Thursday, March 27, 2008


ரங்க பவனம் - I

டிஸ்கி 1: நண்பர்களே! இது எனது முதல் கதை முயற்சி. முதல் முயற்சியில் பெரும்பாலானவர்களை போல நானும் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையிலேயே கதையை எழுதி இருக்கிறேன். இக்கதையில் நிகழும் சம்பவங்கள் அனைத்தும் பெரும்பாலும் உண்மையானவை. அங்கங்கே மானே! தேனே! பொன் மானே! எல்லாம் சேர்த்திருக்கிறேன்.

டிஸ்கி 2: இது சத்தியமாக என்னுடைய கதை அல்ல. (இது தங்கமணிக்கு)



"Bharghav! இன்னிக்கு night என்ன plan? Are you going out somewhere?" என்றாள் தீபா. தீபா நாராயணன் அந்த பொறியியல் கல்லூரியில் முதல் ஆண்டு ECE பிரிவில் படிக்கும் மாணவி. பார்கவ் நடராஜன் அதே கல்லூரியில் முதல் ஆண்டு Computer Science படிக்கும் மாணவன்.

பார்கவ், தீபா இருவரும் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருச்சியில் தான். பார்கவ் திருச்சி திருவாணைக்காவல் பகுதியில் வசிப்பவன். தீபா திருவரங்கத்தில் வசிப்பவள். இவன் படித்தது திருச்சி R.S.K. பள்ளியில். அவள் படித்தது திருச்சி S.V.S. பள்ளியில். பார்கவினுடைய தந்தை திருச்சியில் உள்ள ஒரு பெரிய மகளிர் கல்லூரியின் தாளாளர். அது போக அவருக்கு முன்று பள்ளிகளும் ஒரு ஆண்கள் கலை கல்லூரியும் கூட இருந்தது. திருச்சியில் அவர் ஒரு VIP. இவன் அவருக்கு ஒரே மகன். நல்ல வசதியான குடும்பம். தீபாவின் தந்தை நியூசிலாந்தில் ஆக்லாந்து பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருப்பவர். வருடம் ஒரு முறை விடுமுறைக்கு இந்தியா வருவார். தீபா, அவளது அக்கா சௌம்யா மற்றும் அவளது தாயார் மூவரும் மட்டும் திருச்சியில் வசிக்கிறார்கள். சௌம்யா திருச்சி SRC கல்லூரியில் B.Com. இறுதி ஆண்டு படிப்பவள்.

வேறு வேறு துறையாக இருந்தாலும் முதல் ஆண்டில் அனைத்து பிரிவினரும் கலந்தே வகுப்பில் சேர்க்கப்படுவார்கள். இரண்டாம் ஆண்டில் தான் தத்தம் பிரிவுகளுக்கு செல்வார்கள். அவ்வாறு ஒரே வகுப்பில் சேர்க்கப் பட்டவர்கள் தீபாவும் பார்கவ்வும்.

முதல் நாளில் பார்த்து "Hi" சொல்லிக் கொண்டாலும் பெரிதாக நட்பு ஒன்றும் அவர்களுக்கிடையில் அமையவில்லை. ஆனால் இருவரின் பெயரும் அகர வரிசையில் அடுத்தடுத்து வந்தமையால், அனைத்து லேப் களிலும் இருவரும் ஒரே குழுவில் இருக்க வேண்டியதாயிற்று. அப்படியே பேசிப் பழகி ஒரே மாதத்தில் இருவரும் இணைபிரியா நண்பர்களாகி விட்டனர்.

"எதுக்கு Deepi? I don't have any plans.", என்றான் பார்கவ். அவன் 'Deepi' என்று தான் அவளை அழைப்பது வழக்கம். "இல்லே, அப்பா ஊர்லேந்து வந்துருக்காரு. அதான். If you are free, can you join us for the dinner?" "Sure. ஆனா இப்போ என்ன திடீர்னு வந்துருக்காரு? Normal ஆ spring break July - August லே தானே வரும்? நீ படிச்சது போதும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு வந்துட்டாரா?" "அய்யே, ஜோக்காக்கும். ஏதோ summer school break ஆம் பா. உன்னை பார்க்கனும்னு சொன்னாரு. சௌம்யா கூட project முடிஞ்சு இங்கே வந்துட்டா. அவளும் உன்னை பார்த்தது இல்லையே. Can you come?"

தீபாவுடன் பழகிய இந்த மூன்று மாதங்களில் பல முறை அவளது வீட்டிற்கு அவனும் அவனது வீட்டிற்கு அவளும் வந்திருந்தாலும், அவளது தாயாரை தவிர வேறு யாரையும் அவன் பார்த்ததில்லை. சௌம்யா ஏதோ project சம்பந்தமாக அப்பொழுது சென்னை சென்றிருந்தாள். "சரி Deepi, ரெண்டு பேரும் வந்துருக்காங்க இல்லே. கட்டாயம் வர்றேன்." "Okie Bharghav, Let's meet at 7 O' Clock. வீட்டுக்கு வந்துடு." "Sure".

அன்று மாலை கல்லூரி விட்ட உடன் நேராக வீட்டிற்கு வந்தான் பார்கவ். "என்னடா! மழை வர மாதிரி இருக்கு? இன்னிக்கு எங்கயும் பொறுக்காம சீக்கிரம் வந்துட்ட" என்ற பாட்டியின் நக்கலை அவன் பொருட்படுத்தவில்லை. "டேய்! Paramesh phone பண்ணினான். ஏதோ பேசனுமாம்." என்று சமையலறையிலிருந்து வந்த அம்மாவின் குரலையும் அவன் சட்டை செய்யவில்லை.

சீக்கிரமே தனது அறைக்கு சென்று குளித்து விட்டு வந்த அவன் "அம்மா! இன்னிக்கு Deepa dinner க்கு கூப்பிட்டுருக்கா. அவ அப்பாவும் அக்காவும் வந்துருக்காங்களாம். போய்ட்டு வந்துடறேன். Bye!" "டேய்! உனக்காக வாழைப்பூ பருப்புசிலியும், மோர் குழம்பும் பண்ணி இருக்கேன்டா. சாப்பிடலேன்னு சொன்னா என்ன அர்த்தம்?" என்ற அவனது தாயாரின் குரல் அவனது வேகத்தை சற்றும் குறைக்கவில்லை. வேகமாக தனது யமஹாவை உதைத்து சாலையில் இறங்கி தீபாவின் வீட்டிற்கு விரைந்தான் பார்கவ்.

11 Comments:

துளசி கோபால் said...

அதென்ன நியூஸி, ஆக்லாந்து பல்கலை? கதைதானே? கேண்டர்பரி யூனின்னு போட்டுருக்கக்கூடாது? கொஞ்சம் நல்லா இருந்துருக்குமே:-)))

இங்கே வருசாந்திர லீவு யூனிக்கு டிசம்பர்,ஜனவரி & ஃபிப்ரவரிதான்.

அங்கங்கே சில ன்,ண் பயன்களில் பிழை இருக்கு. அதைக் கொஞ்சம் கவனிங்க. இல்லேன்னா பருப்புசிலியில்
கல் இருக்கும்:-)

CVR said...

//டிஸ்கி 2: இது சத்தியமாக என்னுடைய கதை அல்ல. (இது தங்கமணிக்கு)////

ஹி ஹி!!
ஓகே ஓகே!!
அப்போ அண்ணி கிட்ட ஒத வாங்கற ரேஞ்சுக்கு கதை டெவலப் ஆக போகப்போகுதுன்னு தெரியுது!!!

ஹ்ம்ம்
அடுத்து என்ன ஆகப்போகுதுன்னு பாக்கலாம்!! ;)

SathyaPriyan said...

//
துளசி கோபால் said...
அதென்ன நியூஸி, ஆக்லாந்து பல்கலை? கதைதானே? கேண்டர்பரி யூனின்னு போட்டுருக்கக்கூடாது? கொஞ்சம் நல்லா இருந்துருக்குமே:-)))
//
அடுத்த கதையில அப்படி போட்டுட்டா போச்சு.

//
அங்கங்கே சில ன்,ண் பயன்களில் பிழை இருக்கு. அதைக் கொஞ்சம் கவனிங்க. இல்லேன்னா பருப்புசிலியில் கல் இருக்கும்:-)
//
முடிந்த வரை திருத்தி விட்டேன்.

//
இங்கே வருசாந்திர லீவு யூனிக்கு டிசம்பர்,ஜனவரி & ஃபிப்ரவரிதான்.
//
ஆமாம் கதை நடப்பதும் அந்த கால கட்டத்தில் தான். எங்களுக்கு முதல் ஆண்டு பொறியியல் படிப்பு தொடங்கியது செப்டம்பர் மாதம். அதிலிருந்து மூன்று மாதங்கள் கழித்து நடந்தவை :-)

அது சரி டீச்சர் பழமொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராயக் கூடாது.

//
CVR said...
ஹி ஹி!!
ஓகே ஓகே!!
அப்போ அண்ணி கிட்ட ஒத வாங்கற ரேஞ்சுக்கு கதை டெவலப் ஆக போகப்போகுதுன்னு தெரியுது!!!
//
நாங்கல்லாம் முன் ஜாக்கிரதை முத்தண்ணா அப்படீன்னு தெரியாதா?

கோபிநாத் said...

தல...தொடர் கதையா!!...சூப்பர் கலக்குங்க ;))

கடைசி ரெண்டு பத்தி படிக்கும் போது அப்படியே எங்க வுட்டு ஞாபகம் தான் வந்தது ;))

கோபிநாத் said...

\\CVR said...
ஹி ஹி!!
ஓகே ஓகே!!
அப்போ அண்ணி கிட்ட ஒத வாங்கற ரேஞ்சுக்கு கதை டெவலப் ஆக போகப்போகுதுன்னு தெரியுது!!!
//
நாங்கல்லாம் முன் ஜாக்கிரதை முத்தண்ணா அப்படீன்னு தெரியாதா?\\

ஹி..ஹி..ஹி..அப்போ அண்ணி EDIT செய்த பிறகு தான் பதிவுல வருதா!? ;))

SathyaPriyan said...

//
கோபிநாத் said...
தல...தொடர் கதையா!!...சூப்பர் கலக்குங்க ;))
//
நன்றி தலைவா.

//
கடைசி ரெண்டு பத்தி படிக்கும் போது அப்படியே எங்க வுட்டு ஞாபகம் தான் வந்தது ;))
//
உண்மைய சொல்லுங்க கடைசி பத்தி படிக்கும் போதா முதல் பத்தி படிக்கும் போதா?

//
ஹி..ஹி..ஹி..அப்போ அண்ணி EDIT செய்த பிறகு தான் பதிவுல வருதா!? ;))
//
அப்படி எதுவும் இல்லாததுனாலதான் ஒரு டிஸ்கி போட்டேன்.

Radha Sriram said...

அடேங்கப்பா திருவானைகாவலிலிருந்து RSK போய் படிக்கரானா பார்கவ்?? ரொம்ப ஆதர்ஸ மாண்வனா இருப்பான் போலருக்கே?கதையை தொடரவும்:):)

SathyaPriyan said...

//
Radha Sriram said...
அடேங்கப்பா திருவானைகாவலிலிருந்து RSK போய் படிக்கரானா பார்கவ்?? ரொம்ப ஆதர்ஸ மாண்வனா இருப்பான் போலருக்கே?
//
ஆஹா!, அவன நல்ல பையன்னு சொன்ன முதல் ஆள் நீங்களா தான் இருப்பீங்கன்னு நினைக்கறேன்
:-)

//
கதையை தொடரவும்:):)
//
நன்றி.

SathyaPriyan said...

Radha! கேக்கனும்னு நினைச்சேன், திருச்சிய பத்தி பதிவுல ஏதாவது இருந்தா தான் இந்த பக்கம் வரனும்னு இருக்கீங்களா?

Vino said...

//டிஸ்கி 2: இது சத்தியமாக என்னுடைய கதை அல்ல. (இது தங்கமணிக்கு)//

naanga nambittom aaana avanga :-)!

btw where is the language translator it was awesome

SathyaPriyan said...

//
Vino said...
naanga nambittom aaana avanga :-)!
//
இப்படியெல்லாம் ஏத்தி விடலாமா. யுத்த பூமியில காத்து வாங்க வாக்கிங் போறவங்க நாங்க :-)

//
btw where is the language translator it was awesome
//
ஆஹா! அது உங்களுக்கு பயன்பட்டதா. அதை புதிய template ல் சேர்ப்பதில் சிறிது சிரமம் இருக்கிறது. திங்களன்று சேர்க்க முயற்சிக்கிறேன்.