Thursday, January 24, 2013


I Support Kamalhaasan


நாட்டில் போராடுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்க ஒரு சினிமாவை பிடித்துக் கொண்டு தொங்கும் நிகழ்வுகள் வேதனை அளிக்கின்றன.

படத்தை தடை செய்தால் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களின் நிலை மாறிவிடுமா? இல்லை படம் வெளியானால் தான் அவர்கள் நிலை மாறி விடுமா? இரண்டும் இல்லை. இன்று படம் வெளியாகவில்லை என்றால் இன்னும் ஒரு வாரத்திற்கு பின்னர் படம் வெளியாகத்தான் போகின்றது.

சென்சார் போர்டு சான்று பெற்ற படங்களை தனிக் குழுக்கள் போராட்டம் என்று பயம் காட்டி தடை செய்யலாம் என்ற நிலை நிச்சயம் ஆரோக்கியமானது இல்லை. பெரும்பாலான இந்தியர்கள் மத நல்லிணக்கத்துடன் தான் வாழ்கிறார்கள். ஒரு படம் வந்து இந்த நல்லிணக்கத்தை கெடுத்து விடும் என்பதெல்லாம் சரியான பேத்தலாக இருக்கிறது.

போராட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டவர்களுக்கு படம் ஒரு சாக்கு. அவ்வளவு தான். அப்படி சட்டம் ஒழுங்கு பிரச்சனையோ, இல்லை போராட்டமோ வந்தால் அதை அடக்குவது அரசின் வேலை.

இந்த நிலை தொடர்ந்தால் பெரும்பாலான படங்களின் நாயகர்களாக நடிக்கும் ஆண்களையே நல்லவர்களாக காட்டுகிறார்கள் என்று பெண்கள் அமைப்பும், வில்லன்களாக நடிக்கும் ஆண்களையே கெட்டவர்களாக காட்டுகிறார்கள் என்று ஆண்கள் அமைப்பும் போராட தொடங்கி விடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. சினிமா என்பது பொதுபுத்தியை காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு காலத்தில் சினிமாவில் வில்லன்களுடன் வரும் குறைந்த ஆடை உடுத்திய பெண்களை கிருத்துவர்களாகவே காட்டினார்கள். அவர்கள் பெயர் ஸ்டெல்லா, ரீட்டா என்று ஏதாவது தான் இருக்கும். அதற்காக படம் பார்க்கும் அனைவரும் கிருத்துவர்களை அப்படியா நினைத்துக் கொண்டார்கள்.

படத்தை பார்க்காமல் கருத்து தெரிவிப்பது சரி கிடையாது. அது படத்தின் தடையை ஆதரிப்பவர்களுக்கும் பொருந்தும் படத்தின் தடையை எதிர்ப்பவர்களுக்கும் பொருந்தும். ஒரு வேளை படத்தில் இஸ்லாமியர்களை புண்படுத்துவது போல காட்சிகள் இருந்தால் படத்தை இக்னோர் செய்துவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்.

அரசு இயந்திரத்தில் லஞ்ச ஊழலையும், மருத்துவமும், கல்வியும் வியாபாரமாகி விட்டதையும், ஜாதி மத வெறிகளையும், உணவு பொருட்களில் கலப்படத்தையும், விவசாயம் அழிந்து கொண்டிருப்பதையும், மனிதம் செத்துவிட்டதையும் இக்னோர் செய்வோம், ஆனால் திரைப்படத்தில் எங்களுக்கு பிடிக்காத காட்சிகள் வந்தால் தெருவில் இறங்கி போராடுவோம் என்ற நிலை நகைப்பாக இருக்கிறது.

கீழே இருப்பது படத்தின் தடை குறித்து திரைத்துறையை சேர்ந்த ஒரு சிலர் எழுதிய ட்வீட்டுகள்.

Prakash Raj: BAN on Vishwaroopam. NOT FAIR. This cultural terrorism should stop. We should stand for the right to express. We are with you Kamal sir. When Tamil, Telugu and Hindi three censor boards of this democratic country has cleared Vishwaroopam. Where does this ban come from???
Spoke to distributors and people of Malaysia. It’s a Muslim country and the censor board has cleared Vishwaroopam, released the film today. People who saw the film in Malaysia say there is nothing against Muslims to worry. It’s a wonderful film by Kamal sir is someone listening?

Mahesh Bhatt: It clearly stated that once the Censor Board has cleared the film for public viewing, screening of the same cannot be prohibited. The Supreme Court order had quashed the decision of the Uttar Pradesh State Govt suspending the screening of the film ‘Aarakshan’ in UP.

Madhur Bhandarkar: I’m appalled by the TN Govt’s decision to ban Kamal Haasan’s Vishwaroopam. After the film has passed by the censor board. Not done!!!

Shirish Kunder: Kamal Haasan is no stranger to opposition in his creative endeavours.

Shekhar Kapur: For a man facing a ban on his film and loss of over 60cr, Kamal Haasan has the calm look of a man who completely who believes in what he is doing. I stand up for Kamal Haasan right to show the world Vishwaroopam and let the people decide, especially after Censor Board has passed the film. You?

ஆரூர் மூணா செந்திலின் பதிவில் கருத்து தெரிவித்த பதிவர் அஞ்சா சிங்கம் "பாருங்க ரஜினி ரசிகரை கமல் ரசிகராக மாத்தீட்டாங்க. அப்படியே நடுநிலை ஆளுங்களை இந்துத்துவா வாதிகளாக மாற்றும் வரை ஓயாமாட்டாங்க போல் இருக்கு." என்றார். அது கூட பரவாயில்லை. ஒரு வேளை "I support Kamalhaasan" என்பதை "I support Modi" என்று மாற்றி தொலைத்து விட்டால்?

4 Comments:

சார்வாகன் said...

வணக்கம் நண்பரே,
அருமை நான் கமலை ஆதரிக்கிறேன்!! நன்றி!!

ராஜ நடராஜன் said...

It is quite interesting to see few names of cine intellectuals who support Kamal.

Senthil Kumaran said...

பதிவுக்கு நன்றி. I support Kamal.

SathyaPriyan said...

வருகைக்கு நன்றி சார்வாகன், ராஜ நடராஜன், மற்றும் Senthil Kumaran.