Wednesday, February 29, 2012


நடிகர் விஜய்க்கு ஆப்படித்த தமிழக முதல்வர்

ஆமாம் மக்களே தமிழகமே இந்த நம்பிக்கை துரோகத்தை நினைத்து வெம்பிக் கொண்டிருக்கிறது. அம்மையாரை ஆட்சிக் கட்டிலில் ஏற்றி அழகு பார்த்த நமது தளபதிக்கு அவர் இழைத்த துரோகத்திற்கு பரிகாரமே கிடையாது. என்ன துரோகம் என்று அறிய மேலே படியுங்கள்.

கடந்த பத்து ஆண்டுகளாகவே SMS களில் அதிக கலாய்ப்புக்கு ஆளானவர் நனது இளைய தளபதி தான். இளைய தளபதியை கலாய்த்து SMS அனுப்பாத நாட்கள் எல்லாம் வீணாய் போன நாட்கள் என்று என்று ஒரு கூட்டமே ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஃபேஸ் புக்கிலும், ஆர்குட்டிலும், ட்விட்டரிலும், ஈமெயிலிலும் தீயாய் வேலை செய்தார்கள் அவர்கள். அப்படிப்பட்ட கூட்டத்தினால் முடி சூடா மன்னனாக விளங்கியவர் நமது இளைய தளபதி. இப்படி இருந்த நிலையில், யார் கண் பட்டதோ தெரியவில்லை. கடந்த ஓரிரு மாதங்களாக அவரது ஆளுமை குறைந்து அந்த இடத்தை தமிழக மின்சார வாரியம் பிடித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த ஒரு வார காலத்தில் எனது கண்ணில் பட்ட ஜோக்குகள் இவை.

ஈபி ரிப்போர்ட்:

தமிழகத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை.

2007 - 75
2008 - 15
2009 - 05
2010 - 00

ங்கொய்யால கரண்ட் இருந்தாதானேடா..........



ஏன் சார்? ஃப்யூஸ் புடுங்கி ஒரு வாரம் ஆச்சு. இன்னும் பில் பணம் கட்டாமல் இருக்கீங்க.

சாரி சார். கரண்ட் கட்டுன்னு சும்மா இருந்துட்டேன்.




நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி. விளையாட ஆர் யூ ரெடி?

எங்கள் வீட்டுக்கு எப்பொழுது மின்சாரம் வரும்?

1. எனக்கு தெரியாது
2. உனக்கு தெரியாது
3. ஈபிக்கு தெரியாது
4. யாருக்குமே தெரியாது



வரும், ஆனா வராது - இது என்ன?

கரண்ட் பில் வரும், ஆனா கரண்ட் வராது.



"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" இது பழமொழி. "கரண்ட் உள்ள போதே தூங்கிக்கொள்" இது புது மொழி.



சென்ற வாரம் நாஸா இரவு நேரத்தில் எடுத்த புகைப்படம்.



4 Comments:

Thangavel Manickam said...

வேதனைக்கிடையில் புன்னகை.

Vel said...

Hi, I live in Herndon, VA and would like to talk to you regarding a magazine. Can you please send me your contact information?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

good

SathyaPriyan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தங்கவேல், வேல் மற்றும் யோகன். மீண்டும் வாருங்கள்.