Wednesday, November 23, 2011


Why this கொலவெறிடி?

அது 2003 ஆம் ஆண்டு. காதல் கொண்டேன் பார்த்து விட்டு இருபது வயதே ஆன தனுஷின் நடிப்பை பார்த்து வியந்தேன். தனுஷ் யாரென்று சட்டென்று தெரியாத நிலையில், துள்ளுவதோ இளமையின் மஹேஷ் தான் இவர் என்று புரிந்தது. அடுத்து வந்தது திருடா திருடி. திருச்சியில் எடுத்திருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே ஏழு முறை ஒரே வார இடைவெளியில் பார்த்தேன்.

அடுத்தடுத்து அவர் கொடுத்த மொக்கைகளால் இவர் ஒரு டம்மி பீஸ் என்று கருதிய பொழுது அவரது திருமண அறிவிப்பு வந்தது. அடடா! சூப்பர் ஸ்டார் மாப்பிள்ளை ஒரு சப்பை ஸ்டாரா? என்று நினைத்தேன். அதன் பிறகு கூட தொடர்ந்து மொக்கை படங்களையே கொடுத்து வந்தார். பாலு மஹேந்திராவின் "அது ஒரு கணா காலம்" மற்றும் செல்வராகவனின் "புதுப்பேட்டை" ஆகிய படங்கள் கூட இவருக்கு கமர்ஷியலாக கை கொடுக்க வில்லை. ஆனால் இவரின் நடிப்பு திறமை மட்டும் தெளிவாக தெரிந்தது.

பின்னர் வந்தது திருவிளையாடல் ஆரம்பம். கமர்ஷியல் சரவெடி. பின்னர் பொல்லாதவன். அட்டகாசமான படம். குறிப்பாக திரைக்கதை அட்டகாசம். அதன் பின்னர் இவருக்கு ஏறுமுகம் தான். சென்ற ஆண்டு ஆடுகளம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்று விட்டார். மிகக் குறைந்த வயதில் இதை பெற்ற நடிகர் இவரே.

இவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது இவர் ஒரு இயக்குனரின் நாயகன் என்பதே. இவரை வைத்து படம் எடுத்த இயக்குனர்கள் மறுமுறை இவரையே வைத்து இயக்க யோசித்தது இல்லை. அது செல்வராகவனாக இருக்கட்டும், மித்ரன் ஜவஹராக இருக்கட்டும், சுப்ரமணியம் சிவாவாக இருக்கட்டும், பூபதி பாண்டியனாக இருக்கட்டும், வெற்றி மாறனாக இருக்கட்டும் அனைவரும் இவரை வைத்து இரு படங்களாவது இயக்கி இருக்கிறார்கள்.

இப்பொழுது மயக்கம் என்ன படத்தில் பாடல்கள் எழுதுவதுடன், பாடவும் செய்கிறார். இந்த நேரத்தில் இவர் முதலில் பாடிய "நாட்டு சரக்கு" பாடல் படு திராபை என்பதை பதிவு செய்கிறேன்.



இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தை மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவையும் ஒரு புயல் தாக்கிக் கொண்டிருக்கிறது. அது "Why this கொலவெறிடி?" புயல். பாடல் அட்டகாசமாக இருக்கிறது. பாடல் வரிகளை பற்றிய விமர்சனமெல்லாம் எனக்கு இல்லை. இவர்கள் என்ன தொல்காப்பியமா படைக்கிறார்கள்? பாடல் கேட்டால் பிடிக்க வேண்டும். மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்க வேண்டும். சில நேரங்களில் போதை ஏற்ற வேண்டும். மார்கழி குளிரில், பின்னிரவில், பகார்டியை லெமன் ஜூஸ் கலந்து நாலு ரவுண்டு அடித்து விட்டு, வென்னிலா ஃப்ளேவர்டு சுருட்டை பற்ற வைத்து இழுத்தால் ஒரு போதை வருமே, அப்படி ஒரு போதை இதில் வருகிறது.

நன்றி தனுஷ். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

3 Comments:

shabi said...

இவரை வைத்து படம் எடுத்த இயக்குனர்கள் மறுமுறை இவரையே வைத்து இயக்க யோசித்தது இல்லை. அது செல்வராகவனாக இருக்கட்டும், மித்ரன் ஜவஹராக இருக்கட்டும், சுப்ரமணியம் சிவாவாக இருக்கட்டும்,//// subramaniya siva dhanushai vaithu iyakkiya irandavathu padathin peyar enna

SathyaPriyan said...

Seedan. Dhanush made an extended cameo.

SathyaPriyan said...

Thanks for visiting. Please visit often.