Wednesday, November 19, 2008

அஞ்சலி!!!

Wednesday, October 29, 2008

அன்பே சிவம் தோல்விப் படமா?

இப்பொழுது தமிழ் பதிவுலகில் தொடர்ந்து கொண்டிருக்கும் தொடர்விளையாட்டு "சினிமா கேள்வி பதில்கள்". இதில் பல பதிவர்கள் கலந்து கொண்டு தங்கள் பதில்களை பதிந்துள்ளனர். அதில் நானும் ஒருவன்.

அதிலும் குறிப்பாக "மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?" என்ற கேள்விக்கு பெரும்பாலானோர் "அன்பே சிவம்" என்று பதில் அளித்துள்ளனர்.



"மிகவும் தாக்கிய தமிழ் சினிமா? அன்பே சிவம்" என்று கூகுளிட்டேன். அது சுமார் 108 என்று விடையளிக்கிறது.

டாக்டர் புருனோ அவர்களோ அன்பே சிவத்தை பற்றி தனிப் பதிவே இட்டுவிட்டார். அப்படத்தினை பற்றிய எனது கருத்துக்களை பிரதிபலிப்பது போலவே அவரது பதிவு இருந்தது.

அன்பே சிவம் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு கசப்பான அனுபவமாக இருக்கலாம், வனிக ரீதியாக பெரும் தோல்வி கண்ட படமாக இருக்கலாம், ஆனால் மனிதநேயத்தை அன்பே சிவத்தினை காட்டிலும் அழகாக வெளிப்படுத்திய தமிழ் படங்கள் குறைவே.

கமலிடமிருந்து அதன் பிறகு அப்படி ஒரு படம் கிடைக்கவில்லை. இனியும் கிடைக்குமா என்பது தெரியாது. ஆனால் பதிவெழுதிய சுமார் 100 பதிவர்களை தாக்கிய படம் அது என்பதை எண்ணி பார்க்கும் பொழுது ஒன்று தெளிவாக தெரிகிறது. ஒரு படத்தின் உச்ச கட்ட வெற்றி இது தான்.

அந்த வெற்றியை தந்த கமல், மாதவன், சுந்தர்.சி மற்றும் வித்யாசகர் கூட்டணிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, October 20, 2008

சினிமா சினிமா சினிமா தான்

"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் அழகு பதிவொன்று எழுதும் போது நம்ம ஊர் காரர் தானே என்று நம்பி ஆட்டையில் இழுத்து போட்டு விட்டேன். அதை மனதில் வைத்துக் கொண்டு பெரிய ஆப்பாக வைத்து விட்டார் ராதா ஸ்ரீராம்.

சரி எவ்வளவோ செய்து விட்டோம் இதை செய்ய மாட்டோமா என்ன? நாமும் ஆட்டையில் கலந்தாச்சு.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

சிறு வயதில் எப்பொழுது படம் பார்க்க தொடங்கினேன் என்று நினைவில்லை. ஆனால் அப்பொழுது எங்கள் கிராமத்தில் எங்கள் வீட்டில் மட்டுமே தொலைக்காட்சி இருந்தது. அதனால் அப்பொழுது சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் ஒளிபரப்பும் படங்களே நான் முதலில் பார்த்த படங்கள். சாந்தா சக்குபாய், தாய் சொல்லை தட்டாதே, ஸ்ரீ வள்ளி போன்ற படங்கள் நினைவில் இருக்கின்றன.

அரங்கில் சென்று பார்த்த படம் "திறமை" என்று நினைக்கிறேன். பொள்ளாச்சியிலிருந்து எனது மாமா வந்திருந்தார். அவருடன் சென்றேன்.

பெரிதாக ஒன்றும் உணரவில்லை. தமிழ் சினிமா என்பது பின்னாளில் எனது வாழ்வில் மறக்க முடியாத ஒரு இடத்தினை பிடித்துக் கொள்ளும் என்பதெல்லாம் எனக்கு அப்பொழுது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா எது?

குசேலன். படம் படு திராபை. ஆனாலும் பெரிய ஏமாற்றம் ஒன்றுமில்லை. ஏனென்றால் தொடர்ந்து பீமா, அழகிய தமிழ் மகன், குருவி என்று இங்கே அரங்கில் சென்று படம் பார்த்து ஆப்புகள் வாங்கி பழக்கமாகி விட்டது.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

சென்ற வாரம் முன்னரே பல முறை பார்த்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை மைக்கேல் மதன காமராஜன் படம் பார்த்தேன். வீட்டிலேயே தொலைக் காட்சியில் பார்த்தேன்.

எல்லோரும் பாக்யராஜ் அவர்களையே திரைக்கதை வித்தகர் என்று பாராட்டுகிறார்கள். ஆனால் இந்த படத்தில் கமலின் திரைக் கதை நேர்த்தி என்னை அதிசயிக்க வைத்தது. ஒவ்வொரு கமலாக கதைக்குள் நுழைத்த விதம், பிசகில்லாமல் பிசகு நடக்கும் நிகழ்வுகள், நேர்க்கோட்டில் பயணிக்கும் திரைக்கதை என்று ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் ஒவ்வொரு அனுபவம் தரும் படம் அது.

மற்றபடி இங்கே அரங்கில் வெளியிடப்படும் படங்களை எக்காரணம் கொண்டும் இணையத்திலோ அல்லது DVD யிலோ பார்ப்பது இல்லை.


4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

எவ்வளவோ இருக்கின்றன. சட்டென்று நினைவிற்கு வருவது அன்பே சிவம். கம்யூனிஸம் என்றால் ஏதோ கொடி பிடிப்பது என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு அது ஒரு உணர்வு என்பதை புறிய வைத்த படம்.

தமிழ் அல்லாமல் ஹிந்தி சினிமாவில் சமீபத்தில் என்னை மிகவும் பாதித்தது Rang De Basanthi. இன்றைய இந்திய சமூகத்தை தோலுரித்து காட்டிய படம்.

இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. சொன்னால் பதிவு தொடர் பதிவாகி விடும்.


5 (அ). உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

குஷ்பூ கற்பு பற்றி சொன்ன கருத்திற்கு வந்த எதிர்ப்புகள். அவர் சொன்னதை முழுதும் புறிந்து கொள்ளாமல் அவருக்கு வந்த எதிர்ப்புகள் என்னை மிகவும் வருத்தமடைய செய்தன.

ஒருவனுக்கு ஒருத்தி, தமிழ் கலாசாரம் என்று வாய் கிழிய பேசிக் கொண்டிருக்கும் நாம் வசதியாக தமிழகத்தில் சுமார் 10 லட்சம் மக்களுக்கு AIDS இருப்பதை மறந்து விடுகிறோம்.


5 (ஆ). உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தசாவதாரம். பல காட்சிகளை சொல்லலாம். உதாரணத்திற்கு பல்ராம் நாயுடு கோவிந்தை விசாரணை செய்யும் காட்சியில், "இங்க என்ன first night ஆ நடக்குது light போடுடா." என்று சொல்லும் அந்த ஒரு காட்சிக்கு எவ்வளவு உழைப்பு வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

அதே போல பல்ராம் நாயுடுவும் கிருஷ்ணவேனியும் காரில் பயணிக்கும் பொழுது கோவிந்த் பின்னால் ஓடி வருவார். அப்பொழுது கிருஷ்ணவேனியின் கையில் தண்ணீர் புட்டி இருக்கும். பல்ராம் நாயுடு ஓட்டுனரை பார்த்து "ஆக்ஸிலரேட்டர் இருக்குல்ல அழுத்து" என்பார். அப்பொழுது சரியாக கிருஷ்ணவேனியின் கையில் உள்ள புட்டி பின்னால் செல்லும், அதே நேரத்தில் கோவிந்தை விட்டு கார் வெகு வேகமாக அகலும். கோவிந்தின் உருவம் சிறியதாகும்.

இப்படி பல இடங்களில் அதிசியத்து போனேன். Simply amazing.


6.தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

வேறு வேலை. தினமலர், குமுதம், குங்குமம் என்று எதை எடுத்தாலும் முதலில் படிப்பது அது தான். முன்பு கிசு கிசுக்களையும் ஆவலுடன் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் சமீப காலமாக நடிக நடிகைகளும் மனிதர்கள் தான், அவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது என்ற எண்ணம் மேலோங்க அத்தகைய செய்திகளை இப்பொழுது விரும்பி படிப்பதில்லை.

7.தமிழ் சினிமா இசை?

அதனை தவிர்த்து வேறு இசையை நான் அறியேன். சிறு வயது முதல் தமிழ் திரை பாடல்கள் தான் எனக்கு உற்சாக டானிக்.

ரஹ்மான் தவிர்த்து, ஹாரிஸ், யுவன், வித்யாசாகர் என்று பலரும் கலக்கிக் கொண்டிருந்தாலும் எனக்கு அன்றும் இன்றும் என்றும் ராஜா தான்.


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஆங்கில மொழி படங்கள் அதிகம் பார்ப்பது இல்லை. ஹிந்தி படங்கள் அதிகம் பார்ப்பேன்.கடந்த மூன்றாண்டுகளில் நான் பார்த்த பல ஹிந்தி படங்கள் என்னை மிகவும் பாதித்தன.

Black, Cheeni Kum, Rang De Basanthi, Tare Zameen Par, Swades, Kabhi Alvida Na Kehena என்று எத்தனையோ படங்கள், சமீபத்திய Rock On வரை.

இந்த படங்களை பார்க்கும் பொழுது எனக்கு என்னையும் அறியாமல் பெருமூச்சு வருகிறது. தமிழ் சினிமாவில் இது போன்ற படங்கள் வராமல் இல்லை. ஆனால் அமிதாப், ஷாருக், ஆமீர் போன்ற நட்சத்திரங்கள் நடித்த படங்கள் இவை. தமிழில் கமல் தவிர்த்து ரஜினி, விஜய், அஜித் போன்றவர்கள் இது போன்ற படங்களை தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. கமலும் கூட 100 கோடி, 200 கோடி என்று கோடிகளின் விளையாட்டில் இறங்குவதை பார்க்கும் பொழுது வருத்தமே மேலோங்குகிறது.


9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ் சினிமா மேம்பட அது உதவுமா?

சத்தியமாக இல்லை. ஒரு வாடிக்கையாளனுக்கும், பொருள் தயாரிப்பாளனுக்கும் நேரடி தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ் சினிமாவின் நடிகர்கள் தங்களின் எதிர் காலத்தை தமிழக அரசியலில் தேடிக் கொண்டிருக்கும் வரை, தமிழ் சினிமா ரசிகர்கள் தங்களின் எதிர் காலத்தை தங்கள் அபிமான நடிகர்களின் கட்-அவுட் மீது பாலாய் கரைத்து ஊற்றிக் கொண்டிருக்கும் வரை தமிழ் சினிமாவின் எதிர் காலம் ஒன்றும் நம்பிக்கை அளிக்கும் விதமாய் இருக்கப்போவதில்லை.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

சினிமா ஒன்றும் அத்தியாவசிய சேவை கிடையாது. ஒரு வருடம் மருத்துவத்தையோ, கல்வியையோ, போக்குவரத்தையோ, காவல் துறையையோ செயல் படாமல் செய்தால் ஏற்படும் விளைவுகளுடன் ஒப்பிடுகையில் சினிமாவை தடை செய்தால் ஏற்படும் விளைவுகள் துச்சம்.

தமிழ் சினிமாவை தொழிலாக கொண்ட பலர் வேலை வாய்ப்பை இழப்பார்கள். நேரடி மற்றும் பெரிய பாதிப்பு அவர்களுக்கு தான்.

ஊடகங்களுக்கு மறைமுக பாதிப்பு இருக்கும். அவர்கள் வேறு celebrity க்களை தேடி செல்வார்கள். அவர்களின் செய்திப் பசிக்கு பலியாக பலர் காத்திருக்கின்றனர். அதனால் அவர்களுக்கும் பெரிய பாதிப்பு இருக்கப் போவதில்லை.

என்னை போன்ற வாடிக்கையாளனுக்கு தமிழ் சினிமாவில் பொழுது போக்கு கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கிறது ஹிந்தி சினிமா அல்லது ஆங்கில சினிமா. பொழுது போக்கிற்கு பஞ்சமா என்ன?

அதிலும் அமெரிக்காவில் Whitewater Rafting, Skiing, Kayaking, Trekking, Biking என்று எவ்வளவோ பொழுது போக்குகள் உள்ளன. பொழுது போக்குகளுக்கு என்றுமே பஞ்சம் இல்லை. நமக்கு தான் நேரம் குறைவு.


"கேள்வி கேக்கறது ரொம்ப ஈஸி மாமா!, பதில் சொல்லி பாருங்க அப்போதான் அதோட கஷ்டம் புறியும்." என்று பஞ்சதந்திரத்தில் கமல் சொல்லுவது எவ்வளவு உண்மை என்பது இந்தப் பதிவினை எழுதும் பொழுது தான் புறிந்தது.

எப்படியோ பத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லி விட்டேன். மற்றபடி இந்தப் பதிவு என்னை எனக்கும் தமிழ் சினிமாவுக்கும் இடையே இருக்கும் நெருங்கிய தொடர்பினை அசை போட வைத்தது. பல படங்களை பார்க்கும் பொழுது நடந்த நிகழ்வுகளை நினைவிற்கு கொண்டு வந்தது. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவல் நண்பர்கள் பலரை மீண்டும் நினைவூட்டியது. மொத்தத்தில் ஒரு நல்ல அனுபவமானது.

அதனை ஏற்படுத்தி கொடுத்த ராதா ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் யாரையும் மீண்டும் அழைக்கப் போவதில்லை. பதிவினை படிப்பவர்கள் யாருக்கு நேரமும் விருப்பமும் இருக்கிறதோ அவர்கள் எழுதுங்கள்.

மீண்டும் நன்றி.

Friday, October 17, 2008

அமெரிக்காவை தொடர்ந்து அடுத்தது இந்தியாவா?

அமெரிக்க நிதி நிறுவனங்களை சுனாமியாய் தாக்கி வரும் இந்த பொருளாதார நெருக்கடியின் மூலமான Housing Crisis அடுத்து இந்தியாவில் வரும் என்றே இந்தியாவில் இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் பலரும் எதிர் பார்க்கின்றனர். நண்பர்கள், உறவினர்கள் யாரிடம் சமீப காலமாக பேசினாலும் இதனை பற்றிய விவாதம் எழுந்து விடுகிறது.

அதற்கு வலு சேர்க்கும் விதமாய் பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்கள் செலவுகளுடன் சேர்த்து ஆட்களையும் குறைக்க தொடங்கியுள்ளனர். அதனால் பலரும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Wall Street ஆட்டம் கண்டதால் மும்பை பங்குச் சந்தை பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சீட்டுக்கட்டு மாளிகையில் ஒரு சீட்டை சிறிது அசைத்தால் மொத்த மாளிகையும் தொடர்ந்து பொல பொலவென்று விழுவது போல அங்கங்கே chain reactions நடக்க தொடங்கியுள்ளன.

நான் ஒரு பொருளாதார நிபுணன் கிடையாது என்றாலும் இதனை பற்றிய எனது கருத்துக்களை சொல்லலாம் என்பதினாலேயே இந்தப் பதிவு. அமெரிக்க நிலைமையையும் இந்திய நிலைமையையும் ஒவ்வொன்றாக கீழே ஒப்பிட்டுளேன். ஏதேனும் தவறு இருந்தால் திருத்திக் கொள்கிறேன்.

Sub-Prime Crisis என்றால் என்ன என்று உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு எளிமையாக சொன்னால் கடனை திருப்பி கொடுக்கவே முடியாது என்ற நிலையில் உள்ளவர்களுக்கு கூட வீட்டு விலை பல மடங்கு ஏறிவிடும் என்று ஆசை வார்த்தை காட்டி அவர்களுக்கு கடன் கொடுப்பதே அது.

முதலில் அமெரிக்காவில் என்ன நடந்தது என்று பார்க்கலாம். 1997 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்தே அப்போதைய அதிபர் கிளிண்டனிடமிருந்து FannieMae மற்றும் FreddieMac நிறுவனங்களுக்கும் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. Sub-Prime கடன்களுக்கு வித்திட்டவர் அவர் தான்.

நிதி நிறுவனங்கள் முதலில் இதற்கு மறுத்தாலும், பின்னர் வீட்டின் விலை பல மடங்கு ஏறுவதால் கடனை திருப்பி கொடுக்க முடியாவிட்டாலும் வீட்டினை விற்று பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் கடனை கொடுக்க தொடங்கின. 0% down payment கொடுத்து, நிரந்தர வருமானமோ, இல்லை சேமிப்போ எதுவுமே இல்லாதவர்கள் கூட வீடு வாங்கலாம் என்ற நிலை வந்தது. அவர்கள் மாதம் கட்ட வேண்டிய பணத்தினை குறைக்க 5/1 Arm, 7/1 Arm, Interest Only போன்ற கடன்கள் கொடுக்கப்பட்டன.

வீட்டுக் கடன்களை வசூலிக்க 20 - 30 ஆண்டுகள் ஆகும் என்பதால் பலருக்கும் கடன் கொடுத்து தங்களிடம் உள்ள பணம் பெருமளவில் குறைந்து விட்ட நேரத்தில் புதிதாக வாங்குபவர்களுக்கு பணத்தினை கொடுக்க முடியாத நிலையில் இருந்த வங்கிகள் Lehman Brothers போன்ற நிறுவனங்களை நாடின.

Lehman Brothers போன்ற நிறுவனங்கள் அவர்களிடமிருந்து கடன்களை வாங்கி அதனை சிறு சிறு CDO க்களாக மாற்றி பல வளரும் நாடுகளில் முதலீடு செய்தன. பணத்தின் மீதுள்ள ஆசையினால் AIG போன்ற insurance நிறுவனங்கள் அதனை insure செய்தன.

அதனுடன் மட்டுமே விட்டிருந்தால் கூட பரவாயில்லை. புதிதாக வீடு வாங்குபவர்களை மட்டுமே நம்பினால் சந்தை பெரிதாகாது என்ற எண்ணத்தில் முன்னரே வீடு வாங்கியவர்களுக்கும் அவர்களின் வீட்டின் மதிப்பின் படி கடன்கள் கொடுக்கப்பட்டன. அதாவது ஒருவர் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ஒரு வீட்டினை வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். இரண்டு ஆண்டுகளில் அவரது வீட்டின் மதிப்பு நான்கு லட்சம் அமெரிக்க டாலர்களாக உயர்ந்து விட்டதென்றால் அவருக்கு மேலும் இரண்டு லட்சம் டாலர்கள் கடனாக கொடுக்கப்பட்டன. இதற்கு பெயர் Home Equity Loan.

இதனால் பலரும் வீட்டின் மதிப்பில் 100 சதவிகிதமோ அல்லது குறைந்த பட்சம் 80 சதவிகிதமோ கடன் வைத்திருப்பவர்களாக ஆனார்கள்.

இது எல்லாமே ஒழுங்காக நடந்திருக்கும் முறையாக திருப்பிக் கொடுக்கும் மக்களுக்கு மட்டுமே கடன் கொடுத்திருந்தால்.

ஆனால் sub-prime கடன்களினால், 5/1 Arm, 7/1 Arm, Interest Only போன்ற கடன்கள் reset ஆக மாதம் கட்ட வேண்டிய பணம் உயர்ந்து பலரும் bankruptcy file செய்து வீட்டின் சாவியினை வங்கியிடம் கொடுத்துவிட்டார்கள். ஆரம்பித்தது ஆப்பு. Supply அதிகமானது, demand குறைந்தது. வீடுகளின் விலையும் குறைந்தது.

சரி இதுவே இந்தியாவில் எப்படி என்று பார்க்கலாம். இந்தியாவில் முதலில் 0% down payment என்ற கடன் முறையே கிடையாது. வீட்டின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் மட்டுமே கடனாக கொடுக்கப்படும். மேலும் ஆளுக்கு தகுந்த வட்டி விகிதம் எல்லாம் கிடையாது. அனைவருக்கும் ஒரே வட்டி விகிதம் மட்டுமே. கடன் கொடுப்பவர் தங்கள் நலனுக்காக வட்டியை கூட்டியோ குறைத்தோ கொடுக்க முடியாது.

கடன் வாங்குபவர்களுக்கு நிரந்தர வேலை அவசியம். அப்படி இல்லையென்றால் வேறு சொத்துக்கள் இருக்க வேண்டும். வட்டி விகிதம் அமெரிக்காவை விட பல மடங்கு அதிகம். Interest Only, Arm Loans இதெல்லாம் கிடையவே கிடையாது. மேலும் bankruptcy file செய்வதெல்லாம் இந்தியாவில் எளிதும் கிடையாது. கடனை திருப்பி கொடுக்காவிட்டால் வீட்டிற்கு குண்டர்கள் வருவார்கள்.

இந்த Home Equity என்பதும் இந்தியாவில் கிடையவே கிடையாது. 10 லட்சம் மதிப்புள்ள வீடு 20 லட்சம் ஆனாலும் யாரும் புதிதாக 10 லட்சம் கடன் வாங்கப் போவதில்லை. அப்படியே கடன் வாங்க முற்பட்டாலும் அவர்களுக்கு திருப்பி செலுத்தும் திறன் இருக்கிறதா என்பதை கொண்டே வங்கிகள் கடன் கொடுக்கும்.

அடுத்த கட்டமாக இந்தியாவில் நகரத்தில் உள்ள நிலங்கள் குறைவு, மக்கள் தொகை அதிகம். மக்களுக்கு வசிக்க வீடு தேவை. அதனால் அவ்வளவு எளிதாக தேவைக்கு அதிகமான வீடுகள் எல்லாம் விற்பனைக்கு வராது. அப்படியே excess supply ஏற்பட்டாலும் பெரிய Real Estate முதலைகள் அனைத்து புதிய வீடுகளையும் வாங்கி வைத்து விற்காமல் Virtual Demand Hiking என்ற சூது விளையாட்டை செய்ய முடியும்.

மேலும் இந்தியாவில் "Real Estate is driven by Black Money". வேளச்சேரியில் இரண்டு கோடி ரூபாய் விற்கும் ஒரு மூன்று பெட்ரூம் அபார்ட்மென்ட் விற்பனையாளரிடம் சென்று கேட்டால், NRI க்கள் வாங்குகிறார்கள் என்றும், IT மக்கள் வாங்குகிறார்கள் என்று கூறுவார்கள்.

ஆனால் இது இரண்டாகவும் இருக்கும் எனக்கு தெரியும் மாத சம்பளம் வாங்கும் எவ்வளவு மக்களால் அதனை வாங்க முடியும் என்று. உண்மையில் அதனை வாங்குபவர்கள் சினிமாக் காரர்கள், அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், இவர்களின் பினாமிகள். இவர்கள் Return on Investment இற்காக இந்த வீடுகளை வாங்குவதில்லை. அவர்களின் நோக்கமே வேறு. மேலும் அவர்கள் கடன் வாங்கி வீடுகளை வாங்குவதும் இல்லை.

அதனால் வீட்டின் விலை குறைந்தாலும் வங்கிகளுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. அதனால் எனக்கு தோன்றுவது என்னவென்றால் வீட்டின் விலை பல மடங்கு இந்தியாவில் இறங்கும் என்பதெல்லாம் உண்மை இல்லை. ஒரு சில இடங்களில் ஒரு சில சதவிகிதம் இறங்கலாம். பலர் வேலை வாய்ப்பை இழந்தால் வாடகை பெருமளவில் குறையலாம். மற்றபடி அமெரிக்கா சந்திக்கும் பொருளாதார வீழ்ச்சியினை போல ஒன்றை இந்தியாவும் சந்திக்கும் என்பது ஒரு மாயத் தோற்றமே.

Wednesday, October 15, 2008

Population Zero

சென்ற வாரம் National Geographic தொலைக்காட்சியில் Aftermath Population Zero என்ற ஒரு அற்புதமான நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. அதாவது ஒரு நாள் காலை மனிதர்கள் எல்லாம் உலகிலிருந்து மறைந்து விட்டால் என்ன ஆகும் என்பது தான் நிகழ்ச்சியின் கரு.

வட அமெரிக்காவை மட்டும் மூலமாக எடுத்துக் கொண்டு அட்டகாசமாக தயாரிக்கப்பட்ட இரண்டு மணி நேர நிகழ்ச்சி. முதலில் உணவு இல்லாமல் தவிக்கும் வளர்ப்பு பிராணிகள், விலங்கியல் பூங்காவிலிருந்து மின்சார வேலி பழுதானதால் உடைத்துக் கொண்டு வெளி வரும் வன விலங்குகள் என்று ஆரம்பமே படு அமர்க்களம். உணவினை தேடி வீதிக்கு வரும் சிங்கமும் நாயும் சந்தித்துக் கொள்கின்றன. எலிகள் பெரிய பெரிய மளிகை கடைகளில் தஞ்சம் புகுகின்றன.

சுமார் 7 நாட்கள் வரை தானியங்கி முறையில் இயங்கும் அணுமின் நிலையங்கள் எட்டாவது நாளில் தனது செயல்பாடை இழந்து உலகமே சந்தித்திராத அணுச்சிதைவு நடக்கின்றது. அருகில் உள்ள மரங்கள், விலங்குகள் அனைத்தும் இறக்கின்றன. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானில் நடந்த குண்டு வெடிப்பை காட்டிலும் சுமார் 1000 மடங்கு அதிகமான சேதம் ஒவ்வொரு அணு உலையிலும் நடக்கிறது.

நதிகள் அணைகள் அனைத்தையும் உடைத்துக் கொண்டு பயணிக்கின்றன. இரவில் விளக்குகள் இல்லாத காரணத்தினால் பறவைகள் பறக்கும் பொழுது விளக்குகளை நட்சத்திரமாக எண்ணி குழப்பிக் கொள்ளாமல் தங்கள் இலக்குகளை அடைகின்றன.

230 ஆண்டுகளில் அணு உலை வெடிப்பினால் நிகழ்ந்த சேதங்கள் அனைத்தும் துடைக்கப்படுகின்றன. Global Warming முற்றிலும் ஒடுக்கப்படுகின்றது. காற்றும் நீரும் தூய்மையடைகிறது. குறிப்பாக Manhattan நகரமே அடர்ந்த காடாக மாறுகிறது.


மேலே மனிதர்கள் மறைந்த சுமார் 80 ஆண்டுகளுக்கு பின்னர் இருக்கும் Manhattan மாநகரம்.

Statue of Liberty உடைந்து போகிறது. மனிதர்கள் வானத்தில் விட்டு சென்ற 25000 த்திற்கும் மேற்பட்ட செயற்கை கோள்கள் வெடித்து சிதறுகின்றன. நதிகள் அணைகளை உடைத்துக் கொண்டு பயணிப்பதால் பல பாலை வனங்கள் சோலைகளாகின்றன. பல புதிய ஏரிகள் உருவாகின்றன.

பல புதிய விலங்கினங்களும் உருவாகின்றன. ஓநாயும் நாயும் புணர்ந்து புதிய வகை உயிரினங்கள் வருகின்றது. ஆனாலும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத Stainless Steel பொருட்களும், கை தொலைபேசிகளும், மற்ற பிளாஸ்டிக் பொருட்களும் மனிதர்கள் விட்டுச் சென்ற அடையாளங்களாக நம்மை மிரட்டுகின்றன.

"It took thousands of years for Human to conquer the earth from the nature. It only takes a couple of hundred years for the nature to regain it back" என்று முடிகிறது அந்த நிகழ்ச்சி.

நிகழ்ச்சியை பார்த்த பின் எனக்கு தோன்றியது இது தான். "Nature is above everyone. Toughest species survive." இது தான் அந்த நிகழ்ச்சியில் நான் கற்றுக் கொண்ட பாடம். பொருளாதார வீழ்ச்சியில் உலகமே தவித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் எனக்கு தேவையான பாடமாகவும் அது அமைந்தது.

Thursday, September 18, 2008

மனதை சுத்தம் செய்!

நாம் காலை எழுந்த உடன் செய்யும் செயல்களை என்றாவது கவனித்து இருக்கிறீர்களா? காலையில் நாம் முதலில் செய்யும் செயல் என்ன? பல் துலக்குவது. அது வாயில் உள்ள கிருமிகள் அசுத்தங்கள் போன்றவற்றை அழித்து சுத்தம் செய்வதற்கு. பின்னர் உடல்கழிவுகளை வெளியேற்றுகிறோம். அது உடலின் உள்ளே உள்ள அசுத்தங்களை வெளியேற்றுவதற்கு. பின்னர் குளிக்கிறோம். அது புற அசுத்தங்களை நீக்குவதற்கு.

ஆக நாம் தினமும் காலையில் அசுத்தங்களை நீக்கி சுத்தமாக இருக்கவே பல செயல்கள் செய்கிறோம். நாம் புறத்தில் செய்யும் செயல்கள் இவ்வாறு இருக்க நமது உடல் பாகங்கள் அகத்தில் செய்யும் செயல்களை கவனித்தால் இன்னும் பல விளங்கும்.

உதாரணத்திற்கு நமது நாசிகள் மற்றும் நுரையீரல் சுத்தமான காற்றினை உடலுக்கு அளித்து அசுத்த காற்றினை வெளியேற்றுகின்றன. இதயம் குருதியை சுத்தம் செய்து அதனை உடலுக்கு அளிக்கிறது. சிறுகுடல் உணவை சுத்தம் செய்து அதனை உடலுக்கு அளித்து அதில் உள்ள கழிவுகளை பெருங்குடல் வாயிலாக வெளியேற்ற உதவுகிறது. கிட்னியும் (தமிழில் என்ன?) குருதியில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றவே உதவுகிறது.

நான் மேலே சொன்னவற்றில் ஏதாவது ஒன்று சரியாக வேலை செய்யவில்லையென்றால் கூட அதன் விளைவை நான் விளக்க தேவை இல்லை. உடல் அகத்திலும், புறத்திலும் என்றுமே அசுத்தத்தை விரும்புவதில்லை. அசுத்தம் உள்ளே செல்லும் போதும், அது வெளியே செல்லாமல் உள்ளேயே தங்கும் போதும் நோயின் மூலமாக எதிர்ப்பை காட்டுகிறது.

இப்படி அகத்திலும், புறத்திலும் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள தினமும் செயல்கள் நடக்க என்றாவது நாம் நமது மனதை சுத்தமாக வைத்து அசுத்தத்தை நீக்க முயன்றிருக்கிறோமா? நமது மனதில் அசுத்தம் தங்கினால் ஏற்படும் தீமைகளை பற்றி கவலை படுகிறோமா? அசுத்தத்தை நீக்கி மனதினை சுத்தமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளை பற்றி அறிந்து கொண்டிருக்கிறோமா?

நமது மனதில் தான் பொய், பொறாமை, கோபம், எரிச்சல், புறங்கூறுதல், வஞ்சகம் என்று எத்துனை எத்துனை அசிங்கங்களை தேக்கி வைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கே தினமும் காலை எழுந்த உடன், "இன்று மனதில் உள்ள அசுந்தங்களை நீக்குவேன். அசுத்த எண்ணங்கள் மீண்டும் வராமல் பார்த்துக் கொள்வேன்." என்று உங்களுக்குள்ளே தீர்மானித்து அந்த நாளை தொடங்குங்கள். ஒரு சில நாட்களிலேயே அதன் பயனை உணர்வீர்கள்.

எண்ணம் போலவே செயல், செயல் போலவே வாழ்வு. மனதில் உள்ள அசுத்தங்களை நீக்கினால் வாழ்வும் சிறந்து விளங்கும்.

சுமார் நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்பு பொதிகை தொலைக் காட்சியில் நான் கண்ட/கேட்ட திரு. பெரியார் தாசன் அவர்களின் உரை. எனது நினைவிலிருந்தே எழுதி இருப்பதால் சிறிது பிழைகள் இருக்கலாம். யாரேனும் சுட்டியுடன் தெரியப்படுத்தினால் திருத்திவிடுகிறேன்.

Thursday, August 21, 2008

மலை

மலை என்கிற விமல் கிருஷ்ணமூர்த்தி. என் உற்ற நண்பன். அவனை நான் முதலில் பார்த்தது புவனேஸ்வரில் அலுவல் பயிற்சிக்காக சென்ற பொழுது. காற்றடித்தால் விழுந்து விடுவானோ என்று தோற்றமளிக்கும் ஒடிசலான தேகம் அவனுக்கு. படிய சீவிய தலை முடி, தடித்த கண்ணாடி, மீசை என்று பாரதிராஜா பட நாயகனை நினைவு படுத்தும் தோற்றம்.

அங்கே வேலைக்கு சேர்ந்த 15 தமிழ் நண்பர்களில் 'திருச்சி' என்பதால் என் மனதில் பச்சக் என்று வந்து ஒட்டிக் கொண்டவன்.

"இவனை என்னால் வேறொரு மனிதனாக பார்க்கவே முடிய வில்லை. கண்ணாடியில் தெரியும் எனது பிம்பமாகவே இவன் எனக்கு தெரிவான். இவனுக்கும் எனக்கும் ஒற்றுமைகள் பல. இவன் திருவரங்கத்தில் பிறந்து வளர்ந்தவன். நான் திருச்சியில் பிறந்து வளர்ந்தவன். இவன் படித்தது திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. நான் படித்தது திருச்சி இ. ரே. மேல்நிலைப்பள்ளி. இவன் மண்டல பொறியியல் கல்லூரியில் படித்தான், நான் சண்முகா பொறியியல் கல்லூரியில் படித்தேன். 'இதில் என்ன ஒற்றுமை?', என்கிறீர்களா. நாங்கள் இருவருமே வாழ்வின் பெரும் பகுதியை திருச்சியில் கழித்தவர்கள். நாங்கள் இருவருமே தமிழ் சினிமா வெறியர்கள். வெளிவரும் அனைத்து திரைப்படங்களையும் பார்த்து விடுவோம். அதே போல் இருவருக்குமே 'Patriotic Sense' என்பது அதிகம். இந்தியா மீதான பற்றுதலை நான் கூறவில்லை. பிறந்து வளர்ந்த ஊர், படித்த பள்ளி, படித்த கல்லூரி, வேலை பார்க்கும் அலுவலகம் போன்ற எதையும் நாங்கள் இருவருமே விட்டுக்கொடுக்க மாட்டோம். இவனிடம் பல சமயம் நான் கேட்பதுண்டு, 'மலை! life லெ எதையாவது நீ பரபரப்பா செஞ்சு இருக்கியாடா?' என்று. ஏனென்றால், அவன் அப்படி ஒரு slow coach. எல்லாவற்றையும் நிதானமாகத்தான் செய்வான். 9 மணி வண்டிக்கு 8:30க்கு வீட்டிலிருந்து கிளம்புவான். வீட்டிற்கும் ரயில் நிலையத்திற்கும் உள்ள தொலைவு 12 Km. இவனது இந்த போக்கால் நாங்கள் வண்டியை miss செய்த சம்பவங்களும் நடந்தேறி உள்ளன."

இது அவனை பற்றி எனது பழைய பதிவில் நான் குறிப்பிட்டது.

அவனுடன் ஒரே வீட்டில் வசித்த/பழகிய சுமார் நான்காண்டுகளில் ஒவ்வொரு நிகழ்விலும் எங்களிருவருக்கும் உள்ள ஒற்றுமையை நான் உணர்ந்திருக்கிறேன். எங்களுக்கிடையில் நடந்த விவாதங்கள், உரையாடல்கள், மற்ற தகவல் பரிமாற்றங்கள் போன்ற அனைத்திலுமே நான் எப்படி யோசிப்பேனோ, நினைப்பேனோ, செய்வேனோ அதனையே அவனும் செய்வதை கண்டிருக்கிறேன்.

பொதுவான விஷயங்களில் இவ்வாறு இருக்க, மற்ற அலுவல் சார்ந்த விஷயங்களில் அவன் எங்கோ, நான் எங்கோ. உதாரணத்திற்கு நான் கடை நிலை ஊழியனாக இருந்த காலத்திலேயே, என்னுடன் சேர்ந்த அவன் இரண்டு பதவி உயர்வுகள் பெற்றான். இப்பொழுதும் இந்தியாவின் சிறந்த கல்லூரி ஒன்றில் MBA முடித்து விட்டு உயர்ந்த பதவியில் இருக்கிறான்.

கல்லூரி முடித்து விட்டு வேலைக்கு சேர்ந்த அந்த இளம் வயதில் பலரும் பணம் பணம் என்று பறந்து கொண்டிருக்க அவன் மட்டும் "Serenity is more important" என்பான். "ஒரு வேலை விட்டு ஒரு வேலை மாறுவதற்கு பணம் கடைசி காரணமாக கூட இருக்க கூடாது" என்று 23 - 24 வயதில் கூறியவர்கள் அதிகம் பேரை நான் கண்டதில்லை.

அட்டகாசமான நகைச்சுவை உணர்ச்சி கொண்டவன். அவன் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். நாம் அவனை எவ்வளவு ஓட்டினாலும் "இவன் ரொம்ப நல்லவன்டா" என்று சொல்வது போல சிரித்துக் கொண்டே இருப்பான். அவன் கோபம் கொண்டு நான் பார்த்ததே இல்லை. அவனது பர்ஸிலிருந்து பணத்தை மற்றும் அவனது வண்டியை அவனிடம் கேட்காமல் எத்தனையோ முறை எடுத்து சென்றிருக்கிறேன். ஒரு முறை கூட அவனிடம் கேட்கவேண்டும் என்று கூட எனக்கு தோன்றியதில்லை. அந்த உரிமை அவனாக கொடுத்ததா?, இல்லை நானாக எடுத்துக் கொண்டதா? என்பது தெரியாது. ஆனால் பள்ளி அல்லது கல்லூரிகளில் மட்டுமே கிடைக்கும் அத்தகைய நட்புரிமைகளை அலுவல் நண்பன் ஒருவனிடம் பெற்றது அரிது என்றே நான் நினைக்கிறேன்.

அவனிடமிருந்து நான் கற்றுக் கொண்டது ஏராளம். கற்றுக் கொள்ள நினைத்து முடியாமல் போனதும் ஏராளம்.

சரி, இன்று எதற்கு இந்த மலை புராணம்? என்றால், அதற்கு தகுந்தகாரணம் ஒன்று உள்ளது.

நாளை அவனுக்கு திருச்சியில் திருமணம் நடக்க இருக்கின்றது. மணமக்கள் இருவருக்கும் இந்த பதிவின் வாயிலாக எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

Friday, August 08, 2008

What it takes to be an American President?

Yesterday I was hopping through yahoo and was completely shocked when I saw this news. An Israeli newspaper has published Barack Obama, the Amerian Presidential Candidate's prayer notes which was kept at the Holy Western Wall. I don't want to specify what the note reads here.

But for a country that respects privacy the most, which demands a separate bedroom even for a 5 year old kid, which feels intrusion of privacy is an offense, which prohibits even recording of a telephone conversation without either party's consent and treats it as a crime, this behaviour of its media seems atrocious. Afterall we demand privacy in 3 places at the least, bedroom, restroom and prayer hall, don't we?

Okie, forget the serious stuff. The below is a forwarded email I received from one of my friends.

John O'Reilly hoisted his beer and said, "Here's to spending the rest of my life!, between the legs of my darling wife!"

That won him the top prize at the pub for the best toast of the night!

He went home and told his wife, Mary, "I won the prize for the Best toast of the night."

She said, "Wow, what was your toast?"

John said, "Here's to spending the rest of my life, sitting in church beside my wife."

"Oh, that is very nice indeed, John!" Mary said.

The next day, Mary ran into one of John's drinking buddies on the street corner.

The man chuckled leeringly and said, "John won the prize the other night at the pub with a toast about you, Mary."

She said, "Yeah, he told me, and I was a bit surprised myself. You know, he's only been there twice in the last four years. Once he fell asleep, and the other time I had to pull him by the ears to make him come."

The below is another good one received from the same guy.

The inventor of the Harley-Davidson motorcycle, Arthur Davidson, died and went to heaven.

At the gates, St. Peter told Arthur. "Since you've been such a good man and your motorcycles have changed the world, your reward is, you can hang out with anyone you want to in heaven."

Arthur thought about it for a minute and then said, "I want to hang out with God."

St. Peter took Arthur to the Throne Room, and introduced him to God.

God recognized Arthur and commented, "Okay, so you were the one who invented the Harley-Davidson motorcycle?"

Arthur said, "Yeah, that's me..."

God commented: "Well, what's the big deal in inventing something that's pretty unstable, makes noise and pollution and can't run without a road?"

Arthur was a bit embarrassed, but finally spoke, "Excuse me, but aren't you the inventor of woman?"

God said, "Ah, yes."

"Well," said Arthur,

"professional to professional, you have some major design flaws in your invention!

1. There's too much inconsistency in the front-end suspension.....!!!!

2. It chatters constantly at high speeds.......

3. Most rear ends are too soft and wobble about too much.......

4. The intake is placed way too close to the exhaust....???!!!

5. The maintenance costs are outrageous!! !!"

"Hmmmmm, you may have some good points there," replied God, "hold on."

God went to his Celestial supercomputer, typed in a few words and waited for the results.

The computer printed out a slip of paper and God read it..

"Well, it may be true that my invention is flawed," God said to Arthur, "but according to these numbers, more men are riding my invention than yours".

And the original joke ends there. The below is added by my friend, which I think is the funniest part of the joke.

Arthur then said to God,

"That's because you have had your product out for a longer period of time. You have created a monopoly, though now admittedly a very small fraction of men are trying out other options. And finally – Your product has no resale value! Infact it costs more to get rid of than to acquire it."

Have a great weekend.

Monday, August 04, 2008

ஒரு ஒப்பீடு; ஒரு வேண்டுகோள்; ஒரு மனமகிழ்ச்சி


வணக்கம் நண்பர்களே. கீழே உள்ள இரண்டும் Behindwoods தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சிவாஜி மற்றும் தசாவதார சென்னை நகர வசூல் தகவல்கள்.


SIVAJI

Cast: Rajnikanth, Shriya, Vivek
Direction: Shankar
Music: A.R.Rahman
Production: AVM

The fans waited for a year and a half for Sivaji’s release and it seems they still haven’t had enough of their superstar even after two months. Sivaji’s breathtaking success at the box office has created a phenomenon.

Trade Talk:
When it rains, it pours.

Public Talk:
Rajini-Shankar-Rahman trio is beyond comparison and if there’s anything that the fans are complaining about the movie, it’s the tickets.

N.O. Weeks Completed: 9
No. Shows in Chennai over the last week: 204
No. Shows in Chennai over this weekend: 123
Average Theatre Occupancy over the last week: 41 %
Average Theatre Occupancy over this weekend: 51 %
Collection over the last week in Chennai: Rs.0.22 Crores
Collection over this weekend in Chennai: Rs.0.16 Crores
Total collections in Chennai by end of the tenth weekend: Rs.10.91 Crores

Verdict: Blockbuster (History rewritten)

DASAVATHARAM

Cast: Kamal Haasan, Asin, Mallika Sherawat, Jayapradha, Nagesh, Nepolean
Direction: K S Ravikumar
Music: Himesh Reshammiya
Production: V Ravichandran

Kamal’s dream of surpassing the Nadigar Thilagam came through with Dasavatharam. An exhilarating entertainer with distinct garb and makeup for each roles and an engaging script make the movie a treat to watch.

Trade Talk:
The movie has made enough and more profits for the producer and distributors in less than a week of its release.

Public Talk:
Dasavatharam has sparked a few discussions in the blogsphere about its relevance to Hindu mythology and other interesting comparisons.


No. Weeks Completed: 9
No. Shows in Chennai over this weekend: 93
Average Theatre Occupancy over this weekend: 40 %
Collection over this weekend in Chennai: Rs. 6,63,633

Total collections in Chennai by end of the tenth weekend: Rs.10.55 Crores

Verdict: Blockbuster

இன்றைய தமிழ்சினிமா சந்தை பெரியதாகி உலக அளவில் வரும் வருவாயினை கொண்டே கணிக்கப்படும் நிலையில், சென்னை என்ற ஒரு நகரினை மட்டும் sampling செய்தோ அல்லது படத்தின் தயாரிப்பு செலவு, விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்களின் லாபம் போன்ற எதுவும் தெரியாமல் தசாவதாரம் சிவாஜியை முந்தி விட்டது என்றோ அல்லது முந்தவில்லை என்றோ கூறுவது முற்றிலும் சரியாகாது என்ற போதும் கீழே உள்ள தகவல்கள் ஒன்றை மட்டும் தெளிவாக கூறுகின்றன.

ரஜினியை ரஜினியால் மட்டுமே முந்த முடியும் என்ற நம்பிக்கையை சற்று வலுவாகவே அசைத்திருக்கிறது தசாவதாரம். படம் ஒரு சில இடங்களில் சிவாஜியை முந்தி இருக்கலாம், ஒரு சில இடங்களில் முந்தாமல் இருக்கலாம். ஆனால் கமல் ரசிகர்களே எதிர்பார்க்காத அளவில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்பது மட்டும் உண்மை. இது ரஜினி ரசிகர்களுக்கிடையும் கமல் ரசிகர்களுக்கிடையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரஜினி ரசிகர்கள் பாபாவின் தோல்வியினால் பாதிக்கப்பட்டதை விட அதிகமாக தசாவின் வெற்றியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கமலின் ரசிகர்களோ இன்னொரு ஆளவந்தான் போல தசாவும் ஆகிவிடுமோ என்ற பயத்துடனேயே படத்தினை வெளியிடும் வரையில் இருந்து விட்டு, அதற்கு மாறாக இப்பொழுது பெற்ற பெரும் வெற்றியினால் என்ன செய்வது என்றே தெரியாமல் திக்கு முக்காடி கிடக்கிறார்கள்.

இன்றைய கால கட்டத்தில் வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் ரஜினிக்கு நிகராகவோ, அல்லது சற்று அதிகமாகவோ அல்லது சற்று குறைவாகவோ (அதாவது ரஜினியின் திரைப்படங்களின் வசூலுடன் ஒப்பிடும் வகையிலாவது) ஒரு வசூலை தமிழ் கதாநாயகன் யாரேனும் கொடுக்க முடியும் என்றால் அது கமலால் மட்டும் தான் முடியும். ஆனால் கமல் அத்தகைய வெற்றியினை கொடுக்க கடின உழைப்பு வேண்டும். ரஜினியிடம் இருக்கும் crowd pulling capability கமலுக்கு நிச்சயம் கிடையாது.

இரண்டாண்டு காலம் உழைத்து, தனது உடலை வருத்தி, பல விமர்சனங்களையும் நீதிமன்ற தடைகளையும் கடந்து 'வெற்றி கிடைக்குமா?, கிடைக்காதா?' என்ற கவலையில் உழன்று, படத்தினை வெளியிட்டு கமல் பெறும் வெற்றியினை ரஜினி எளிதாக சிகரெட்டை சாக்லெட்டை வாயில் தூக்கி போட்டு பிடித்து கைத்தட்டல்கள் வாங்கி பெற்று விடுகிறார். ரஜினியின் திரைப்படங்களுக்கு ரஜினி இருப்பதே மிகப் பெரிய selling point. ஆனால் கமலின் திரைப்படங்களுக்கு அதனையும் கடந்து பல தேவைப்படுகின்றன. சிறந்த உதாரணம் சிவாஜி மற்றும் தசாவதாரம்.

ரஜினியின் திரைப்படங்கள் "Clean Entertainers" என்ற வகைப்படுத்துதலின் கீழ் வருவதால் அதனுடன் ஷங்கரின் பிரம்மாண்டம், விவேக் அல்லது வடிவேலுவின் நகைச்சுவை, A. R. ரஹ்மானின் அருமையான பாடல்கள், ஷ்ரேயாவின் கவர்ச்சி போன்ற அனைத்தும் சேரும் பொழுது ரஜினியின் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாது சராசரி தமிழ் சினிமா ரசிகனுக்கும் என்ன தேவையோ அது கிடைக்கின்றது.

ஆனால் கமலினை பொருத்த வரையில் கமலின் தீவிர ரசிகர்களை திருப்தி செய்யும் விதத்தில் படம் எடுத்தால் சராசரி ரசிகனை கவராது. தயாரிப்பாளர் தலையில் துண்டு தான். சராசரி ரசிகனை கவரும் விதத்தில் படம் எடுப்பதற்கு கமலின் ego இடம் கொடுக்காது. இரண்டு வகையினருக்கும் தீனி போட வேண்டும் என்றால் தனக்காக அல்லது தனது தீவிர ரசிகர்களுக்காக முதல் 15 நிமிடங்களும் சராசரி ரசிகனை கவர்வதற்காக மீதி இருக்கும் இரண்டரை மணிநேரங்களும் ஒதுக்கீடு செய்து திரைக்கதை அமைத்தால் படம் வெற்றி பெரும். அதனையே தசாவதாரம் படத்தில் கமல் வெற்றிகரமாக செய்திருக்கிறார்.

ஆனால் இதனை அவர் தொடர்ந்து செய்வாரா? என்பது அவருக்கு மட்டுமே தெரியும். நாம் ஊகிக்க முடியாது. நம்மால் முடிந்தது கமலின் வெற்றியில் மன மகிழ்ச்சி அடைவது தான். ரஜினி ரசிகர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். கமலின் மாபெரும் வெற்றியினை கமல் ரசிகர்களை கொண்டாட விடுங்கள். நீங்கள் கொண்டாட ரஜினியின் வெற்றிகள் காத்திருக்கின்றன.

எனக்கு தோன்றுவது என்னவென்றால், கமலின் சமீபகால திரைப்படங்களில் சண்டை காட்சிகள் நிச்சயம் அருமையாக இருக்கின்றது (ஆளவந்தான், விருமாண்டி, வேட்டையாடு விளையாடு, தசாவதாரம்). அதனால் ஒன்று நிச்சயம் கமல் தனது ego வை ஒதுக்கிவிட்டு பக்கா கமர்ஷியல் மசாலா சண்டைப் படங்களோ அல்லது முன்போலவே பக்கா கமர்ஷியல் நகைச்சுவை படங்களோ கொடுத்தால் Rajini Vs Kamal என்ற Mass Vs Class equilibrium சற்று மாறினாலும் மாறலாம்.

Friday, July 25, 2008

பெங்களூர் குண்டு வெடிப்பு

இன்றைக்கு காலையில் அலுவலகம் வந்து கொண்டிருந்த பொழுது எனது தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது. அவருக்கு தெரியும் இது காலை நேரம் அவசரமாக நான் அலுவலகம் சென்று கொண்டிருப்பேன் என்று. ஏதேனும் முக்கிய செய்தி இருந்தால் மட்டுமே அழைப்பு வரும். எடுத்து பேசிய எனக்கு பெங்களூரில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பினை பற்றிய செய்தி கிடைத்தது.

அலுவலகம் வந்து குண்டு வெடிப்பு நடந்த இடங்களை பற்றிய செய்தி அறிந்த பொழுது அதன் பதை பதைப்பு இன்னும் அடங்கவில்லை. BTM, மதிவாலா, அடுகோடி, Richmond Circle என்று நான் நான்காண்டுகள் அதிகம் புழங்கிய இடங்களில் எல்லாம் குண்டு வெடித்திருக்கிறது.

நண்பர்கள் யாரை தொடர்பு கொண்டாலும், குண்டு வெடிப்பு நடந்த இடத்தின் அருகிலேயே அதே நேரத்தில் இருந்ததாக சொல்கிறார்கள். அவர்களது நல்ல நேரம் அவர்களை காப்பாற்றியது.

ஈராக்கில் குண்டு வெடித்தால் மிகவும் சங்கடமாக இருக்கும்; அதுவே மும்பாய், வாரனாசி, கோவை என்று எங்கு குண்டு வெடித்தாலும் மனம் பதறும்; அதே நேரத்தில் பெங்களூர் என்ற பொழுது பதற்றம் அதிகமாகி ஒரு சில நேரத்தில் கண்கள் கலங்கி விட்டன. நான்காண்டுகள் நான் வாழ்ந்த ஊர். எனது சகோதரர் மற்றும் பல நெருங்கிய நண்பர்கள் இருக்கும் ஊர். சும்மாவா சொன்னார்கள் தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று.

தொலைப்பேசி இணைப்பு முற்றிலுமாக கிடைக்க வில்லை. நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சலில் நலத்தை விசாரித்து ஓரிருவரை கூகுள் டாக்கில் தொடர்பு கொண்டு அனைவரும் நலம் என்று தெரிந்து கொள்வதற்குள் போது போதும் என்றாகி விட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து விட்டதால் என்ன செய்யலாம் என்று காத்துக் கொண்டிருந்த ஊடகங்களுக்கு அடுத்த ஒரு வார காலம் நல்ல வேட்டை. பரபரப்பிற்கு பஞ்சம் இல்லை. காங்கிரஸிற்கும், தேவகௌடாவிற்கும், குமாரசாமிக்கும் பாஜக மீது குற்றம் சுமத்த மற்றொரு நல்ல வாய்ப்பு. கர்நாடக பாஜக விற்கு வேறு என்ன செய்து மக்களின் கவனத்தை திசை திருப்பலாம் என்ற கவலை. சிறு முதலீட்டாளர்களுக்கு இதனால் சந்தை சிறிது ஆட்டம் கண்டு விடுமே என்ற கவலை. சராசரி வாக்காளனுக்கு விலைவாசி உயர்வை எப்படி சந்திப்பது என்ற கவலை.

இந்த நிலையில் இறந்தவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பற்றி கவலைப்பட இங்கே யாரும் இல்லை.

இறந்த ஆத்மாக்களுக்கு எனது அஞ்சலிகளையும், அவர்கள் குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களையும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் குணமாக எனது வழிபாடுகளையும் செலுத்துகிறேன்.

சற்றுமுன் கிடைத்த செய்தி: அஹமதாபாத்தில் 16 இடங்களில் இன்று அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பில் 18 பேர் இறந்துள்ளனர். பலர் படுகாயமடைந்திருக்கிறார்கள். மனித உயிரின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

Thursday, June 26, 2008

பொடிமாஸ் - 06/26/2008

எனது தமிழ்மண நட்சத்திர வாரம் முடிவிற்கு வந்து விட்டது. அதனை தொடர்ந்து எனக்கு தொலைபேசிய நண்பர் ஒருவர் ஏமாற்றமாக இருந்ததாகவும் அதனை நான் இன்னும் அதிகம் நன்றாக பயன்படுத்தி கொண்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். அது அவர் என் மீது கொண்டுள்ள அன்பை காட்டுகிறது. ஆனாலும் நான் என்ன செய்வது?, "சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?"



அமெரிக்க மக்களின் ஒழுங்கு முறை பற்றி பல இடங்களில் படித்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டு இருப்பீர்கள். நேரில் பார்க்காத மக்களுக்கு தான் இதனை எடுத்து சொல்ல இருக்கிறார்களே வெளி நாட்டு மாப்பிள்ளைகளும், மகன்கள்/மகள்கள் வீட்டிற்கு அமெரிக்கா வந்து திரும்பும் ரிட்டையர்டு பெரிசுகளும். ஆனால் சென்ற மாதம் இதற்கு முற்றிலும் மாறுபாடான ஒரு அனுபவம் எனக்கு கிடைத்தது.

Washington, DC மற்றும் Virginia இடையிலான பாதாள ரயில் போக்குவரத்தில் ஏதோ பிழை ஏற்பட்டு அதனால் இரு ரயில் நிலையங்களுக்கு இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஒரு பக்கம் வரும் ரயில்கள் பயணிகளை ஒரு நிலையத்தில் இறக்கிவிட, அங்கிருந்து அவர்களை பேரூந்தில் மற்றொரு ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து மீண்டும் ரயிலில் பயணம் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் ஒரு ரயிலில் வரும் பயணிகள் அனைவரையும் ஒரு பேரூந்தில் ஏற்றவா முடியும். அதனால் சுமார் 3000 அல்லது 4000 பயணிகள் வரை ஒரு நிலையத்தில் காத்திருக்க பயணிகளை ஏற்ற வரும் பேரூந்தோ நெடுநேரம் சென்றும் வரவே இல்லை.

அப்பொழுது அங்கே இருந்த தள்ளு முள்ளுவை பார்க்க வேண்டுமே. ஆஹா கண்கொள்ளா காட்சி.

Demand Vs. Supply என்பது சரிவிகிதமாக இருக்கும் வரை அமெரிக்கர்கள் ஒழுங்கு முறைகளை சரியாக பின்பற்றுபவர்களே. ஆனால் அதில் ஒரு சிறு பாதிப்பு வந்தாலும் அவர்களின் ஒழுங்கீனம் நம்மவர்களுக்கு சற்றும் சளைத்தது அல்ல. அதே நேரத்தில் Demand Vs. Supply விகிதத்தை சரியளவில் நம்மவர்களுக்கு அளித்தால் நம்மவர்களும் ஒழுங்கு முறைகளை சரியாகவே பின்பற்றுவார்கள். அதனை செய்வதை விட்டு விட்டு பேரூந்தில் வரிசையில் ஏறுங்கள் என்று பிரச்சாரம் மட்டும் செய்து கொண்டிருந்தால் எந்த மாற்றமும் நடக்காது. ஷங்கர் போன்ற இயக்குனர்களுக்கு அந்நியன் படம் எடுத்து காசு பார்க்கவே பயன்படும்.



இந்த ஹிந்திக்காரர்களிடம் பழகுவது என்பது தனி கலை என்றே நினைக்கிறேன். முன்பு இந்தியாவில் இருந்த பொழுது எனக்கிருந்த வட நாட்டு நண்பர்கள் அனைவரும் திருமணமாகாதவர்கள் என்பதால் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. May be we did not talk anything other than cricket and movies then.

இங்கும் நான் வந்த புதிதில் அவ்வளவாக வடநாட்டினர் எனது அலுவலகத்தில் இல்லை (சரியாக சொன்னால் இல்லவே இல்லை). ஆனால் இப்பொழுது திடீரென்று நான்கைந்து வட நாட்டினரை வேலைக்கு எடுத்துவிட்டார்கள்.

10 நிமிடம் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தால் 9 முறை 'பணம்' வந்து விடுகிறது. இது எனக்கு எரிச்சலையே தருகிறது. "டேய்! சாகும் போது அள்ளிக்கிட்டாடா போகப்போறீங்க?" என்று கத்த வேண்டும் போல் உள்ளது.

அடுத்தது மொழி. எனக்கு ஹிந்தி தெரியாது என்று நாளிதழில் தான் விளம்பரம் செய்யவில்லை. அவ்வளவு முறை கூறியாகி விட்டது. இனி என்னிடம் ஹிந்தியில் பேசினால் தமிழில் பதில் கூறுவதாக முடிவெடுத்துள்ளேன். பார்க்கலாம்.

இதனை எழுதும் பொழுது நான் இந்தியாவில் வேலை செய்த பொழுது நடந்தது தான் நினைவிற்கு வருகிறது. வேலைக்கு சேர்ந்த புதிதில் Swapnil என்ற ஒரு ***** என்னிடம் ஹிந்தியில் ஏதோ கேள்வி கேட்டான். அதற்கு நான் எனக்கு ஹிந்தி தெரியாது என்றும் ஆங்கிலத்தில் பேசுமாறும் மரியாதையாக பதில் கூறினேன். அதற்கு அவன்,

"Why the fuck you are in India when you don't know Hindi?" என்றான். எனக்கு வந்ததே கோபம். நான் "Do you dare to send me your question in email? I will show you why the fuck I am here." என்றேன். அதை கேட்டு வாயையும் அதையும் பொத்திக் கொண்டு சென்றவன் தான். அதன் பிறகு என்னிடம் வருவதில்லை.



இந்த தசாவதார மோகம் என்று முடிவிற்கு வரும் என்றே தெரியவில்லை. சீக்கிரம் குசேலனை வெளியிட்டால் பரவாயில்லை என்றே நினைக்க தோன்றுகிறது.

"பேப்பரை கிழித்து துகள்களை தூக்கி வீசி விசிலடிக்கும் முன்வரிசை ரசிகர்களுக்காக படமெடுத்து விட்டு உலகத்தரம் என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்....." என்றெல்லாம் வரும் கருத்துக்களை பார்க்கும் பொழுது ஒன்றே ஒன்று தான் கூறத் தோன்றுகிறது.

அடுத்தவர் ரசனையை மட்டம் என்று நினைப்பதை விட மட்டம் வேறு இருக்கவே முடியாது. இந்தியா போன்ற சமூகத்தில் தனிப்பட்ட, அரசியல், சமூக பிரச்சனைகள் பலவற்றை நாள் தோறும் சந்திக்கும் முன்வரிசை ரசிகனை மகிழ்விப்பதை விட வேறு உயரிய வேலை ஒரு கலைஞனுக்கு இல்லை.

அதே காரணத்திற்காகவே கமலை நான் எவ்வளவு மதிக்கிறேனோ அதே அளவு ரஜினியையும் மதிக்கிறேன்.

மற்றபடி முன் வரிசை ரசிகனின் ரசனையை மட்டம் தட்டும் அறிவு ஜீவிகளுக்கெல்லாம் ஒன்றே ஒன்று தான் சொல்லிக் கொள்கிறேன் உங்கள் கூற்றுப்படி அவன் மட்டமான ரசனையுடன் இருப்பதினால் தான் உங்களால் "அறிவு ஜீவி" பட்டத்தை எளிதில் பெற முடிகிறது. அவர்கள் இல்லையென்றால் நீங்கள் இல்லை என்பது முன்வரிசை ரசிகர்களுள் ஒருவனான எனது தாழ்மையான கருத்து.

Sunday, June 22, 2008

நட்சத்திர நன்றி

பதிவெழுத தொடங்கி இரண்டாண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சற்றே திரும்பிப் பார்க்கிறேன். இரண்டாண்டுகளில் சரியாக 62 பதிவுகள் பதிந்துள்ளேன். ஆனாலும் உண்மையில்

"கண்களையும் காதுகளையும் அதிகம் பயன்படுத்து
வாயின் பயன்பாட்டினை குறைத்துக்கொள்"

என்று எங்கேயோ ஆட்டோவின் பின்னால் படித்த வாசகத்தினை பின்பற்றி இருக்கிறேன் என்பது தெளிவாகிறது. நான் எழுதியது 62 தான் என்றாலும், பல நூறு பதிவுகளை இத்துனை காலம் படித்து இருக்கிறேன். அதன் மூலம் நான் கற்றுக் கொண்டது ஏராளம். பல சித்தாந்தங்களின் மீது நம்பிக்கை வலுப்பட்டிருக்கின்றது. பல சித்தாந்தங்களின் மீது நான் வைத்த நம்பிக்கை குறைந்துள்ளது. சிந்தனை தெளிவு அதிகமாகி இருக்கிறது. ஒரு நிகழ்வை பல பரிமாணங்களில் பார்க்கத் தொடங்கி இருக்கிறேன்.

இவ்வளவு இருந்தும் இன்னும் சிறிது சுயமோகமும், விளம்பர இச்சையும் மீதம் இருப்பதால் "காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு" என்ற அடிப்படையில் எனது பதிவுகளில் நான் மிகவும் விரும்பிய பதிவுகளை தொகுத்து தந்துள்ளேன். இந்த பதிவுகள் அனைத்தும் எனக்கு மிகவும் மன நிறைவை தந்தவை.

1. குருதியை தாருங்கள்; சுதந்திரம் அளிக்கிறேன்!

நேதாஜியை பற்றி நான் எழுதிய பதிவு. அவரது வரலாற்றை படிக்கும் பொழுது தான் நமது சுதந்திரத்திற்காக நமது முன்னோர்கள் சிந்திய குருதியும், இன்று இந்த சுதந்திரத்தை அனுபவிக்க நம்மை தகுதியுள்ளவர்களாக ஆக்கிக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.

2. இந்தியப் போர்கள்

இந்தியப் போர்களை பற்றிய எனது தொடர் பதிவு. உண்மையில் இதனை எழுது பொழுது ஒன்றும் தெரியவில்லை. ஆனால் கடைசி பகுதிக்கு வந்திருந்த பின்னூட்டங்களின் மூலம் இதனை இத்தனை பேர் படித்திருக்கிறார்கள் என்பதை அறிந்த பொழுது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வலைபதிவில் மட்டும் இல்லாது தனிப்பட்ட முறையில் பல நண்பர்களிடமிருந்தும் நான் பாராட்டு பெற்றேன். இந்த தொடரினை எழுதும் பொழுது தொடர்ந்து படித்து பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்திய கேமரா கவிஞர் CVR மற்றும் சேரன் பார்வை இருவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

3. அழகுகள் ஆறு!

திருச்சியை பற்றிய எண்ணமே எனக்கு மிகுந்த மகிழ்வளிக்கும் ஒன்று. அப்படி இருக்கும் பொழுது முதல் முறையாக திருச்சியின் மலைக் கோட்டையை பற்றியும் காவிரி பாலத்தினை பற்றியும் எழுதிய இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்த பதிவுகளில் இருப்பதில் வியப்பென்ன? பின்னாளில் திருச்சியினை பற்றிய முழூ பதிவொன்று எழுதுவதற்கு இந்த பதிவே ஊக்கமாக அமைந்தது.

4. கமல் - ஒரு சகாப்தம்

நான் இதுவரை எழுதிய பதிவுகளிலேயே அதிகப் பின்னூட்டம் பெற்ற பதிவு. தமிழ் சினிமாவினை passion ஆக கொண்டிருக்கும் சராசரி தமிழனான எனக்கு நான் மிகவும் விரும்பும் கலைஞனின் சிறந்த படங்களை தொகுத்து அளிப்பது சவாலான ஒரு செயலாக இருந்தது. எனக்கும் கமல் மீது பல விமர்சனங்கள் உண்டு என்ற போதும் அவரது திரைபடங்களின் தாக்கம் அதிகம் என் மீது இருப்பதால் வந்த விளைவே இந்தப் பதிவு.

இத்துடன் விளம்பரம் போதும் என்று நினைக்கிறேன். எனது நட்சத்திர வாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த ஒரு வார காலமாக எனது பதிவுகளை படித்து பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வாய்ப்பினால் பல பதிவர்கள் முதன்முறை எனது பதிவுகளுக்கு வருகை தந்துள்ளனர். பல பழைய பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் வந்துள்ளன. அது எனது மன மகிழ்ச்சியை அதிகப்படுத்துகிறது.

இந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேனா?, இல்லையா? என்பதை நீங்கள் தான் கூற வேண்டும் என்றாலும், ஓரளவு அனைவரையும் ஏமாற்றாமல் இருந்திருக்கிறேன் என்றே நான் நினைக்கிறேன்.

இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ்மண நிற்வாகத்தினர்களுக்கும் மீண்டும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு அடுத்த வார தமிழ்மண நட்சத்திர பதிவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

நன்றி. வணக்கம்.

Saturday, June 21, 2008

தமிழ் பதிவுலகமும் - கருத்து மோதல்களும்

நான் பல நாட்களாக எழுத நினைத்து பதிவுலக அரசியலில் சிக்கி கொள்ள விரும்பாததால் எழுதாமல் விட்டது தான் இது. "இப்பொழுது ஏன் எழுதுகிறாய்? அரசியலில் சேர முயற்சியா?" என்றால், "இல்லை" என்பது எனது உறுதியான பதில். ஆனாலும் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன்.

இன்றைய நிலையில் தமிழ் பதிவுகள் பலவும் ஏதோ ஒரு பதிவிற்கு எதிர் வினையாகவே வருகின்றன. நடுநிலை என்பதே என்னை பொருத்தவரை ஒரு விதமான சப்பை கட்டு தான். நாம் ஒவ்வொருவரும் கம்யூனிஸம், திராவிடம், பார்பணீயம், ஈழம், இஸ்லாம், இந்துத்வா, தமிழ் தேசியம் இன்னும் இது போன்ற பலவற்றில் ஏதோ ஒரு விதமான சார்பு நிலையில் உள்ளவர்கள் தாம். அந்த சார்பு நிலையை உரக்க கூற வலைபதிவை பயன்படுத்துகின்றோம். அதில் தவறொன்றும் இல்லை. உண்மையில் வலை பதிவே அதற்காகத்தான் இருக்கிறது.

ஆனால் பிரச்சனை எங்கே தொடங்குகிறது என்று பார்த்தால், "என்னுடைய சார்பு நிலையே சரி. நீ எப்படி வேறு நிலை எடுக்கலாம்?" என்று நினைத்து அடுத்தவர் நிலையை மாற்ற வாக்கு வாதங்களில் ஈடுபடும் போது தான். தமக்கு ஒரு சார்பு நிலை எடுக்க உரிமை இருப்பதை போல அடுத்தவர்களுக்கும் வேறொரு சார்பு நிலை எடுக்க உரிமை இருக்கிறது என்பதை பலர் புறிந்து கொண்டதாக தெரியவில்லை.

யாரும் நம்பிக்கை இல்லாமல் எந்த ஒரு சித்தாந்தங்கங்களின் மீதும் சார்பு நிலை எடுப்பதில்லை. அவரவர் நம்பிக்கைகுறிய சித்தாந்தங்கங்களின் மூலமே மக்களை மேம்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள். உதாரணத்திற்கு கம்யூனிஸத்தை ஆதரிப்பவர்களும் சரி, உலகமயமாக்கலை ஆதரிப்பவர்களும் சரி இருவருமே தத்தம் சார்பு நிலையில் மிக்க நம்பிக்கை கொண்டவர்கள் தாம். அவ்வாறான நம்பிக்கையையெல்லாம் அவ்வளவு இலகுவாக வாக்கு வாதங்களினால் மாற்றி விட முடியாது. அப்படி இருக்க எதற்கு தேவையற்ற இத்தகைய வாக்கு வாதங்கள். சரி அத்தகைய வாக்கு வாதங்களினால் அடுத்தவர் நிலை மாற்றப்பட்டதா? என்றால் அதுவும் இல்லை. வாக்கு வாதத்தின் முடிவில் அவரவர் தத்தம் நிலையிலேயே இருக்கிறார்கள். பின் எதற்கு இது? இதனால் என்ன பயன்?


பத்திரிக்கைகள் தங்களது போட்டி பத்திரிக்கைகள் தரும் செய்திகளுக்கு எதிர் வினை ஆற்றுகின்றனவா? அவர்களுக்கு தேவையான செய்திகளை அவர்களுக்கு தேவையான வகையில் திரித்து தருகின்றன. அவ்வளவே. சித்தாங்கங்களை உருவாக்குபவர்கள் வாதாடலாம், அதனை பின்பற்றுபவர்கள் வாதாட தேவை இல்லை.

இத்தகைய வாக்கு வாதங்களே ஒரு விதமான Ego - Alter Ego போட்டியினால் ஏற்படுவது தான். வாக்கு வாதத்தின் முடிவில் ஒரு சாராருடைய Ego பாதிக்கப்படும் போது மனம் அதனை ஏற்றுக் கொள்ளாமல் எதிர் வினை இன்னும் தீவிரமாக வருகிறது. சில நேரங்களில் அவை அநாகரீகமாகவும் வெளிப்படுகிறது.

உண்மையில் இத்தகைய வாக்கு வாதங்களினால் ஒரு பயனும் இல்லை. அவர் நிலை அவருக்கு; என் நிலை எனக்கு என்று இருந்து விடுவது தான் சரி. ஒரு பதிவர் பக்க சார்புடையவர் என்பதை அறிந்து கொள்வதற்கு அவருடன் குடும்பம் நடத்த தேவை இல்லை. அவரது ஓரிரண்டு பதிவுகளை படித்தாலே போதும். அவரது கருத்தில் உடன்பாடு இல்லையா எதிர்ப்பை அவரது பதிவில் பதிவு செய்யுங்கள். அவர் "தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்" என்கிறாரா, அவரது அடுத்தடுத்த பதிவுகளை தவிருங்கள்.

அதை செய்வதை விட்டு விட்டு, அவரது வலைப்பூவை book mark செய்து அவர் போடும் ஒவ்வொரு பதிவிற்கும் எதிர் வினை செய்து கொண்டிருந்தால் நாம் comedian ஆகிவிடுவோம்.

நாட்டில்/உலகில் நடக்கும் நிகழ்வுகள் நம்மை பாதிக்கும் போது அதற்கு எதிர் வினை ஆற்றலாம். நமது கருத்தை கூறலாம். மாறாக ஒரு பதிவிற்கு எதிர் வினை ஆற்றுவது அந்த பதிவும் அதன் உட்கருத்தும் நம்மை பாதிக்கிறது என்ற நமது vulnerablity ஐ மட்டுமே காட்டும் என்பது எனது கருத்து.

அவ்வளவு தான் நான் கூற வந்தது. இதனால் எல்லாம் பதிவுலகம் மாறிவிடப் போவதில்லை. அவரவர் தத்தம் முறைகளிலேயே பதிவு எழுதிக்கொண்டும், எதிர் வினை ஆற்றிக் கொண்டும் இருக்கத்தான் போகிறார்கள். இருந்தாலும் சொல்ல வந்ததை சொல்லி விட்டேன். அவ்வளவே.

பின்குறிப்பு : 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ் வலையுலக சூழ்நிலையை பார்த்து மனம் நொந்து எழுதி பின் பதிய வேண்டாம் என்று முடிவு செய்து சேமிப்பிலேயே வைத்தது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில் இப்பொழுது பார்த்தால் பதிவுலக சூழல் மிகவும் நன்றாகவே இருக்கின்றது. பல புதிய பதிவர்களின் வருகையும், வலையுலகை மற்ற அச்சு ஊடகங்கள் கூர்ந்து கவனிக்க தொடங்கியுள்ளதும், சண்டை சச்சரவுகள் குறைந்துள்ளதும், ஆரோக்கியமான விவாதங்கள் அதிகரித்துள்ளதும் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

'சரி, இப்பொழுது எதற்கு இதனை பதிந்தாய்?' என்று நீங்கள் கேட்டால் அதற்கு

'பழையதை ஆவணப்படுத்தும் முயற்சி' என்று politically correct ஆன பதிலை கூறலாம்.

அல்லது

'எழுதுவதற்கு சரக்கு தீர்ந்து விட்டது. அதனால் சேமிப்பில் இருந்ததை எடுத்து தூசி தட்டி பதிந்து விட்டேன்.' என்று உண்மையையும் கூறலாம்.

Friday, June 20, 2008

பொய்யர்கள் ஆளும் பூமி

பொதுவாக நான் பிற தளங்களில் இருந்து செய்திகளை அப்படியே எனது பதிவுகளில் தருவதில்லை. இருந்தாலும் நட்சத்திர வாரத்தில் பலரும் எனது பதிவுகளை படிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பதால் நான் படித்து என்னை மிகவும் பாதித்த சில கட்டுரைகளை இந்தப் பதிவில் தொகுத்து தருகிறேன்.

தான் ஒன்பது வயதிலிருந்தே துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறும் மீனா, தனது முதல் அனுபவத்தை நடுக்கத்தோடு விவரிக்கிறார்: "கூடை நிறைய மலத்தைத் தலையில் சுமந்து கொண்டு நடந்தேன். அப்போது கால்கள் தடுமாறி கீழே விழுந்தேன். அழுது கொண்டிருந்த என்னைத் தூக்கிவிட யாரும் வரவில்லை. காரணம், கூடையிலிருந்த மொத்த மலமும் என் மேல் கொட்டியிருந்தது. இன்னொரு துப்புரவுப் பெண் வந்து தூக்கிவிடும் வரை நான் அழுதபடி அப்படியே கிடந்தேன். மொத்த உலகத்தில் மிகவும் துரதிர்ஷ்டமான பெண்ணாக என்னை அப்போது உணர்ந்தேன்."

மீனா போன்ற பல துப்புரவு தொழிலாளர்களின் அவல நிலை பற்றி அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்.



தலித்துகள் தலைவர்களானால் அவர்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள் நிற்கும் என்ற நம் நம்பிக்கை தவறு என்று கூறுகிறது இந்தக் கட்டுரை.

பஞ்சாயத்து தலைவரான பிறகும்கூட சேர்வாரன், பஞ்சாயத்து அலுவலகத்தைப் பெருக்கி, கழுவி, சுத்தம் செய்யும் துப்புரவுப் பணி யாளராகவே இருக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். வட்டார ஊராட்சி அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் வந்தபோது, சனவரி மாதம் நடந்த கூட்டத்தில்தான் ஒரே ஒருமுறை மட்டும் அவர் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறார். தன்னைக் கேட்காமல் முடிவெடுப்பதால் உதவி தலைவரும், அவருடைய கணவரும், 'ஏண்டா சக்கிலியப் பயலே உனக்கெல்லாம் நாங்க பதில் சொல்லணுமோ, நீ கையெழுத்துப் போட்டாதான் நாங்க வேலை செய்யணுமா, இருலே உன்ன என்ன செய்யறேன்னு பாரு' என்று தொடர்ந்து மிரட்டப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க இங்கே செல்லுங்கள்.



இரட்டைக் குவளை மற்றும் இரட்டை இருக்கை முறைகளுக்கு எதிராக திண்டுக்கல் மற்றும் பழனி மாவட்டங்களில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் நடத்திய பிரச்சாரத்தில் அவர்கள் சந்தித்த எதிர்ப்புகளை பற்றிய கட்டுரை.

"பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க அறிவில்லையாடா ஒனக்கு? தி.க.ன்னா சாமியப் பத்திப் பேசு, 69 சதம் இடஒதுக்கீடு கேளு, அத விட்டுட்டு, இரட்டை டம்ளர்னு பேசுனா என்னடா அர்த்தம்?"

என்பது போன்ற கேள்விகள் தான் மிஞ்சின. முடிவில் பிரச்சாரத்தை முடிக்காமலே உயிருக்கு பயந்து திரும்பி வந்து விட்டனர் என்கிறது கட்டுரை.

சாதியின் கோர முகத்தை மென்மையான கரங்களால் பிய்த்து எறிய முடியாது. சாதி தனது இருப்பை என்றுமே மென்மையாக வெளிக் காட்டியதில்லை. கீழ் வெண்மணி, மேலவளவு, கயர்லாஞ்சி என எங்கும் நாம் கண்டது, சாதியின் கொடூர முகத்தை மட்டுமே. எதிர்ப்புகளும் போராட்டங்களும் மட்டும் எதற்கு மென்மையாய்?

என்று முடிக்கிறார் கட்டுரை ஆசிரியர்.

முழுதும் படிக்க இங்கே செல்லவும்.



ஆசிரியர் கையில் வைத்திருந்த பிரம்பு குத்தி பார்வையிழந்தவர்கள், உப்பு மீது முட்டிக்கால் போட வைத்ததால் கால் ஊனமான மாணவர்கள், ‘ஸ்குரு டிரைவர்' கொண்டு அடித்ததால் மண்டை உடைந்த மெக்கானிக் சிறுவர்கள்...

எனப் பள்ளிகளில், பணியிடங்களில், குடும்பங்களில் மற்றும் பல இடங்களில் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை பட்டியலிடுகிறது இந்தக் கட்டுரை.

இந்தியாவில் இந்து மதம் மேல் மற்ற மதங்கள் எல்லாம் கீழ்; இந்து மதத்தில் சாதியப்படி நிலைகளில் பார்ப்பனர்கள் மேல் மற்றவர் அனைவரும் கீழ்; ஆண்கள் மேல், பெண்கள் கீழ்; அதேபோல் பெரியவர்கள் மேல், குழந்தைகள் கீழ். எப்படி தலித் மக்களை ஒடுக்க சாதி இந்துக்கள் ஒன்று கூடுகிறார்களோ, பெண்களை அடக்க மதம், சாதி வேறுபாடுகளின்றி ஆண்கள் ஒன்று கூடுகிறார்களோ - அதைப் போலவே குழந்தைகளை சாதி, மத, பாலினப் பாகுபாடுகளைக் கடந்து அனைவருமே ஒடுக்குகிறார்கள். இது, மூத்தோர் ஆதிக்க உலகம் (Adult Chauvinism).

என்று அதற்கான காரணங்களையும் அழகாக பட்டியலிடுகிறார் கட்டுரை ஆசிரியர்.

மேலும்

இந்தியா, தனது மொத்த வருவாயில் வெறும் 3.5 சதவிகிதமே குழந்தைகளின் கல்விக்கும், உடல் நலத்திற்கும் செலவிடுகிறது.

போன்ற புள்ளி விபரங்களும் உள்ளன.

நீங்களும் படியுங்களேன்.



சண்டையா இருந்ததால நா புள்ளைங்கள ஸ்கூல்ல இருந்து கூட்டிக்கிட்டு வந்தேன். அப்போ திருநா மாதிரி வாட்டமா எதிர்க்க ஒரு கும்பல் வந்திச்சி. வழியில மாட்ன என்ன அவங்க அடிக்க வந்தாங்க. நா இந்துன்னு சொன்னா உட்டுடுவாங்கன்னு நெனச்சி, 'நான் இந்துங்க' ன்னு சொன்னேன். அப்போ கூட என்ன விடல அடிச்சாங்க. என் ஊட்டு ஓட்டயெல்லாம் கடப்பாறையால அடிச்சி நொறுக்கிட்டாங்க

என்று எறையூரில் மதம் மாறிய தலித் கிறிஸ்துவர்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகளை பட்டியலிடுகிறது இந்தக் கட்டுரை.



இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக நண்பர் ஆழியூரானின் சாதி சூழ் உலகு பதிவினை படியுங்கள்.



தலித் முரசு தளம் முழுவதும் HTML வடிவிலிருந்து PHP வடிவிற்கு மாறிவிட்டதால் எனது சேமிப்பில் இருந்த பல சுட்டிகள் வேலை செய்யவில்லை. அதனால் மீண்டும் தேடி எடுத்து சில சுட்டிகளை மேலே தந்துள்ளேன். இவை வெகு சிலவே.

"இந்தியாவில் சாதிக் கொடுமைகளெல்லாம் இப்பொழுது எங்கே இருக்கின்றது? வலைபதிவில் தான் எதற்கெடுத்தாலும் சாதி சாதி என்று கூறி கும்மியடிக்கிறார்கள்" என்று கூறுபவர்கள் அவசியம் மேலே உள்ள கட்டுரைகளை படித்து விட்டு வாருங்கள். உங்கள் மனதிற்குள் விவாதித்து தெளிவான முடிவெடுங்கள். நாளைய விடியல் நல்லதாக அமையட்டும்.

Thursday, June 19, 2008

Asterix & Obelix - Part 2

முதல் பகுதி இங்கே.

1961 - Asterix the Gaul: நான் முன்னரே குறிப்பிட்டது போல இதுதான் இந்த கதை வரிசையில் முதல் கதை. Gauls உடன் போரிட்டு தோல்வியடைந்த ரோமானியர்கள் தோல்விக்கான காரணங்களை அறிய முற்படுகின்றனர். அவர்களுக்கு Getafix ன் மந்திரக் கூழை பற்றிய செய்தி ஒற்றர்கள் மூலமாக கிடைக்கின்றது. உடனே அவரை கடத்துவது என்று முடிவு செய்கிறார்கள். கடத்தியும் விடுகிறார்கள். Asterix எப்படி அவரை மீட்கிறான் என்பது தான் கதை. எனக்கு தெரிந்தவரையில் Obelix இல்லாமல் Asterix மட்டும் இத்தகைய மீட்புப்பணிகளில் ஈடுபடுவது இந்தக் கதையில் மட்டும் தான் என்று நினைக்கிறேன். மற்றபடி Obelix இல்லாமல் போனாலும் நிறைய ரோமானியர்கள் இருப்பதினால் நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லை.

1962 - Asterix and the Golden Sickle: Getafix "Mistletoe" என்ற ஒரு வகை இலைகள் கொண்டே தனது மந்திரக் கூழை காய்ச்சுவார். அந்த இலைகளை கொய்வதற்கு தங்கத்தால் ஆன அருவாள் ஒன்றை பயன்படுத்துவார். அந்த அருவாள் உடைந்து போக புதிய அருவாள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் நமது கதாநாயகர்கள். அந்நேரம் அருவாள் சந்தையில் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்படுகிறது. 'நமது நாயகர்கள் என்ன செய்தார்கள்?; ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது?' என்பது தான் கதை.

1963 - Asterix and the Goths: Goths என்பவர்கள் Gauls போலவே மற்றொரு பழங்குடியினர். அவர்கள் ரோமானியர்களை வெற்றி கொள்ள Getafix ஐ கடத்துகிறார்கள். நமது நாயகர்கள் எப்படி அவரை மீட்கிறார்கள் என்பது தான் கதை. கதையின் கரு முதற்கதையினை போலவே இருந்தாலும் நகைச்சுவை இதிலும் அதிகம். குறிப்பாக Getafix பேசுவதை Goths ன் தலைவருக்கு மொழிபெயர்ப்பாளன் மொழிபெயர்த்து சொல்லும் காட்சிகள் மிகவும் அருமை.

1964 - Asterix, the Gladiator: இதன் கருவும் முந்தைய கருவினை ஒத்தது தான். ஜூலியஸ் ஸீஸர் அவர்களுக்கு ஒரு Gaul ஐ பரிசாக அளித்து பதவி உயர்வு பெற நினைக்கிறான் ஒரு சிப்பாய். இருப்பதிலேயே ஆபத்து அதிகம் இல்லாத Gaul யார் என்று பார்த்து Cocofonix என்ற இசை கலைஞனை தேர்ந்தெடுத்து பரிசளிக்கிறான். ஸீஸரோ இவனது கர்ண கொடூரமான பாடலை கேட்டு இவனை சிங்கத்திற்கு இரையாக அளிக்குமாறு உத்தரவு கொடுக்கிறார். அதற்கான நாளும் முடிவு செய்யப்படுகின்றது. நமது நாயகர்கள் தாங்களே Gladiator களாக முன்வந்து Cocofonix ஐ மட்டும் அல்லாது அவனுடன் சிறையில் இருக்கும் மற்றவர்களையும் எவ்வாறு விடுவிக்கிறார்கள் என்பது தான் கதை.

1967 - Asterix, the Legionary: உள்நாட்டுக் குழப்பங்களினால் பெரிதும் பாதிக்கபட்ட நிலையில் ஸீஸர் மீது படையெடுக்கிறார்கள் மற்றொரு பிரிவு ரோமானியர்கள். இதனால் ஸீஸர் தனது படையினை அதிகரிக்க நேரிடுகிறது. கண்ணில் பட்டவர்களையெல்லாம் படையில் சேர்க்க உத்தரவு பிறப்பிக்கிறார். நமது நாயகர்கள் இருக்கும் கிராமத்தில் உள்ள Panacea என்ற பெண்ணின் வருங்கால கணவனும் அதில் அடக்கம். அவனை மீட்க ரோமானியர்களின் படையில் சேருகிறார்கள் நமது நாயகர்கள்.

நமது நாயகர்கள் சேர்ந்த படையின் பிரிவில் பல நாட்டு/இன மக்களும் இருப்பதும், அவர்கள் பேசுவதையெல்லாம் மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளன் முயலுவதும், இவர்கள் அனைவரையும் வைத்து சமாளிக்க முடியாமல் பிரிவின் தலைவன் அவஸ்தை படுவதும் உச்சகட்ட நகைச்சுவை.

1969 – Asterix and the Cauldron: கடும் பணப்பஞ்சத்தால் பீடிக்கப்படும் ரோமானியர்கள் தங்கள் ஆட்சியில் உள்ள Gauls அனைவரிடமும் அதிக வட்டி வசூலிக்க, அதிலிருந்து தப்பிக்க நமது நாயகர்கள் இருக்கும் கிராமத்தில் தனது பணத்தை பாதுகாப்பாக வைக்க முயலுகிறார் மற்றொரு கிராமத்தலைவர். பணத்தை பாதுகாக்கும் பொறுப்பு Asterix இடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆனாலும் கடுமையான காவலின் இடையில் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.

நமது நாயகனுக்கு பணத்தையும் இழந்த நம்பிக்கையையும் மீட்கும் பொறுப்பு வந்தடைகிறது.

1971 – The Mansions of the Gods: நமது நாயகர்கள் இருக்கும் கிராமத்தை வெற்றிகொள்ள அங்கிருந்து மக்கள் அனைவரையும் ரோமபுரிக்கு இடம் பெயர்ப்பதே சரியான தீர்வு என்று நினைக்கிறார் ஸீஸர். அதன் படி அவர்களை நாகரீகத்தின் ஆசை வலையில் விழவைக்க அவர்கள் கிராமத்தினை சுற்றி அழகிய குடியிருப்பு ஒன்று கட்டப்படுகிறது. அதில் சில ரோமானியர்களும் குடி வைக்கப்படுகின்றனர். ஸீஸர் எதிர்பார்த்த படியே சில குழப்பங்களும் நேர்கின்றன. அதனை நமது நாயகர்கள் எவ்வாறு தீர்க்கிறார்கள் என்பது தான் கதை.

இதன் பின்னர் வருபவை அனைத்தும் Uderzo எழுதிய கதைகள்.

1980 – Asterix and the Great Divide: நமது நாயகர்கள் இருக்கும் கிராமத்தின் நட்பு கிராமத்தின் தலைவர் இறக்க அடுத்த தலைவர் யார் என்பதில் குழப்பம் நேரிடுகிறது. தலைவராக இருவர் போட்டியிட கிராமம் இரண்டாக பிரிகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி இருவரையும் விரட்டிவிட்டு கிராமத்தின் ஒரே தலைவனாக ஒருவன் ரோமானியர்களுடன் சேர்ந்து திட்டமிட நமது நாயகர்கள் உதவிக்கு அழைக்கப்படுகிறார்கள். அட்டகாசமான நகைச்சுவை. நமது நாயகர்களிடம் மாட்டிக் கொண்டு ரோமானியர்கள் படும் பாடு வயிற்றை பதம் பார்க்கும்.

1981 – Asterix and the Black Gold: Getafix தனது மந்திரக் கூழுக்கு பயன்படுத்தும் Rock Oil என்ற ஒரு வகை Petrol தீர்ந்து போய்விட நமது நாயகர்களின் கிராமத்திற்கு அபத்து வருகிறது. ஒரு குடுவை மந்திரக் கூழ் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில், Mesopotamia வில் மட்டுமே கிடைக்கும் அந்த Rock Oil ஐ தேடி புறப்படுகிறார்கள் நமது நாயகர்கள்.

1983 – Asterix and Son: ஒரு அமைதியான அதி காலையில் Asterix இருக்கும் குடிசைக்கு வெளியில் இருக்கிறது ஒரு கை குழந்தை. குழந்தையின் தந்தை யாரென்று தெரியாமல் போக வேறு வழியின்றி அதனை வளர்க்கும் பொறுப்பு அவனிடமே வருகிறது. அதே நேரத்தில் ப்ரூடஸ் தலைமையில் ஒரு ரோமானியர்களின் படை நாடெங்கும் அந்தக் குழந்தையை தேடுகின்றது. குழந்தை நமது நாயகனிடம் வளர்வதை அறிந்து குழந்தையை கடத்த முயலுகிறார்கள்.

இந்தக் கதையும் அட்டகாசமான நகைச்சுவை கொண்டது. குறிப்பாக மாறுவேடத்தில் வரும் கடத்தல் காரர்களை குழந்தை மந்திரக் கூழை பாலென்று நினைத்து குடித்து விட்டு பந்தாடுவது உச்ச கட்ட நகைச்சுவை.

1987 – Asterix and the Magic Carpet: நமது கிராமத்தில் வசிக்கும் இசைக் கலைஞன் Cocofonix தனது இசைக் கருவியில் ஒரு புதிய தந்தியை சேர்க்க அதன் பலனாக அவன் பாடும் போதெல்லாம் மழை வருகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் கடுமையான பஞ்சம் வர; அதனை போக்க வேண்டுமென்றால் அரச குமாரியை பலியிட வேண்டும் என்று வஞ்சகமான ராஜகுரு கூற; வேறு வழி இல்லாமல் அதற்கான நாளும் முடிவு செய்யப்படுகின்றது.

ராஜகுருவின் சூழ்ச்சியை அறிந்து கொண்ட மற்றொரு குரு தனது மந்திர சக்தியால் பறக்கும் பாயில் நமது நாயகர்கள் இருக்கும் கிராமத்திற்கு அவர்கள் உதவி வேண்டி வருகிறார்.

நான் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் கண்ணை மூடிக் கொண்டு அனைவருக்கும் பரிந்துரைப்பேன் என்ற பொழுதும் புத்தகத்தின் விலை காரணமாக நண்பர்களை ஒன்றோ இரண்டோ நூலகத்திற்கு சென்று படித்து விட்டு வாங்க அறிவுரை கூறுகிறேன்.

Wednesday, June 18, 2008

தசாவதாரம் - கமலஹாசன் - ஒரு ரசிகனின் கடிதம்

மதிப்பிற்குறிய திரு. கமலஹாசன் அவர்களுக்கு,

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய இந்தப் பதிவை படித்தவர்கள் புறிந்து கொள்வார்கள் நான் உங்களின் தீவிர ரசிகன் என்று. "எதிலுமே 'தீவிரம்' என்பது இருக்கவே கூடாது." என்ற தங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு இருந்தாலும் நல்ல கலையை ரசிப்பதில் அது இருந்தால் தவறில்லை என்று நான் கருதுவதால் இந்த சொல்லாடலை பயன்படுத்துகிறேன். தங்களின் பல திரைப் படங்களை பார்த்து, ரசித்து, மகிழ்ந்திருக்கிறேன்.

திரைக்குள் உங்களின் அற்பணிப்பு, விடா முயற்சி, எதிலும் புதுமை செய்ய வேண்டும் என்ற தங்களின் அவா, நடிப்பை தாண்டிய தங்கள் திறமைகள் அனைத்தையும் பார்த்து வியந்ததை போலவே திரைக்கு வெளியே தங்களின் முகமூடி அணியாத நேர்மையையும் பார்த்து வியந்திருக்கிறேன்.

நேற்று தமிழ் சினிமாவின் "மைல் கல்" என்று தங்களால் கூறப்பட்ட தசாவதாரம் திரைப்படத்தை பார்த்து விட்டு இக்கடிதத்தை எழுதுகிறேன். முதல் மாதிரிக் காட்சிக்கு பின்னர் (Preview Show) திரைத் துறை வித்தகர்கள் பலரும் இத்திரைப்படத்தை "திரைக் காவியம்" என்று தங்களிடம் கூறி இருப்பார்கள். அது அவர்கள் கருத்தாகவே இருந்து விட்டு போகட்டும். ஆனால் எனக்கு இது ஒரு சாதாரண திரைப் படமாகவே தோன்றியது. ஒரு வேளை எனக்கு ரசிப்புத்தன்மை குறைந்து விட்டதோ என்னவோ?

மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன் போன்ற படங்களில் தங்களின் திரைக்கதை நேர்த்தியையும், ஹே ராம்! மற்றும் விருமாண்டியில் தங்களிடம் மறைந்து இருந்த மிக சிறந்த இயக்குனரையும், எத்தனையோ படங்களில் தங்கள் நடிப்பு திறமையையும், "யார் யார் சிவம்?" போன்ற எத்தனையோ பாடல்களில் தங்கள் வசீகரிக்கும் குரல் வளத்தையும் மற்றும் நடிகர்களுக்கு தேவையான நடனத்திறமை, உடலழகை பேணுதல் போன்ற பல வற்றையும் மீண்டும் மீண்டும் நிரூபித்து தாங்கள் ஒரு சகல கலா வல்லவர் என்பதை பறைசாற்றி இருக்கிறீர்கள்.

நடிகர் திலகத்தின் கலையுலக வாரிசாக தங்களை நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்கள் கூட ஏற்றுக் கொண்டு விட்டார்கள். நடிகர் திலகமே தங்களின் ரசிகர் என்பது இன்னும் முத்தாய்ப்பு.

நடிகர் திலகத்தின் கலையுலக வாரிசாக உங்களை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதை போல தங்களின் கலையுலக வாரிசு இன்னும் உருவாக வில்லை என்பது கவலை அளிக்கும் ஒரு விஷயம். சூர்யா, விக்ரம் போன்றவர்களுக்கு நடிப்பு திறமை அதிகமாக இருக்கின்றது. எதிலும் புதுமை செய்ய வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. ஆனால் நடனத்திறமை இல்லை. விஜய் அசத்தலாக நடனம் ஆடுகிறார். சுமாராக நடிக்கிறார். ஆனால் புதுமைகளை செய்ய அவர் விழைவதில்லை. அஜித் நடனம் மற்றும் வசன உச்சரிப்பு போன்ற எதிலும் சோபிக்கவில்லை. ஆனால் மக்களை கவரும் வசீகரம் அவரிடம் அதிகம் உள்ளது. ஆனால் இவர்கள் அனைவரிடத்திலும் இல்லாத ஒன்று நகைச்சுவை நடிப்பு. இரண்டரை மணிநேர முழு நீள நகைச்சுவை படம் ஒன்றை இவர்களால் கொடுத்து ஜெயிக்க முடியுமா? என்பதில் எனக்கு சந்தேகமே. மாறாக இவர்கள் அவ்வாறான முயற்சி மேற்கொண்டாலும் இவர்களுக்கு விவேக்/வடிவேலு/சந்தானம்/கருணாஸ் போன்றவர்கள் உதவி வேண்டும்.

மேலும் இவர்களில் விக்ரம் மற்றும் சூர்யா தவிர்த்து வேறு யாருமே தங்கள் நாற்காலிக்கு ஆசை படுவதாக தெரியவில்லை. இளைய தளபதி முதல் புரட்சித் தளபதி, சின்னத் தளபதி வரை அனைவரும் விரும்பும் இடம் "சூப்பர் ஸ்டார்" நாற்காலி மட்டுமே. நல்ல வேளை, யார் செய்த புண்ணியமோ? சூப்பர் ஸ்டார் அரசியலில் சோபிக்க வில்லை. ஒரு வேளை அவர் தமிழக முதல்வராக ஆகி இருந்தால் இவர்கள் "Little Chief Minister" என்றெல்லாம் தலைப்பு அட்டை (Title Card) போட்டு நம்மை சாகடித்திருப்பார்கள்.

ஆக இவர்களைப் போன்றவர்களுக்கு நடுவே, சுமார் கால் நூற்றாண்டு காலமாக தமிழ் திரையுலகை தங்களின் தோளில் சுமந்து கொண்டு இருந்து விட்டீர்கள்/இருக்கிறீர்கள். பல புதுமைகளை புகுத்தியுள்ளீர்கள். அதற்கெல்லாம் எத்தனையோ முறை எத்தனையோ பேர் தங்களை பாராட்டி இருப்பார்கள். என்னுடையதையும் இங்கே சேர்த்துக் கொள்ளுங்கள்.

இனி இக்கடிதத்தின் மைய கருத்திற்கு வருவோம்.

கலைஞானி அவர்களே!, தங்களின் எந்த ஒரு திறமையையும் யாருக்கும் நிரூபிக்க இனியும் அவசியமோ, தேவையோ இருப்பதாக நான் கருதவில்லை. அப்படி இருக்க எதற்கு இந்த தசாவதாரம்? இதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? இதன் மூலம் புதிதாக என்ன சாதித்ததாக நீங்கள் கருதுகிறீர்கள்?

சுமார் 100 கோடி பொருட்செலவில் இரண்டு ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய இந்த திரைப்படத்தை விட நல்ல பல திரைப் படங்களை தாங்கள் முன்னரே எங்களுக்கு தந்து இருக்கிறீர்கள். அப்படி இருக்க இந்த திரைபடத்திற்கான தேவை என்ன?

தங்களின் மிகப்பெரிய பலமே தங்களின் ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென்று ஒரு பிம்பம் இல்லாமல் இருப்பது தான். நீங்கள் அமெரிக்காவில் இருந்து 200 கோடி ரூபாயுடன் வரும் 25 வயது திருமணம் ஆகாத இளைஞனாக நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அழகற்ற 60 வயது ஏழை பிச்சைக்காரனாக நடித்தாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள். 200 கிலோ எடையுள்ள மாமிச மலைகளை தூக்கி எறியும் வீரனாக நடிக்க தேவை இல்லை. பேரூந்தில் ஜேப்படி அடித்து விட்டு மக்களிடம் அடிவாங்கும் திருடனாக நடிக்கலாம். மக்களுக்கு நல்லது செய்யும் புனித பிம்பமாக நடிக்க தேவை இல்லை. கொடூரமான வில்லனாக நடிக்கலாம். மரத்தை சுற்றி டூயட் பாட வேண்டிய தேவை இல்லை. பாடல்களே இல்லாத படத்தில் நடிக்கலாம்.

இப்படி எந்த விதமான பிம்பமும் இல்லாமல் இருந்த தங்களின் மீது 'புதுமை' என்ற பிம்பத்தை பத்திரிக்கைக்காரர்கள்/சக திரையுலகினர்/ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து ஏற்றி விட்டார்களோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதுமை புகுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.

அவ்வாறு நீங்கள் வலிந்து சேர்க்கும் புதுமை கதையை தூக்கி விழுங்கி விடுகிறது. கதைக்காகத்தான் திரைப்படமே அல்லாது புதுமைக்காக அல்ல என்பதை நான் தங்களுக்கு கூற தேவை இல்லை.

ஒரு ரசிகனாக உங்களிடம் எதிர் பார்ப்பது ஒன்று தான். வாழ்வில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களை வைத்து அதில் புதுமையான திரைக்கதை அமைத்து, அதில் எந்தவிதமான ஒப்பனை புதுமையோ இல்லை தொழில் நுட்ப புதுமையோ வலிந்து புகுத்தாமல் திரைப்படமாக எடுங்கள். Black, Cheeni Kum, Chak De India, Swades, Tare Zameen Par போன்ற படங்களை பார்க்கும் போது இதை தமிழில் கமல் நடித்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் எனக்குள் எழுவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. இவை எல்லாம் ஒப்பனையிலோ அல்லது தொழில் நுட்பத்திலோ எந்த வித புதுமைகளையும் வலிந்து புகுத்தாமல் கதையை நம்பி எடுத்து வெற்றி பெற்ற திரைப் படங்கள். இதனை போன்ற திரைப் படங்களை தான் நான் தங்களிடம் எதிர் பார்க்கிறேன். இதற்கு முன் எத்தனையோ நல்ல ஆங்கில படங்களை தழுவி நல்ல தமிழ் படங்களை கொடுத்த நீங்கள், இத்தகைய நல்ல ஹிந்தி படங்களை தழுவி ஏன் நல்ல படங்களை கொடுக்க முயற்சிக்க கூடாது?

தங்களின் மிகப் பெரிய வெற்றிப் படமாக வேட்டையாடு விளையாடு திரைப்படம் அமைய காரணம் என்ன தெரியுமா? எந்த விதமான கமலிஸமும் இல்லாமல் ஒரு இயக்குனரின் கதாநாயகனாக (Director's Hero) நீங்கள் அப்படித்தில் நடித்ததே.

முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ் திரையுலகில் இப்பொழுது பல அருமையான இயக்குனர்கள் ஜெயித்துக் கொண்டு இருக்கிறார்கள். கௌதம் மேனன், அமீர், பாலா, செல்வராகவன், ராதா மோகன், பாலாஜி சக்திவேல், வசந்த பாலன், விஷ்னு வர்தன், மிஷ்கின் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவர்களின் திரைபடங்களில் நீங்கள் எந்த விதமான கமலிஸமும் இல்லாமல் நடித்தால் அருமையாக இருக்கும்.

மாறாக புதுமை செய்தே ஆக வேண்டும் என்றால் "செங்கிப்பட்டி" அல்லது "எச்சிகாமலபட்டி" என்று தலைப்பிட்டு பேரரசு டைப் படங்களில் நீங்கள் நடிக்கலாம். ரசிகர்களுக்கு உங்களை அத்தகைய திரைப்படங்களில் பார்ப்பதும் புதுமையாகத்தான் இருக்கும்.

இவன்,
சத்யப்ரியன்

பின்குறிப்பு : படத்தினை பார்த்துவிட்டு இப்படி ஒரு கடிதத்தைதான் எழுதுவேன் என்று நினைத்திருந்தேன் படத்தை பார்க்கும் வரை. பார்த்த பிறகு ஒன்றே ஒன்று தான் சொல்லத் தோன்றுகிறது.

Hats-off Mr. Kamal Haasan!

Tuesday, June 17, 2008

Asterix & Obelix - Part 1

சென்ற ஆண்டு எனது பிறந்த நாளன்று மாலை அலுவல் முடிந்து வீடு திரும்பிய பொழுது எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நல்ல Asterix & Obelix கதைகள் Barnes & Nobles புத்தகக் கடையிலிருந்து வந்திருந்தன. சிறு வயதில் அன்னியிடம் கடன் வாங்கி அதனை படித்தது இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது. ஒரு பக்கத்தில் கல்கி, ரா.கி., சோ, ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் என்று படித்துக் கொண்டு இருந்தாலும் மற்றொரு பக்கத்தில் காமிக்ஸ் என்றும் சொல்ல முடியாமல் ஃபிக்க்ஷன் என்றும் சொல்ல முடியாமல் இருந்த இந்த கதைகள் என்னை படிக்கும் பொழுதே மிகவும் கவர்ந்தன.

எந்த புத்தகத்தையும் விலைக்கு வாங்கியே படிக்கும் பழக்கம் உடைய எனக்கு 200 ரூபாய் கொடுத்து நாற்பது பக்க படக்கதை ஒன்று வாங்கும் அளவிற்கெல்லாம் வசதி இல்லாததால் அந்த புத்தகத்தை விலைக்கு வாங்க முடியவில்லை.

வளர்ந்து வேலைக்கு சென்ற கால கட்டங்களில் அந்த புத்தகத்தை மீண்டும் வாங்க வேண்டும் என்ற ஆசை வந்த பொழுது 200 ரூபாய் என்பது 600 ரூபாயாக பெங்களூர் Landmark ல் உயர்ந்து விட்டது. 20 புத்தகங்களுக்கு 12000 ரூபாய் என்பது என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத தொகை. அந்த ஆசை நிறைவேறாமலேயே மனதின் மூலையில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அந்த புத்தகங்கள் முழூ தொகுப்பாக நண்பன் ஒருவன் மூலம் CD வடிவில் கிடைக்க நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கணினியில் அதனை படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன்.

அமெரிக்கா வந்த பின்னர் அதனை புத்தகமாக வாங்க வேண்டும் என்று பல நாட்கள் நினைத்து வாங்காமல் விட்டது பிறந்த நாளன்று மனைவி மூலம் கை கூடியது. குழந்தையின் குதூகலத்துடன் இரண்டே நாட்களில் அனைத்து புத்தகங்களையும் மீண்டும் படித்து முடித்தேன்.

இக்கதையினை பற்றிய ஒரு சிறு குறிப்பு.

இக்கதையின் ஆசிரியர் Goscinny. ஓவியங்கள் வரைந்தவர் Uderzo. 1961 ஆம் ஆண்டு தொடங்கி 2005 ஆம் ஆண்டு வரை வெளிவந்த 33 புத்தகங்களில் முதல் 24 புத்தகங்களை எழுதியவர் Goscinny. அவரின் மரணத்திற்கு பிறகு Uderzo அடுத்த 9 புத்தகங்களை எழுதியும் ஓவியங்களை வரைந்தும் வெளியிட்டார்.

1961 ஆம் ஆண்டு முதலில் வெளிவந்த "Asterix the Gaul" கதையில் அனைத்து பாத்திரங்களும் அறிமுகப்படுத்தப்படும். அதில் கதையின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை கதா பாத்திரங்கள் ஒரே மாதிரி வரையப்படாமல் சிறிது சிறிதாக மாறுவதை கவனிக்கலாம். கதையின் இறுதியில் Uderzo ஒரு முடிவான சட்டத்திற்குள் (Frame) பாத்திரங்களை கொண்டு சென்று அதன் பின்னர் அனைத்து கதைகளிலும் ஒரே மாதிரி வரைந்திருப்பார்.

அடுத்து வெளிவந்த கதைகளை படித்து விட்டு இந்த கதையை பின்னர் படிப்பவர்கள் இதனை எளிதாக கண்டுணரலாம்.

இனி இக்கதையின் முக்கிய கதா பாத்திரங்களுக்கு வரலாம்.

Asterix: Asterix ஒரு போர் வீரன். எல்லா கதையின் நாயகர்களைப் போலவே இவனும் மிகுந்த அறிவுக் கூர்மை உடையவன்.

Getafix: இவர் ஒரு Druid (மந்திர சக்தி வாய்ந்த மருத்துவர் என்று வைத்துக் கொள்ளலாம்). இவர் ஒரு விதமான மந்திரக் கூழை தயார் செய்வதில் வல்லவர். அதனை அருந்தும் அனைவருக்கும் சிறிது காலம் உடல் வலிமை பல மடங்கு அதிகரிக்கும்.

Obelix: இவன் Asterix ன் உயிர் நண்பன். இக்கதையின் இரண்டாம் நாயகன். அறிவுக் கூர்மை சற்று குறைச்சலாக கொண்டவன். Wild Boar எனப்படும் ஒரு வகை பன்றிகளை வேட்டையாடி புசிப்பதும், ரோமானியர்களை பந்தாடுவதும் இவன் விருப்பத்துடன் செய்யும் செயல்கள். Getafix காய்ச்சிய மந்திரக்கூழ் அடங்கிய பாத்திரத்தில் சிறு குழந்தையாக இருந்த பொழுது இவன் விழுந்து விட்டான். அதனால் அதன் சக்தி இவன் மீது நிரந்தரமாக பதிந்து விட்டது.

மற்றும் சிறிதும் பெரிதுமாக பல பாத்திரங்கள். இவர்கள் Gauls என்ற பழங்குடியினர். இவர்கள் அனைவரும் வசிப்பது ஒரு கிராமத்தில்.

Getafix ன் மந்திரக் கூழின் உதவியுடன் ரோமானிய படையெடுப்பை இந்த கிராமத்தினர் முறியடிக்கிறார்கள். அவர்களின் மந்திர சக்தியை அறிந்து கொண்ட ஜூலியஸ் ஸீஸர் போரின் மூலம் அவர்களை வெல்ல முடியாது என்று முடிவு செய்து பல சதி திட்டங்கள் செய்கிறார். Getafix ன் மந்திரக் கூழின் உதவியுடன் Asterix மற்றும் Obelix இருவரும் எவ்வாறு அந்த சதிகளை முறியடிக்கிறார்கள் என்பது தான் கதை. ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு சதி. ஒவ்வொரு கதைக் களம்.

கதாபாத்திரங்களின் தன்மையை நன்கு உணர்ந்து படிப்பவர்கள் வரிக்கு வரி நகைச்சுவை தூவப்பட்டு இருப்பதை படித்துணரலாம்.

அடுத்த பகுதியில் நான் படித்த மற்றும் நான் பரிந்துரை செய்யும் கதைகள்.

Monday, June 16, 2008

ராமாயணம் - திருவிளையாடல்

சன் தொலைக்காட்சியில் சமீபத்தில் இந்த இரு தொடர்களும் வெளி வருகின்றன. முதல் தொடர் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகிறது. பின்னது திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒளிபரப்பாகிறது.

ராமாயணம் தொடர் ஹிந்தியில் இருந்து தமிழில் மொழிமாற்றத்துடன் வெளிவருகின்றது. இவ்வாறு மொழி மாற்றம் செய்வதை முதலில் தொடங்கியது சென்னை தொலைக்காட்சிதான் என்று நினைவு. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த கால கட்டங்களில் ஜுனூன், கானூன், இம்திஹான், அலிப் லைலா, சந்திரகாந்தா போன்ற பல தொடர்களை தமிழில் மொழி மாற்றத்துடன் ஒளிபரப்பினார்கள். தமிழ் மொழிமாற்றம் படு காமெடியாக இருக்கும். "ஜுனூன் தமிழ்" என்றே அதனை பலர் குறிப்பிடுவது உண்டு.

இந்த ராமாயணம் தொடரும் அதற்கு விதிவிலக்கல்ல. எனக்கு சிறு வயதில் இருந்தே ராமாயணம், மஹாபாரதம் இருகதைகளில் மஹாபாரதம் கதையே மிகவும் பிடித்த கதை. ராமாயணம் என்பது என்னை பொருத்த வரை பெரிய போர். ராமர், கிருஷ்ணர் இருவரில் எனக்கு பிடித்தவர் கிருஷ்ணரே. கவனிக்கவும், நான் இங்கு ராமர் மற்றும் கிருஷ்ணர் ஆகிய இரு கதாபாத்திரங்களைத் தான் குறிப்பிடுகிறேன். மற்றபடி எனக்கு மச்ச, கூர்ம, வராஹ, வாமன, நரசிம்ம, பரசுராம, ராம, கிருஷ்ண, பலராம மற்றும் இனி வரப்போகும் கல்கி ஆகிய அனைத்து அவதாரங்களும் ஒன்றுதான்.

கிருஷ்ணர் என்னை பொருத்த வரை ஒரு "larger than life" கதாபாத்திரம். ஆனால் ராமர் அப்படி எதுவும் இல்லாமல் இருப்பதும் ராமாயணம் எனக்கு படு போராக தெரிவதற்கு காரணம். ராமாயணத்தில் எனக்கு மிகவும் பிடித்தது சுந்தர காண்டம் மட்டுமே. அதற்கு அனுமாரின் heroics ஒரு முக்கிய காரணம்.

இருந்தாலும் ராமாயணம், அலிப் லைலா, விக்ரம் ஔர் வேதாள் போன்ற வெற்றித் தொடர்களை தயாரித்த சாகர் நிறுவனத்தில் இருந்து வரும் புதிய ராமாயணம் என்பதால் 'என்னதான் புதியதாக செய்திருக்கிறார்கள் என்று பார்ப்போமே.' என்ற சிந்தனை என்னுள் தொடர் தொடங்குமுன் இருந்தது.

இது என்ன Don படத்தின் remake ஆ? கதையிலும் திரைக்கதையிலும் மாறுதல் செய்வதற்கு? நான் மாறுதல் என்று குறிப்பிட்டது Graphics மற்றும் பிரம்மாண்டம் இரண்டையும் தான். ஆனால் தொடர் தொடங்கி சில வாரங்களிலேயே படு மோசம் என்று தெரிந்து விட்டது. கதாபாத்திரங்களின் தேர்வும் படு மோசம்.

'ஞாயிறு காலை இந்த தொடரை பார்க்கலாமா? அல்லது தங்கமணியுடன் shopping செல்லலாமா?' என்று கேட்டால் எனது விடை இரண்டாவது தான். 'கல்யாணம் ஆகாதவர்கள் என்ன செய்யலாம்?' என்று கேட்டால் விரைவில் திருமணம் செய்துகொண்டு தங்கமணியுடன் shopping செல்லுங்கள் என்பேன்.

ஆனால் அதே நேரத்தில் சித்தி, செல்வி, அரசி என்று தொடர்ந்து மெகா போர்களை தயாரிக்கும் ராடான் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் திருவிளையாடல் தொடர் மீது எனது எதிர்பார்ப்புகள் மிகவும் குறைவாகவே இருந்தன. திருவிளையாடல் புராணத்தினை முழுவதும் நான் படித்தது இல்லை. நடிகர் திலகத்தின் திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட் செல்வர் போன்ற படங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகளே எனக்கு தெரிந்தவை.

தொடர் தொடங்கு முன் திருமதி. ராதிகா சரத்குமாரின் பேட்டியை குங்குமத்தில் படித்தேன். அதில் 64 திருவிளையாடல்களையும் தொகுத்து படம் பிடித்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டதால், 'அப்படி என்னதான் இருக்கிறது?' என்று அறிந்து கொள்வதற்காக அதிக எதிர்பார்ப்பில்லாமலேயே இந்தத் தொடரினை பார்க்க தொடங்கினேன்.

ஆனால் எனது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் விஞ்சிவிட்டது இந்தத் தொடர். குறிப்பாக தொடரின் பிரம்மாண்டம் மற்றும் Grapics அருமையாக இருக்கின்றன.

கதாபாத்திரங்களின் தேர்வு மிகவும் அருமை. அதிலும் நடிகர் திலகத்தையும், நடிகையர் திலகத்தையும் பார்த்த கண்களுக்கு வேறு நடிகர்/நடிகைகளை அதே கதாபாத்திரங்களாக பார்ப்பதில் எந்த நெருடலும் இல்லை. அதுவே அந்த நடிகர்களின் சிறப்பை காட்டுகிறது. "ஆடல் திருவிளையாடல்" என்ற தொடக்கப் பாடலும் திருமதி. சுதா ரகுனாதன் மற்றும் திரு. மாணிக்க வினாயகம் இருவரின் குரலில் இனிமையாக இருக்கிறது.

வசனங்கள் மிகவும் அருமையாக உள்ளன. ஆனால் சில கதாபாத்திரங்கள் தூய தமிழை உச்சரிக்கும் விதம் நகைச்சுவையாக இருக்கிறது. உச்சரிப்பு சரி இல்லாதவர்களுக்கு டப்பிங் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக அமையும். குறிப்பாக நாரதராக வரும் 'நவரசவேள்' திரு. ராதா ரவி அவர்களின் வசன உச்சரிப்பு ஏனோ பாத்திரத்துடன் ஒட்டவில்லை. நாரதர் என்ற பாத்திரத்தின் குரல் ஏற்ற இறக்கங்களுடன் சிறிது நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத கட்டமைப்பு. சரஸ்வதி சபதம் திரைப் படத்தில் நாரதராக நடிகர் திலகம் சக்கை போடு போட்டிருப்பார். அதிலும் முப்பெரும் தேவியர்களிடம் அவர் மாட்டிக் கொண்டு முழிக்கும் காட்சி அருமையிலும் அருமை. அதே காட்சி இந்தத் தொடரில் ஒட்டவே இல்லை. மற்றபடி குறிப்பிட்டு சொல்லக் கூடிய குறைகள் வேறு எதுவும் இத்தொடரில் இல்லை.

மொத்தத்தில் தமிழகத்தில் பக்தியை காசாக்கும் விளையாட்டில் வெற்றிபெற்றது ராடான் நிறுவனத்தினர் மட்டுமே.

நட்சத்திர வணக்கம்

வலையுலக நண்பர்களே!

வணக்கம்.

ஜூன் மாதம் 16 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி முடியும் இந்த வாரத்தின் தமிழ்மண நட்சத்திரமாக இருக்க என்னை தமிழ்மண நிர்வாகத்தினர் அன்புடன் அழைத்துள்ளார்கள். சென்ற ஆண்டே இந்த வாய்ப்பு எனக்கு வந்தபோது அலுவல் காரணமாக என்னால் அதனை ஏற்க முடியவில்லை.

இப்பொழுது சரியாக நான் பதிவெழுத தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடியும் நேரத்தில் மீண்டும் அன்புள்ளம் கொண்டு அவர்கள் வாய்ப்பு அளிக்கும் பொழுது அதனை உடனே உவப்புடன் ஏற்றுக் கொண்டேன்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் (சரியாக ஜனவரி மாதம் 2006 ஆம் ஆண்டு) நான் அமெரிக்கா வந்த பின்னரே தமிழில் வலைப்பதிவுகள் இருப்பதை அறிந்தேன்.

இணையத்தில் தமிழினை பார்த்த உடன் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் முதலில் படிக்கத் தொடங்கியது டுபுக்கு அவர்களின் பதிவினை மட்டுமே. அவரின் பள்ளி கல்லூரி நாட்களின் நினைவுகள் என்னை எனது பள்ளி கல்லூரி நாட்களுக்கு கொண்டு சென்றன. அவரின் எழுத்து நடை அமரர்.சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் எழுத்து நடையை நினைவுபடுத்தின. காவிரிக்கரையில் பிறந்த நான் தாமிரபரணி மீது காதல் கொண்டேன்.

டுபுக்கு அவர்களின் பதிவிலிருந்து அங்கே இங்கே என்று அலைந்து பின்னர் நான் வந்து சேர்ந்த இடம் தமிழ்மணம். சுமார் ஆறு மாத காலம் தமிழ்மணம் மூலமாக பல பதிவுகளை படித்துக் கொண்டிருந்துவிட்டு 'நாமும் ஏன் பதிய கூடாது?' என்ற கேள்வி என்னுள் எழ ஒரு சுபயோக சுபதினத்தில் உதயமானதுதான் எனது பதிவுகள். நினைவு தெரிந்த நாள் முதல் நண்பர்கள் புடை சூழ வாழ்ந்து பழகிய என்னை அமெரிக்கா தந்த தனிமையின் பிடியிலிருந்து காப்பாற்றியது தமிழ் வலையுலகே. எனது 30 ஆண்டுகால வாழ்வின் நினைவுகளை எனது பதிவுகள் நெடுகிலும் தூவி இருக்கிறேன். இல்லையென்றால் அந்த நினைவுகளின் சுமை என்னை அழுத்தி பிசைந்து பாடாய் படுத்தி இருக்கும்.

இந்த நேரத்தில் நான் பதிவெழுத முதற்காரணமாக இருந்த டுபுக்கு அவர்களுக்கும், எனது முதல் பதிவில் வந்து முதல் பின்னூட்டம் இட்டு வாழ்த்திய குமரன் அவர்களுக்கும், தொடர்ந்து எனது பதிவுகளை எல்லாம் படித்து வாழ்த்திய/வாழ்த்திக் கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முக்கியமாக தமிழ்மணம் மற்றும் தேன்கூடு நிர்வாகத்தினர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனது பதிவுகளின் இடப்பக்கத்தில் இருக்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை சுமார் 5200 க்கு சற்று அதிகம் காட்டுகிறது (எனது அலுவலக மற்றும் இல்ல IP முகவரிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாது). இது சென்ற ஆண்டு எனது "முதலாம் ஆண்டு நிறைவு" பதிவிற்கு முன்னர் நான் சேர்த்தது. அந்தக் கணக்கின் படி ஒரு பதிவினை சுமார் 200 பேர் படிக்கின்றனர். இந்த எண்ணிக்கை எனக்கு மிகவும் அதிகம். இது இந்த இரண்டு திரட்டிகளினால் மட்டுமே சாத்தியமான ஒன்று.

ஒரு மாதம் முன்னதாகவே தமிழ்மண நிர்வாகத்தினர் எனக்கு இந்த நட்சத்திர வாரத்தினை பற்றி தெரியப்படுத்தி இருந்தாலும், எனது வழக்கமான சோம்பல் காரணமாக பதிவுகளை எழுதி வைத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்துவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சிறு குற்றங்குறைகள் இருப்பினும் அதனை பொருட்படுத்தாது என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில் எனது நட்சத்திர வாரத்தினை இன்றுடன் தொடங்குகிறேன்.

இவன்,
சத்யப்ரியன்.

Tuesday, May 20, 2008

தேவை எச்சரிக்கை!

பதிவுலக நண்பர்களே!

Orkut இணையதளத்தில் சோனியா காந்திக்கு எதிரான ஒரு கருத்துக் களத்தில் கிருஷ்ணகுமார் என்ற 22 வயது இளைஞர் அவரை பற்றி தவறான கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். அவர் குர்கானில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி செய்பவர்.

அதனை கண்ட பூனா காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் அவரது IP கண்டுபிடிக்கப்பட்டு அவர் இன்று கைது செய்யப்பட்டார். அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் 5 ஆண்டுகள் வரை சிறைவாசம் இருக்க நேரிடும்.

அவர் சோனியா காந்தியினை பற்றி என்ன எழுதினார் என்பது தெரியாத நிலையில் அவரது கைது சரியா அல்லது தவறா என்று கூற இயலவில்லை. ஆனாலும் இணையம் தரும் கட்டற்ற சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்கு இதனை விட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு வேறு இல்லை.

வலைப்பதிவு என்பது தனியொரு மனிதனின் நாட்குறிப்பு என்று இருந்த காலம் மாறிவிட்டது. அச்சு ஊடகங்கள் வலைப்பதிவுகளை கூர்ந்து கவனிக்க தொடங்கிவிட்டன. இவ்வாறு அச்சு ஊடகத்திற்கு மாற்றாக இணைய ஊடகம் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் வலைபதிவாளர்கள் பலரும் பல செய்திகளுக்கு எதிர்வினை ஆற்றுகிறோம். Orkut தளத்திலும் பல குழுமத்தில் இருக்கிறோம். நமது கருத்துக்களையும் பல இடங்களில் பதிவு செய்கிறோம். இந்த நிலையில் இணையத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல் பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுவதே நல்லது.

ஆகவே நண்பர்களே இணையத்தில் எழுதும் பொழுது இன்னும் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுவோம்.

மேலும் தகவல்களுக்கு இங்கே செல்லுங்கள்.

Thursday, May 08, 2008

அன்னையர் தினத்தில் தந்தையின் நினைவு



    "அப்பொழுது தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசுப் பேரூந்தில் பயணம் செய்ய இலவச கடவுச்சீட்டு அளித்தது. அதனை பெறுவதற்கு நான் விண்ணப்பத்தில் எனது தந்தையின் கையொப்பத்தை பெற முயன்றேன். அதற்கு எனது தந்தை 'அது ஏழை மாணவர்களுக்கு அரசு அளிக்கும் சலுகை. பேரூந்து பயணத்திற்கு பணம் செலவு செய்ய முடியாத நிலையில் நாம் இல்லை. நமக்கு அது வேண்டாம்.' என்று கூறி விட்டார். அதனால் தொடர்ந்து தனியார் பேரூந்திலேயே பயணிக்க தொடங்கினேன்."


இது கடந்த ஆண்டு எனது பேரூந்துப் பயணங்களின் சில நினைவுகள் பதிவில் நான் எழுதியது. படித்துவிட்டு பின்னூட்டமிட்ட சீமாச்சு அவர் சிறந்த தந்தை என்று குறிப்பிட்டார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்த பின்னூட்டங்களில் அது முதன்மையானது.

இந்த நேரத்தில் அவரை பற்றிய ஒரு சிறு முன்னுரை அவசியம் என்று கருதுகிறேன். எனது தந்தை சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தவர். சிறு வயது என்றால் பிறந்த 40 நாட்களில். அந்த இளம் வயதில் தனது கணவனை இழந்த எனது பாட்டி, தனது கைப்பிள்ளையை (எனது தந்தையை) தனது சகோதரியின் வீட்டில் விட்டு விட்டு தான் தொடராமல் விட்ட கல்வியினை தொடர சென்று படித்து முடித்து திருச்சியில் முதன்மை கல்வி நிறுவனங்களுள் ஒன்றான E.R. தொடக்க பள்ளியில் (இப்பொழுது அந்த பள்ளி இல்லை. மேல்நிலை பள்ளி மட்டுமே இருக்கிறது.) ஆசிரியையாக சேர்ந்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக ஓய்வு பெற்றவர். ஆனால் அவர் தனது கல்வியை முடிக்கும் வரை எனது தந்தை, தாயும் இல்லாமல் தந்தையும் இல்லாமல் வேறொருவர் வீட்டில் வேலைக்காரனை போல வளர்ந்து வந்தார். நல்ல உணவு கிடையாது, உடைகள் கிடையாது. உணவும் அந்த வீட்டில் அனைவரும் உண்ட உடன் மீதம் உள்ளதே உண்ண வேண்டும். அந்த வீட்டில் உள்ள குழந்தைகள் அனைவரும் குதிரை வண்டியில் பள்ளிக்கு செல்ல இவர் சுமார் மூன்று நான்கு கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே செல்வார். ஒரு முறை இவர் நடந்து வருவதை பார்த்து பொறுக்க முடியாமல் இவரை வண்டியில் ஏற்றிக் கொண்டு வந்த ஜட்கா வண்டிக்காரருக்கு கிடைத்தது பணி நீக்கம்.

என்ன திரைப்படத்தில் பார்ப்பது போல இருக்கிறதா? அது தான் உண்மை.

சிறு வயதில் பாசத்திற்காக அவர் ஏங்கியதினாலோ என்னவோ எங்களை அவர் எதற்கும் ஏங்க வைத்ததே இல்லை. போதும் போதும் என்ற அளவிற்கு அன்பையும் பாசத்தையும் பொழிந்து வளர்த்தார். ஆனால் நான் எனக்குள் இருக்கும் எனது தந்தை பாசத்தை உணர்ந்தது கல்லூரியில் படிக்கும் பொழுது மட்டுமே. அதுவரை நான் ஒரு "அம்மா செல்லம்" தான். எனக்கு எது வேண்டும் என்றாலும் அது என் அம்மாவின் மூலமே அப்பாவிற்கு கோரிக்கையாக வைக்கப்படும்.

என்னை சிறு வயதில் "Primary Complex" எனப்படும் ஒரு வித நோய் தாக்கியது. சிறிது அழுதாலும் கூட எனக்கு சளி, இருமல், ஜுரம் என்று தொடர்ச்சியாக பாதிப்பு வந்து விடும். பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும். அதனாலேயே கண்டிப்பிற்கு பெயர் போன எனது தந்தை என்னை அடித்ததோ கடிந்து கொண்டதோ மிகவும் குறைவு. மற்றபடி எனது அண்ணன்கள் அவரிடம் வாங்கிய அடிகளை நான் பதிவிட்டால் அவரை "குழந்தைகள் வதை சட்டத்தில்" கைது செய்து விடுவார்கள். அவ்வளவு கண்டிப்பானவர்.

அதனாலேயே அந்த வயதில் எனக்கு எனது தந்தையை விட எனது தாயாரிடமே ஒட்டுதல் அதிகம் இருந்தது. சிறிது வளர்ந்து உலக விஷயங்கள் புறியத்தொடங்கிய கால கட்டங்களில் தான் அவரது கண்டிப்புகள், திட்டுகள், அடிகள் அனைத்தும் "தேன் தடவப்பட்ட மாத்திரைகள்" என்று புறிந்தது.

அது நான் எட்டாம் வகுப்பிலோ அல்லது ஒன்பதாம் வகுப்பிலோ படித்துக் கொண்டிருந்த நேரம். ஒரு முறை எனது பாடப் புத்தகங்களுக்கு நடுவில் "சரோஜா தேவி" கதை புத்தகம் ஒன்றை அவர் பார்த்து விட்டார். பார்த்து விட்டு என்னை கடிந்து கொள்ளவில்லை, திட்டவில்லை. புத்தகத்தை கூட இருந்த இடத்திலேயே வைத்து விட்டார்.

மறுநாள் எனது தாயார் என்னிடம் வந்து படிக்கும் வயதில் மனதை அலையவிடாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துமாறு மட்டும் அறிவுரை கூறினார். அதன் பிறகு நான் தனி அறைகளில் இருக்கும் நேரங்களில் கதவினை தட்டி விட்டே உள்ளே நுழையும் பழக்கத்தை மேற்கொண்டார். அதன் பிறகும் அவர் என்னிடம் பழகுவதில் எந்த மாற்றமும் காட்டியதில்லை என்றாலும் சிறிது நாட்களுக்கு நான் அவரை பார்க்கவே கூசினேன்.

வங்கியில் வேலை காரணமாக ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் வரும் இட மாற்றத்தை அவர் எங்கள் மீது சுமத்தியதே இல்லை. எங்கள் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர் மட்டுமே செல்வார். வார இறுதிகளில் மட்டுமே வருவார். சிறிது காலம் தொடர்ந்த இது பின்னர் அவருக்கு திருச்சிக்கு இடமாற்றம் கிடைத்த உடன் முடிவிற்கு வந்தது.

அவரிடம் என்னை மிகவும் கவர்ந்தது அவரது நேரம் தவறாமை. எனது மாமா விளையாட்டாக இவ்வாறு கூறுவார், "உங்க அப்பா போய் தான்டா ரயில ஷெட்டிலிருந்து ப்ளாட்பார்ம்க்கு கூட்டிக்கிட்டு வரனும்." என்று. மேலும் உறவினர் வீட்டு விழாக்களுக்கு முதலில் செல்வது நாங்களாகத்தான் இருக்கும். ஒரு வேளை எங்களால் செல்ல முடியவில்லை என்றால் முதலில் அவர்களுக்கு கிடைப்பது எங்களின் வாழ்த்து அட்டையாகத்தான் இருக்கும்.

அதே போன்று அவரது ஒழுக்கமும் குறிப்பிட்டு சொல்லக் கூடியது. எந்த பொருளும் வைத்த இடத்தில் இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பார். 1974 இல் அவர் கட்டிய வீட்டு வரி ரசீது இப்பொழுதும் அவரிடம் இருக்கும். அவர் அப்படி இருப்பது போலவே நாங்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். எவ்வளவு விளையாடினாலும், எங்கு சென்றாலும் மாலை விளக்கு வைக்கும் நேரத்தில் வீட்டிற்கு வந்தாக வேண்டும். இல்லையென்றால் இரவு உணவு கிடையாது.

அதே போன்று அவர் அடிக்கடி சொல்லும் கருத்து ஒன்று, "நமது பணம் எவ்வளவு வேண்டுமானாலும் அடுத்தவரிடம் இருக்கலாம். ஆனால் அடுத்தவர் பணம் ஒரு ரூபாய் கூட நம்மிடம் இருக்க கூடாது." என்பது. ஒரு முறை கல்லூரித் தேர்வுக் கட்டணம் (சுமார் 500 ரூபாய் என்று நினைவு) கட்ட ஏதோ நல்ல நாள் என்று பேராசிரியர் ஒருவர் என்னை கட்டாயப்படுத்தி அவரே பணம் கொடுத்து ரசீதும் பெற்றுக் கொடுத்தார். அதனை அறிந்த எனது தந்தை அன்று இரவே அவரது வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி அளிக்கும் படி என்னை அனுப்பிவைத்தார். ஒரு ரூபாய் கூட தேவை இல்லாமல் கடன் வாங்குவது அவருக்கு பிடிக்கவே பிடிக்காது.

மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர். தினமும் தவறாமல் வழிபாடு செய்பவர். அவரை திருநீறு, சந்தனம், குங்குமம் இல்லாமல் பார்க்கவே முடியாது. மாலையில் அலுவல் முடிந்து வரும் பொழுதும் அவை அவர் நெற்றியில் அழியாமல் இருக்கும். ஆனாலும் எங்கள் மீது அவர் இறை நம்பிக்கையை திணித்ததே இல்லை.

படிப்பை பொருத்த வரை எனது அண்ணன்கள் இருவரும் படு சுட்டி. எனது பெரிய அண்ணன் பன்னிரண்டாம் வகுப்பில் மாநிலத்தில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றான். ஆனால் நானோ பன்னிரண்டாம் வகுப்பில் ஊர் சுற்றி குறைந்த மதிப்பெண்களே பெற்றேன். அந்த நேரத்தில் சில உறவினர்களும் நண்பர்களும் என்னை எனது சகோதரர்களுடன் ஒப்பிட்டு என்னை வருத்தப்படுத்திய போதும் அவர் ஒரு நாளும் என்னை யாரிடமும் விட்டுக் கொடுத்ததே இல்லை. "அவன் கடுமையாக உழைத்தான். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் மதிப்பெண்களாக கிடைக்கவில்லையென்றால் வேறு விதத்தில் கிடைக்கும்." என்று தான் அவர்களிடம் அவர் கூறுவார்.

இப்பொழுதும் இந்த வயதிலும் எனக்கு ஏதாவது வேண்டும் என்று கூறினால் ஓடிப் போய் செய்கிறார். ஆனால் அவருக்கு நான் ஒன்றுமே செய்தது கிடையாது. அவரை நான் பார்த்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. நேற்று கணிணியில் பழைய புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்த போது எனது தந்தையின் புகைப்படத்தையும் பார்க்க நேர்ந்தது. அது சென்ற ஆண்டு எனது மனைவி இந்தியா சென்ற பொழுது எடுத்தது.

நான் முன்னர் பார்த்ததை விட இப்பொழுது தலையில் நரை கூடி இருக்கிறது. முகத்தில் சுருக்கங்களும் அப்படியே. வயதாகி விட்டது. இந்த ஓராண்டு காலத்தில் அவை இன்னும் அதிகமாகியிருக்கக் கூடும். அவரது மடியில் தலை சாய்த்து படுக்க மனம் விழைகிறது.

பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் ஜெயராம் கூறுவது மனதில் எதிரொலிக்கிறது, "எந்த விதமான வலுவான காரணிகளும் இல்லாமல் உறவுகளை எதற்கு உடைக்க வேண்டும்?" இந்தக் கேள்வி என்னை பலவாறு சிந்திக்க வைக்கிறது. "எனது வசதி; எனது வாழ்க்கை." என்ற சுயநல சிந்தனையிலிருந்து நான் என்று வெளி வருவேன் என்பது தெரியவில்லை.

"அப்பா! எங்கிருந்து வந்தது எனக்கு இந்த சுயநலம்? உங்களிடமிருந்தோ இல்லை அம்மாவிடமிருந்தோ வந்திருக்க வாய்ப்பில்லையே. யார் கொடுத்த சீதனம் இது?"

கேள்வி மட்டுமே மிஞ்சி இருக்கிறது. பதில் இல்லை.

Wednesday, April 23, 2008

ரங்க பவனம் - IX

நாட்கள் மாதங்களாகி, வருடங்களாகி உருண்டோடின. வாழ்க்கை அனைவரையும் பந்தாடி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மூலைக்கு உருட்டி தள்ளியது. அவர்களுக்கிடையில் இருந்த தொடர்புகள் மெதுவாக இற்று அறுந்து விலகிவிட்டன. அதற்கு பெரிதும் வித்திட்டவன் பார்கவ். கல்கட்டா பயணத்திற்கு பின்னர் அனைவரின் நட்பையும் படிப்படியாக துண்டித்துக் கொண்டான். "ரங்க பவனம் எல்லாம் இறங்கு.", என்ற கண்டக்டரின் குரலில் பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்தான் ராமனாதன். இதோ இன்று தீபாவின் திருமணம். தீபாவிடமிருந்து சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் வந்த அவளது திருமண அழைப்பிதழை பார்த்ததும் அவசியம் தான் அவளது திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தான். பழைய நினைவுகள் அவனுக்கு வலியையும் மகிழ்ச்சியையும் கலந்து அளித்தன. கண்டக்டர் அவனிடம் வந்து, "தம்பி இறங்குங்க. Stop வந்துருச்சு." என்றார். அது அவனது தாத்தாவின் பேரூந்து தான்.

மெதுவாக கீழே இறங்கியவன் அருகில் உள்ள சிருங்கேரி திருமண மண்டபத்தை நோக்கி நடக்க தொடங்கினான். மண்டபத்தில் நிழைந்த உடனே அவனை வரவேற்றது சௌம்யாவின் குரல் தான். "ஏய்! ராம்....." என்று கத்திக் கொண்டே ஓடி வந்து அனைத்துக் கொண்டாள். அவளது குரலில் உண்மையான உற்சாகம் வெளிப்பட்டது.

பின்னர் அவளே "வா டா வா. இப்போ தான் வர முடிஞ்சுதா?" என்றாள்.

"இல்லம்மா, கொஞ்சம் வேல இருந்துச்சு. அதான்."

"நீ எப்படி இருக்க?"

"ம். நல்லா இருக்கேன். Manager ஆயிட்டேன்."

"Wow! Congrats."

"நீ?"

"ம். Great. Super ஆ இருக்கேன்."

இந்த பதிலில் இருந்து சௌம்யா பார்கவை முழுவதுமாக மறந்து விட்டிருந்தாள் என்பது தெளிவானது. இருந்தாலும் 'அவனை பற்றிய பேச்சை தொடங்கலாமா?' என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள், "Bharghav எப்படி இருக்கான்? இன்னும் contacts இருக்கா?" என்றாள்.

"சுத்தமா இல்லை. இப்போ எங்க இருக்கான்னு கூட எனக்கு தெரியாது. நாலஞ்சு mail அனுப்பினேன். ஒன்னுக்கும் reply வரலே. இப்போ கூட இந்த கல்யாணம் பத்தி mail அனுப்பினேன். No response."

"சரி நீ போய் tiffin முடிச்சுட்டு கீழ வா. நாம அப்புறம் detailed ஆ பேசலாம்."

அன்று மாலை திருமணமெல்லாம் முடிந்து நண்பர்கள் அனைவரும் சென்ற உடன், சௌம்யா ராமனாதனின் அருகில் வந்து மலைக் கோட்டை தாயுமானவர் சந்நிதிக்கு செல்லலாம் வா என்று அழைத்தாள். சரி என்று கிளம்பிய அவன், "உன் husband வரலயா?" என்று யதார்த்தமாக கேட்டான்.

அதற்கு அவள் போகிற போக்கில், "அதுக்கு மொதல்ல கல்யாணம் ஆகனும்." என்று சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு அகன்றாள்.

அதிர்ச்சி அடைந்த அவன், "என்ன? இன்னும் உனக்கு கல்யாணம் ஆகலயா?" என்றான்.

"அத நான் இப்போ தமிழ்ல தானே சொன்னேன்?". அவளிடம் புன்னகை சிறிதும் குறையாமல் இருந்தது. கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்த பின்னர் ஒரு ஓரமாக அமர்ந்து மெதுவாக பேச்சை தொடங்கினான்.

"ஏன்?"

"இது என்ன கேள்வி? நான் Bharghav வ எவ்வளவு நேசிச்சேன்னு உனக்கு தெரியாதா?"

"அதான் முடிஞ்சு போச்சே?"

"இல்ல அது முடியல. அதோட ரணம் இன்னும் என் மனசுலயே இருக்கு.என்ன அவ்வளவு நேசிச்ச Bharghav வாலயே என்ன, என்னோட career ambition அ சரியா புரிஞ்சுக்க முடியல. இப்போ வேறொருத்தனோட இன்னொரு relationship start பண்ணி அதுவும் break-up ஆச்சுன்னா, என்னால தாங்கிக்கவே முடியாது. நான் கண்டிப்பா இன்னும் அவனையே நினைச்சுகிட்டு இல்ல. ஆனா அதே நேரத்துல இவ்வளவு easy யா ஒருத்தன் கருவேப்பிலை மாதிரி தூக்கி எறிஞ்சத நினைச்சா என் மேலயே எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வருது."

"ஆனா! நீ கல்கட்டா போனதுலேர்ந்து ரொம்ப மாறிட்டயே. அதானே அவன உன் கிட்டேந்து பிரிச்சுது."

"உண்மைதான், ஆனா அதுலே என்னுடைய தப்பு என்ன? பொறந்துலேந்து கையேந்தி பவன்ல சாப்புட்டு வளர்ந்தவன் ரெண்டு வருஷம் அமெரிக்கா போன உடனே மினரல் வாட்டர் கேக்கறான். Tissue இல்லேன்னா toilet போக மாட்டேங்கறான். அது மாதிரி தான் இதுவும். மனுஷன் பிறந்ததுலேர்ந்து சாகறவரைக்கும் ஒரே மாதிரியா இருக்க முடியும்? மாற்றம் ஒன்னு தானே மாற்றமில்லாதது. வாழ்க்கையில அனுபவம் கூடக் கூட மனுஷன் மாறிகிட்டே தான் இருப்பான். அதை கூட அவனால புறிஞ்சுக்க முடியலயே. என்னுடைய Career க்காக நான் நிறைய மாறி இருக்கலாம். ஆனா நான் அவன நேசிச்சது உண்மை. எனக்கு வருத்தமே அவன் இதையெல்லாம் explain பண்ணறதுக்கு கூட எனக்கு ஒரு opportunity குடுக்காம abrupt ஆ என்ன cut பண்ணினது தான். அந்த trip க்கு அப்புறம் என்னோட வேலையெல்லாம் விட்டுட்டு ஒரு நாளைக்கு 10 தடவ அவனுக்கு phone பண்ண try பண்ணி இருப்பேன். ஒரு ஆயிரம் mail அனுப்பி இருப்பேன். ஒன்னுக்கும் response இல்ல. ஏதோ பிடிக்காத செருப்ப தூக்கி எறியறது மாதிரி தூக்கி எறிஞ்சுட்டான். I don't think I deserved this kind of a treatment."

"சரி, இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இப்படி இருக்க போறே?"

"எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள்."

"உங்க வீட்டுல ஒன்னும் சொல்லலயா? Deepi எப்படி கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா?"

"இதையெல்லாம் சொல்லி அம்மா, அப்பா, Deepi மூனு பேரையும் convince பண்ணறதுக்கு நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும். பாவம் என்னால தான் அவங்க ரொம்ப கஷ்டப் படறாங்க. நான் கேட்டதெல்லாம் வாங்கி குடுத்த அவங்களுக்கு என்னால இந்த குறைந்த பட்ச சந்தோஷத்த கூட குடுக்க முடியல."

"அதுக்காக இப்படியே இருந்துட முடியுமா?"

"எனக்கு இப்போ life லே ஒரே ஒரு பிடிப்பு தான். அது தான் என்னோட career. நல்ல responsible job. நிறைய friends. வேற ஒன்னுமே இல்ல. ஆனா நான் சந்தோஷமா தான் இருக்கேன். எப்போவாவது உன்ன மாதிரி யாரையாவது பாக்கும் போது பழைய நியாபகம் எல்லாம் வரும். Deepi இத பத்தி ஒன்னும் பேசவே மாட்டா. No one understands me better than her."

அன்று இரவு வீட்டிற்கு வந்த ராமனாதனுக்கு தூக்கம் வரவில்லை. ஏனோ காலையில் இருந்த உற்சாகம் இரவில் இல்லை. அதற்கு காரணம் சௌம்யா தான் என்பதும் தெளிவாகவே அவனுக்கு புறிந்தது.

சரி மறு நாள் சனிக்கிழமையன்று முதல் வேலையாக பார்கவின் வீட்டிற்கு சென்று அவனது தொலைபேசி எண் வாங்கி அவனுடன் உரையாடலாம் என்று முடிவெடுத்தான். அடுத்த நாள் அதி காலையிலேயே எழுந்து பார்கவின் வீட்டிற்கு சென்றான். அவனது வீட்டில் யாரும் இல்லை. அவனது பெற்றோர்கள் சென்ற வாரம் தான் அமெரிக்கா சென்று இருப்பதாகவும், அவனது தந்தை இன்னும் மூன்று வாரங்களில் வருவதாகவும், தாயார் வருவதற்கு மூன்று நான்கு மாதங்கள் ஆகும் என்றும் பக்கத்து வீட்டில் இருப்பவர் குறிப்பிட்டார். அவனுக்கு சிறிது ஏமாற்றமாக இருந்தாலும், தொடர்ந்து அவருடன் சிறிது நேரம் உரையாடி அமெரிக்க தொலை பேசி எண்ணை வாங்க முயன்றான்.

அவனை வாசலிலேயே நிற்க வைத்து விட்டு உள்ளே தொலைப் பேசி எண்ணை எடுத்து வர சென்றார் அவர். சிறிது நேர காத்திருப்பிற்கு பின்னர் வெளி வந்த அவர் கையில் இருந்த சீட்டில் அவனது தொலைப்பேசி எண் இருந்தது. சீட்டை பெற்றுக் கொண்டு அவருக்கு நன்றி கூறி விடை பெற்றான்.

அன்று இரவு அவனை தொலைபேசியில் அழைத்தான். மறு முனையில் மணியடித்தது. "Hello!" என்ற பார்கவின் குரலுக்கு மறு மொழியாக, "மச்சான்! நான் Ram பேசறேன்டா." என்று தொடங்கி ஒரு அரை மணி நேர மகிழ்ச்சியான உரையாடலுக்கு பின்னர் 'சௌம்யாவை பற்றிய பேச்சை தொடங்கலாமா?' என்று எண்ணிய ராமனாதனுக்கு, அவன் அன்று காலை தொலைப் பேசி எண்ணை பெற்றுக் கொண்டு புறப்பட தொடங்கும் போது, 'பேசும் போது மறக்காம, Bharghav, Bharghav சம்சாரம் ரெண்டு பேரையும் நாங்க விசாரிச்சோம்னு சொல்லுங்க தம்பி.' என்று அந்த பக்கத்து வீட்டுக்காரர் கூறியது நினைவிற்கு வரவே ஒன்றும் பேசாமல் அனைவரையும் பொதுவாக விசாரித்து விட்டு தொலை பேசியை துண்டித்தான்.

அவனது கண்களில் அவனையும் அறியாமல் இரு துளி முத்துக்கள் பூத்தன.

- முற்றும்.