Wednesday, July 29, 2009


வந்தேன், வந்தேன், மீண்டும் நானே வந்தேன்.

வணக்கம் நண்பர்களே!,

நலமா? உங்களை எல்லாம் சந்தித்து பல மாதங்களாகிறது. பெரிதாக ஒன்றும் காரணம் இல்லை. ஒரு விதமான சோம்பல். அதனால் ஒரு சிறிய இடைவெளி. அவ்வளவே.

இந்த இடைவெளியில் வாழ்க்கையில் ஒன்றும் பெரிதாக மாறுதல் ஏற்படவில்லை. முன்போலவே சுவையானதாக இருக்கின்றது. சில புதிய நண்பர்களை பெற்றேன். ஆன்மீகத்தில் சிறிது நம்பிக்கை கூடியது. வியாழன் தோறும் ஷீரடி சாயி பாபா கோவிலுக்கு சென்று பஜனையில் கலந்து கொள்கிறேன்.

நீண்ட நாள் இடைவெளி விட்டு சந்திக்கும் பொழுது வெறும் கையுடன் சந்திக்க வேண்டாம் என்பதற்காக நான் சென்ற ஆண்டு நியூசிலாந்து சுற்றுப் பயணம் செய்த பொழுது எடுத்த சில படங்களை இணையத்தில் சேர்த்துள்ளேன்.

கிழே உள்ள சுட்டியில் அவற்றினை நீங்கள் பார்க்கலாம்.

நியூசிலாந்து படங்கள்

இன்னும் ஓரிரு வாரங்களில் எனது நியூசிலாந்து பயணத்தினை பற்றிய ஒரு சிறு பதிவினை எழுதுகிறேன்.

இவன்,
சத்யப்ரியன்

3 Comments:

தமிழ் said...

வருக வருக‌

CVR said...

வாங்க வாங்க...
Nice to have you back :)

SathyaPriyan said...

நன்றி திகழ்மிளிர், CVR.

CVR நலமா? நெடுநாட்கள் ஆகிவிட்டன.