Tuesday, July 25, 2006


அழகு


பால காண்டம் --> மிதிலைக் காட்சிப் படலம் --> கன்னிமாடத்தில் நின்ற சீதையின் பேர் எழில்

பாடல் 23

பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை, செஞ் சொற் கவி இன்பம்-
கன்னிம் மாடத்து உம்பரின் மாடே, களி பேடோடு
அன்னம் ஆடும் முன் துறை கண்டு, அங்கு, அயல் நின்றாள்.

பொருள்:
பொன்னின் ஒளியும், மலர்களின் நறுமனமும் சேர்ந்து பொலிவதை போன்றும்; தேனீக்கள் விரும்பி உண்ணும் தேன் போன்றும்; அழகான சொற்களால் ஆன கவிதையின் இனிமை போன்றும்; களிப்பு மிகுந்த பெண் அன்னங்களுடன் அரச அன்னம் அமர்ந்து இருப்பதை போன்றும்; கன்னி மாடத்தின் மீது சீதை தன் தோழியருடன் அமர்ந்திருந்தாள்.

பாடல் 28

அனையாள் மேனி கண்டபின், அண்டத்து அரசு ஆளும்
வினையோர் மேவும் மேனகை ஆதி மிளிர் வேற் கண்
இனையோர், உள்ளத்து இன்னலினோர்; தம் முகம் என்னும்
பனி தோய் வானின் வெண் மதிக்கு என்றும் பகல் அன்றே?

பொருள்:
சீதையின் திருமேனி கண்டபின் தேவலோகத்தில் அரசு புரியும் தேவர்கள் வியந்து போற்றும் மேனகையின் வேல் போன்ற விழிகள் இவளின் அழகுக்கு நாம் ஈடாக மாட்டோம் என்ற வருத்தத்தை காட்டும். அவளது முகமோ பகற்பொழுதில் மங்கி காணப்படும் நிலவைப் போன்று ஒளிகுன்றி காணப்படும்.

ஆரணிய காண்டம் --> சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் --> சீதையின் அழகை சூர்ப்பணகை விரித்துரைத்தல்

பாடல் 74

வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல் ஒக்கும் விழி என்றாலும்,
பல் ஒக்கும் முத்து என்றாலும், பவளத்தை இதழ் என்றாலும்,
சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாதால்; சொல்லல் ஆம் உவமை உண்டோ?
"நெல் ஒக்கும் புல்" என்றாலும், நேர் உரைத்து ஆகவற்றோ!



பொருள்:
சீதை, வில் போன்ற வளைந்த நெற்றியை உடையவள் என்றாலும்; வேல் போன்ற விழிகளை உடையவள் என்றாலும்; முத்துக்களை போன்ற வெண்மையான பற்களை உடையவள் என்றாலும்; பவழத்தை போன்ற சிவந்த இதழ்களை உடையவள் என்றாலும்; சொல் அழகாக இருக்குமே அல்லாது அதில் பொருள் இல்லை. "நெற்கதிரானது புற்களை போன்று இருக்கும்", என்று சொல்வதற்கு ஒப்பானதாகும் அத்தகைய உவமை.

பாடல் 75

இந்திரன் சசியைப் பெற்றான்; இரு-மூன்று வதனத்தோன் தன்
தந்தையும் உமையைப் பெற்றான்; தாமரைச் செங்கணானும்
செந் திருமகளைப் பெற்றான்; சீதையைப் பெற்றாய் நீயும்;
அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலை உனக்கே; ஐயா!

பொருள்:
இந்திரன் சசியையும்; ஆறுமுகன் தந்தையாகிய சிவன் உமையையும்; தாமரை மேல் வீற்றிருக்கும் பெருமாள் பாற்கடல் தந்த திருமகளையும் பெற்றது போல் நீயும் சீதையை உன் துனைவியாக பெற்றால் பெருமை அவளுகல்ல ஐயா! உனக்கே தான்.

மேற் கூறிய செய்யுட்களில் தெரிவது சீதையின் அழகா?,

இல்லை தான் பார்த்தே இராத சீதையின் அழகை தனது புலமையால் வெளிக்கொணர்ந்த கம்பனின் புலமையின் அழகா?,

இல்லை கம்பன் விளையாட களம் கொடுத்த தமிழின் அழகா?

............ தெரியவில்லை.

5 Comments:

குமரன் (Kumaran) said...

சத்யப்ரியன். மிக அருமையாக இருக்கிறது. :-)

SathyaPriyan said...

தங்களது பாராட்டுகளுக்கு நன்றி.

PKS said...

I just stumbled upon your blog today. Very interesting posts. Keep Writing. Liked your letter to Charu.

Thanks and regards, PK Sivakumar

SathyaPriyan said...

Hi PKS,

Thanks for your comments.
Thanks for visiting my blog as well.

Regards,
Sathya

Venkata Ramanan S said...

Azhagu:)