Friday, May 10, 2013


சற்றே அவசரமான ஒரு இந்திய பயணம்

பதிவெழுதி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது. தனி மடலிலும், பின்னூட்டத்திலும் ஏன் தாமதம் என்று நண்பர்கள் விசாரிக்கிறார்கள். வேறு ஒன்றும் இல்லை. சில தனிப்பட்ட காரணங்களில் சற்று பிஸியாக இருந்தேன். இடைப்பட்ட காலத்தில் பதிவும் அவ்வளவாக படிக்க இயலவில்லை.

கல்லூரியில் எனது நெருங்கிய நண்பன் இவன். நான்கு ஆண்டுகளாக என்னுடன் படித்தவன். ஒரே வகுப்பு, ஒரே பெஞ்ச். லண்டனில் இருந்தான். துரதிருஷ்டவசமாக விவாகரத்து செய்து விடும் சூழ்நிலை. இந்தியா திரும்பி விட்டான். அவனது மனைவியும் (முன்னாள்) எனது நெருங்கிய நண்பியே. கல்லூரியில் இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

யார் மீது தவறு யார் செய்தது சரி என்றெல்லாம் எனக்கு தெரியாது, நான் இருவரிடமும் என்ன நடந்தது என்று கடைசி வரை கேட்கவே இல்லை. எட்டு வருட அமெரிக்கா வாசம் எனக்கு முக்கியமாக கற்றுக் கொடுத்தது அடுத்தவரின் தனிப்பட்ட விஷயங்களை கேட்பது அநாகரீகம் என்பதே. ஆனாலும் அவன் தனியாக இந்தியாவில் இருந்தது எனக்கு சற்று கஷ்டமாக இருந்தது. அதனால் இந்தியா சென்று அவனுடன் சில நாட்களை செலவிட விரும்பினேன்.

திடீர் என்று முடிவு செய்து ஒரு வார பயணம் மேற்கொண்டேன். ப்ரணவ் இல்லாமல் தனியாக பயணம் செய்வது ஒரு மிகப் பெரிய லக்ஷுரி. விமானம் ஏறியதுமே ஒரு ரெண்டு லார்ஜ் விட்டுக் கொண்டு தூங்கி விடலாம். பெரிய மூட்டை முடிச்சுக்களுடன் செல்ல தேவை இல்லை. அவனுக்கு இந்தியாவில் சாப்பாடு ஒத்துக் கொள்ளுமா, வெதர் ஒத்துக் கொள்ளுமா என்ற கவலை எல்லாம் இல்லை.

எப்போதும் லுஃப்தான்ஸாவில் தான் பயணம் செய்வேன். இம்முறை கத்தாரில். லுஃப்தன்ஸாவை விட நன்றாகவே இருந்தது. சுமார் 300 படங்களுக்கு மேல் லைப்ரரியில் இருந்தன. பல தொலைக்காட்சி தொடர்கள் வேறு. 20 மணி நேர பயணம் போனதே தெரியவில்லை. போகும் போது ஆர்கோவும், ஸ்கை ஃபாலும் பார்த்தேன்.

ஒரு சூப்பர் ஃபிகர் பக்கத்தில் வந்து அமர்ந்தது. பேசலாம் என்று நினைக்கும் போது டமரூகம் படத்தை பார்க்க தொடங்கியது. யப்பா சாமி தப்பித்தேன் என்று நினைத்து வேறு பக்கம் திரும்பி கொண்டேன்.

சென்னை விமான நிலையத்தை புதிதாக கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். நன்றாக இருந்தது. இறங்கியதும் நண்பன் ஒருவன் வந்து என்னை அழைத்து சென்றான். முதல் நாள் அவனது வீட்டில் என்னை அவனது படுக்கை அறையில் படுக்க வைத்து விட்டு அவர்கள் தங்கள் ஒரு வயது குழந்தையுடன் தரையில் படுத்துக் கொண்டார்கள். மிகவும் கஷ்டமாக இருந்தது. தங்கமணியிடம் சொல்லி அடுத்த நாள் ரெசிடென்சியில் அறை ஏற்பாடு செய்து விட்டேன். அதில் அவனுக்கு சிறிது கோபமும் கூட.

அடுத்த ஒரு வார காலத்துக்கு சென்னையின் சுமார் 20, 25 பப்களை நாங்கள் நண்பர்கள் அனைவரும் சுற்றி சுற்றி வந்தோம். ஒரு சில பப்களில் ஒரு லார்ஜ் 2000 ருபாய் வரை விற்கிறார்கள். கூட்டம் அம்முகிறது. எல்லாம் பெத்தவன் காசு என்று நினைத்துக் கொண்டோம்.

நடுவில் இரண்டு நாட்கள் திருச்சி சென்று அப்பாவையும் அம்மாவையும் பார்த்து விட்டு வந்தேன். அவர்களிடம் நண்பனின் விவாகரத்தை பற்றி சொல்ல வில்லை. சொன்னால் மிகவும் வருத்தப் படுவார்கள். திருச்சி செல்லும் போது முதலில் ஸ்பைஸ் ஜெட்டில் தான் பதிவு செய்திருந்தான். ஆனால் கடைசி நேரத்தில் தான் விமானம் தாமதமாக புறப்படுகிறது என்று சொன்னார்கள். உடனே ஜெட் ஏர்வேஸில் பதிவை மாற்றி விட்டேன். அப்போது ஸ்பைஸ் ஜெட் நிறுவன அலுவலகத்தில் ஒரு பெரிசு இந்துவில் எழுதுவேன் சந்துவில் எழுதுவேன் என்று கத்திக் கொண்டிருந்தார். அந்த பெண்களும் அவருக்கு பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனக்கு பார்க்கவே பாவமாக இருந்தது.

விமானம் ரத்தானால் இவர்கள் என்ன செய்வார்கள். அடிக்கும் வெய்யிலில் பத்துக்கு பத்து அறையில் தடியான கோட் சூட் போட்டுக் கொண்டு குளிர் சாதன வசதி இல்லாமல் அவர்கள் எல்லாம் வேலைக்கு வருவதே பெரிய சேவை. இதில் இப்படி பயணிகளின் டார்ச்சர் வேறு. திருச்சி விமான நிலையம் முன்னர் பார்த்ததற்கு இப்போது மிகவும் நன்றாக இருக்கிறது. நல்ல வசதியாக மாற்றி விட்டார்கள். திருச்சியில் 8 மணிநேரம் மின்சாரம் ரத்தாகிறது. ஃபேன் போட்டால் அணல் காற்று அடிக்கிறது. நல்ல வேளை குழந்தையை அழைத்து செல்லவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

ராமதாஸ் கைது பரபரப்பாக இருந்தது திருச்சியில். திருச்சி சிறையின் வழியாகத்தான் விமான நிலையத்துக்கு செல்ல வேண்டும் என்பதால் வாகனங்களை கடுமையாக சோதித்து கொண்டிருந்தார்கள். மக்கள் தொலைக்காட்சியில் கொங்கு வேளாள கட்சியை சேர்ந்தவர் ஒருவர் வந்து உயர் சாதி பெண்களை தலித்துகள் மயக்குவது குறித்து காட்டமாக கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தார். "உயர் சாதி பெண்கள்", "உயர் குல பெண்கள்", "உயர் வகுப்பு பெண்கள்" என்று நான் பார்த்த 15 நிமிடங்களில் 20 முறைக்கு மேல் சொல்லி இருப்பார். அதற்கு மேல் என்னால் பார்க்க இயலவில்லை. இட ஒதுக்கீடு தேவைப் படும் போது நாங்கள் ஒதுக்கப்பட்டவர்கள், மற்ற நேரத்தில் நாங்கள் உயர் வகுப்பினர். We are the biggest hypocrites.

ஒரு வார பயணம் முடிந்து சென்ற வாரம் அமெரிக்கா வந்து விட்டேன். கடுமையாக ஊர் சுற்றியதில் உடல் சோர்வு மிக அதிகமாக இருக்கிறது. சிறிது ஓய்வெடுத்துக் கொண்ட பிறகு உங்களை மீண்டும் வந்து டார்ச்சர் செய்கிறேன். This post is only to say I am alive, hale and healthy.

5 Comments:

நண்பா said...

Good to Hear U R Back!!! :)
I have been regular checking your blog for any updates..
Cheers...

நண்பா said...

Good to Hear U R Back!!! :)
I have been regular checking your blog for any updates..
Cheers...

துளசி கோபால் said...

மீண்டும் இங்கே கண்டதில் மகிழ்ச்சி.

// 20 மணி நேர பயணம் போனதே தெரியவில்லை.//

ஆமாம்... இது எங்கிருந்து எங்குவரை?

SathyaPriyan said...

@Siva,

Thanks bro.

@டீச்சர்,
வாஷிங்டன் டிசியில் இருந்து தோஹாவிற்கு 14 மணிநேரம், ட்ரான்ஸிட் 2 மணி நேரம், தோஹாவிலிருந்து சென்னைக்கு 4 மணி நேரம், ஆக மொத்தம் சுமார் 20 மணி நேர பயணம்.

துளசி கோபால் said...

ஆஹா.... இப்போ புரிஞ்சு போச்சு:-)

டேங்கீஸ்...