Sunday, April 03, 2011


World Champions

மார்ச் 23, 2003 ஆம் ஆண்டு என்னால் மறக்க முடியாத ஒரு நாள். இந்தியா ஆஸ்திரேலியாவுடன் நடந்த கிரிக்கெட் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் மரண அடி வாங்கி தோற்றது. சச்சின் அதற்கு பின்னர் இரு உலக கோப்பைகள் விளையாடுவார் என்று அப்பொழுது நான் நினைக்க வில்லை. அதுவே சச்சின் உலகக் கோப்பையை கையில் எடுக்க கடைசி வாய்ப்பாகவே நான் கருதினேன்.

எனது எண்ணங்களை பொய்யாக்கி நேற்று இந்தியா மற்றும் ஸ்ரீ லங்கா இடையில் நடந்த உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா வென்று உலக கோப்பையை வென்று விட்டது. சச்சினை மற்ற வீரர்கள் தோளில் சுமந்து கவுரவித்தது மனதிற்கு நிறைவாக இருந்தது.

கேப்டன் தோணிக்கும், மற்ற வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.





Photos © Associated Press

0 Comments: