Saturday, August 14, 2010


இன்று முதல் நான் அப்பா!

நண்பர்களே!

இன்று முதல் இந்திய சுதந்திர தினத்தை நான் கொண்டாடுகிறேனோ இல்லையோ, பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப் போகிறேன். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அழைத்து, கேக் வெட்டி, விருந்து வைத்து சிறப்பாக கொண்டாட முடிவு செய்து விட்டேன்.

காரணம் ஒன்றும் பெரிதாக இல்லை, இன்று நான் அப்பாவாகி விட்டேன். சுமார் இருபத்திரண்டு மணிநேர பிரசவ போராட்டத்திற்கு பின்னர் அழகான குழந்தையாக ப்ரணவ் பிறந்து விட்டான் என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன்.

எனது மனைவியுடன் பிரசவ அறையில் இருந்த அந்த இருபத்திரண்டு மணித்துளிகளும் என் வாழ்வில் மறக்க முடியாது. பிரசவம் என்றால் என்ன? தாய்மை என்றால் என்ன? என்பதை கடந்த பத்து மாதங்களில் அறிந்து கொண்டேன்.

குழந்தையை முதலில் பார்த்து வருடிய அந்த நொடியில் நான் உணர்ந்ததை வார்த்தையில் விவரிக்க இயலாது.

எனக்கு தகப்பன் என்ற அந்தஸ்தையும், பூப்போன்ற அழகான புதிய உறவையும் அளித்த எனது மனைவிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

இவன்,
சத்யப்ரியன்

0 Comments: