஆனால் என்ன நாக்கை மடித்து, கையை சுழற்றி பேசுவதெல்லாம் அவர் திரைப்படத்தில் செய்வதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். சட்டசபைக்கு என்று ஒரு கண்ணியம் இருக்கிறது. அதை காப்பாற்றுவது முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களது கடமை. ஆனால் இதில் உச்சகட்ட காமெடியே சட்டசபையில் எதிர் கட்சியினருக்கு தரும் மரியாதையை பற்றி கருணாநிதி விமர்சித்தது தான். 1989 ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் நடந்த சம்பவங்களுக்கு ஈடான சம்பவங்கள் வேறு எந்த சட்டசபையிலும் நடந்திருக்க முடியாது. என்ன நமது மக்களின் மறதியின் மீதான அவரது நம்பிக்கை அவரை அவ்வாறு பேச தூண்டி இருக்க கூடும். 1992 முதல் 1996 வரை நடந்த அதிமுக ஆட்சியையே மறந்து வாக்களித்தவர்கள், 1989 ஆம் ஆண்டு நடந்ததையா நினைவில் வைத்துக் கொள்ள போகிறார்கள்.

அதே நேரத்தில் ஜெயலலிதா ஆத்திரத்தில் நிதானம் இழந்து பேசியது கேவலமாக இருக்கிறது. அதிமுகவினருக்கு மட்டும் அல்ல, விஜயகாந்திற்கும், கருணாநிதிக்கும் கூட அவர்தான் முதல்வர். அதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். கருணாநிதி ஆட்சியில் தொடங்கி செயல்படுத்தப்பட்ட ஒவ்வொரு திட்டங்களாக பார்த்து செயலிழக்க செய்வது, திமுகவினர் மீது வழக்குகளை தொடுப்பது, இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அமைச்சர்களை மாற்றுவது அல்லது அவர்களது இலாக்காக்களை மாற்றுவது என்று துக்ளக் தர்பார் நடத்திக் கொண்டிருக்காமல் 2016 இல் மீண்டும் ஒரு தேர்தல் வரும் என்பதை நினைவில் கொண்டு ஒழுங்கான ஆட்சி தந்தால் அவருக்கும் நல்லது தமிழக மக்களுக்கும் நல்லது.



துக்ளக் தர்பார் என்றதும் இரு வாரங்களுக்கு முன்னர் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் சோ பேசியது நினைவிற்கு வருகிறது. ஜெயலலிதா இந்தியாவின் பிரதமர் ஆனால் யாருக்கு வேலை இருக்கிறதோ இல்லையோ இந்திய அதிபருக்கு தொடர்ந்து வேலை இருந்து கொண்டே இருக்கும். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்துக் கொண்டே இருக்க வேண்டி வரும்.



எதிர்பார்த்தது போலவே நமது இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்து விட்டது. வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே அது ஆச்சரியம். ஆனால் அதே நேரத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று அவர்களை மண்ணை கவ்வச் செய்திருக்கிறது. மூன்றாவதிலும் பாகிஸ்தான் வெற்றி பெற வாழ்த்துகள்.



திரையுலகினர் பங்கேற்கும் செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் அருமையாக இருக்கிறது. தெலுங்கு அணி அட்டகாசமாக விளையாடுகிறது. நாம் ஓரளவிற்கு நன்றாக விளையாடுகிறோம். நமது அடுத்த போட்டி தெலுங்கு அணியினருடன். இதில் நாம் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறுவோம். இந்த வார இறுதியில் தெரிந்து விடும்.



இந்த மாதத்தில் மூன்று படங்களை நான் பெரிதும் எதிர் பார்க்கிறேன். முதல் படம் பிரகாஷ்ராஜின் தோணி. அருமையான கதைக் களம், நமது ராஜாவின் பின்னணி இசை, பிரகாஷ்ராஜின் முதல் இயக்கம் தமிழில் என்று ஆவலை தூண்டுகிறது இப்படம். அடுத்தது பசங்க பாண்டிராஜின் மெரினா. டிரைலர் நன்றாக வந்திருக்கிறது. சிவ கார்த்திகேயனையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் கட்டாயம் பார்த்துவிட வேண்டும். மூன்றாவது காதலில் சொதப்புவது எப்படி. இப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகனின் குறும் படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவரது மிட்டாய் வீடு மற்றும் காதலில் சொதப்புவது எப்படி இரண்டும் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் எனக்கு பிடித்த நடிகர் சித்தார்த்தும் இருக்கிறார். நிரவ் ஷா கேமரா. முதல் இரண்டு படங்களும் இங்கே அமெரிக்காவில் வெளிவருமா என்று தெரியவில்லை. அப்படியே வெளி வந்தாலும் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நியூ ஜெர்ஸி, சான் ஃப்ரான்ஸிஸ்கோ போன்ற நகரங்களில் மட்டுமே வெளி வர சாத்தியங்கள் அதிகம். ஆனால் இங்கே சித்தார்த்துக்கு ஒரு சிறிய மார்க்கெட் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தினர் பலர் அவரது ரசிகர்கள். அதனால் ஒரு வேளை அவரது படம் வெளி வந்தாலும் வரலாம். இந்த மூன்று படக் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்.



சமீபத்தில் தான் திருக்குறள் மேலாண்மை என்ற தளத்தினை பற்றி எனக்கு தெரிந்தது. வேறு எதையோ தேடும் பொழுது இது கிடைத்தது. திருக்குறளில் உள்ள நிர்வாக மேலாண்மை கருத்துக்களை தெளிவாக விளக்குகிறார் இவர். நீங்களும் சென்று பாருங்களேன். அருமையாக இருக்கிறது.

http://kuralmanagement.wordpress.com

Monday, January 23, 2012

பொடிமாஸ் - 01/23/2012

குமுதம் இதழ் ஸ்ருதி ஹாசனிடம் அவரையும் தனுஷையும் பற்றிய தனது தவறான செய்திக்காக மன்னிப்பு கேட்டிருக்கிறது. சென்ற வாரம் நக்கீரன் ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கேட்டது அனைவரும் அறிந்ததே. இது போலவே சில நாட்களுக்கு முன்னர் திருவாளர் விஜயகாந்த் கலைஞரை பற்றி ஏதோ உளறி பின்னர் வக்கீல் நோட்டீசுக்கு பயந்து மன்னிப்பும் கேட்டார். அதே போல ஒரு நீதிபதியை பற்றிய தவறான செய்தி வெளியிட்டதற்காக டைம்ஸ் நவ் பத்திரிக்கைக்கு உச்ச நீதி மன்றம் நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. அசால்டாக ஏதோ ஒரு செய்தியை கொளுத்தி போட்டுவிட்டு குளிர் காயும் பத்திரிக்கைகளுக்கு இது ஒரு பாடமாக அமைந்தால் நல்லது.



சல்மான் ருஷ்டியை ஜெய்பூர் இலக்கிய விழாவிற்கு வர விடாமல் செய்ய நடக்கும் போராட்டங்கள் இயல்பானதே. எந்த ஒரு சாராரின் நம்பிக்கையை கொச்சை படுத்தும் செயலை செய்தாலும் இம்மாதிரியான விளைவுகளே ஏற்படும். ஆனால் எனது ஆச்சரியமே M.F.ஹுசைன் இந்தியாவை விட்டு கத்தார் சென்ற பொழுது கலைஞனின் சுதந்திரத்தை பற்றி வாய்கிழிய பாடம் நடத்திய அறிவுக் குஞ்சுகள் இப்பொழுது திடீரென்று காணாமல் போனது தான். அது சரி, இந்த குஞ்சுகளிடம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்?



இந்திய இராணுவ ஜெனரல் V.K.சிங் தனது பிறந்த தேதியை குறித்து நீதி மன்றதை நாடியது துரதிருஷ்டவசமானது என்றாலும் சரியான செயலாகவே படுகிறது. 1965 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சுமார் 47 வருடங்களாக பலமுறை தனது பிறந்த தேதியை மாற்ற விண்ணப்பித்து விட்டு இறுதியில் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடியவே இம்மாதிரி செய்திருக்கிறார். வழக்கில் அவர் ஜெயிக்கிறாரோ இல்லையோ இனிமேலாவது வெள்ளைக்காரன் தனது வசதிக்காக கொண்டு வந்த முட்டாள்தனமான சிகப்பு நாடா சட்டங்களை மறு பரிசீலனை செய்து தொலைத்தால் நன்று.



விஜய் டிவியில் ஒளிபரப்பான "என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்" நிகழ்ச்சி நன்றாக இருந்தது. குறிப்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர் தனது வளர்ச்சிக்கு உதவிய நண்பர்களை நினைத்து பார்த்தது நன்றாக இருந்தது. நடிகர் சத்யன் மிகவும் இயல்பாக இருந்தார். அவருக்கு நல்ல ஒரு எதிர் காலம் அமைய வாழ்த்துகிறேன். மொத்தத்தில் இது ஒரு ஃபீல் குட் படத்தை பற்றிய ஒரு ஃபீல் குட் கலந்துரையாடல்.



"நண்பன் படத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விஜய் வசந்த் படத்தில் ஒரு தலித் மாணவன்." - ஒரு சில புத்தி ஜீவிகளின் கண்டுபிடிப்பு. தஞ்சை கல்வெட்டுகளில் பொறிக்கப்பட வேண்டிய கண்டுபிடிப்பு. பின்னால் வரும் சந்ததியினர் பார்த்து, படித்து பின்னர் தெளிவு பெற வேண்டும் அல்லவா? மூக்கு புடைப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்க தோன்றும். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.



"It is better to keep your mouth shut and be thought a fool than to open it and remove all doubt" எங்கேயோ எப்பொழுதோ படித்தது. இன்று இணையத்தில் வெளிவரும் சூடான கட்டுரைகள் பலவற்றை படிக்கையில் எனக்கு இது தான் நினைவிற்கு வந்து தொலைக்கிறது. இதை படித்த பிறகு உங்களுக்கு எந்த இணையக் குஞ்சு நினைவிற்கு வந்தாலும் நான் பொறுப்பல்ல.



கீழே மாண்டியின் லேட்டஸ்ட் படங்கள் இரண்டு. நேற்று தான் குளிப்பாட்டிய பின்னர் எனது கைத்தொலைபேசியில் எடுத்தேன்.







வழக்கம் போலவே காமெடியுடன் பதிவை முடிக்கலாம். அண்ணா ஹஸாரேவை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்க வேண்டும் என்றும், அதை இந்தியர்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றும் ஒரு மின்னஞ்சல் அங்கே இங்கே என்று சுற்றிவிட்டு கடைசியில் எனக்கு வந்தது. கொலைவெறி பாடலை ரசிக்கலாம், அதற்காக அதை தேசிய கீதமாக்க முடியுமா என்ன?