Saturday, March 31, 2012


பொடிமாஸ் - 03/31/2012

அம்மாவும் உடன் பிறவா சகோதரியும் மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். எதிர் பார்த்தது தான். அவர்களுக்குள் என்ன நடந்தது என்று அவர்களுக்கே தெரியும். இனி அம்மாவின் செயலை நம்பி சசிகலாவிற்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு ஆப்பு தான். சோ இதற்கு என்ன சொல்வார் என்று தெரிந்து கொள்ள ஆவல். ஏதேனும் சொல்லி பூசி மூடுவார். "தாயுள்ளம் கொண்டு துரோகத்தை மன்னித்தார்" என்று கூறினாலும் வியப்பு இல்லை. அந்த அளவிற்கு இப்பொழுதெல்லாம் அவர் ஜெயலலிதா ஜால்ரா போடுகிறார்.



தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்ந்து விட்டது. இதுவும் எதிர் பார்த்தது தான். இடை தேர்தலுக்காகவே உயர்த்தாமல் இருந்தார்கள். தேர்தல் முடிந்த உடன் உயர்த்தி விட்டார்கள். ஆனாலும் கர்நாடகா மற்றும் ஆந்திராவை ஒப்பிடுகையில் தமிழகத்தில் மின்சார கட்டணம் மிகவும் குறைவு தான். அதிக கட்டணம் வசூலித்தாலும் தடையில்லாத மின்சாரம் அளித்து தொலைத்தால் நல்லது.



அடுத்த வாரம் IPL போட்டிகள் தொடங்குகின்றன. தமிழகத்தில் மின்சார உபயோகம் பல மடங்கு அதிகரிக்கும். நிச்சயம் மின்வெட்டும் அதிகரிக்கும். கோடை காலம் வேறு. நினைத்தாலே பயமாக இருக்கிறது. இந்த மே மாதம் முழுவதும் இந்தியா செல்வதாக ஒரு திட்டம் இருந்தது. இப்பொழுது 10 மணி நேர மின்வெட்டை நினைத்து பயணத்தை வருட இறுதிக்கு ஒத்தி வைத்திருக்கிறோம்.



திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே. என். நேருவின் இளைய சகோதரர் ராமஜயத்தின் மரணம் அதிர்ச்சியை கொடுக்கிறது. அதை விட அதிர்ச்சி தினமலரிலும் தினகரனிலும் அவரது கொலையை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ள திருச்சி மக்களின் மனநிலை. நான் திருச்சியை விட்டு வெளிவந்து பத்தாண்டுகளுக்கு மேலாகிறது. அதனால் திருச்சியின் இன்றைய நிலை குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் கருத்து தெரிவித்துள்ள பலரும் திருச்சியை திருப்பாச்சியில் பேரரசு காட்டிய சென்னைக்கு நிகராக கூறி இருக்கிறார்கள். உண்மையாக இருக்கும் பட்சத்தில் மிகவும் பயமாக இருக்கிறது. விரைவில் குற்றவாளிகள் பிடிபட வேண்டும். அப்பொழுது தான் உண்மை தெரியும்.



ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மனோவிற்கும் புஷ்பவனம் குப்புசாமிக்கும் சண்டை நடப்பது போல ஏதோ ஒன்று காட்டுகிறார்கள். இன்னும் நிகழ்ச்சியை முழுதாக நான் பார்க்கவில்லை. காசுக்காக பிரபலங்கள் தங்களது டிக்னிட்டியை குறைத்துக் கொள்கிறார்கள். மானம் போனால் உயிர் போகும் என்ற காலம் போய், மானம் போனால் மயிர் தான் போகும் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிரபலங்களிடம் மட்டும் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்.



இன்று அமெரிக்காவில் கடந்த ஒரு வார காலமாக இருந்த லாட்டரி மேனியா ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. சுமார் 3200 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள லாட்டரி பரிசு மூன்று பேருக்கு விழுந்திருக்கிறது. இதுவரை உலகில் வழங்கப்பட்டுள்ள லாட்டரி பரிசுகளிலேயே இதுதான் அதிகமானது. உலக சாதனை. டிக்கெட்டை வாங்க அமெரிக்கா முழுதும் மக்கள் வரிசைகளில் அடித்து பிடித்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு நிமிடத்தில் சராசரியாக சுமார் 3 லட்சம் லாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை இந்த குலுக்கலில் பரிசு யாருக்கும் விழாமல் இருந்திருந்தால் அடுத்த குலுக்கலுக்கு பரிசுத்தொகை 5000 கோடியை தொட்டிருக்கும்.





நான் சரக்கடித்து விட்டு வாந்தி எடுத்து நெடுநாட்கள் ஆகிவிட்டன. ஆனால் நேற்று இரவு திடீரென்று அடித்த சரக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஒரே வாந்தி. இன்று முழுதும் ஹேங்கோவர் வேறு. எப்பொழுதும் அடிக்கும் ப்ராண்ட் தான். என்ன எழவோ தெரியவில்லை. இன்று திடீரென்று சுத்தி விட்டது. ஒரு வேளை எனக்கு வயசாகி விட்டதோ என்னவோ.

Puking is the worst side effect of drinking alchohol; probably the best too.



சமீபத்தில் தான் மஹேஷ் பாபு நடித்த அத்தடு படம் முழுதும் பார்த்தேன். படம் அட்டகாசம். மஹேஷ் பாபுவின் ஸ்க்ரீன் ப்ரெஸன்ஸ் அருமை. இது அவருக்கான டெய்லர் மேட் படம். படம் கமர்ஷியலாக பெரிய வெற்றி இல்லை என்று கூறுகிறார்கள். ஒரு வேளை அதனால் தமிழில் விஜய் நடிக்கவில்லையோ என்னவோ. ஒரு வேளை நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


4 Comments:

sponsor said...

இப்படி ஒரு பக்க வடிவமைப்பை இப்போத்தான் பார்கிறேன் கூல்
சிராஜ்
www.malartharu.com

SathyaPriyan said...

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி sponsor. தொடர்ந்து வாருங்கள்.

SathyaPriyan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Kalee J. தொடர்ந்து வாருங்கள்.

Anonymous said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...