Wednesday, October 15, 2008


Population Zero

சென்ற வாரம் National Geographic தொலைக்காட்சியில் Aftermath Population Zero என்ற ஒரு அற்புதமான நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. அதாவது ஒரு நாள் காலை மனிதர்கள் எல்லாம் உலகிலிருந்து மறைந்து விட்டால் என்ன ஆகும் என்பது தான் நிகழ்ச்சியின் கரு.

வட அமெரிக்காவை மட்டும் மூலமாக எடுத்துக் கொண்டு அட்டகாசமாக தயாரிக்கப்பட்ட இரண்டு மணி நேர நிகழ்ச்சி. முதலில் உணவு இல்லாமல் தவிக்கும் வளர்ப்பு பிராணிகள், விலங்கியல் பூங்காவிலிருந்து மின்சார வேலி பழுதானதால் உடைத்துக் கொண்டு வெளி வரும் வன விலங்குகள் என்று ஆரம்பமே படு அமர்க்களம். உணவினை தேடி வீதிக்கு வரும் சிங்கமும் நாயும் சந்தித்துக் கொள்கின்றன. எலிகள் பெரிய பெரிய மளிகை கடைகளில் தஞ்சம் புகுகின்றன.

சுமார் 7 நாட்கள் வரை தானியங்கி முறையில் இயங்கும் அணுமின் நிலையங்கள் எட்டாவது நாளில் தனது செயல்பாடை இழந்து உலகமே சந்தித்திராத அணுச்சிதைவு நடக்கின்றது. அருகில் உள்ள மரங்கள், விலங்குகள் அனைத்தும் இறக்கின்றன. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானில் நடந்த குண்டு வெடிப்பை காட்டிலும் சுமார் 1000 மடங்கு அதிகமான சேதம் ஒவ்வொரு அணு உலையிலும் நடக்கிறது.

நதிகள் அணைகள் அனைத்தையும் உடைத்துக் கொண்டு பயணிக்கின்றன. இரவில் விளக்குகள் இல்லாத காரணத்தினால் பறவைகள் பறக்கும் பொழுது விளக்குகளை நட்சத்திரமாக எண்ணி குழப்பிக் கொள்ளாமல் தங்கள் இலக்குகளை அடைகின்றன.

230 ஆண்டுகளில் அணு உலை வெடிப்பினால் நிகழ்ந்த சேதங்கள் அனைத்தும் துடைக்கப்படுகின்றன. Global Warming முற்றிலும் ஒடுக்கப்படுகின்றது. காற்றும் நீரும் தூய்மையடைகிறது. குறிப்பாக Manhattan நகரமே அடர்ந்த காடாக மாறுகிறது.


மேலே மனிதர்கள் மறைந்த சுமார் 80 ஆண்டுகளுக்கு பின்னர் இருக்கும் Manhattan மாநகரம்.

Statue of Liberty உடைந்து போகிறது. மனிதர்கள் வானத்தில் விட்டு சென்ற 25000 த்திற்கும் மேற்பட்ட செயற்கை கோள்கள் வெடித்து சிதறுகின்றன. நதிகள் அணைகளை உடைத்துக் கொண்டு பயணிப்பதால் பல பாலை வனங்கள் சோலைகளாகின்றன. பல புதிய ஏரிகள் உருவாகின்றன.

பல புதிய விலங்கினங்களும் உருவாகின்றன. ஓநாயும் நாயும் புணர்ந்து புதிய வகை உயிரினங்கள் வருகின்றது. ஆனாலும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத Stainless Steel பொருட்களும், கை தொலைபேசிகளும், மற்ற பிளாஸ்டிக் பொருட்களும் மனிதர்கள் விட்டுச் சென்ற அடையாளங்களாக நம்மை மிரட்டுகின்றன.

"It took thousands of years for Human to conquer the earth from the nature. It only takes a couple of hundred years for the nature to regain it back" என்று முடிகிறது அந்த நிகழ்ச்சி.

நிகழ்ச்சியை பார்த்த பின் எனக்கு தோன்றியது இது தான். "Nature is above everyone. Toughest species survive." இது தான் அந்த நிகழ்ச்சியில் நான் கற்றுக் கொண்ட பாடம். பொருளாதார வீழ்ச்சியில் உலகமே தவித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் எனக்கு தேவையான பாடமாகவும் அது அமைந்தது.

8 Comments:

மொக்கைச்சாமி said...

நல்ல அப்செர்வ் பண்ணி எழுதிஇருக்கீங்க. நல்லா இருக்கு.

SathyaPriyan said...

//
மொக்கைச்சாமி said...
நல்ல அப்செர்வ் பண்ணி எழுதிஇருக்கீங்க. நல்லா இருக்கு.
//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மொக்கைச்சாமி.

Rajarajan Kannan said...

Yes. it is really nice.
If you imagine, from how many billion years the earth was there without life. I saw one document which the depictes as below.

|---------------------------------------------------------------------------------------------------------------------------.|

- denotes, time without living things on earth since from big bang.
. denotes, time with living things.

Unimaginable..

Write more.

Radha Sriram said...

சத்யா உங்கள கூப்ட்ருக்கேன் இங்க வந்து பாருங்க..
http://radhasriram.blogspot.com/2008/10/blog-post.html

SathyaPriyan said...

//
mappla said...
Yes. it is really nice.
If you imagine, from how many billion years the earth was there without life.

Unimaginable..
//
Very true. Unimaginable...........

//
Write more.
//
Thank you for your visit and comments.

//
Radha Sriram said...
சத்யா உங்கள கூப்ட்ருக்கேன் இங்க வந்து பாருங்க..
http://radhasriram.blogspot.com/2008/10/blog-post.html
//
ஆஹா ஆப்பு வச்சுட்டீங்களே ராதா. சினிமா பத்தி தானே நாம வாய் கிழிய பேசுவோமே. எழுதிட்டா போச்சு.

Raveendran said...

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது , தொடந்து எழுதுங்கள் ...

SathyaPriyan said...

//
Raveendran said...
உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது , தொடந்து எழுதுங்கள் ...
//
மிக்க நன்றி Raveendran.

jas said...

priyan....can u give any link for this program?????