Wednesday, August 02, 2006


இப்படியும் நடக்கலாம் ஜாக்கிரதை!

அலுவலகத்தில் வேலை செய்கிறேனோ இல்லையோ, காலை முதல் வேலையாக அங்கே சென்று விடுவேன். அப்பொழுது தான் ஒரு நிம்மதி. எனது அலுவலகத்தில் உள்ள கழிவறையை தான் சொல்கிறேன். இன்றும் அவ்வாறே நான் சென்று அமர்ந்து இருந்த போது, பக்கத்து அரையிலிருந்து ஒரு குரல் வந்தது.

குரல்:Hello! எப்படி இருக்கே?

பொதுவாகவே கழிவரைகளில் எல்லாம் நான் பேசுவதில்லை. அதுவும் இது தெரியாத குரல். ஆனாலும் அந்த குரலை என்னால் ஒதுக்க முடியவில்லை. அதனால் சிறிது தயக்கத்துடனேயே பதில் கூறினேன்.

நான்:ம்.... நல்லா இருக்கேன்.

உடனே அதற்கு அடுத்த கேள்வி வந்தது.

குரல்:வாழ்க்கை எப்படி போகுது?
நான்:பரவாயில்லை. ஏதோ போய்கிட்டு இருக்கு.
குரல்:அப்புறம், அங்கே என்ன செஞ்சுகிட்டு இருக்கே?

என்னடா கேள்வி இது? இங்கே என்ன புதையலா எடுப்பாங்க? நீ செஞ்சுகிட்டு இருக்கறத தான்டா நானும் செய்யறேன், பரதேசி!

நான்:ஹி ஹி...... சும்மா ஒக்காந்துகிட்டு இருக்கேன்.
குரல்:சரி, நான் அங்கே இப்போ வரட்டுமா?

இதற்கு மேலும் என்னால் அவனுக்கு இடம் கொடுக்க முடியவில்லை. இத்துடன் பேச்சை முடித்து கொள்ளலாம் என்றெண்ணி, பின் வருமாறு கூறினேன்.

நான்:இல்லை. எனக்கு வேறு முக்கியமான வேலை இருக்கு.
குரல் (சற்றே பதற்றமாக):ஹேய்! நான் சொல்றத கேளு. நான் உனக்கு மறுபடியும் கால் செய்யறேன். இங்கே ஒரு முட்டாள் நான் உன் கூட பேசரதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்கான்.

[நன்றி : எனக்கு இதை அனுப்பிய என் நண்பன் ராஜேஷ்]

5 Comments:

Desperado said...

its so-ooooooo funny. i couldn't control laughing. :-)))

SathyaPriyan said...

Thank you for your comments.

che sara sara said...

hey i dont have tamil fonts
i just see ??????

wat to do???????

SathyaPriyan said...

To read Tamil Blogs:

Please go to View --> Encoding in your internet explorer and select Unicode or User Defined.

To write in Tamil:

Please download tamil fonts and key board from here .

வருகைக்கு நன்றி.

துபாய் ராஜா said...

சத்யா,எங்க அலுவலகத்தில் இதுமாதிரி
நகைச்சுவை அடிக்கடி நடக்கிறது.