Wednesday, November 28, 2012


சில்லறை வர்த்தகம் - ஜாக்கி சேகருக்கு பதில்

நம்ம பதிவுலக சூப்பர் ஸ்டார் ஜாக்கி சேகர் சில்லறை வர்த்தகம் குறித்து பதிவொன்றை எழுதியுள்ளார். ஒரு வாடிக்கையாளரின் பார்வையில் இருக்கும் அதனுடன் வரிக்கு வரி உடன்படுகிறேன். ஆனால் அதே நேரத்தில், இம்மாதிரியான முதலீடுகள் வாடிக்கயாளரை மட்டும் பாதிப்பதில்லை. அதனால் பல தரப்பில் இருந்து இதை நாம் பார்க்க கடமைபட்டுள்ளோம்.

பதிவினை தொடர்ந்து படிப்பதற்கு முன்பு ஜாக்கி சேகரின் பதிவை படித்து விடுங்கள்.

சுட்டி: http://www.jackiesekar.com/2012/11/blog-post_28.html

இனி நாம் பதிவுக்கு போகலாம்.

அன்பின் ஜாக்கி சேகர் அவர்களே,

உங்கள் பதிவினை படித்த உடன் பின்னூட்டம் இடலாம் என்று தான் முதலில் நினைத்து தட்டச்ச தொடங்கினேன். பின்னூட்டம் பெரிதானதால் தனிப் பதிவாக போட்டு விடலாம் என்று தோன்றியது. அதன் விளைவு தான் இந்த பதிவு.

முதலில் ஒன்றை சொல்லி விடுகிறேன். வாடிக்கையாளருக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து நீங்கள் சொன்னது நூறு சதவிகித உண்மை. அதனுடன் வரிக்கு வரி ஒத்து போகிறேன். ஆனால் அதே நேரத்தில் மளிகை கடை காரர்களுக்கு பாதிப்பு இல்லை என்று சொல்வது உங்களுக்கு விவரம் தெரியாது என்பதையே காட்டுகிறது. உங்களை குற்றம் சொல்ல அதில் எதுவும் இல்லை.

வால்மார்ட் போன்ற நிறுவனங்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கீழே என்னால் முடிந்த வரையில் விரிவாக சொல்ல முயற்சிக்கிறேன்.

1. லோக்கல் கடைகளுக்கு உடனடி ஆப்பு:

இதை பற்றி விரிவாக சொல்ல ஒன்றும் இல்லை. நீங்களே சொல்லி விட்டீர்கள் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கின்றன என்று. வீட்டிற்கே வந்து பொருட்களை சப்ளை செய்வது, மிக குறைந்த விலையில் பொருட்களை கொடுப்பது, பரிசு பொருட்கள் கொடுப்பது என்று ஜிகினா வேலைகள் பல செய்து போட்டியாளர்களுக்கு ஆப்படிப்பார்கள்.

அவர்கள் கொடுக்கும் குறைந்த விலை பொருட்கள் உங்களை வாழவைக்க இல்லை, உங்கள் பக்கத்து வீட்டு கடைக்காரரை அழிக்க என்ற உண்மை உங்களுக்கு தெரிந்தால் மகிழ்ச்சி. லோக்கல் கடைக்காரர்கள் அனைவரும் அழிந்த பின்னரும் இவர்கள் குறைந்த விலைக்கே பொருட்களை கொடுப்பார்களா? இல்லை விலையேற்றம் செய்வார்களா? என்பதை நீங்களே உங்களுக்குள் கேட்டு விடை சொல்லுங்கள்.

2. வால்மார்ட்டின் சப்ளையர்களுக்கு சிறிது காலம் கடந்து ஆப்பு:

உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் 100 பொருட்கள் மட்டுமே தயாரிக்கும் திறன் கொண்ட உற்பத்தியாளருக்கு ஒரு லட்சம் பொருட்கள் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப் படும். அவரும் கடன் வாங்கி தொழிற்சாலையை விரிவு படுத்தி, பல ஆட்களை வேலைக்கு அமர்த்தி ஒரு லட்சம் பொருட்களை தயாரித்து விடுவார். தயாரித்து முடிந்ததும் முதல் ஆண்டு சொன்ன விலைக்கு வாங்கப் படும். அடுத்த ஆண்டு மிகவும் குறைந்த விலைக்கே பொருட்களை கேட்பார்கள். உற்பத்தியாளரும் ஓரளவு சமாளித்து குறைந்த விலைக்கு பொருட்களை கொடுப்பார். அதற்கு அடுத்த ஆண்டு இன்னும் குறைந்த விலைக்கு கேட்பார்கள். இப்படியே தொடர்ந்து ஒரு கட்டத்தில் உற்பத்தியாளருக்கு நஷ்டம் என்ற நிலையில் வந்து முடியும்.

உற்பத்தியாளர்களுக்கு வந்தது ஆப்பு. உற்பத்தியை அதிகரிக்க பல இன்வெஸ்ட்மென்டுகளை செய்திருப்பாளர்கள் அவர்கள். அதனால் தரத்தில் கை வைக்க வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு வந்து விடும்.

3. வால்மார்ட்டில் வேலை செய்பவர்களுக்கு நிரந்தர ஆப்பு:

குறைந்த சம்பளத்தில் அதிக நேர வேலை, இன்ஸியூரன்ஸ் போன்ற பெனிஃபிட்ஸ் ஒன்றும் கிடையாது, 20 பேர் வேலை செய்ய வெண்டிய கடையில் 10 பேர் கூட வேலைக்கு இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு நிரந்தர வேலையும் கிடையாது. பகுதி நேர வேலை மட்டுமே கிடைக்கும். வேலை செய்யும் போது ஏதெனும் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தால் நஷ்ட ஈடு ஒன்றும் கிடையாது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

4. வாடிக்கையாளர்களுக்கு ஓரளவு நன்மை

வாடிகையாளர்களுக்கு நன்மை என்பது பணத்தில் மட்டுமே. வால்மார்ட் பொருட்களின் தரம் குறித்த மாற்று பார்வை இங்கே உண்டு. வால்மார்டுக்கென்றே தனியாக பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கூட இங்கே உண்டு. ஒரே பிரான்ட் பொருள் குறைந்த தரத்தில் வால்மார்ட்டுக்கும் நல்ல தரத்தில் மற்ற இடத்துக்கும் கொடுப்பார்கள். ஏனென்றால் வால்மார்ட் கொடுக்கும் குறைந்த விலைக்கு அப்படி தயாரித்து கொடுப்பதினால் மட்டுமே லாபம் சம்பாதிக்க இயலும் என்பதால்.

யோசித்து பாருங்கள் வேலை செய்பவர்களுக்கும், கஸ்டமர்களுக்கு உச்ச கட்ட பாதுகாப்பு இருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட இவ்வளவு கொடுமைகளை செய்யும் வால்மார்ட் இந்தியா போன்ற தேசத்துக்கு வந்தால் என்னென்ன செய்வார்கள்.

வால்மார்ட்டின் வேர்களை நம் மண்ணில் பதியவிட்டால் அது நமது நாட்டின் வாழ்வாதாரங்களை அசுர வேகத்தில் குடித்து முடித்து அழித்து விடும்.

யார் எக்கேடு கெட்டு போனால் என்ன, எனக்கு குறைந்த செலவில் பொருட்கள் கிடைத்தால் போதும் என்பவர்களுக்காக இதை நான் சொல்லவில்லை. 18 மணி நேர மின்வெட்டில் கூட கூடாங்குளம் வேண்டாம் என்று கூறி போராடிய மக்கள் போன்றவர்களுக்காக இதை சொல்கிறேன்.

ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டாலும், அரசு கூடாங்குள போராட்டத்தில் என்ன நிலை எடுத்ததோ, அதே நிலையை இதிலும் எடுக்கும். அரசுக்கு தேவையான சட்டங்கள் நிச்சயம் நாட்டில் வந்துவிடும். ஆனால் அதற்கு எதிரான நமது கருத்துக்களை பதிய வைத்தோமானால் நமது மனசாட்சிக்கு மட்டுமாவது நாம் உண்மையுள்ளவனாக இருக்க முடியும்.

பதிவினை தொடரந்து படித்தமைக்கு நன்றி. மாற்றுக் கருத்து இருப்பின் பின்னூட்டம் மூலம் தெரியப் படுத்துங்கள். தொடர்ந்து விவாதிப்போம்.

இவன்,
சத்யப்ரியன்

61 Comments:

வவ்வால் said...

சத்யன்,

வால்மார்ட் பற்றி நான் போன நவம்பரிலேயே எழுதியாச்சு, இப்போ தான் எல்லாம் ஆரம்பிக்கிறிங்க என நினைக்கிறேன், சரி அது போகட்டும்,

// லோக்கல் கடைக்காரர்கள் அனைவரும் அழிந்த பின்னரும் இவர்கள் குறைந்த விலைக்கே பொருட்களை கொடுப்பார்களா? இல்லை விலையேற்றம் செய்வார்களா? என்பதை நீங்களே உங்களுக்குள் கேட்டு விடை சொல்லுங்கள். //

வால் மார்ட் பல காலமாக புழங்கிவரும் அமெரிக்காவில் விலை ஏற்றி விற்க ஆரம்பித்துவிட்டார்களா?

எல்லாமே மார்க்கெட் அடிப்படையில், எனவே உள்ளூர் வியாபாரி அழிந்த பின் வால்மார்ட் விலை ஏற்றினால் அவனும் அழிவான் :-))

அமெரிக்காவில் வால் மார்ட் அநியாய விலைக்கு இன்னும் ஏற்றி விலையை வைக்கவில்லை என்பதை நான் அறிவேன், நீங்கள் அறிந்த உண்மையை சொல்லவும்.

SathyaPriyan said...

அமெரிக்காவில் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு இந்தியாவில் இந்திய வாடிக்கையாளர்களுக்கும் இருக்கிறது என்பது உங்கள் வாதமானால் பேசுவதற்கு மேற்கொண்டு என்னிடம் எதுவும் இல்லை.

அமெரிக்காவில் அவர்கள் விலையேற்றவில்லை என்றால் அவர்களால் அது முடியவில்லை. அவ்வளவுதான்.

Avargal Unmaigal said...

சத்யப்ரியன் வால்மார்ட்டை பற்றிய நீங்கள் சொல்லிய அனைத்தும் மிக சரி.

ஆனால் இந்த வரியில் மட்டும் சிறு மாற்றம் தேவை என நினைக்கிறேன்
// லோக்கல் கடைக்காரர்கள் அனைவரும் அழிந்த பின்னரும் இவர்கள் குறைந்த விலைக்கே பொருட்களை கொடுப்பார்களா?//

வால்மார்ட் எப்பொழுதும் மிக குறைவான விலைக்கே விற்பார்கள் அதன் விலை அதிகரிக்காது ஆனால் அதன் தரம்மட்டும் குறைந்து கொண்டே போகும் என்பது மிக நிச்சயம்

மேலே சுட்டிக்காட்டிய வரிகளைத்த தவிர மற்றவைகள் எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மையே.

இந்திய மக்கள் வால்மார்ட்டை மிக ஹைகுவாலிட்டி ஸ்டோர் என்று கற்பனை பண்ணி வைத்திருக்கிறார்கள். மேலும் இந்த மாதிரி ஸ்டோர் வந்தால் எல்லாம் மலிவு விலையில் கிடைக்கும் அதனால் அவர்கள் அதிகம் சேமித்து பெரிய பங்களா கட்டிவிடலாம் என்று கற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்


பிறவியில் கண் தெரியாதவர்கள் வண்ணத்தை பற்றி மற்றொருவனுக்கு விளக்கி சொல்வது போலத்தான் இந்த வால்மார்டை பற்றி தெரியாத இந்தியர்கள் வால்மார்ட் வந்தால் எப்படி இருக்கும் என்று சொல்லித்திரிகிறார்கள்


நம்மை போல உள்ளவர்கள் எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் இந்தியர்களுக்கு புரிய போவத்தில்லை அவர்கள் அனுபவபட்டவுடன் புரிந்து கொள்வார்கள் ஆனால் அதன் பிறகு அதில் இருந்து அவர்கள் மீள நினைத்தாலும் நம் அரசியல்வாதிகளின் செயல்களால் அவர்கள் மீள்வே முடியாது


நான் கடந்த் 15 வருடங்களுக்கு மேலாக அமெரிக்காவில் இருக்கிறேன் வந்த புதிதில் வால்மார்ட் சென்று ஷாப்பிங்க் செய்த்து இருக்கிறேன் அதுவும் முதல் 5 வருடங்கள் மட்டுமே அங்கு ஷாப்பிங்க் செய்து இருக்கிறேன் அதன் பின் அங்கு செல்லவதில்லை காரணம் அதன் தரம் தான்.

ப.கந்தசாமி said...

சில்லறை வியாபாரிகள் இருப்பார்கள். எல்லோரும் வால்மார்ட்டுக்குப் போக மாட்டார்கள். ஆடம்பரத்துக்கு ஒரு விலை உண்டு என்று பாமரனுக்கும் தெரியும்.

SathyaPriyan said...

வாங்க அவர்கள் சார். நீங்கள் ரீட்டெயிலில் இருக்கிறீர்கள். நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

அமெரிக்காவில் வால்மார்ட் விலையேற்ற மாட்டார்கள், ஏற்றியதில்லை என்பது எனக்கும் தெரியும். அதன் காரணம் அமெரிக்காவில் அதன் பிராண்டிங். அது அமெரிக்காவில் ஒரு பட்ஜெட் கடை. ஆனால் இந்தியாவில் அது ஒரு ஸ்டேட்டஸ் ஸிம்பல் கடையாக மாறிவிடும். இன்று மெக்டீஸ் ஆனது போல.

அந்த நிலையில் இந்தியாவில் அவர்கள் விலையேற்றினால் கேட்பதற்கு நாதி கிடையாது. மக்களும் பெருமையாக அதிக விலை கொடுத்து வாங்குவார்கள்.

வால்மார்ட் விலையேற்றினால் அவர்களுக்கு லாபம். ஏற்றவில்லை என்றால் அவர்களுக்கு நஷ்டம் இல்லை.

SathyaPriyan said...

சில்லறை வியாபாரிகளுக்கு பொருள் கொடுப்பவர்களின் கழுத்தை பிடித்து அமுக்கினால் அவர்கள் வீழ்வார்கள் சார்.

சில்லறை வியாபாரிகள் பொருட்களை உற்பத்தி செய்பவர்களை நம்பித்தானே ஆக வேண்டும்.

உதாரணத்திற்கு ஆச்சி மசாலா இப்போது மாதம் ஒரு கோடி பாக்கெட்டுகள் விற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், வால்மார்ட் மட்டுமே அவர்களுக்கு 10 கோடி ஆர்டர் கொடுக்கும். அப்போது அவர்கள் வால்மார்ட் ஒரு கடைக்கு மட்டுமே சப்ளை செய்ய முயல்வார்கள். மற்ற அனைத்து ஏஜென்டுகளுக்கும் சப்ளை செய்வதில் அதிக ஆர்வம் கொள்ள மாட்டார்கள்.

மக்கள் சென்றாலும் பொருட்கள் கடையில் இருந்தால் தானே வியாபாரம் நடக்கும்.

bandhu said...

Avargal Unmaigal சொல்வதை வழி மொழிகிறேன். கிட்டதட்ட அதே அளவு வருடங்கள் நானும் அமெரிக்காவில் இருக்கிறேன். என்னுடைய வால்மார்ட் அனுபவமும் அதே தான்!

SathyaPriyan said...

நானும் அமெரிக்கா வந்க்டு ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. இது எட்டாவது ஆண்டு. வால்மார்ட்டில் பொருட்கள் வாங்கியதே இல்லை. நீங்களும், அவர்கள் சாரும் சொன்னபடி தரம் தான் முக்கிய காரணம்.

வருகைக்கு நன்றி.

வவ்வால் said...

சத்யன்,

அமெரிக்காவின் சந்தை பொருளாதாரம், மற்றும் சந்தை செயல்படும் விதம் வேறு, இந்திய அமைப்பு வேறு.

இந்தியாவில் உற்பத்தி, விநியோக சங்கிலி, நுகர்வோர் மனோபாவம் எல்லாம் பார்க்கணும்.

மாநில விநியோகம், மாவட்ட விநியோகம் என எடுப்பவர்கள் எதை கடைக்கு அனுப்புகிறார்களோ அது தான் இங்கு பெரும்பாலான கடைகளில் நுகர்வோருக்கு கிடைக்கும். நீங்க மாற்றி ஒரு பிரான்ட் கேட்டாலும் கிடைக்காது.

இந்திய சில்லறை வர்த்தக கடைகள் சிறிய அளவில் இயங்கும் வலையமைப்பு வால்மார்ட் எனலாம்.

ஆச்சி மசாலாவின் விலையை மாநில விநியோகஸ்தர் தான் நிர்ணயிக்கிறார்.

இதனால் விலை என்பது எப்போதும் ஒரு நிலையிலே இருக்கும், அது நுகர்வோருக்கோ ஏன் உற்பத்தியாளருக்கோ சாதகமாகவே இருக்காது.

இதனால் புதிதாக ஒருவர் மசலா தயாரிப்பில் ஈடுபட்டாலும் அவரால் மாநில,மாவட்ட விநியோகஸ்தர் எதிர் பார்க்கும் மார்ஜினில் கொடுக்கவில்லை என்றால் வாங்க மாட்டார்கள், அவ்விலை வால்மார்ட் எப்படி குறைவான விலைக்கு கேட்கிறதோ அப்படித்தான் , எனவே இப்பொழுது மட்டும் தரமான பொருட்கள் கடைக்கு வருகிரது என சொல்ல முடியாது.

இப்படிப்பட்ட கண்ட்ரோல்டு விநியோக அமைப்பு ஒரு குறிப்பிட்ட சமுகத்தினரால் நடத்தப்படுகிறது. அதைத்தாண்டி ஒரு உற்பத்தியாளரால் அவரது பொருளை தரமாக இருந்தாலும் நுகர்வோரிடம் கொண்டு செல்ல முடியாது.

நேராக கடைக்கு கொண்டு சென்றாலும் எங்களூக்கு இன்னாரிடம் இருந்து எல்லா பொருளும் சப்ளை ஆகுது ,உங்க மசாலவை மட்டும் வாங்கி விற்க முடியாது என்பதே பதிலாக இருக்கும்.

அப்புறம் கெஞ்சிக்கூத்தாடி இதையும் ஓரமாக வைத்து விய்யுங்க , விற்றப்பிறகு காசு கொடுத்தாப்போதும் என தான் கடைக்காரர்களிடம் பொருளை கொடுக்க வேண்டும்.

இப்படி பல வட்டார உற்பத்தியாளர்களும் இருக்காங்க.எனவே ஆச்சி மசாலாவை வால்மார்ட் பிடிச்சுக்கிட்டா, இன்னொரு உற்பத்தியாளர் கடைகளுக்கு சப்ளை செய்ய இங்கே இருக்காங்க.

நீங்க எதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்த இந்தியாவில் முயற்சி செய்து பாருங்க ,அதுக்கு என்ன மாதிரியான இடைஞ்சல் வருதுன்னு தெரியும்.

உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் எல்லாம் un organaized ஆனால் ஒரு சிலரின் கட்டுப்பாட்டுக்குள் என வால்மார்ட் கதை தான் இப்போவும் நடக்குது.

இதனால் ஒரு பக்கம் உற்பத்தியாலரும், இன்னொரு பக்கம் நுகர்வோரும் அவதிப்படுகிறார்கள் ,அப்படி இருக்கும் போது வால்மார்ட் வந்தா தரம் இருக்காது என்பதோ சில்லறை வியாபாரி அடிபடுவான் என்பதோ போட்டியாளரை இல்லாமல் செய்ய சொல்லும் குற்ற சாட்டு என்று தான் சொல்லனும்.

இந்திய மக்கள் மைக்ரோ லெவல் ஷாப்பிங்க் டெண்டன்ஸி உள்ளவர்கள்.50 அ 100 ரூ என அவ்வப்போது வாங்குபவர்களே அதிகம், அவங்க எல்லாம் வால்மார்ட்டுக்கு ஓடிக்கிட்டு இருக்கமாட்டாங்க, அருகில் இருக்கும் அண்ணாச்சிக்கடைக்கு தான் போவாங்க.

என்னையே உதாரணமாக சொல்லலாம், மாதத்தில் ஒரு நாள் சூப்பர் மார்க்கெட் போனால் 30 தடவை அருகில் இருக்கும் அண்ணாச்சிக்கடைக்கு போகிறேன்.எனவே அவர்களுக்காக மார்க்கெட் ஷேர் இருக்கும்.

ரிலையன்ஸ் வந்துச்சு, டாடா மோர் வந்துச்சு அப்போ எல்லாம் அசைக்க முடியலை வால்மார்ட் மட்டும் அசைச்சுடுமா என்ன?

வால்மார்ட் என்பது ரிலையன்ஸ், மோர் போன்ற உள்ளூர் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு தான் போட்டியாக அமையும் ,அண்ணாச்சிக்கடைகளுக்கு அல்ல என்றே சொல்லலாம்.

அமெரிக்காவில் இருக்கிறவங்க அமெரிக்க அமைப்பையும் புரிந்து கொள்வதில்லை, இந்திய அமைப்பையும் புரிந்து கொள்வதில்லை, பொதுவாக மீடியா சொல்வதை தான் புரிந்துக்கொண்டு பேசுகிறார்கள் :-))

SathyaPriyan said...

வவ்வால் நான் பிடித்க்ட முயலுக்கு மூன்று கால் என்று சொல்கிறீர்கள். உண்மை என்ன என்று எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும்.

//
மாநில,மாவட்ட விநியோகஸ்தர் எதிர் பார்க்கும் மார்ஜினில் கொடுக்கவில்லை என்றால் வாங்க மாட்டார்கள், அவ்விலை வால்மார்ட் எப்படி குறைவான விலைக்கு கேட்கிறதோ அப்படித்தான் , எனவே இப்பொழுது மட்டும் தரமான பொருட்கள் கடைக்கு வருகிரது என சொல்ல முடியாது.
//
இப்பொழுது கிடைக்கும் தரம் கூட இனி கிடைக்காது என்ற நிலை தான் வரப் போகிறது. இப்போது பத்து பேருக்கு ஒரு மிக்சர் சாப்பிட்டு பேதி வந்தால் அது ஐம்பதாக மாறும்.

//
இப்படிப்பட்ட கண்ட்ரோல்டு விநியோக அமைப்பு ஒரு குறிப்பிட்ட சமுகத்தினரால் நடத்தப்படுகிறது. அதைத்தாண்டி ஒரு உற்பத்தியாளரால் அவரது பொருளை தரமாக இருந்தாலும் நுகர்வோரிடம் கொண்டு செல்ல முடியாது.
//
அதை தான் எனது முந்தைய பின்னூட்டத்தில் ஏஜென்டுகள் என்று குறிப்பிட்டுள்ளேன். குறிப்பிட்ட சமூகம் என்றால் பல ஆயிரம் குடும்பங்கள் என்று பொருள். அது தமிழக நிலைமை. ஆக இந்தியா முழுதும் சில லட்சம் குடும்பங்களின் பிடியில் இருக்கும் இந்த கன்ட்ரோல் பாரதி வால்மார்ட் முதலாளியிடம் செல்ல போகிறது.

பிந்தைய நிலையை விட முந்தைய நிலை எவ்வளவோ மேல்.

//
இந்திய மக்கள் மைக்ரோ லெவல் ஷாப்பிங்க் டெண்டன்ஸி உள்ளவர்கள்.50 அ 100 ரூ என அவ்வப்போது வாங்குபவர்களே அதிகம், அவங்க எல்லாம் வால்மார்ட்டுக்கு ஓடிக்கிட்டு இருக்கமாட்டாங்க, அருகில் இருக்கும் அண்ணாச்சிக்கடைக்கு தான் போவாங்க.
//
வால்மார்ட்டின் டார்கெட் ஆடியன்ஸ் அவர்கள் கிடையாது. சிட்டியில் உள்ள உயர் நடுத்தர மக்கள் தான். அவர்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங் வசதி, டோர் டெலிவரி, ரிட்டர்ன் க்ரெடிட், குறைந்த விலை எல்லாம் கொடுத்தால் பெருமளவில் போவார்கள்.

அதனால் அண்ணாச்சி கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பாதியாக குறைவார்கள். அதையும் மீறி ஒரு சிலர் சர்வைவ் ஆவார்கள். ஆனால் வால்மார்ட்டினால் பாதிப்பே இல்லை என்பது பூனை கண்ணை மூடிக் கொண்ட பழமொழி போலத்தான்.

//
ரிலையன்ஸ் வந்துச்சு, டாடா மோர் வந்துச்சு அப்போ எல்லாம் அசைக்க முடியலை வால்மார்ட் மட்டும் அசைச்சுடுமா என்ன?
//
எதுவும் உடனே தெரியாது சார். போக போக தெரியும். அசுர மூளையுடனும், பெரும் பண பலத்துடனும் வரும் வால்மார்ட் கொஞ்ச காலத்தில் நமது மண்ணில் என்ன விவசாயம் செய்ய வேண்டும், நமது மக்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன குடிக்க வேண்டும் என்று கூறும் நிலைக்கு வந்து விடும்.

அடுத்த 20 ஆண்டுகளில் பாருங்கள்.

//
அமெரிக்காவில் இருக்கிறவங்க அமெரிக்க அமைப்பையும் புரிந்து கொள்வதில்லை, இந்திய அமைப்பையும் புரிந்து கொள்வதில்லை, பொதுவாக மீடியா சொல்வதை தான் புரிந்துக்கொண்டு பேசுகிறார்கள் :-))
//
இதற்கு புன்சிரிப்பு மட்டுமே எனது பதில் :-)


விஜய் said...

//பழனி.கந்தசாமி said...

சில்லறை வியாபாரிகள் இருப்பார்கள். எல்லோரும் வால்மார்ட்டுக்குப் போக மாட்டார்கள். ஆடம்பரத்துக்கு ஒரு விலை உண்டு என்று பாமரனுக்கும் தெரியும்.
//

பெரம்பூரில் நெல்வயல் சாலையில் நிறைய நடைபாதை காய்கறிக்கடைகள் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த தெருவே ஜே ஜே என்று இருக்கும். இப்பொழுது மூன்று மிகப்பெரிய காய்கறி கடைகள் வந்தபிறகு இந்த சிறிய கடைகளில் வாங்குவதற்கு ஆளே இல்லை. இது என் கண் முன்னாள் நடந்து கொண்டிருக்கும் சிறு வியாபாரிகளின் அழிவு.

Jayadev Das said...

சென்னை மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் அண்ணாச்சி சமூகம் மளிகைக் கடைகளை வளைத்துப் போட்டு வேறு எந்த சமூகமும் அந்தத் தொழிலில் இறங்க விடாமல் பார்த்துக் கொள்கிறார்களாம். அதாவது மளிகைக் கடைக்கு சப்ளை செய்யும் மொத்த வியாபாரத்தையே வளைத்து விட்டார்களாம், எனவே மற்றவர்கள் மளிகைக் கடை வைக்க இறங்கினாலும் அவர்களுக்கு இன்னொரு அண்ணாச்சிதான் சப்ளை செய்ய வேண்டும், அங்கே அவர் கை வைத்து விடுவதால், தாக்குப் பிடிக்க முடியாது என்கிற அளவில் வைத்துள்ளார்களாம். இதனால்தான் சென்னையில் எங்கு பார்த்தாலும் அண்ணாச்சிகள் கடைகளே இருக்கின்றன. இந்த மாதிரி monopoly ஆகிவிட்ட தொழிலில் மட்டும் குறைந்த விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா? சில்லறை வியாபாரிகள் என்றால் அது வெறும் அண்ணாச்சிகள் மட்டுமே, வேறு யாரும் இல்லை.

அடுத்து வால்மார்ட் கடைகள் ஊர் ஊருக்கு வருமா? சென்னை திருச்சி கோயம்பத்தூர் போன்ற பெருநகரங்களில் சில கடைகளைத் திறக்கலாம், அது எப்படிஎல்லா சில்லறை வியாபாரிகளையும் பாதிக்கும்?

வவ்வால் said...

சத்யன்,

//வால்மார்ட்டின் டார்கெட் ஆடியன்ஸ் அவர்கள் கிடையாது. சிட்டியில் உள்ள உயர் நடுத்தர மக்கள் தான். அவர்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங் வசதி, டோர் டெலிவரி, ரிட்டர்ன் க்ரெடிட், குறைந்த விலை எல்லாம் கொடுத்தால் பெருமளவில் போவார்கள்.
//

இதை நீங்களே சொல்வீங்கன்னு எதிர்ப்பார்த்தேன், சொல்லிட்டீங்க, அப்புறமும் மொத்தமாக சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுவாங்கன்னா எப்பூடி?

முயலுக்கு ரெண்டுகால் டைப்பில் சொல்றிங்களே :-))

வால்மார்ட் இயங்கு தளம் நகர அடிப்படையில், மெட்ரோக்களில் மட்டுமே எடுபடும், அதை வைத்து ஒட்டு மொத்த இந்திய ரிடெயில் மார்க்கெட் மற்றும் உற்பத்தியை கட்டுக்குள் கொண்டு வரவே முடியாது.

சரவணா ஸ்டோர் என்பது சென்னை ரெங்கநாதன் தெருவில் மட்டுமே , கடலூரில் இருக்கும் வியாபாரிக்கு ரெங்கநாதன் தெரு கடை போட்டியாகாது,அதே போல மாநகரத்தில் வரும் வால்மார்ட் நிலையும், அது இன்னொரு கார்ப்பரேட் சூப்பர் மார்க்கெட்டுக்கே போட்டி.

சிறிய அளவில் வாங்கும் மக்கள் தான் இந்தியாவில் அதிகம் அவர்களுக்கான கடைகள் இருக்கும்.

ஒட்டு மொத்த சில்லறை வணிகத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வால்மார்ட்டுக்கு என போகலமே ஒழிய அதனால் முழு மார்க்கெட்டையும் இந்திய சூழலில் கைப்பற்ற முடியாது.

உண்மையில் அந்நிய முதலீட்டை எதிர்க்கணும் என்றால் நுகர்வோர் பொருள் உற்பத்தியில் அந்நிய முதலீடு வருவதை எதிர்க்கணும், சோப்பு,ஷாம்பு, பேஸ்ட், எண்ணை, உணவுப்பொருள் என அந்நிய முதலீட்டீல் உற்பத்தியாகாமல் இருந்தால் தான் உள்நாட்டு உற்பத்திக்கும் ,வேலைவாய்ப்புக்கும் நல்லது.

விநியோக சங்கிலியில் யார் வந்தாலும் ஒன்றும் இல்லை. அதனால் நுகர்வோருக்கு நியாயமான விலையில் பொருள் கிடைத்தால் சரி.

அந்நிய இறக்குமதி பொருளை உள்நாட்டில் விற்காமல் இருக்க ,அரசு விதிகளை அமைக்க வேண்டும், ஆனால் அதனை யாரும் வலியுறுத்தக்காணோம்.

இப்போ வால்மார்ட் வரவில்லை,ஆனால் இங்கே விற்பதெல்லாம் அந்நிய பொருளாகவே இருக்கு , இதனை யாரும் கண்டுக்கொள்ளவில்லை, கேட்டால் உலகப்பொருளாதாரம் என்பார்கள்.

கோக்,பெப்சி, ஹெட் அன்டட் ஷோல்டர், ஜில்லட், பீட்சா, இன்ன பிற வருவதை யாரும் ஒன்னும் சொல்ல காணோம் :-))

Pebble said...

//
அமெரிக்காவில் இருக்கிறவங்க அமெரிக்க அமைப்பையும் புரிந்து கொள்வதில்லை, இந்திய அமைப்பையும் புரிந்து கொள்வதில்லை, பொதுவாக மீடியா சொல்வதை தான் புரிந்துக்கொண்டு பேசுகிறார்கள் :-))
//
Itha India la ukanthukittu sollreenga. Vedikaithan. I agree with Sathya Priyan. I wrote about Wal-Mart’s procurement process on Mr.Sathappans blog a while ago. They almost kill the suppliers with their dirty starategy.

அஞ்சா சிங்கம் said...

எதற்க்காக வால்மார்ட் தேவை .
http://www.jeyamohan.in/?p=31009

வவ்வால் said...

சத்யன் ,

கீழ்கண்ட எனது இடுகைகளையும் பார்க்கவும், கடந்தாண்டு எழுதியது அப்போதை நிலையில் தோன்றியதை எழுதினேன், இப்பொழுது படித்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக எழுதியிருக்கலாமோ என நினைக்கிறேன்.

வால் மார்ட் குறித்த இடுகைகள்:

http://vovalpaarvai.blogspot.in/2011/11/blog-post_29.html

http://vovalpaarvai.blogspot.in/2011/12/blog-post.html

விவசாயிகள் குறித்த இடுகை:
விவசாயி படும்பாடு-1

http://vovalpaarvai.blogspot.in/2011/12/blog-post_16.html

விவசாயி படும்பாடு-2

http://vovalpaarvai.blogspot.in/2011/12/2.html

Anonymous said...

@ Vavvaal: I do not understand why everyone is talking about Wal Mart alone. There are several Global Supermarket Giants who will be setting their foot in the Indian retail market. For Eg: Tesco’s style of operation is different. They have supermarkets in all sizes from big sized stores to small stores like Annachi Kadai. Over the years they have creeped in every neighbourhood in the UK. Now there are only a handful of local retailers who are facing their exit . A Tesco store near my house even opened a Cobbler’s section in their store to repair/stitch damaged shoes. Their idea is to sell everything in their stores from A-Z.

In the UK there have been instances where all the supermarket gaints joined their hands together and controlled the prices of all essential products like milk. It is a dis-grace , even the courts have penalised them.

Anonymous said...

@ Vavvaal: I do not understand why everyone is talking about Wal Mart alone. There are several Global Supermarket Giants who will be setting their foot in the Indian retail market. For Eg: Tesco’s style of operation is different. They have supermarkets in all sizes from big sized stores to small stores like Annachi Kadai. Over the years they have creeped in every neighbourhood in the UK. Now there are only a handful of local retailers who are facing their exit . A Tesco store near my house even opened a Cobbler’s section in their store to repair/stitch damaged shoes. Their idea is to sell everything in their stores from A-Z.

In the UK there have been instances where all the supermarket gaints joined their hands together and controlled the prices of all essential products like milk. It is a dis-grace , even the courts have penalised them.

வருண் said...

ஒரு பக்கம் வால்மார்ட் எத்தனை கடைகளை அழிச்சு, அமெரிக்கர்கள் வய்த்த்ரிச்சலை கொட்டிக்கிட்டு இருக்குனு பார்த்துக்கொண்டு இருந்தும் சூப்பர்/ஹைப்பர் வால்மார்ட், சாம்ஸ் க்ளப்ல வாரவாரம் ஷாப் பண்ணுறவங்க.

இன்னொரு பக்கம் இந்தியாவில் வாழ்ந்துகொண்டு, வரப்போகும் "மருமகள் அழகான மஹராசி" (வால்மார்ட்டை) எதிர்பார்த்துக்கொண்டு அதன் நன்மை தீமைகளை "மிக கவனமாக" தியரிட்டிக்கலா அனலைஸ் செய்றவங்க..

இவர்கள் ரெண்டு பேர் பார்வையும் வித்தியாசமாகத்தானே இருக்கும்?

However, "my way is highway" "my understanding is better than yours" kind of attitude is not uncommon with "our Indians". That's one of the reasons I got out of that country for ever! LOL

That's all I can say! LOL

வவ்வால் said...

priya karthick ,

i hope u can understand tamil ,

எனவே தமிழில் தொடர்கிறேன்.

நான் அளித்த பதிவுகளை படித்திருந்தால் ஓரளவுக்கு தமிழ் நாட்டில் விவசாயி மற்றும் நுகர்வோர் நிலை புரியும். இங்கு உற்பத்திக்கு உரிய விலை கிடைப்பதில்லை ,காரணம் வாங்குபவர்கள் சிண்டிகேட் அமைத்து இதான் விலை என வாங்குகிறார்கள்.

தக்காளி,கிலோ 50 காசு-1 ரூபா,வெங்காயம் கிலோ 5 ரூபாய் அல்லது அதிகப்பட்சம் 10 ரூபாய் விலையில் தான் அதிக பட்சமாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது, ஆனால் விவசாய கூலி, உரம், நீர் மேலாண்மை , போக்குவரத்து என எல்லாம் விவசாயிக்கு அதிகம் ஆகிறது.

தக்காளியை பயிரிட்டுவிட்டோம், அதனை விற்கவில்லை எனில் நட்டம் என கிடைத்த விலைக்கே விற்கிறான் விவசாயி.

காரணம் அதனை வாங்குபவர்கள் ஒருங்கிணைந்த குழுவாக கிலோ இன்ன விலைக்கு மேல் வாங்க கூடாது என நிர்ணயிக்கிறார்கள். அவர்களை விட்டால் வாங்க மாற்று வியாபாரிகளே இல்லை , என்ன செய்யலாம் சொல்லுங்கள்?

வெங்காயத்தினை ரோட்டில் கொட்டும் விவசாயிகள்.

http://www.dinamalar.com/business/news_details.asp?News_id=20094&cat=1

வால்மார்ட் என சொல்வது ஒட்டுமொத்தமாக குறிப்பிடுவது "Organaized retail market"

அது வால் மார்ட், டெஸ்கோ என அனைதையுமே குறிக்கும்.

இப்போ யாரோ சில்லறை விற்பனையில் உள் நுழைந்தால் , இங்கே உள்ள வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என அனைவரும் குரல் கொடுக்கிறீர்கள், இத்தனை காலமாக இந்த சில்லறை வியாபாரிகளுக்கு உற்பத்தி செய்து கொடுத்த விவசாயி நிலை என்ன , அவனிடம் இதுவரை வாங்கி ஏமாற்றியது யார்?

பல கோடி கணக்கான விவசாயிகள் , கடனில் உழலுகிறார்கள் அதனை குறித்து கவலைப்படாத சத்யன்கள், சில லட்சம் வியாபாரிகளுக்கு கஷ்டம் என குரல் கொடுப்பதற்கு என்ன காரணம்?

இத்தனை நாளும் வாங்கி விற்ற வியாபாரி லாபத்தில் , அவர்களுக்கு உற்பத்தி செய்து கொடுத்த விவசாயி கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறான்.

காரணம் என்ன உற்பத்தியாளரிடம் கொள்முதல் செய்ய போட்டியே இல்லை, எனவே இவர்களே சுரண்டிக்கொண்டு இருந்தார்கள், இப்போ வெளியில் இருந்து போட்டி வருதுன்னா மட்டும் சுதேசிய உணர்வுடன் அவன் வந்தா பொருளாதாரம் அழியுமா?

கோக் ,பெப்சி வந்த போது ,அது உள்ளூர் குளிர்பானததொழிலை அழிக்கும்னு இந்த வியாபாரிகள் கூட்டம் எதிர்த்ததா?

அவர்களை பொருத்தவரையில் ஒரு குளிர்பானம் வாங்கி ,விற்க நல்ல கமிஷனில் தடையில்லாமல் கிடைக்கணும், அது உள்நாடோ,வெளிநாடோ :-))

உற்பத்தியில் அன்னிய முதலீடு வந்த போது கூவாத வியாபாரிகள், வாங்கிவிற்றலில் அந்நிய முதலீடு வந்தால் ,அய்யோன்னு அலறினா என்ன செய்ய?

இன்று இந்தியா முழுவதும் சீன டிஷ்யு பேப்பர்கள், பொம்மைகள், பல்புகள், கைவினை பொருட்கள், ஆடைகள், செல்போன்கள், கணினி, உதிரிபாகங்கள்,பிஸ்கெட்கள், சாக்கலேட்கள்,பட்டாசுகள் கூட, இன்னபிர விற்கின்றன ,இதை எல்லாம் சீனாக்காரன் விமானத்தில் கொண்டு வந்து வானத்தில் இருந்து கொட்டுறானா, எல்லாம் உள்ளூர் வியாபாரிகளாக இறக்குமதி செய்து விற்கிறாங்க.

இப்படி செய்வதால் உள்நாட்டில் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும்னா நினைச்சாங்க? இன்று அவர்களுக்கு போட்டி வந்தால் ஒப்பாரி வைக்காமல் சமாளிக்க வேண்டாமோ?



SathyaPriyan said...

//
இதை நீங்களே சொல்வீங்கன்னு எதிர்ப்பார்த்தேன், சொல்லிட்டீங்க, அப்புறமும் மொத்தமாக சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுவாங்கன்னா எப்பூடி?
//
ஒரு வியாபாரத்தை அழிக்க வாடிக்கையாளரை தன் பக்கம் திருப்புவது ஒன்று மட்டும் தான் வழி என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

வேறு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. மார்கெட் பெனிட்ரேஷன் கோர்ஸ் உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன்.

//
சரவணா ஸ்டோர் என்பது சென்னை ரெங்கநாதன் தெருவில் மட்டுமே , கடலூரில் இருக்கும் வியாபாரிக்கு ரெங்கநாதன் தெரு கடை போட்டியாகாது,அதே போல மாநகரத்தில் வரும் வால்மார்ட் நிலையும், அது இன்னொரு கார்ப்பரேட் சூப்பர் மார்க்கெட்டுக்கே போட்டி.
//
சென்னையும் அதன் சுற்று வட்டாரத்திலும் 2 கோடி பேர் வாழ்கிறார்கள். தமிழ் நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் 7 கோடி. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு சென்னையில் மட்டுமே. சென்னையை வளைத்தால் போதாதா.

சென்னை எவ்வளவு பெரிய வனிக சந்தை என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டுமா? சென்னையில் முக்கியமான 20 இடங்களில் கடை வைத்தால் கூட போதுமே மொத்த சில்லறை வியாபாரிகளின் வியாபாரமும் பாதிக்கு மேல் குறைந்து விடுமே.

//
பல கோடி கணக்கான விவசாயிகள் , கடனில் உழலுகிறார்கள் அதனை குறித்து கவலைப்படாத சத்யன்கள், சில லட்சம் வியாபாரிகளுக்கு கஷ்டம் என குரல் கொடுப்பதற்கு என்ன காரணம்?
//
எனது பதிவுக்கு உள்நோக்கம் கற்பிப்பது போல இது இருக்கிறது வவ்வால். எனக்கு தெரிந்து எனது சுற்றத்தில் இந்தியாவில் வியாபாரதிலோ அல்லது விவசாயத்திலோ ஈடுபடும் யாரும் இல்லை.

யாருக்கும் லாபம் வருவதற்கோ இல்லை நஷ்டம் வராமல் இருக்கவோ நான் இந்த பதிவை எழுதவில்லை.

உண்மையில் எந்த ராஜா எந்த பட்டிணம் போனாலும் எனக்கு ஒன்றும் இல்லை.

இங்கே வால்மார்ட் செய்யும் அராஜகங்களை பார்த்தவன் என்ற முறையில் எனது கருத்துக்களை பதிந்தேன்.

நீங்கள் திரும்ப திரும்ப, அண்ணாச்சிகள் கூட இப்போது அராஜகம் தான் செய்கிறார்கள். விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இப்பொழுதே அண்ணாச்சிகளால் நிலைமை இப்படித்தான் அதனால் வால்மார்ட் வந்தால் ஒன்றும் பாதிப்பு இல்லை என்கிறீர்கள். கொலைகாரர்களுக்கு பயந்து தீவிரவாதிகளிடம் சென்ற கதையாக இருக்கிறது உங்கள் கதை.

ஆயிரம் அண்ணாச்சிகள் சேர்ந்து ஏற்படுத்தும் பாதிப்புகளை விட ஒரு வால்மார்ட் அதிகம் ஏற்படுத்தும்.

SathyaPriyan said...

//
பெரம்பூரில் நெல்வயல் சாலையில் நிறைய நடைபாதை காய்கறிக்கடைகள் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த தெருவே ஜே ஜே என்று இருக்கும். இப்பொழுது மூன்று மிகப்பெரிய காய்கறி கடைகள் வந்தபிறகு இந்த சிறிய கடைகளில் வாங்குவதற்கு ஆளே இல்லை. இது என் கண் முன்னாள் நடந்து கொண்டிருக்கும் சிறு வியாபாரிகளின் அழிவு.
//

//
I wrote about Wal-Mart’s procurement process on Mr.Sathappans blog a while ago. They almost kill the suppliers with their dirty starategy.
//

//
Over the years they have creeped in every neighbourhood in the UK. Now there are only a handful of local retailers who are facing their exit.
//

நான் சொன்னதின் சாராம்சம் மேலே இருக்கும் விஜய், Pebble மற்றும் Priya Karthick ஆகியோரின் கருத்துகள் தான். வருகை தந்தவர்களுக்கு நன்றி.

SathyaPriyan said...

//
அடுத்து வால்மார்ட் கடைகள் ஊர் ஊருக்கு வருமா? சென்னை திருச்சி கோயம்பத்தூர் போன்ற பெருநகரங்களில் சில கடைகளைத் திறக்கலாம், அது எப்படிஎல்லா சில்லறை வியாபாரிகளையும் பாதிக்கும்?
//

சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை என்று போனால் போதுமே சார். தமிழகத்தின் 60 சதவிகித வியாபாரத்தை பிடித்து விடலாமே.

வவ்வால் said...

சத்யன்,

//எனது பதிவுக்கு உள்நோக்கம் கற்பிப்பது போல இது இருக்கிறது வவ்வால். எனக்கு தெரிந்து எனது சுற்றத்தில் இந்தியாவில் வியாபாரதிலோ அல்லது விவசாயத்திலோ ஈடுபடும் யாரும் இல்லை.
//

உள்நோக்கம் கற்பிக்க அக்கேள்வி எழுப்பவில்லை, அதாவது மீடியாவின் மூலம் திணிக்கப்பட்ட கருத்தால் உண்மை புரிதல் இல்லை என சொல்வதே அக்கேள்வியின் நோக்கம், ஏற்கனவே மீடியாவின் தஅக்கம் எனக்குறிப்பிட்டதை நீங்கள் கவனித்து இருக்கலாம்,மேலும் சரியாக சொல்லாதது என் பிழை எனில் மன்னிக்கவும்.

நமது சிந்தனைகளை மீடியா வழி நடத்துகிறது, அதனை விடுத்து, சாதக,பாதகங்களை அலசுவதே எனது நோக்கம்.

நீங்க அமெரிக்கா போனப்பிறகு வால்மார்ட் அட்டகாசம் செய்வதைப்பார்த்தேன் என சொல்கிறீர்கள், அதே அட்டகாசத்தினை உள்ளூரில் செய்த வியாபார்களை பார்க்கவில்லையே.

கொலைகாரனுக்கு பயந்து தீவிரவாதிக்கிட்டே போகலாலாமா என்கிறீர்கள், நல்ல கேள்வி,அப்போ இந்திய வியாபாரிகள் விவசாயிகள்,நுகர்வோர்களை கழுத்து ந்றிச்சு கொல்லலாம், செத்தாலும் இந்தியனால் சாவு என பேசுதே உங்க சுதேசம் :-))

இந்தியாவில் சில கோடி மக்கள் ,பல கோடி மக்களை சாகடிக்கலாமா?

மார்கெட் பெனிட்ரேஷன் கோர்ஸ் நான் படிக்கிறது இருக்கட்டும், இந்தியாவில் என்ன நடக்குது, கொள்கை முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கு நாட்டு நடப்பை முதலில் கவனிங்க.

வால்மார்ட் இந்தியாவில் ஏற்கனவே செயல்ப்பட்டுக்கிட்டு என்பதை அறீவீர்களா?

பாரதிவால்மார்ட் மொத்த வியாபாரத்தில் கணிசமான மார்கெட்டை வைத்துள்ளது, அவர்களிடம் இருந்து பொருட்களை அண்ணாச்சிகள் மாநில வியோகத்துக்கு வாங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இப்போ நேராக்கடையை தொறக்கத்தான் இத்தனை எதிர்ப்பு :-))

வட சென்னையில் பாரதி வால்மார்ட் மொத்த விற்பனை மையம் இருக்கு(பெயரே போடாமல் கோடோன் மட்டுமே இருக்கும்), அங்கு வாங்கி மாநிலம் முழுவதும் அண்ணாச்சிகள் விற்றுக்கொண்டு தான் இருக்காங்க.

எனவே வால்மார்ட் தரமில்லாத பொருளை விற்கும் என சொல்வதெல்லாம் சும்மா பம்மாத்து கதை, அதே தரமில்லாத பொருளை வால்மார்ட்டிடம் வாங்கி அண்ணாச்சிகள் இத்தனை நாளும் விற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

விரைவில் நானே முழு விவரத்துடன் பதிவு போடலாம் என இருந்தேன்.

Anonymous said...

@Vavaal : I apologise for not being able to reply back in Tamil , I understand that the farmers are not benefitting in the existing system cos of syndicates or agents.This is something the government has to resolve within it’s boundaries and it has all the powers to do this. I hope you would have read Kurangu Appam story. I am not blindly opposing FDI investment in the retail industry. I have done some research thesis on various topics. One of it was “ The impact of Foreign banks in the Indian banking industry”. My conclusion was in favour of foreign banks. Now your next question might be why foreign banks and not foreign retail ? There is a difference between need and want. People’s basic needs such as food, energy,water,transport should always be in the hands of the government. When I say hands of the government they should have the control and be the decisive power. If these are affected at any time people will suffer. Nationalised banks standard improved a lot cos of the entry of foreign banks. But they had the resource, back up from the government to compete with the foreign banks. Local small stores can’t survive competition from the supermarket giants .They will indulge in all tactics to stamp out the local retailers.Eg: In the Uk now 90% of the retail market is in the hands of the Supermarket chains. You itself admit what happened to the local cola producers after Coke’s and Pepsi entry. I am not really bothered in this case as this is not a need. People can live without drinking cola. There is a bigger picture to this than what we can all actually think. I would like to sum up on this issue based on my knowledge and understanding. It’s all I have seen through my years of living in Europe. MNC’s are richer than the governments here.
-

Anonymous said...

@Vavaal : I apologise for not being able to reply back in Tamil , I understand that the farmers are not benefitting in the existing system cos of syndicates or agents.This is something the government has to resolve within it’s boundaries and it has all the powers to do this. I hope you would have read Kurangu Appam story. I am not blindly opposing FDI investment in the retail industry. I have done some research thesis on various topics. One of it was “ The impact of Foreign banks in the Indian banking industry”. My conclusion was in favour of foreign banks. Now your next question might be why foreign banks and not foreign retail ? There is a difference between need and want. People’s basic needs such as food, energy,water,transport should always be in the hands of the government. When I say hands of the government they should have the control and be the decisive power. If these are affected at any time people will suffer. Nationalised banks standard improved a lot cos of the entry of foreign banks. But they had the resource, back up from the government to compete with the foreign banks. Local small stores can’t survive competition from the supermarket giants .They will indulge in all tactics to stamp out the local retailers.Eg: In the Uk now 90% of the retail market is in the hands of the Supermarket chains. You itself admit what happened to the local cola producers after Coke’s and Pepsi entry. I am not really bothered in this case as this is not a need. People can live without drinking cola. There is a bigger picture to this than what we can all actually think. I would like to sum up on this issue based on my knowledge and understanding. It’s all I have seen through my years of living in Europe. MNC’s are richer than the governments here.
- Better shopping experience: Supermarkets will definitely become the first choice for customers, shopping will be a delight air conditioned spaces, parking, door delivery etc. Better packaging ,quality ,display of products.

- Pricing : Consumers will benefit in the short term due to low prices . Supermarkets will be constantly tracking prices of their competitors every second and they will make sure you are informed that they offer the cheapest prices through advertising, promotions etc. Amazon is very good at this; my cousin’s job is too track and update prices.


- Loyalty cards, offers and other promotions : These will be very attractive in the beginning , you will get some free goodies but the end result would have been you would have doubled your spending which is what exactly they expect you to do. Eg: for 10000 points you will get a 100 Rs voucher. 1Rupee spent = 1 point. I am not saying everyone will fall into this trap but a considerable number of people will.

Anonymous said...

- Another important thing is the supermarket stores will be recording your spending habit of yours in their database. They will know all your tastes and preferences even what size underwear you wear. They will be holding a freaking amount of information on you. Accordingly they will be targeting you with their promotions. People will be ending up buying things in surplus.

- It will look like a fierce pricing competition is going on between the supermarkets but actually they would have joined hands together already to screw us. Eg: Coke and Pepsi’s pricing is similar or same.

- Farmers won’t get better prices : Supermarkets will determine the product’s features. It has to be to certain specifications demanded by them.Eg a potato has to be certain size,weight,figure,colour otherwise they will dump off the remaining lot calling it as wastage or damaged. Even UK farmers have no voice against this, there are lots of horrible stories here. At one point the farmers decided to stop supplying to supermarkets . But very soon the supermarkets were importing apples from Newzealand . This is just an example , now most of the products are imported from foreign countries. Apples, Lamb from Newzealand etc. They will use the same strategy against Indian farmers.

- Tax evasions: MNC’s are very good at this; they will show zero profit end of the day using all accounting loop holes. Eg: Vodafone.

- Working conditions of employees : I see this as the only positive of FDI in retail, even though the foreign supermarkets are very exploitive and cunning , they are reasonable to an extent when it comes to working conditions, I think it is also because of strict government laws here in Europe . But still some supermarkets make their employees work extra hours for free here. If they apply the same working conditions in India, it would be really great for the employees. I have seen this in own my family in India where my own father and relatives treats his employees as slaves , this has to change. They were working 365 days a year without leave and almost 16 hours a day. After big arguments with my family and relatives I forced them to change this.
I am not saying that the existing local retailers are good i, but again the government should enforce laws such as maximum working hours , minimum wages ,annual leave etc in all types of Industries. India’s consumer market is like a treasure pot for the foreigners. Is it not enough they already screwed us for 400 years. I don’t care if Ferrari and BMW’s are running in Indian roads as far I can afford to travel by trains and buses. I am not in supportive of the existing conditions as lots of things have to be improved by the government. Also I am not supporting FDI. This will not only affect local producers ,retailers but also the consumers.

Jayadev Das said...

@ Priya Karthick

உங்க பின்னூட்டத்துக்கு நன்றி. Foreign கோலாக்கள் உள்ளூர் கோலாக்களை அடித்ததை விட அவற்றை குடிப்பதால் நமக்கு ஏற்ப்படும் தீய விளைவுகள் தான் மிகவும் பயமுறுத்துகின்றன. வெளிநாட்டுக் கோலாக்கள் உள்ளூர் கோலாக்களை காணாமல் போகச் செய்த மாதிரி, வால்மார்ட் உள்ளூர் வியாபாரிகளை காணாமல் போகச் செய்யாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அடி நாலாபக்கமும் விழும் போல இருக்கே!!

Anonymous said...

http://reverienreality.blogspot.com/2012/09/blog-post_24.html

வவ்வால்: பெரிய அளவிலான சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு வந்தால் இந்திய நலன் பாதிக்கப்படும் என்பது பொதுவான ஒரு கருத்து, அதனடிப்படையில் பார்த்தால் உங்கள் கருத்து சரியாகத்தான் இருக்கு.முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகங்கள் தனியாகவோ, சங்கிலித்தொடராகவோ வர வேண்டும்

REVERIE


இதில் நீங்கள் சொல்வது ஐடியல் (IDEAL) நிலை...
ஆனால் நடைமுறையில் சாத்தியம் இல்லை....இது மேற்கத்திய நாடுகளில்,குறிப்பாக அமெரிக்காவில் ஒரு சதவீத மக்கள் மட்டுமே பயன்பெறும் தோற்றுப்போன பரிசோதனை.இதனால் வாழ்விழந்து போனோர் அத்தனை சிறுதொழில் வர்த்தகர்களும் தான்...இதற்கு இந்தியா விதிவிலக்காகாது.
நாம எப்படி சுத்தி வளைச்சாலும் கடைசியில...ஊருக்கு ரெண்டு வால்மார்ட்...டார்கட் ன்னு தான் இது முடியும்...

வவ்வால்: இதனால் விற்பனை வரி, சேவை, வருமான வரி சரியாக அரசுக்கு வருவதில்லை

REVERIE


இதில் மட்டும் அமெரிக்காவின் முந்தய சிறு வர்த்தக முறையை நாம் பயன்படுத்தலாம்...

உதாரணத்துக்கு...ஒரு பென்சில் கடையில் விற்கப்பட்டாலோ,வாங்கப்பட்டாலோ அந்த நிமிடமே அது கணக்கில் வருகிறது...கூடவே அத்தனை வரிகளும்...ஏய்ப்பதுக்கு எந்த வழியும் இல்லாமல்... அதை நாமும் பயன்படுத்தலாம்
இதையெல்லாம் தாண்டி உணர்வுபூர்வமாக சிந்தித்தால்...எனக்கு அண்ணாச்சி கடையில் தான் பலசரக்கு வாங்க பிடிக்கும்...சண்முகம் கடையில் முடிவெட்ட பிடிக்கும்...ஏன் முத்துகிருஷ்ணன் கறிக்கடையும்...தெருமுனை பேக்கரியும் வேணும்...
ஏன்னா...
எங்க தாத்தா கூட எங்க அப்பா கூட கை பிடிச்சு அங்கல்லாம் போன நினைவு இன்னும் இருக்கு...வேணும்னா அவர்கள் வரியை சரியா கட்ட வழி செய்யலாம்...
அதை விட்டுட்டு இது எல்லாத்தையும் வால்மார்ட்லயோ டார்கட்லையோ பண்ண என் இதயம் ஒத்துக்கல...மூளை லேசா சரின்னு சொன்னாலும்...

வவ்வால்: அந்த காலத்தில் டூரிங்க் கொட்டாய்ல படம் பார்த்தார்கள் என்பதற்காக இன்னமும் அதிலா பார்க்கிறோம், நவீனம் நாடவில்லையா? டூரிங்க் கொட்டாய் அழியாமல் காக்க வேண்டும் என்று சொன்னால் ஆதரித்து இருப்பீர்களா?

REVERIE


விவசாயிகள் செழிக்கணும்கறதுல மாற்றுக்கருத்தே இல்லை நண்பரே.
அதற்கு இந்த தாராளமயத்தின் படி எந்த உதவியும் செய்யாதுங்றது என் நிலைப்பாடு..


கூடவே அரசுக்கு வரி ஒழுங்கா உடனடியா கிடைத்தாலும்... இந்த தாராளமயத்தின் உதவி இல்லாமலே அரசுக்கு வரி ஒழுங்கா கிடைக்க வைக்க முடியும்ங்கறது என் கருத்து... ஆப்ரிக்காவிலையே இது முடியுது...ஆளுக்கு ஒரு தொலைபேசி கொண்டு வந்த நம்மால இதுவும் முடியும்.. .


கதையில் வேண்டுமானால் எறும்பு யானையை வெல்லலாம்...வாழ்க்கை வேறல்லவா...? நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் அமெரிக்க சிறு வணிகர்கள் அழிந்த கதை...ஒரு டூரிங்க் கொட்டாய் எடுத்துவிட்டு ஒரு நவீன சினிமா வருகிறது நண்பரே...


நூற்றுக்கணக்கான சிறு வணிகர்களை அழித்து ஒரு வால்மார்ட் வருகிறது...அது தான் வித்தியாசம்....


அது நூறு குடும்பம் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல...சமூகம் சார்ந்த பிரச்னை...நூறு குடும்பங்களின் பணம், சொத்து, முதலீடு எல்லாம் அந்த சமூகத்துக்கே...

ஒரு வால்மார்ட்டின் பணம் எங்கே போகும்...கடவுளுக்கே வெளிச்சம்

VAVVAALJI....The saaga continues....

SathyaPriyan said...

நீங்கள் இதுவரை சொன்ன வாதத்தில் ஒன்றில் கூட வால்மார்ட் வந்தால் நன்மை என்று சொல்லவில்லை. இப்போது நடக்கும் சுரண்டல்களை பற்றி மட்டுமே சொல்கிறீர்கள்.

ஒழுக்கத்துடன் வாழுங்கள் இல்லை என்றால் எய்ட்ஸ் வந்துவிடும் என்று எச்சரிக்கை செய்பவனிடம், எனக்கு இபோதே கேன்சர் இருகிறது அதனால் பாதகம் இல்லை என்று சொல்வது போல இருக்கிறது உங்கள் வாதம்.

ஒழுக்கத்துடன் வாழ்ந்து கேன்சருக்கும் மருத்துவம் செய்வது தான் ஆக்க பூர்வமான யோசனை. அதை தான் நீங்களும், நானும் தேட வேண்டும்.

//
கொலைகாரனுக்கு பயந்து தீவிரவாதிக்கிட்டே போகலாலாமா என்கிறீர்கள், நல்ல கேள்வி,அப்போ இந்திய வியாபாரிகள் விவசாயிகள்,நுகர்வோர்களை கழுத்து ந்றிச்சு கொல்லலாம், செத்தாலும் இந்தியனால் சாவு என பேசுதே உங்க சுதேசம் :-))
//
நான் எங்கே அப்படி சொன்னேன். 'கமல் பிடிக்கும்' என்றால், 'ரஜினி பிடிக்காதா?' என்று கேட்பது போல் உள்ளது. ஏன் இருவரையும் ஒருவருக்கு பிடிக்க கூடாதா?

நாடார்கள் அராஜகம் செய்தால் அதையும் தட்டி கேட்க வேண்டியது தான். நீங்கள் எல்லாம் ஏன் மளிகை கடை என்ற ஒன்றை மட்டுமே குறி வைக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

வால்மார்ட்டில் மளிகை சாமான்கள், காய் பழங்கள், மாமிசம், மீன், முட்டை, மருத்துவ பொருட்கள் என்று அனைத்தும் தான் கிடைக்கும்.

அண்னாச்சி கடையில் மீன் கிடையாது. மீன் மார்கெட்டில் மீன் விற்பவர்கள் குறித்து பேசலாமே. ஆனால் அங்கும் ஒரு அண்ணாச்சி இருப்பார் என்பது தான் உண்மை. ஆனால் என்ன, அவர் வேறு சமூகத்தை சார்ந்தவராக இருப்பார். அவ்வளவு தான் வேறுபாடு.

ஆக இம்மாதிரி சுரண்டல்கள் எல்லா இடத்திலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்தியா முழுதும் இது தான் நிலை. மன்னார்குடி பட்டுக்கோட்டை பகுதிகளில் விவசாயக் கூலிகளை பெருமளவில் யார் சுரண்டுகிறார்கள் என்பதும் தெரியும், திருப்பூரில் சாயப்பட்டறை தொழிலாளர்களை யார் சுரண்டுகிறார்கள் என்பதும் தெரியும்.

இதை போன்ற அராஜகங்களை தடுக்க உழவர் சந்தை போன்ற வற்றை கலைஞர் கொண்டு வந்தார். இன்னும் ஒரு படி மேலே சென்று அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்க முயற்சி செய்யலாம். அரசே மீன் பிடி தொழிலை ஒப்பந்த முறையில் செய்யலாம். மீனவர்களை அரசாங்க ஊழியர்கள் ஆக்கலாம். கிடைக்கும் கொள்முதலில் ஒப்பந்த முறையில் பங்கிட்டு கொள்ளலாம். மீன் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் குறைந்தபட்ச தொகை கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்தலாம்.

இந்திய அரசின் கொடி பறக்கும் கப்பலில் பயணம் செய்யும் இந்திய அரசாங்க அதிகாரிகளை இலங்கை படையினர் சுட்டு வீழ்த்தினால் அவர்களுக்கு மரண அடி தான் கிடைக்கும்.

சாராயக் கடை நடத்தும் அரசால் மீன் பிடி தொழிலையோ அல்லது விவசாய பொருட்களை நேரடி கொள்முதலோ செய்ய முடியாதா?

//
வால்மார்ட் இந்தியாவில் ஏற்கனவே செயல்ப்பட்டுக்கிட்டு என்பதை அறீவீர்களா?
//
ஹோல்சேலுக்கும் ரீட்டெயிலுக்கும் வித்தியாசம் கிடையாதா?

//
எனவே வால்மார்ட் தரமில்லாத பொருளை விற்கும் என சொல்வதெல்லாம் சும்மா பம்மாத்து கதை, அதே தரமில்லாத பொருளை வால்மார்ட்டிடம் வாங்கி அண்ணாச்சிகள் இத்தனை நாளும் விற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
//
இருக்கலாம், ஆனால் நேரடியாக ரீட்டெயிலில் இறங்கும் போது அவர்களின் மனிபுலடிஒன் பல மடங்கு அதிகரிக்கும். ஹோல் சேல் விலைக்கே ரீட்டெயிலில் தரும் போது தரம் என்னவாகும்?

உலகின் ஆறில் ஒரு பங்கு மனிதர்களுக்கு உணவளிக்க வேண்டிய நிலையில் இருக்கும் இந்திய விவசாயிகள், மீனவர்கள் ஆகியோர் மேனிபுலேட் செய்யப்பட்டால் அடுத்த இருபது அல்லது முப்பது ஆண்டுகளில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் அது நிச்சயம் வருங்கால இந்திய சந்ததியினருக்கு நல்லாதாக மட்டும் இருக்காது.

SathyaPriyan said...

//
Another important thing is the supermarket stores will be recording your spending habit of yours in their database. They will know all your tastes and preferences even what size underwear you wear. They will be holding a freaking amount of information on you. Accordingly they will be targeting you with their promotions. People will be ending up buying things in surplus.
//

Precisely. They have an abundance of data on the shopping experience. They can manipulate what you buy psychologically by tweaking the following. In the past they had just by looking at the customers provided a list of items they would shop which had turned out to be more than 90% accurate.

1.What must be the minimal and maximum distance from the entrance of the store an item must be kept for display and shopping?

2.Which items must be kept at the closet aisle?

3.Which items must be kept at the farthest aisle?

4.Which items must be kept at the lower shelf?

5.Which items must be kept at the higher shelf?

6.Which items must be discounted and promoted and at which seasons?

7.And many more......

Anonymous said...

@ Sathya Priyan

Thank you for this post , you have almost highlighted all important factors against FDI in retail sector.

வவ்வால் said...

ப்ரியா கார்த்திக்,

புரிதலுக்கு ,நன்றி!

ஆங்கிலத்தில் எழுதியாக வேண்டிய நிலை எனில் வேற என்ன செய்ய முடியும்,எனக்க்கு பிரச்சினை இல்லை, படிக்கிறவங்க பெருசா ஆங்கில கருத்துக்களை பார்த்தால் அப்படியே தாண்டி விடுவார்கள் :-))

அதனால் தான் நான் பெரும்பாலும் ஆங்கிலத்தினை தவிர்த்துவிடுவது, மற்றபடி ஆங்கிலத்து எதிரியல்ல.

//Local small stores can’t survive competition from the supermarket giants .They will indulge in all tactics to stamp out the local retailers.Eg: In the Uk now 90% of the retail market is in the hands of the Supermarket chains. //

இங்கு தான் சந்தை அமைப்பின் வேறுபாடு இடம் பிடிக்கிறது.

மேலை நாடுகளில் ஒரு லட்சம் பேர் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் கூட அருகிலேயெ கடைகள் இருக்காது, பெரும்பாலும் ஷாப்பிங் ஸோன் என ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே அனைத்துக்கடைகளும் இருக்கும், அன்ங்கே சிறு வணிகருக்கு அருகிலேயே பெரு வணீகர் கடை திறந்தால் நேருக்கு நேர் போட்டியாகி ,சிறுவணிகர் பாதிக்கப்படுவார்.

மக்களும் காரில் 30 நிமிட டிரைவில் போய் தான் பொருட்கள் வாங்கியாக வேண்டும், அதே போல ஒவ்வொரு முறையும் ஒரு வாரம்,மாதம் என தேவையானதை வாங்குவார்கள், எனவே பெரிய கடைய்யிலேயே வாங்கிவிடுவார்கள்.

இந்தியாவில் ஷாப்பிங் ஸோன் என இருந்தாலும் அங்கே எல்லாரும் தினமும் வாங்க போவதில்லை, அருகிலேயே நடந்து போற தொலைவில் அவ்வப்போது வாங்கிக்கொள்வார்கள்.

இப்போவும் ரிலையன்ஸ், மோர் எல்லாம் இருக்கு என்னைப்போன்றவர்கள் எல்லாம் அங்கே மாதம் ஒரு முறை போனாலே அதிகம்.

மிடில் கிளாஸ், லோயர் மிடில் கிளாஸ் எனப்படும் பகுதியினர் , தினசரி வாங்கும் பழக்கம் கொண்டவர்கள்.

மைக்ரோ லெவல் ஷாப்பிங். வெளிநாட்டில் வால்மார்ட்டில் ஷாம்பு சாஷே, சிறிய சோப்பு, 1 ரூபாய்க்கு வாஷிங் பவுடர் எல்லாம் உண்டா?

1/2 லிட்டர் எண்னை, ஷாம்பு பாக்கெட், 5 ரூபாக்கு மிளகு தூள் என வாங்கும் வழக்கமே மக்களிடம் அதிகம். அதாவது மக்கள் தொகையில் சுமார் 70% மக்களின் ஷாப்பிங் இப்படித்தான் நடக்கிறது.

அவர்கள் எல்லாம் இன்னும் ரிலையன்ஸ் பக்கமே எட்டிப்பார்க்கவில்லை, எங்கே வால்மார்ட் ,டெஸ்கோ வந்தால் போக.

தொடரும்...

வவ்வால் said...

ஒப்பீட்டுக்கு ஒன்று சொல்கிறேன், நிர்மா எனப்படும் சலவைத்தூள் தமிழ்நாட்டில் பெரிதாக விற்பனையாகாமல் போனதற்கு காரணம் அறீவீர்களா?

ஹிந்துஸ்தான் யுனிலீவரின் சலவைத்தூள் மார்க்கெட்டுக்கு சவால் விட்ட இந்திய தயாரிப்பு, 2004 இல் உலகிலேயேஅதிகம் விற்பனையான சலவைத்தூள் என கின்னர் ரெக்கார்ட் (நினைக்கிறேன்) படைத்தது.

வட இந்தியாவில் வெகுவாக பிரபலமானதால், தமிழ்நாட்டு சந்தையில் நிற்க முடியவில்லை, காரணம் ,நம்ம ஊரு மொத்தவியாபாரிகளுக்கு ஹிந்துஸ்தான், பி&ஜீ போன்றவர்கள் கொடுக்கும் அளவுக்கு கமிஷன் கொடுக்க முடியவில்லை. மேலும் அவர்கள் பலப்பொருட்களை மொத்தமாக காம்போ ஆக சப்ளை செய்வதால் தனியாக ஒரு பொருளை மட்டும் தமிழ்நாட்டு வியாபாரிகள் வாங்குவதில்லை.

நிர்மா தரமாக இல்லை எனலாம், ஆனால் அது கொடுத்த காசுக்கு தரமான ஒன்று இன்றும் ஒரு கிலோ 50 ரூக்குள் தான்,(1980 இல் ஒரு கிலோ வெறும் ரூ 1.50 தான்) சலவைத்தூள் மார்க்கெட்டில் கடைமட்ட வகை சலவைத்தூள் விலையை நிர்ணயம் செய்வதே நிர்மாவின் விலை தான்.

நிர்மா மட்டம் என ஹிந்துஸ்தான் யுனிலீவர் எல்லாம் சொன்னாலும் ,போட்டியை சமாளிக்க வீல் என விலைக்குறைவான ஒரு சலவைத்தூளை தயாரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள்.

ஏரியல்,சர்ப் எக்செல் எல்லாம் பிரிமியம் வகை, வீல் என்ற மலிவு சலவைத்தூளை வைத்து இப்போ கொஞ்சம் கொஞ்சமாக நிர்மாவினை பின் தள்ளுகிறார்கள், ஆனால் அதற்குள் காரி(ghari) என ஒரு உள்ளூர் சலவைத்தூள் வந்து சர்வதேச கம்பெனிகளை ஆட்டுது.

உண்மையில் இந்தியாவில் விற்பனையாகும் 99% நுகர்வோர் பொருட்கள் சர்வதேச நிறுவனங்களின் பிராண்டுகளே, அவை எல்லாம் உள்ளே வந்து தயாரிப்புகளை அடித்து நொறுக்குது,அதற்கு துணை போவது நம்ம உள்ளூர் வியாபாரிகள், அதுவும் தமிழ்நாட்டு வியாபாரிகள், சர்வதேச பிராண்ட் உற்பத்தியாளர்களுக்கு மிகவும் நம்பிக்கையானவர்களாகவே எப்போதும் நடந்துக்கொள்கிறார்கள்.

மற்ற மாநிலங்களின் அப்படியான நிலை இல்லை, கடை வச்சிருக்கவன் யார் கொண்டு வந்து கொடுத்தாலும் விற்பனை ஆனால் , தானே வாங்கிவிற்பான்.தமிழ் நாட்டில் மாநில "சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் - மாவட்டம்- நகரம், சிறு கடை என ஒரே அமைப்பிலான சிண்டிகேட் நடக்குது. ஒரு தயாரிப்பை நினைத்தால் ஊத்தி மூட வைப்பார்கள்.

காரி,நிர்மா போன்றவற்றுக்கு தமிழக கடைகளில் இடமில்லை, பெப்சி,கோக் தயாரித்தால் அதை மட்டும் வாங்கி விற்கணும்னு கடைக்காரருக்கு என்ன தலைவிதி, பவண்டோ, காளி மார்க் ஏன் வாங்கி விற்காமல் போனதேன்? எல்லாம் எத்தனை பெர்செண்ட் மார்ஜின் என்பதே வியாபாரத்தில் மேட்டர்.

உள்ளூர் வியாபாரிகளால், உள்ளூர் தாயாரிப்பிகளுக்கும் சேதம், மக்கள், உற்பத்தியாளர்களுக்கும் பண இழப்பு.

இன்னிக்கு வால்மார்ட் வந்தா குடி முழுகிடும்னு சொல்பவர்களால் எத்தனையோ பேர் குடி மூழ்கியதே,அப்போ எல்லாம் சுதேச உணர்வு இல்லாமல் போச்சா?

ஜில்லட் பிளேட் இந்தியாவுக்கு எப்போ வந்தது, அதற்கு முன்னர் இந்தியாவில் யாரும் சவரமே செய்யவில்லையா,எல்லா வெளிநாட்டு பிரான்டையும் போட்டிப்போட்டு விற்பவர்கள், அதையே வெளிநாட்டுக்காரனே நேரா செஞ்சால் நாடு கெட்டுப்போயிடும்னா எப்படி?

//This is something the government has to resolve within it’s boundaries and it has all the powers to do this//

அரசு செய்திருக்கணும் என்றால் எவ்வளவோ செய்திருக்கலாமே, 18 மணி நேர மின் தடையை அன்பாக தருகிறார்கள், காவேரில தண்ணியக்காணோம், இன்னும் ஒரு வாரத்தில் தண்ணீர் வரவில்லை எனில் பல லட்சம் ஹெக்டேர் நெல் கருகிடும், அரசு அதன் சக்தியை வைத்து எதுவும் செய்கிறதா?

அவசியம் செய்ய வேண்டியதையே செய்யவில்லை, வியாபாரிகள் சிண்டிக்கேட்டை கேட்கவா போகுது.

வவ்வால் said...

சத்யன்,

நான் சொல்வதிலே சாதகங்களையும் காணலாம், வெங்காயம் ரோட்டில் கொட்டும் நிலை விவசாயிக்கு , அதனை வாங்க ஆள் இல்லை என்றால் ஏன்?எனவே முறைப்படுத்தப்பட்ட வர்த்தகர் வந்தால் கொள்முதல் சீராக நடக்கும்.

மேலும் நான் நான்கு சுட்டிகள் போட்டேன் படித்திருப்பீர்கள் என நினைத்தேன், எல்லாம் வாழைப்பழத்தினை உறிச்சு ஊட்டிவிட சொன்னால் எப்பூடி :-))

//வால்மார்ட்டில் மளிகை சாமான்கள், காய் பழங்கள், மாமிசம், மீன், முட்டை, மருத்துவ பொருட்கள் என்று அனைத்தும் தான் கிடைக்கும். //

நல்ல வேளை ரெண்டு முழம் பூ, கோலமாவு என பட்டியல் போடாமல் போனீர்கள்.

இந்திய அமைப்பு, அயல்நாட்டு அமைப்பினை புரிந்த்து கொள்ளாமை என்பேன்.

இந்தியாவில் பிராசஸ்டு மீட், ஃபிஷ் எல்லாம் மக்கள் மோந்து கூட பார்க்க மாட்டார்கள்.

கோழி,ஆடு, மீன், எறா, நண்ரு, காடை,கவுதாரி, எதுவா இருந்தாலும் ஃபிரஷ் ஆக அன்று அறுத்து, அன்று கொடுக்க வேண்டும், இதான் இந்திய நுகர்வோர் மனோபாவம், இதனை புரிந்து கொள்ளாமல் உங்களைப்போலவே வால்மார்ட்டும் நடந்துக்கொண்டால் அடி வாங்கிட்டு ஓடிறும் :-))

இந்தியா பல உணவுப்பழக்கம், காலாச்சாரம், சில அடிப்படையான நுகர்வு மனோபாவம் கொண்டது, இங்கே பெரும்பாலான மேலைநாட்டு வியாபார சித்தாந்தங்கள் தோற்றுவிடும்.

//ஹோல்சேலுக்கும் ரீட்டெயிலுக்கும் வித்தியாசம் கிடையாதா? //

வால்மார்ட் பொருள் தரமாக இருக்காது, அதனால் வரக்கூடாதுன்னும் நீங்க சொன்னீங்களே, இப்போவும் வால்மார்ட் மூலமாக பொருட்கள் மக்களுக்கு வருதே அதை செய்றதும் நம்ம ஊரு யாவாரிகள் தானே, தரம் எப்பூடி இருக்குமாம் :-))

வால்மார்ட்டே கடை தொறந்து வித்தா தரங்கெட்ட பொருள், அதனை நான் வாங்கி விற்றால் தரமாக இருக்கும் :-))
----------

ரெவரி,

இங்கேயுமா?

தனியா நான் ஒரு கச்சேரி வைக்கிறேன் இருங்க.

//ஒரு வால்மார்ட்டின் பணம் எங்கே போகும்...கடவுளுக்கே வெளிச்சம்
//

hindustan unilever, procter &gamble, GSK, Nestle, Cadbury, Kraft, Golgete-Palmoliv, போன்ற நிறுவனங்கள் எண்ணற்ற சர்வதேச பிராண்டுகளை இங்கே விற்கிறார்களே, அப்போ காசு எல்லாம் எங்கே போகும்?

விரிவா பின்னர் என் பதிவில் பார்க்கலாம்.

வவ்வால் said...

சத்யன்,

மறு மொழி மட்டுறுத்தலை வைத்துக்கொண்டு ,நீங்கள் இப்படியெல்லாம் எய்ட்ஸ்,கேன்சர் என உதாரணம் கேட்டி பேசினால் எப்பூடி?

அப்போ ஒழுக்கமாக வாழலைனா மட்டும் தான் எய்ட்ஸ் வருமா?

அமெரிக்காவில் இந்தியாவை தேடுவதும், இந்தியாவில் அமெரிக்காவை தேடுவதுமே அயலக மக்களின் வேலையாக போச்சு :-))

ஆல் தி பெஸ்ட்!!!

மறுமொழி மட்டுறுத்தல் எடுத்தால் மீண்டும் வருகிறேன் , அதான் எயிட்ஸ் வராமல் உங்களை காக்குமெனில் ஒன்றும் சொலவதற்கில்லை :-))

வவ்வால் said...

சத்யன்,

//நான் எங்கே அப்படி சொன்னேன். 'கமல் பிடிக்கும்' என்றால், 'ரஜினி பிடிக்காதா?' என்று கேட்பது போல் உள்ளது. ஏன் இருவரையும் ஒருவருக்கு பிடிக்க கூடாதா? //

சினிமா பாத்தே ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பீங்க போல :-)

ரஜினியா, கமலா என்று ரசிக மன்ற வாதம் இல்லை, கொடுத்த காசுக்கு என்ன பலன் ?

ரஜினி ரசிகன் மட்டமான ரஜினி படமும் பார்ப்பான், கமல் ரசிகன் கமலின் மட்டமான படமும் பார்ப்பான், எவனும் மட்டமான சாப்படை சாப்பிட விரும்ப மாட்டான் :-))

66 ஆண்டுகள் ஆச்சு இந்தியா சுதந்திரம் பெற்று, இத்தனை நாளா இந்திய வியாபாரிகள் வங்கி,விற்றார்கள்,அவர்கள் மட்டுமே வளம் பெற்றார்கள், இந்த 66 ஆண்டுகாலத்தில் எந்த விவசாயி செழித்தான், பலரும் விவசாயம் விட்டு ஓடிக்கொண்டு இருக்காங்க, அந்த உண்மை தெரியுமா?

வால்மார்ட் வரவே இல்லை, விவசாயிகள் விவசாயம் செய்யவில்லை, நீங்க யாருக்காக பேசுறிங்களோ அந்த வியாபாரிகள் என்ன செய்வார்கள்?

பதில் இருந்தா சொல்லுங்க :-))

வெறும் சில லட்சம் வியாபாரிகள் பல கோடி விவசாயிகள்,சிறு உற்பத்தியாளர்களை கொல்றாங்க அதை பற்றி பேசக்கூட நாதியில்லை ...

இதை எல்லாம் பார்க்கும் போது , நீர் என்னாத்துக்கு அமெரிக்காவுக்கு போகணும்,இங்கேயே இருந்து சேவையை ஆத்தியிருக்கலாமேனு ஒரு கேள்வி எனக்குள் ஏனோ எழுகிறது :-))

என்னமோ போங்கப்பா... படிச்சவங்க பேசினா அதான் ஒலக நாயம் :-))

SathyaPriyan said...

//
இந்திய அமைப்பு, அயல்நாட்டு அமைப்பினை புரிந்த்து கொள்ளாமை என்பேன்.

இந்தியாவில் பிராசஸ்டு மீட், ஃபிஷ் எல்லாம் மக்கள் மோந்து கூட பார்க்க மாட்டார்கள்.

கோழி,ஆடு, மீன், எறா, நண்ரு, காடை,கவுதாரி, எதுவா இருந்தாலும் ஃபிரஷ் ஆக அன்று அறுத்து, அன்று கொடுக்க வேண்டும், இதான் இந்திய நுகர்வோர் மனோபாவம், இதனை புரிந்து கொள்ளாமல் உங்களைப்போலவே வால்மார்ட்டும் நடந்துக்கொண்டால் அடி வாங்கிட்டு ஓடிறும் :-))
//
இப்படியே பஜனை செய்து கொண்டிருங்கள்.

http://www.chennaiseafood.in/

Long wait is over for seafood lovers residing in (Madipakkam, Velachery, Pallikaranai,Kilkattalai and OMR). Now you can get ocean fresh seafood right in your doorstep without any hassles. www.chennaiseafood.in home deliver fresh catch right to your households. You can place the orders either online or through phone. Please find the details below. About UsWe are in the fishing business for last 40 years based out of Chennai. Since we have our own boats we make large catches and sell them directly for export companies where these were delivered to US and Japan primarily. Currently we see that except sea-food all items are more or less delivered right to your door step. But still you have to rely on local vendors or local fish market to buy your fish where there is no guarantee of the fish quality. To avoid this and make your purchase a simple and of high quality we have planned to retail our catch directly to Chennai households. .....

இப்படி எனக்கு ஒரு வாரத்திற்கு ஒரு டஜன் மெயில்கள் வருகின்றன. இந்தியாவில் இருக்கும் எனது நண்பர்கள் பலர் இவர்களிடம் வாங்கி சாப்பிடுகிறார்கள்.

//
அமெரிக்காவில் இந்தியாவை தேடுவதும், இந்தியாவில் அமெரிக்காவை தேடுவதுமே அயலக மக்களின் வேலையாக போச்சு :-))

ஆல் தி பெஸ்ட்!!!
//
எந்த ஆள் நானில்லை. 365 நாளும் என்னால் பர்கரும் சான்ட்விச்சும் சாப்பிட முடியும். என்னால் முடியாதது தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் இட்லி தோசை சாப்பிடுவது தான்.

//
66 ஆண்டுகள் ஆச்சு இந்தியா சுதந்திரம் பெற்று, இத்தனை நாளா இந்திய வியாபாரிகள் வங்கி,விற்றார்கள்,அவர்கள் மட்டுமே வளம் பெற்றார்கள், இந்த 66 ஆண்டுகாலத்தில் எந்த விவசாயி செழித்தான், பலரும் விவசாயம் விட்டு ஓடிக்கொண்டு இருக்காங்க, அந்த உண்மை தெரியுமா?
//
சரி, வால் மார்ட் வந்தால் விவாசாயிகள் நிலை மாறுமா? இந்தியா வியாபாரிகளும் அழிவார்கல், விவசாயிகளும் அழிவார்கள்.

//
மறு மொழி மட்டுறுத்தலை வைத்துக்கொண்டு ,நீங்கள் இப்படியெல்லாம் எய்ட்ஸ்,கேன்சர் என உதாரணம் கேட்டி பேசினால் எப்பூடி?

ரஜினியா, கமலா என்று ரசிக மன்ற வாதம் இல்லை, கொடுத்த காசுக்கு என்ன பலன் ?
//
அனாலஜி சொன்னால் அதன் சாரத்தை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை அப்படியே பிடித்துக் கொண்டு தொங்க கூடாது.

//
இதை எல்லாம் பார்க்கும் போது , நீர் என்னாத்துக்கு அமெரிக்காவுக்கு போகணும்,இங்கேயே இருந்து சேவையை ஆத்தியிருக்கலாமேனு ஒரு கேள்வி எனக்குள் ஏனோ எழுகிறது :-))
//
நான் இருப்பது சேவை துறையில் இல்லை. அமெரிக்காவில் நான் சேவையும் செய்யவில்லை. இந்தியாவில் இருக்கும் நீங்கள் என்ன சேவை செய்கிறீர்கள் என்று நான் கேட்கமாட்டேன். ஏனென்றால் சம்பந்தம் இல்லாத கேள்விகள் கேட்பதினால் எனக்கு ஒரு பயனும் இல்லை.


வவ்வால் said...

சத்யன்,

//வநான் இருப்பது சேவை துறையில் இல்லை. அமெரிக்காவில் நான் சேவையும் செய்யவில்லை. இந்தியாவில் இருக்கும் நீங்கள் என்ன சேவை செய்கிறீர்கள் என்று நான் கேட்கமாட்டேன். ஏனென்றால் சம்பந்தம் இல்லாத கேள்விகள் கேட்பதினால் எனக்கு ஒரு பயனும் இல்லை. //

நான் ஒரு மண்ணும் சேவை செய்யவில்லை ,நான் ஒரு தீப்பெட்டி வாங்கினாலும் அதன் வருவாய் இங்கே போகும் அம்புட்டு தான்.

நீங்க உழைத்து என்ன வாங்கி சாபிட்டாலும் ,அதன் வருவாய் எங்கே போகும்னு நானும் கேட்கவில்லை :-))

இந்தியா உருப்படணும்னா, இந்தியாவின் அரசு செலவில் படித்துவிட்டு(தனியார் கல்லூரியில் படித்தாலும் அரசின் வரிப்பணம் அதற்கும் செலவாகும்)

இந்தியாவில் பொழைக்க வழியே இல்லாதது போல வெளிநாட்டுக்கு போனவர்கள் எல்லாம் , வால்மார்ட் வந்தால் இந்திய பொருளாதாரம் சிதைந்து போயிடும்னு எனக்கு பாடம் எடுக்கும் நிலையில் நான் இருக்கேனே , இதுக்கு எவனை உதைக்க :-))

நான் சம்பாதிக்கிற காசுக்கு,எனக்கு வாங்கி சாப்பிட பொருள் கொடுக்காதவன் இந்திய வியாபாரியா இருந்தாலும் எனக்கு வேண்டாம், அதே போல நான் உற்பத்திசெய்த பொருளுக்கு அதில் போட்ட முதலுக்கு காசு கொடுக்காதவன் இந்திய வியாபாரியா இருந்தாலும் எனக்கு வேண்டாம்.

நான் இங்கே வசிக்கிறேன், என் உற்பத்தி இதான், வருமானம் இது தான் , எனக்கு என்ன கிடைக்கும், அதை பொறுத்தே எனது கொள்கை.

சும்மா அன்னிய முதலீடு வேண்டாம்னு சொல்லிட்டு எல்லாம் அன்னிய உற்பத்தி பொருளை வாங்கி விற்பாங்க அப்போ ஒன்னும் சொல்லக்கூடாது, அவனே விக்க வறான்னா அது நாட்டைக்கெடுக்கும்னு புதுசா பாடுங்க, அதான் அன்னிய பொருளை உற்பத்தி செய்து கெடுத்தாச்சே :-))

எல்லா அன்னிய பிராண்ட் பொருளையும் உற்பத்தி செய்து,வாங்கி விற்பதை வியாபாரிகள் நிறுத்தட்டும் அப்புறமா வால்மார்ட்டை நிறுத்தலாம் :-))

SathyaPriyan said...

//
நான் ஒரு மண்ணும் சேவை செய்யவில்லை ,நான் ஒரு தீப்பெட்டி வாங்கினாலும் அதன் வருவாய் இங்கே போகும் அம்புட்டு தான்.

நீங்க உழைத்து என்ன வாங்கி சாபிட்டாலும் ,அதன் வருவாய் எங்கே போகும்னு நானும் கேட்கவில்லை :-))

இந்தியா உருப்படணும்னா, இந்தியாவின் அரசு செலவில் படித்துவிட்டு(தனியார் கல்லூரியில் படித்தாலும் அரசின் வரிப்பணம் அதற்கும் செலவாகும்) இந்தியாவில் பொழைக்க வழியே இல்லாதது போல வெளிநாட்டுக்கு போனவர்கள் எல்லாம் , வால்மார்ட் வந்தால் இந்திய பொருளாதாரம் சிதைந்து போயிடும்னு எனக்கு பாடம் எடுக்கும் நிலையில் நான் இருக்கேனே , இதுக்கு எவனை உதைக்க :-))
//
சும்மா பேத்தாதீர்கள். நான் இந்தியாவில் இருக்கும் மூன்று வார காலத்தில் செலவு செய்யும் பணம் இந்தியர்கள் பலரின் ஆண்டு வருமானம்.

அக்கார்ட் மெட்ரொ பாலிடனில் ஒரு நாள் ரூம் வாடகை 15000 ரூபாய். மூன்று வார்த்திற்கு நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.

என்னை பற்றி பேசும் போது நான் என்னை பற்றி மட்டும் தான் பேச முடியும். அடுத்தவர்கள் நிலை பற்றி நான் கருத்து தெரிவிக்க முடியாது.

யாரையாவது உதைக்க வேண்டும் என்றால் அடுத்தவரை பற்றி ஒரு புண்ணாக்கும் தெரியாமல் கருத்து சொல்லும் உங்கள் புத்தியை உதைத்து கொள்ளுங்கள்.

பொதுவான விஷயங்கள் குறித்த விவாதத்தில் பொதுவான விஷயங்களை பேசுவதை விட்டு தனிபட்ட விஷயங்களை பேசுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

தனிப்பட்ட தகவல்கள் கேட்டு வரும் பின்னூட்டமோ இல்லை தனிபட்ட முறையில் விமர்சிக்கும் பின்னூட்டமோ இனி வெளியிடப்பட மட்டாது.

வவ்வால் said...

சத்யன்,

//அனாலஜி சொன்னால் அதன் சாரத்தை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை அப்படியே பிடித்துக் கொண்டு தொங்க கூடாது.
//

அப்புறமா இப்படி,

//
இதை எல்லாம் பார்க்கும் போது , நீர் என்னாத்துக்கு அமெரிக்காவுக்கு போகணும்,இங்கேயே இருந்து சேவையை ஆத்தியிருக்கலாமேனு ஒரு கேள்வி எனக்குள் ஏனோ எழுகிறது :-))
//
நான் இருப்பது சேவை துறையில் இல்லை. அமெரிக்காவில் நான் சேவையும் செய்யவில்லை. இந்தியாவில் இருக்கும் நீங்கள் என்ன சேவை செய்கிறீர்கள் என்று நான் கேட்கமாட்டேன். ஏனென்றால் சம்பந்தம் இல்லாத கேள்விகள் கேட்பதினால் எனக்கு ஒரு பயனும் இல்லை.
//

அப்புறம் என்ன தொங்க கூடாது தத்துவம், நான் சொன்னதே புரியலை :-))

//இப்படி எனக்கு ஒரு வாரத்திற்கு ஒரு டஜன் மெயில்கள் வருகின்றன. இந்தியாவில் இருக்கும் எனது நண்பர்கள் பலர் இவர்களிடம் வாங்கி சாப்பிடுகிறார்கள். //

எனக்கு ஒரு மெயிலும் வரக்காணோம், ஜட்டி வாங்க போனாலும், மெயில் ஐடி, போன் நம்பர் கொடுத்தால் இப்படி வரத்தான் செய்யும்,நான் எல்லாம் அப்படி சும்மா எழுதி வச்சிட்டு வர மாட்டேன், என்னிடம் கேட்டால் ,எனக்கு போன் இல்லை, மெயில் ஐடி இல்லை ,காசு கொடுத்தா பொருள் கொடுப்பியா இல்லைனா , வேண்டாம் :-))

நாம எல்லாம் பிளாஸ்டிக் அட்டையை நம்புவதில்லைங்கோ :-))

//எந்த ஆள் நானில்லை. 365 நாளும் என்னால் பர்கரும் சான்ட்விச்சும் சாப்பிட முடியும். என்னால் முடியாதது தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் இட்லி தோசை சாப்பிடுவது தான்.
//
எந்த நாளிலும் இந்தியர்கள் இட்லி ,தோசை, பூரி, சப்பாத்தி, பழைய சோறு, வடுமாங்காய்,சுட்ட கறுவாடு என சாப்பிட்டு வாழுவார்கள், அவர்கள் வால்மார்ட்டே தவம் என இருக்க போவதில்லை, ஏன் நானும் தான், ரிலையன்ஸ் மோருக்கே மாதம் ஒரு தடவை தான் , வால்மார்ட் வந்தாலும் அதே தான் உண்மையில் வியாபார அடிவாங்க போவது ரிலையன்ஸ், மோர் போன்ற சூப்பர் மார்க்கெட் தான்.

எனோட ஷாப்பிங் பேட்டர்ன் இன்னும் ஒரு 10 ஆண்டுகளுக்கு மாற வாய்ப்பில்லை. (என் வருமானம் கன்னா பின்னானு உயர்ந்தால் ஒழிய)

சோ என்னால் இன்று ஒரு அண்ணாச்சி கடைக்கு என்ன வியாபாரம் நடக்குதோ அது தொடர்ந்து நடக்கும்.

மற்ற உயர்வர்க்க மக்களின் ஷாப்பிங் பற்றி யாம் அறியோம் :-))

வவ்வால் said...

சத்யன்,

//சும்மா பேத்தாதீர்கள். நான் இந்தியாவில் இருக்கும் மூன்று வார காலத்தில் செலவு செய்யும் பணம் இந்தியர்கள் பலரின் ஆண்டு வருமானம். //

இதன் அடிப்படையில் தானே நானும் சொல்கிறேன், இந்தியர்களின் வாங்கும் திறன் ரொம்ப குறைவான மதிப்பில் சிறிய அளவில் தினம் இருக்கும்னு சொன்னேன், வால்மார்ட் வந்தாலும் எலைட் குருப் தான் போகும், சில்லரை வியாபாரியின் வியாபாரம் அப்படியே இருக்கும்னு சொன்னேன்.

இப்போ மட்டும் நீங்க 3 வாரம் செலவு செய்வது இந்தியரின் ஆண்டு அருமானம்னு பெருமை பீறிடுது.

நீங்க இங்கே இருக்கவனுக்கு எது சரினு அறிவுறை கூறுவதை நிறுத்திக்கொள்ளலாமே, ஏன் எனில் என்னோட ஆண்டு வருமானமே உங்க 3 வார செலவு தானே :-))

(என்னோட ஒரு மாத செலவின் மூலம் நான் ஈட்டும் சொகுசை அடைய நீங்க 6 மாதம் சம்பாதிச்சா தான் ஈடு கட்ட முடியும்னு சொன்னா மட்டும் என்னை பணக்காரன்னு திட்டுவீங்க )

ஏன் எனில் என்னோட சம்பளத்துக்கே இங்கே கார் டிரைவர், வீட்டு வேலைக்கு ஆள், என வைத்து கொள்ள முடியும் you know india is very cheap to live :-))

எனவே அமெரிக்க பொருளாதாரம், சந்தை என்பது இந்தியாவுக்கு மாறுபட்டது, அங்கே ஃப்ரோசன் சிக்கென் சாப்பிட வேண்டும் என தலை விதி :-))

உண்மைய உள்ளபடி சொன்னால் கடுப்பா தான் , இருக்கும் ஆனால் என்ன செய்ய இந்தியாவுக்கு அறிவுரை சொல்லுபவர்களுக்கு உண்மையை சொல்ல வேண்டியதாக இருக்கே, 66 ஆண்டுகளாக சுதந்திரம் பெற்ற இந்தியாவில் விவசாயிக்கு வாழ்வில்லை, அதற்கு குரல் கொடுப்பார் இல்லை, ஆனால் நாளை வரப்போகும் வால்மார்ட் இந்தியாவை அழித்துவிடும் என குரல் கொடுக்க மக்கள் தயார் ,வாழ்க வளமுடன், இனியும் இங்கே நான் கருத்து சொல்லப்போவதில்லை!

SathyaPriyan said...

//
இப்போ மட்டும் நீங்க 3 வாரம் செலவு செய்வது இந்தியரின் ஆண்டு அருமானம்னு பெருமை பீறிடுது.
//
இதில் பெருமை எங்கே வந்தது? நீங்கள் மட்டுமே இந்தியாவில் செலவு செய்வது போல தோற்றம் அளிக்குமாறு ஒரு வாக்கியம் சொன்னீர்கள். அகற்கு மறுப்பு நான் வேறு எப்படி கூறுவது?

எனது தந்தை இன்னும் 5000 பென்ஷனில் தான் வாழ்கிறார். பொருளாதார காரணிகள் மட்டுமே பெருமைபட கூடியது என்றால் எனது தந்தைக்கு ஒரு கடைநிலை பெருமை கூட கிடைக்காது.

//
என்னோட ஒரு மாத செலவின் மூலம் நான் ஈட்டும் சொகுசை அடைய நீங்க 6 மாதம் சம்பாதிச்சா தான் ஈடு கட்ட முடியும்னு சொன்னா மட்டும் என்னை பணக்காரன்னு திட்டுவீங்க
//
இல்லை அது தான் உச்ச கட்ட உழைப்பு சுரண்டல். அது மாதிரி அடுத்தவரை நான் சுரண்ட விரும்பவில்லை. இப்பொழுது நான் இருக்கும் நிலையிலேயே இருக்க விரும்புகிறேன்.

//
உண்மைய உள்ளபடி சொன்னால் கடுப்பா தான் , இருக்கும் ஆனால் என்ன செய்ய இந்தியாவுக்கு அறிவுரை சொல்லுபவர்களுக்கு உண்மையை சொல்ல வேண்டியதாக இருக்கே,
//
எனக்கு ஒரு கடுப்பும் இல்லை. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்ற கொள்கை தான் சிறந்தது. சொன்னவன் பெரிய யோக்கியனா என்ற ஆராய்ச்சி தேவையற்றது.

அந்த திசையில் நீங்கள் தான் விவாதத்தை செலுத்துகிறீர்கள்.

இத்துடன் இந்த விவாதத்தை முடித்து கொள்வது நல்லது என்று நினைக்கிறேன். நான் என்ன சொன்னாலும் நீங்கள் மாற போவதில்லை, நீங்கள் என்ன சொன்னாலும் நான் மாறப் போவதில்லை. படிப்பவர்கள் பின்னூட்டத்தையும் படித்து அவர்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அந்த நிலை எடுக்கட்டும்.

Anonymous said...

@Vavaal : You are deviating from the main issue , I know that they are many foreign brands in India. I know Nirma's story also, there are many Indian brands like that.Hindustan Lever is part of Unilever (UK/Dutch company.So no surprise that they kill local competition. My concern is not that. My main concern is I don't what foreign supermarkets controlling food prices. I don't care now about shaving blades, washing powder ,cars, phones,pizzas. All I want is the government should protect the basic core of our everyday living ie food,water& energy. Poor people will be screwed badly.

Anonymous said...

http://www.youtube.com/watch?v=-M3AiZlg53c

Watch the link from 1.55 , it will sum up.

Vadivel is India , the stout guy is US /Europe.

One thing is definite ,FDI in retail is bound to happen, no one can stop it. Conglomerates will screw us dry .

வருண் said...

***இத்துடன் இந்த விவாதத்தை முடித்து கொள்வது நல்லது என்று நினைக்கிறேன். நான் என்ன சொன்னாலும் நீங்கள் மாற போவதில்லை, நீங்கள் என்ன சொன்னாலும் நான் மாறப் போவதில்லை. படிப்பவர்கள் பின்னூட்டத்தையும் படித்து அவர்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அந்த நிலை எடுக்கட்டும்.****

That's the "usual conclusion" we come up with after any LONG DEBATE. :-) We keep learning the "same lesson" now and then! lol

SathyaPriyan said...

ப்ரியா கார்த்திக் உங்கள் வீடியோ உதாரணம் சூப்பர். என்ன உண்மையில் நடந்தால் சிரிப்பு வருவதற்கு பதில் வேதனையே மிஞ்சும்.

வருண் சேம் ப்ளட் :-)

வவ்வால் said...

சத்யன்,

நான் ஒரு ரூபா செலவு செய்தாலும் இங்கே புழங்குது என சொன்னால் ஆண்டு முழுவதும் இங்கே புழங்குது, என் 3 வார செலவு ,ஆண்டு வருமானத்தின் அளவுன்னு சொன்னா மிச்ச காசையும் இங்கே புழங்க முடியுமா?

அப்படி இல்லைனா பெருமைக்கு சொல்வதே.

நான் செய்வது உச்ச கட்ட சுரண்டல் அல்ல, இங்கே உள்ள நிலைக்கு என்னவோ அதே செலவழிக்கிறேன்.

இங்கே டிரைவருக்கு என்ன சம்பளமோ எனக்கும் அதே எனில் ,நான் டிரைவராகிடுவேன் :-))

எனக்கு வேலை, அந்தஸ்து முக்கியம் இல்லை,நான் வாழும் அளவுக்கு சம்பளம் ,சம்பளத்துக்கு வாங்க பொருள் கிடைக்கணும்.

அமெரிக்காவில் ஒரு எலெக்ட்ரிசியனுக்கு என்ன வருவாய் என நினைக்கிறீர்கள்?

பிளம்பருக்கு என்ன வருவாய்?

ஹவுஸ் மெயிட் கூட இந்திய மென்பொருள் வல்லுனர் அளவுக்கு வருமானம் ஈட்ட முடியும்.

எந்த விவசாயியும் அமெரிக்காவில் தற்கொலை செய்து கொண்டது இல்லை, அங்கே வால்,ஆர்ட் ஆதி காலம் தொட்டே உள்ளது,

இங்கே இந்தியாவில் சுமார் 10 லட்சம் விவசாயிகள் கடந்த 10-15 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.

காரணம் உரிய விலை இல்லை.

விவசாயிக்கு அதிக விலை கொடுக்க சொல்லவில்லை, விளைச்சலை வாங்கிக்கொண்டாலே போதும், பல சமயம் வாங்கவே மாட்டேன் என சாலையில் கொட்ட வைக்கிறார்கள், சுட்டியுடன் செய்திக்கொடுத்தேன் படிக்க காணோம்.

-----------

ப்ரியா கார்திக்,

நான் விலகவில்லை,

உண்மையான காரணத்தினை புரிந்து கொள்ள வேண்டும்,உற்பத்தி தான் நாட்டின் உண்மையான பொருளாதாரம்,அதனை பல ஆண்டுகளுக்கு முன்னரே சிதைத்து விட்டு வாங்கி விற்பதில் அந்நிய முதலீடு வந்தால் பொருளாதாரம் சிதையும் என்பது சந்தர்ப்பவாதம் இல்லையா?

//My main concern is I don't what foreign supermarkets controlling food prices.//

இந்தியாவில் பொது விநியோக திட்டம் மற்றும், அரசு தானியக்கொள்முதல் உள்ள வரையில் சாமானிய மனிதனின் உணவை யாரும் தட்டிப்பறிக்க முடியாது, பசிக்கான உணவை தாண்டி மற்றவையே அதிகம் செலவு வைக்கிறது.

மேலும் உள்நாட்டு வியாபாரிகள் அந்நியனுக்கு வேலையே வைக்காமல் இது நாள் வரையில் அப்படியான பிரைஸ் கண்ட்ரோல் வேலையை செவ்வனே செய்து வருகிறான் :-))

என்னைப்பொறுத்த வரையில் போட்டி வந்தால் ஒரு விடிவு பிறக்கும்.

போட்டியில் போட்டிப்போட்டு போறாடாம, எப்படி வியாபாரம் செய்ய.

நிர்மா, காரின்னு பல சுதேச நிறுவனங்கள் பன்னாட்டு போட்டியை சமாளிக்கும் போது வியாபாரிகளும் சமாளிக்கட்டும்.

அஜீம்பாஷா said...

உஷ் அப்பா முடியலடா கடவுளே உங்க அண்ணாச்சியும் வேண்டாம் வால் மார்ட் டும் வேண்டாம், நான் சவுதிக்கு போய் carrefour பக்கத்தில் இருக்கிற மலையாளி கடையிலேயே வாங்கிக்கிறேன். ஆளை விடுங்க.

Senthil Kumaran said...

@வவ்வால்,

பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் உளறுவதை என்றைக்கு தான் நீங்கள் விடப் போகிறீர்களோ? இதில் பெரிய அறிவாளி என்ற நினைப்பு வேறு.

நீங்கள் இப்படி சொன்னீர்கள்.

//இந்தியாவில் பிராசஸ்டு மீட், ஃபிஷ் எல்லாம் மக்கள் மோந்து கூட பார்க்க மாட்டார்கள்.//

அதற்கு சத்யப்ரியன் chennaiseafood பற்றி குறிப்பிட்டு

//இப்படி எனக்கு ஒரு வாரத்திற்கு ஒரு டஜன் மெயில்கள் வருகின்றன. இந்தியாவில் இருக்கும் எனது நண்பர்கள் பலர் இவர்களிடம் வாங்கி சாப்பிடுகிறார்கள்.//

என்றார்.

இதன் மூலம் அவர் சொல்ல வந்தது இந்தியர்களும் ப்ராசஸ்டு மீட் சாப்பிட தொடங்கி இருக்கிறார்கள் என்பது தான்.

அதற்கு பதில் சொல்வதை விட்டு விட்டு,

//எனக்கு ஒரு மெயிலும் வரக்காணோம், ஜட்டி வாங்க போனாலும், மெயில் ஐடி, போன் நம்பர் கொடுத்தால் இப்படி வரத்தான் செய்யும்//

என்பது எதற்காக? அவர் ஜட்டி வாங்கும் போது மெயில் ஐடி கொடுத்தால் என்ன இல்லை ஏதாவது குட்டியை ஓக்... போது மெயில் ஐடி கொடுத்தால் உங்களுக்கு என்ன?

//நான் ஒரு ரூபா செலவு செய்தாலும் இங்கே புழங்குது என சொன்னால் ஆண்டு முழுவதும் இங்கே புழங்குது, என் 3 வார செலவு ,ஆண்டு வருமானத்தின் அளவுன்னு சொன்னா மிச்ச காசையும் இங்கே புழங்க முடியுமா?//

அதாவது நீங்கள் உங்கள் டிரைவருக்கு கொடுக்கும் பணம் இந்தியாவிலேயே இருக்கும், ஆனால் அவர் கால் டாக்ஸி டிரைவருக்கு கொடுக்கும் பணம் கால் முளைத்து ஆப்ரிக்கா சென்று விடும்? அப்படித்தானே? சரியான கூமுட்டை தனமாக இருக்கிறதே...

//நான் செய்வது உச்ச கட்ட சுரண்டல் அல்ல, இங்கே உள்ள நிலைக்கு என்னவோ அதே செலவழிக்கிறேன்.

இங்கே டிரைவருக்கு என்ன சம்பளமோ எனக்கும் அதே எனில் ,நான் டிரைவராகிடுவேன் :-))

ஹவுஸ் மெயிட் கூட இந்திய மென்பொருள் வல்லுனர் அளவுக்கு வருமானம் ஈட்ட முடியும்.//

ஆக இந்தியாவில் அப்படி இல்லை என்று நீங்களே சொல்லுகிறீர்கள். அதாவது உங்களுக்கும் உங்கள் டிரைவருக்கும் இடையே உள்ள வருவாய் வித்தியாசம் மிகவும் அதிகம். ஆனால் அவ்வளவு தான் உங்களால் இந்திய நிலையில் கொடுக்க முடியும் என்பதையும் நீங்களே சொல்லுகிறீர்கள்.


//
இங்கே இந்தியாவில் சுமார் 10 லட்சம் விவசாயிகள் கடந்த 10-15 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.

காரணம் உரிய விலை இல்லை.
//
நீங்கள் உங்கள் டிரைவருக்கும், வேலைக்காரிக்கும், உங்கள் சட்டையை ஐயர்ன் செய்பவனுக்கும் ச்ய்வதை தான் அண்னாச்சிகள் விவசாயிகளுக்கு செய்கிறார்கள்.

நீங்கள் பெரிய உத்தமன் போல வாயில் வடை சுட வேண்டாம்.

வவ்வால் said...

செந்தில் குமரன்,

எதுக்கு இப்போ வீணா டென்ஷன் ஆவுறிங்க, எப்போ பேசுவதில் உண்மை இல்லையோ அப்போ தான் கோவம் வரும் :-))

உங்களைப்போன்றவர்களுக்கு பதில் அளிப்பதில்லை, ஆனாலும் இம்புட்டு மெனக்கெட்டு தட்டச்சு செய்திருக்கீங்க, அதற்காகவே பதில் சொல்கிறேன்.

பிஸ்ஸா கூடத்தான் இந்தியாவில் விற்பனை ஆகுது,எனவே எல்லாம் பசிச்சா பிஸ்ஸா சாப்பிடுறாங்கன்னு சொல்லிடுவிங்களா?

அதே போல தான் இப்போ சொல்லுற பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மீன் பற்றிய செய்தியும்.

சூப்பர் மார்கெட்டில் சிக்கன் சாசேஜ் கூட விக்குறான் , ஒரு தடவை வாங்கி டேஸ்ட் செய்துப்பார்த்தேன், அதனால் எல்லாம் சிக்கன் சாசேஜ் வாங்குறாங்க,அதுக்கு பெரிய மார்க்கெட் இந்தியாவில் இருக்குன்னு சொன்னா ஏற்றுக்கொள்வீர்களா?

தர்க்க ரீதியாக பேச வேண்டும், வாய் இருக்குன்னு பேசிக்கிட்டு இருந்தால் வாய் தான் வலிக்கும் :-))

எங்கே ,எப்போ வேண்டுமானாலும் மெயில் ஐ.டி கொடுத்துக்கலாம், ஆனால் இப்படி மெயில் வருது ,நாட்டுல என்னமா முன்னேற்றம்னு பேசுவதை தான் சொல்கிறேன், நல்ல வேலை லண்டன் வங்கியில் பத்து பில்லியன் பவுண்டுகள் இருக்கு வேண்டுமான்னு அழகிய மங்கை அனுப்பும் மடல் எல்லாம் சொல்லாமல் விட்டார்கள் :-))

3 வாரத்தில் செலவு செய்வது இந்தியர்களின் ஆண்டு வருமானத்தை விட கூட எனப்பேசுவது எல்லாம் எந்த வகையோ?

கால் டாக்சி டிரைவருக்கு அந்த 3 வாரத்திலேயே ஒரு ஆண்டுக்கு தேவையான வருமானம் கிடைச்சிடும் இல்ல :-))

கொஞ்சமோ, அதிகமோ இந்தியாவில் செலவு செய்பவர்களால் தான் ஆண்டு முழுவதும் அனைவருக்கும் சீரான வேலை,வருவாய் உருவாகும்.

தீபாவளி அன்று ஒருவர் இருக்கும் நிலையை வைத்து ஆண்டு முழுவதும் புது சொக்கா, இனிப்பு,பட்டாசுன்னு இந்தியாவில் எல்லாம் மகிழ்வாக இருப்பாங்கன்னு நினைக்காம போயிட்டிங்களே :-))

//நீங்கள் உங்கள் டிரைவருக்கும், வேலைக்காரிக்கும், உங்கள் சட்டையை ஐயர்ன் செய்பவனுக்கும் ச்ய்வதை தான் அண்னாச்சிகள் விவசாயிகளுக்கு செய்கிறார்கள். //

ஹி...ஹி இதைத்தான் அடிப்படையே புரியாமல் பேசுவது என்பது.

ஒரு டிரைவரை வாகனம் ஓட்ட செய்து அதன் மூலம் பல மடங்கு சம்பாதிக்கவில்லை, அப்படி செய்தால் நான் அடையும் லாபத்திற்கு ஏற்ப ஊதியம் கொடுப்பேன்.

சட்டை அயர்ன் செய்பவரை வைத்து லாபம் சம்பாதித்தாலும் அப்படியே.

ஆனால் விவசாயி உற்பத்தி செய்யும் பொருளை வாங்கி பல மடங்கு விலை வைத்து விற்கிறார்கள் வியாபாரிகள், எனவே அவர்கள் அடையும் லாபத்திற்கு ஏற்ப கொள்முதல் விலையும் உயர வேண்டும் .

உற்பத்தி,வணிகம், பொருளாதாரம், சுய தேவை என அடிப்படையாக வித்தியாசம் புரிந்து கொண்டு அப்புறமா நான் வடை சுடுவதை பற்றி கவலைப்படுங்க.

SathyaPriyan said...

செந்தில் குமரன்,

இந்த விவாதம் அநாவசிய தலைவலியையே தருகிறது. வவ்வாலுக்கு பதில் கூற முடியாமல் இல்லை, ஆனால் தேவையில்லாத விஷயத்தில் மூளையை செலுத்துவது பயனற்றது.

தயவு செய்து இதை இத்துடன் முடித்து விடுங்களேன்.

அஜீம் பாய், வருகைக்கு நன்றி. பாத்துங்க பெரியார் நீர் விவகாரத்தில் நீங்கள் துரோகம் செய்து விட்டதாக குற்றம் சுமத்த போகிறார்கள் :-)

Senthil Kumaran said...

//
3 வாரத்தில் செலவு செய்வது இந்தியர்களின் ஆண்டு வருமானத்தை விட கூட எனப்பேசுவது எல்லாம் எந்த வகையோ?
//
அடடே அது தான் உங்கள் பிரச்சனையா? பாத்து சார். பொச்செரிச்சல் ஜாஸ்தியானால் மூலம் வந்து விடுமாம்.

வருண் said...

SathyaPriyan:

If you think discussion is ENOUGH as we are not getting anywhere other than getting personal on each other, you could choose the option of "new comments are not accepted" and show the existing comments" for this particular blog post! :-)

Take it easy!

SathyaPriyan said...

நன்றி வருண். அப்படி ஒரு ஆப்ஷன் இருப்பது எனக்கு தெரியாது. ப்ளாக்கரை போய் நோண்டுகிறேன்.

ஆனாலும் பின்னூட்டத்தை மூடுவது எனக்கு சரியாக படவில்லை. ஏனென்றால் பல நேரங்களில் பின்னூட்டத்தில் பலர் பல புதிய தகவல்களை தருகிறார்கள். படிப்பவர்களுக்கு பதிவை விட சில நேரங்களில் பின்னூட்டங்கள் சுவாரசியமாகவும், புதிய தகவல்கள் அளிப்பதாகவும் இருக்கும்.

வவ்வாலே கூட ஒரு முறை அமெரிக்க பொருளாதாரத்தை பற்றி நான் தவறாக கருத்து தெரிவித்து பதிவு போட்ட போது அதை சுட்டிக் காட்டி என்னை திருத்தி இருக்கிறார்.

என்ன இப்போது அவரது கருத்தில் உள்ள நியாயத்தை நான் உணர்ந்த அளவுக்கு எனது கருத்தில் உள்ள உண்மையை அவர் உணர வில்லை அல்லது உணர மறுக்கிறார்.

மற்றபடி வால்மார்ட் வந்தால் இந்தியர்களுக்கு நல்லதல்ல, தீமையே என்று நான் உண்மையாக நம்புகிறேன். நான் நம்பியதை பதிகிறேன். எனது நம்பிக்கை உண்மையாகவும், சரியானதன் மீதும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நானும் மனிதன் தான். தவறான கருத்துகள் இருக்கலாம். தவறான இடத்தில் நம்பிக்கை வைக்கலாம். ஆனால் நம்பிக்கையே என்னை நடத்துகிறது. அது தவறாக இருந்தாலும் கூட. அதை அப்படியே பதிவதில் எனக்கு பயம் ஒன்றும் இல்லை. ஆனால் அது நீங்கள் சொன்னது போல "getting personal" என்ற நிலைக்கு வரும் போது தவிர்ப்பது நல்லது.

ப்ளாக்கரை பற்றி எனக்கு புதிய ஒரு தகவலை பின்னூட்டத்தின் வாயிலாக தந்ததற்கு மீண்டும் உங்களுக்கு நன்றி :-)

Avargal Unmaigal said...

//என்ன இப்போது அவரது கருத்தில் உள்ள நியாயத்தை நான் உணர்ந்த அளவுக்கு எனது கருத்தில் உள்ள உண்மையை அவர் உணர வில்லை அல்லது உணர மறுக்கிறார்.

மற்றபடி வால்மார்ட் வந்தால் இந்தியர்களுக்கு நல்லதல்ல, தீமையே என்று நான் உண்மையாக நம்புகிறேன். நான் நம்பியதை பதிகிறேன். எனது நம்பிக்கை உண்மையாகவும், சரியானதன் மீதும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நானும் மனிதன் தான். தவறான கருத்துகள் இருக்கலாம். தவறான இடத்தில் நம்பிக்கை வைக்கலாம். ஆனால் நம்பிக்கையே என்னை நடத்துகிறது. அது தவறாக இருந்தாலும் கூட. அதை அப்படியே பதிவதில் எனக்கு பயம் ஒன்றும் இல்லை.///

மிக மிக சரியாக சொல்லி இருக்கிறீர்கள்,,,,பின்னூட்டத்தை மூடவேண்டாம் ஆனால் பெர்சனலாக வரும் பின்னுட்டங்களை டெலீட் செய்துவிடுங்கள்....

பாராட்டுக்கள் சத்தியபிரியன்


வால்மார்ட் வந்தால் இந்தியர்களுக்கு நல்லதல்ல, தீமையே என்று நான் உண்மையாக நம்புகிறேன் நானும்தான்

வவ்வால் said...

செந்தில் குமரன்,

இந்தியாவில் பொட்டிக்கடையில் பொட்ட்னம் மடிச்சு சாமான் வாங்கினவன் எல்லாம் வால்மார்ட்டில் எப்படி வாங்கலாம்னு உங்க பொச்சரிப்பும் தெரியுது.

ஒரு பொருள் வாங்கினா பில் தரும் பழக்கம் இல்லை ,சேதம் ஆகி இருக்கு ,வீணா போனது சொன்னால் அதை காது கொடுத்தும் கேட்பதில்லை,விலையை எல்லாம் கூட்டு வச்சு நிர்ணயிப்பது, ஆனால் அவர்களிடம் வாங்க இந்தியர்கள் சபிக்கப்பட்டவர்கள்.

என்னமோ நீங்க காசு கொடுத்து நாங்க செலவு பண்ணப்போறாப்போல ஓசியில உபதேசம்.

என் பணம்,அதுக்கு மதிப்பு கொடுத்து பொருள் விற்றால் வாங்குவோம்.

என் உற்பத்தி அதுக்கு மதிப்பு கொடுத்து வாங்கினால் விற்போம்.

அது யாரா இருந்தாலும் சரி.

வேற யாரோட உபதேசமும் எங்களுக்கு தேவை இல்லை. இங்க வாழும் எங்கள் வாழ்க்கையை எங்களுக்கு தீர்மானிக்க தெரியும்.

Senthil Kumaran said...

Mr. Vovaal eating his own feces or diabolical shit of those who provide him ‘cheap’ products at cheap prices is the last thing I worry about. I care a damn about you, Mr. Vovaal, and your shopping practices. Preaching you what to do is not my business.

People like you self infiltrate yourself in an utopian world and continuously puke in public nauseating others.

What I do care about is my money and my future. I have estates near Coonur and Valparai regions and agricultural lands and coconut farms in and around Pollachi. Last thing I want is Walmart dictating terms and conditions on cultivating in my land.

By the way, thanks for educating me about the status symbol of shopping in the Walmart. Those who know the real Walmart will get anything but jealous of people shopping there.

SathyaPriyan said...

செந்தில் குமரன்,

உங்கள் கருத்துடன் நான் உடன் படுகிறேன். ஆனால் உங்கள் வார்த்தைகள் வேறு விதம் இருக்கின்றன.

//
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

My Translation: Use a word in such away that no other word can win over the said word in the said context.
//

சொற்களை சரியாக பயன்படுத்தவும். குறிப்பாக எனது பதிவில் பின்னூட்டம் இடும் போது தயவு செய்து நாகரீகமான சொற்களை உபயோகிக்கவும்.

வருண் said...

***வேற யாரோட உபதேசமும் எங்களுக்கு தேவை இல்லை. இங்க வாழும் எங்கள் வாழ்க்கையை எங்களுக்கு தீர்மானிக்க தெரியும்.***

செ கு: நான் பார்க்க நம்ம ஊர்ல (தமிழ்நாட்டில்) பிச்சைக்காரனுகளும் இப்படித்தான் வாய்கிழிய பேசிக்கிட்டு திரிவானுக.

"ஏய்! நீ பிச்சை எடுத்து பொழைக்கிறவண்டா! இப்படிலாம் பேசக்கூடாது!"னா.

"எனக்கு பிச்சை போட கோடிப்பேரு இருக்கான். உன் பிச்சையிலேயா நான் வாழ்றேன்"னு பதில் சொல்லுவான்! :)))

பிச்சைக்காரனே அப்படினா, சாதாரண குடிமகன் எப்படி பேசுவான்??

இதையெல்லாம் பார்த்து டென்ஷனாகக் கூடாது, நீங்க!

வருண் said...

***என் பணம்,அதுக்கு மதிப்பு கொடுத்து பொருள் விற்றால் வாங்குவோம்.

என் உற்பத்தி அதுக்கு மதிப்பு கொடுத்து வாங்கினால் விற்போம்.***

எல்லாம் சரிதான், உன் பணம், உன் பொருள், உன் உற்பத்தி! ஆனால் அதை உன்னிடம் வாங்கி உன்னிடமே விற்க, என்னத்துக்கு இடை தரகர், ஒரு வெள்ளைக்காரன் அமெரிக்க பில்லிய்னர் வால்டன் வேண்டிகெடக்கு?

நீ ஒரு வீணாப் போனவன் என்பதால் தானே?? கூட்டக் கழிக்க எல்லாம் தெரியாதா உனக்கு? முட்டாளா நீ?

அப்படினு சொன்னா?

அதுக்கு பதில்>>

// வேற யாரோட உபதேசமும் எங்களுக்கு தேவை இல்லை. இங்க வாழும் எங்கள் வாழ்க்கையை எங்களுக்கு தீர்மானிக்க தெரியும்.//

இவனுகட்ட வாதாடி என்ன செய்ய?

___________

கவனிக்கவும்: He is talking as if he is representing the WHOLE INDIA and every INDIAN. But not every Indian shares his moronic ideas! Not every Indian appreciates "his cocky attitude" of I KNOW EVERYTHING. Right?

Listen!!!! you are not just talking for yourself! You are talking for my family and relatives who live there- who are concerned about Walmart's arrival.

Who the **** are you talk for my family and relative who hates your closed-minded attitude?? Just talk for yourself! Use the word "I" rather than "WE"!