Sunday, May 26, 2013


பனீஷ் மூர்த்தி

பில் கிளின்டன் - மோனிகா லெவன்ஸ்கி விவகாரத்துக்கு பிறகு அதிகமாக இந்திய ஊடகங்களாலும், கார்பரேட் வட்டாரத்திலும் பெரிதாக பேசப்பட்ட விவகாரம் பனீஷ் மூர்த்தி - ரேகா மேக்ஸிமோவிட்ச் விவகாரம் தான்.

இந்த செக்ஸ் விவகாரத்தை விலக்கிவிட்டு பார்த்தால் பனீஷ் ஒரு கார்பரேட் ஐகான். சென்னை IIT யில் இஞ்சினியரிங் படிப்பையும் அஹமதாபாத் IIM இல் MBA படிப்பையும் முடித்தவர். 1995 ஆம் ஆண்டு இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். மிக விரைவில் பல பதவி உயர்வுகளை பெற்று அந்நிறுவனத்தின் போர்ட் ஆஃப் டிரக்டர்களுள் ஒருவராகவும் க்ளோபல் சேல்ஸ் ஹெட் ஆகவும் ஆனார். அவர் சேரும் போது 2 மில்லியன் டாலராக இருந்த அந்நிறுவனத்தின் ஆண்டு வருவாய் சில ஆண்டுகளிலேயே சுமார் 700 மில்லியன் டாலர்களை தொட்டது. அதற்கு காரணம் அவர் தான் என்று அனைவருமே அவருக்கு புகழாரம் சூட்டினர்.

ஆனால் வாழ்க்கை எப்போதும் ஃபேரி டேல் போல இருப்பதில்லையே. பொது வாழ்வில் அல்லது தங்கள் துறையில் பல வெற்றிகளை குவிப்பவர்கள் கூட சில நேரங்களில் தங்களின் சொந்த வாழ்வில் லூசுத்தனமாக ஏதேனும் செய்து விடுவார்கள். அதற்கு காந்தி, எயின்ஸ்டீன் என்று பல உதாரணங்கள் கூறலாம். பனீஷும் அதுமாதிரி ஒரு லூஸுத்தனத்தை செய்தார். அவரிடம் இருந்த காசுக்கு ஒரு ப்ரைவேட் ஜெட்டை எடுத்துக் கொண்டு வேகாஸோ, தாய்லாந்தோ, ஆம்ஸ்டர்டாமோ சென்று தினமும் ஒரு ஹுக்கர் என்று கொட்டம் அடித்து இருக்கலாம். ஆனால் பித்தம் தலைக்கு சென்றதால் தனக்கு கீழே பணி செய்த ரேகா மேக்ஸிமோவிட்ச் மீது கை வைத்து விட்டார்.

பாலியல் தொல்லைக்கு ஆளான ரேகா இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் மீது தொடர்ந்த வழக்கின் காரணமாக இன்ஃபோஸிஸ் நிறுவனம் 3 மில்லியன் டாலர்கள் பணத்தையும் தனது சிறந்த க்ளோபல் சேல்ஸ் ஹெட்டையும் இழந்தது. பனீஷ் அவ்வளவு காலம் சம்பாதித்த பெயரையும், புகழையும் தனது வேலையையும் இழந்தார்.

பனீஷின் காலம் முடிந்தது என்று பலரும் கருதிய போது க்வின்டென்ட் நிறுவனத்தை அவர் தொடங்கினார். தொடங்கிய ஒரே ஆண்டு காலத்தில் அந்நிறுவனத்தை ஐகேட் நிறுவனத்துக்கு விற்றார். கூடவே ஐகேட் நிறுவனத்தின் டிரெக்டர் ஆனார். அவர் சேர்ந்த போது கடும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஐகேட் நிறுவனத்தை லாபமடைய செய்தார். எட்டே ஆண்டுகளில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் கொண்ட நிறுவனமாக மாற்றினார். பாட்னி நிறுவனத்தை ஐகேட் வாங்கியதில் இவரின் பங்கு தான் முக்கியமானது.

இப்படி எல்லாமே நல்லவிதமாக சென்று கொண்டிருக்கும் போது அரிப்பெடுத்தவன் கை சும்மா இருக்காது என்பது போல மறுமுறை கிடைத்த வாழ்வில் பொச்சை மூடிக் கொண்டு இல்லாமல் மீண்டும் தனக்கு கீழே பணி செய்த அராஸெலி ராய்ஸ் என்பவர் மீது கை வைத்திருக்கிறார். ஐகேட் நிறுவனம் அவரை பணி நீக்கம் செய்திருக்கிறது.

வாழ்வில் வெற்றியின் உச்சியில் இருந்து அதள பாதாளத்தில் விழுபவர்கள் அனைவருமே மீண்டும் எழுவது இல்லை. அப்படி பார்த்தால் பனீஷின் வாழ்க்கை நிச்சயம் அனைவருக்கும் ஒரு பாடம் தான். ஆனால் துரதிருஷ்டவசமாக கார்பரேட் வாழ்வில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு அவரின் வாழ்க்கை பாடமாக அமைந்தது போலவே என்ன செய்ய கூடாது என்பதற்கும் அவரின் வாழ்க்கை பாடமாக அமைந்து விட்டது.

தனிப்பட்ட ஒருவர் செய்யும் தவறுகளுக்கு அவர் சார்ந்த நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்றாலும் இந்த விவகாரத்தில் ஐகேட் நிறுவனம் மீதும் தவறு உள்ளதாகவே தெரிகிறது. பனீஷ் மீது செக்ஸ் குற்றச்சாட்டு பதிவான சூழ்நிலையிலும், அவர் மீது அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையிலும், தனது தேவைக்காக அவருக்கு வேலை வாய்ப்பளித்து அவரை பயன்படுத்திக் கொண்டது அந்த நிறுவனம். இப்போது நஷ்டத்தில் இருந்து மீண்ட உடன் பனீஷின் தேவை அந்நிறுவனத்துக்கு தேவை இல்லாமல் போய் விட்டது. அதனால் பணி நீக்கம் செய்திருக்கிறது.

பனீஷால் பாதிக்கப்பட்ட இருவருமே அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் அவரால் இந்தியா போன்ற நாடுகளில் எவ்வளவு பேர் பாதிக்கப் பட்டார்களோ, அதில் எவ்வளவு குற்றச்சாட்டுகள் அமுக்கப்பட்டனவோ, யாருக்கு தெரியும்?

ஆனால் ஒன்று நிச்சயம், கார்பரேட் உலகம் கரும்பு சாறு எடுக்கும் இயந்திரம் போன்றது. நம்மை சக்கையாக புழிந்து தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு பின்னர் துப்பி விடும். நாம் தான் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். முந்தைய இன்ஃபோஸிஸ் வழக்கில் நடந்தது போலவே இதிலும் அவுட் ஆஃப் கோர்ட் செட்டில்மென்ட் தான் நடக்க போகிறது. ஐகேட் நிறுவனமும் சில பல மில்லியன் டாலர்களை நஷ்ட ஈடாக கொடுத்து வழக்கை முடித்துக் கொள்ள போகிறது. நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் லாப தாகம் எடுத்த வேறொரு கார்பரேட் நிறுவனம் பனீஷை வேலைக்கு அமர்த்த தான் போகிறது. அங்கேயாவது அவர் எல்லாவற்றையும் மூடிக் கொண்டிருப்பார் என்று நம்புவோம்.

14 Comments:

வருண் said...

****அவரிடம் இருந்த காசுக்கு ஒரு ப்ரைவேட் ஜெட்டை எடுத்துக் கொண்டு வேகாஸோ, தாய்லாந்தோ, ஆம்ஸ்டர்டாமோ சென்று தினமும் ஒரு ஹுக்கர் என்று கொட்டம் அடித்து இருக்கலாம். ஆனால் பித்தம் தலைக்கு சென்றதால் தனக்கு கீழே பணி செய்த ரேகா மேக்ஸிமோவிட்ச் மீது கை வைத்து விட்டார்.***

I think these s mfs want variety- may be an educated hot-chick or of that sort for flirting and for humping. They wont settle for a whore. They may go even in a bus to grope some stranger. This is different kind of sickness.

I know a Tamil guy who was married and has kids who developed contacts with another unmarried tamil girl. Once he realized that she is an "open-minded" girl, he pretended like a good guy, and contacted her through telephone slowly started flirting with her. Then one day he invited her for a threesome with his wife just like telling a JOKE. She said that he was such a dangerous flirt to deal with!

When she told me about it, I wanted to kill that mother fucker but women dont want to make a big deal out of it, you know.

But if you see him as a "blogger", he will look like a decentest guy in the world. Please dont go and judge people from their "blog behavior"

Anyway, I am not going to give you any names or anything here. This is the kind of world we live.

Would I ever feel Murthy could be innocent?

NOOOO!!!

நண்பா said...

Good Information to Know about him.

Varun,
As you rightly said "This is the Kind of World we Live"..

Arunkumar said...

bro, why no updates?

நண்பா said...

அன்பு நண்பரே,
மாத கணக்கில் மௌனம் ஏனோ?
சிவா.

வெடிகுண்டு முருகேசன் said...

என்னங்க ஒன்னும் எழுதலே? ஆபீஸ்ல ஆணி அதிகமா?

நண்பா said...

அன்பு நண்பரே,
மாத கணக்கில் மௌனம் ஏனோ?
சிவா.

நண்பா said...

அன்பு நண்பரே,
மாத கணக்கில் மௌனம் ஏனோ?
சிவா.

Arunkumar said...

I am waiting

நண்பா said...

Happy New Year!!! Sathya

நண்பா said...

அன்பு நண்பரே,
மாத கணக்கில் மௌனம் ஏனோ?
சிவா.

நண்பா said...

Hi Sathya,

How are you? Hope you are doing well. Take Care. At least respond to this with a Yes :)

Thanks
Siva.

SathyaPriyan said...

Everything is great Siva. Was busy both personally and professionally. I will come back with details soon. Thanks for your concern.

மணவை said...


அன்புள்ள அய்யா,

தங்களின் பதிவுகள் பார்த்தேன். பணியில் இருகையில் ...
அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை ஆரிருள் வைத்துவிடும் என்பதை அருமையாக விளக்கி...அனுபவங்களால் சொல்லி அசத்தி விட்டீர்கள்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in

நண்பா said...

Hi Sathya,

How are you? Again Long Gap..
Take Care...

Thanks
Siva.