வாழ்வில் சில நேரங்களில் நாம் சிறிதும் விரும்பாமல் நம்மிடம் வரும் சில உறவுகள் நம்மை அப்படியே ஆட்கொண்டு விடுகின்றன. நான் கடந்த இரு ஆண்டுகளாக அதனை உணர்ந்து வருகிறேன். திருமணம் முடிந்து சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக என் மனைவி என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தது ஒரு நாய் குட்டி.
சிறு வயதில் இருந்தே எனது மனைவிக்கு நாய் என்றால் கொள்ளை ஆசை. ஆனால் எனக்கோ நாய் என்றாலே அலர்ஜி. சிறு வயதில் என் வீட்டின் எதிர் வீட்டில் இருந்தவர்கள் ரெக்ஸி என்றொரு நாய் வளர்த்தார்கள். கன்று உயரத்தில் இருக்கும் அதனை பார்த்தாலே எனக்கு சிறுநீர் வந்து விடும்.
ஒரு கட்டத்தில் இனி இதனை தள்ளி போடுவது இயலாத செயலாக தோன்றவே, தங்கமணி திருமண சட்டத்தின் படி நாய் வாங்க ஒப்புக் கொண்டேன். அதன் பிறகே என்ன நாய் என்ற கேள்வி வந்தது. எனது மனைவிக்கு ஜெர்மன் ஷெப்பர்டு அல்லது லாப்ரடார் வகை நாய்களே அதிகம் பிடித்தது. எனக்கோ அவைகளை கண்டால் ஜன்னி வந்து விடுகிறது. சரி மீண்டும் தொலைகிறது என்று நாங்கள் இருந்த இடத்தில் இருந்து சுமார் 100 மைல் தொலைவில் ரிச்மண்ட் என்ற ஒரு இடத்தில் இருந்த ஒரு ப்ரீடரிடம் சென்று ஒரு லாப்ரடார் குட்டியை பார்த்தோம். கருப்பு நிறத்தில் இரண்டு மாதங்களே ஆன அழகான ஒரு குட்டி. அதனை பார்த்ததும் எடுத்து என் மடியில் வைத்துக் கொண்டேன், சிறிது நடுக்கத்துடன். சிறிது நேரம் கழித்து அந்த குட்டியின் தந்தையை பார்க்கும் ஆசையை எனது மனைவி வெளியிட வந்தான் Goose.
கருப்பு சிங்கம் போல் இருந்தான். அவனின் வயது ஒன்று. சரி நமது குட்டி இவன் உயரம் வளர எவ்வளவு நாள் ஆகும் என்று கேட்க அவர்கள் இன்னும் ஐந்து அல்லது ஆறு மாதங்களில் அவன் வளர்ந்து விடுவான் என்று கூற எடுத்தேன் ஓட்டம். வீட்டிற்கு வந்து தான் நின்றேன்.
அதன் பிறகு எனது மனைவியுடன் பேசி குட்டியாகவே இருக்கும் நாய்கள் என்றால் எனக்கு பயமில்லை என்று உதார் விட்டேன். சத்தியமாக எனக்கு அப்பொழுது தெரியாது, பிறந்தது முதல் இறக்கும் வரை குட்டியாகவே இருக்கும் நாய்கள் பல உண்டு என்று.
உடனே என் மனைவி பல வகை நாய்களை பார்த்து கடைசியில் மால்டீஸ் வகை நாய் ஒன்றை வாங்கலாம் என்று முடிவு செய்தார். இம்முறை செல்ல வேண்டிய இடம் இன்னும் சற்று தொலைவு. டெலவேர் என்ற ஒரு இடம். பரீட்சைக்கு செல்லும் ஒரு விதமான மன நிலையுடனேயே நாய் வாங்க சென்றேன். மனதில் சொல்ல முடியாத ஒரு பயம் இருந்தது. வாங்கப் போவது ஒரு உயிர். பிடிக்கவில்லை என்றால் தூக்கி வீச முடியாது. காலையும், மாலையும், இரவிலும் மூன்று வேளையும் வெளியில் அழைத்து செல்ல வேண்டும். குளிர், மழை பார்க்க முடியாது. குடும்பத்துடன் நினைத்த நேரத்தில் வெளியூர் செல்ல முடியாது. அலுவல் முடிந்ததும் நேராக வீட்டிற்கு வர வேண்டும். அங்கே இங்கே சுற்ற முடியாது. இப்படி முடியாதுகள் பல. இதெல்லாம் என்னால் முடியுமா என்ற கேள்வியே மனதில் தொக்கி நின்றது.
ஆனாலும் மனதில் லேசாக ஒரு நப்பாசை. அந்த லாப்ரடார் குட்டியை வேண்டாம் என்று சொன்னது போலவே இதனையும் வேண்டாம் என்று கூற ஒரு காரணம் கிடைக்காதா என்பது தான் அது.
ஒரு வழியாக டெலவேர் சென்று அந்த குட்டியை பார்த்தோம். மூன்று மாதங்கள் ஆன குட்டி. உள்ளங்கை அளவே இருந்தான். பார்த்த உடன் பிடித்து எனது மனைவி வாங்கி விட்டார். காற்று போன பலூன் போல் ஆகி விட்டேன். வீட்டிற்கு திரும்பும் வழியில் எனக்கு அழுகையே வந்து விட்டது. சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனாலும் அந்த நாளை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை.
அவனுக்கு Monty என்று பெயர் வைத்தோம். முதல் இரு வாரங்களுக்கு எனக்கும் சரி, அவனுக்கும் சரி புதிய இடம்/உறவு என்பதால் சிறிது பயமும் படபடப்பும் இருந்தன. எனது மனைவிதான் அலுவலகத்திற்கு இரு வாரங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு அவனை பார்த்துக் கொண்டார். பின்னர் அவனை மெதுவாக தடவுதலில் தொடங்கி, வெளியில் அழைத்து செல்லுதல், குளிப்பாட்டுதல், பல் துலக்கி விடுதல், விளையாடுதல், கொஞ்சுதல் என்று படிப் படியாக உயர்ந்து இன்று என் வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகி விட்டான் Monty.
இன்று Monty யையும் எனது மகனையும் என்னால் வேறுபடுத்தி பார்க்கவே இயலவில்லை. எனது மகனை எனக்கு அளித்ததற்காக எனது மனைவிக்கு எவ்வளவு கடன் பட்டிருக்கிறேனோ அதே அளவிற்கு Monty யை வீட்டிற்கு அழைத்து வந்ததற்காகவும் கடன் பட்டிருப்பதாக உணர்கிறேன். Monty - ஒரு அருமையான அனுபவம்.
வீட்டிற்கு வந்த முதல் வாரத்தில்:

இப்பொழுது:

சிறு வயதில் இருந்தே எனது மனைவிக்கு நாய் என்றால் கொள்ளை ஆசை. ஆனால் எனக்கோ நாய் என்றாலே அலர்ஜி. சிறு வயதில் என் வீட்டின் எதிர் வீட்டில் இருந்தவர்கள் ரெக்ஸி என்றொரு நாய் வளர்த்தார்கள். கன்று உயரத்தில் இருக்கும் அதனை பார்த்தாலே எனக்கு சிறுநீர் வந்து விடும்.
ஒரு கட்டத்தில் இனி இதனை தள்ளி போடுவது இயலாத செயலாக தோன்றவே, தங்கமணி திருமண சட்டத்தின் படி நாய் வாங்க ஒப்புக் கொண்டேன். அதன் பிறகே என்ன நாய் என்ற கேள்வி வந்தது. எனது மனைவிக்கு ஜெர்மன் ஷெப்பர்டு அல்லது லாப்ரடார் வகை நாய்களே அதிகம் பிடித்தது. எனக்கோ அவைகளை கண்டால் ஜன்னி வந்து விடுகிறது. சரி மீண்டும் தொலைகிறது என்று நாங்கள் இருந்த இடத்தில் இருந்து சுமார் 100 மைல் தொலைவில் ரிச்மண்ட் என்ற ஒரு இடத்தில் இருந்த ஒரு ப்ரீடரிடம் சென்று ஒரு லாப்ரடார் குட்டியை பார்த்தோம். கருப்பு நிறத்தில் இரண்டு மாதங்களே ஆன அழகான ஒரு குட்டி. அதனை பார்த்ததும் எடுத்து என் மடியில் வைத்துக் கொண்டேன், சிறிது நடுக்கத்துடன். சிறிது நேரம் கழித்து அந்த குட்டியின் தந்தையை பார்க்கும் ஆசையை எனது மனைவி வெளியிட வந்தான் Goose.
கருப்பு சிங்கம் போல் இருந்தான். அவனின் வயது ஒன்று. சரி நமது குட்டி இவன் உயரம் வளர எவ்வளவு நாள் ஆகும் என்று கேட்க அவர்கள் இன்னும் ஐந்து அல்லது ஆறு மாதங்களில் அவன் வளர்ந்து விடுவான் என்று கூற எடுத்தேன் ஓட்டம். வீட்டிற்கு வந்து தான் நின்றேன்.
அதன் பிறகு எனது மனைவியுடன் பேசி குட்டியாகவே இருக்கும் நாய்கள் என்றால் எனக்கு பயமில்லை என்று உதார் விட்டேன். சத்தியமாக எனக்கு அப்பொழுது தெரியாது, பிறந்தது முதல் இறக்கும் வரை குட்டியாகவே இருக்கும் நாய்கள் பல உண்டு என்று.
உடனே என் மனைவி பல வகை நாய்களை பார்த்து கடைசியில் மால்டீஸ் வகை நாய் ஒன்றை வாங்கலாம் என்று முடிவு செய்தார். இம்முறை செல்ல வேண்டிய இடம் இன்னும் சற்று தொலைவு. டெலவேர் என்ற ஒரு இடம். பரீட்சைக்கு செல்லும் ஒரு விதமான மன நிலையுடனேயே நாய் வாங்க சென்றேன். மனதில் சொல்ல முடியாத ஒரு பயம் இருந்தது. வாங்கப் போவது ஒரு உயிர். பிடிக்கவில்லை என்றால் தூக்கி வீச முடியாது. காலையும், மாலையும், இரவிலும் மூன்று வேளையும் வெளியில் அழைத்து செல்ல வேண்டும். குளிர், மழை பார்க்க முடியாது. குடும்பத்துடன் நினைத்த நேரத்தில் வெளியூர் செல்ல முடியாது. அலுவல் முடிந்ததும் நேராக வீட்டிற்கு வர வேண்டும். அங்கே இங்கே சுற்ற முடியாது. இப்படி முடியாதுகள் பல. இதெல்லாம் என்னால் முடியுமா என்ற கேள்வியே மனதில் தொக்கி நின்றது.
ஆனாலும் மனதில் லேசாக ஒரு நப்பாசை. அந்த லாப்ரடார் குட்டியை வேண்டாம் என்று சொன்னது போலவே இதனையும் வேண்டாம் என்று கூற ஒரு காரணம் கிடைக்காதா என்பது தான் அது.
ஒரு வழியாக டெலவேர் சென்று அந்த குட்டியை பார்த்தோம். மூன்று மாதங்கள் ஆன குட்டி. உள்ளங்கை அளவே இருந்தான். பார்த்த உடன் பிடித்து எனது மனைவி வாங்கி விட்டார். காற்று போன பலூன் போல் ஆகி விட்டேன். வீட்டிற்கு திரும்பும் வழியில் எனக்கு அழுகையே வந்து விட்டது. சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனாலும் அந்த நாளை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை.
அவனுக்கு Monty என்று பெயர் வைத்தோம். முதல் இரு வாரங்களுக்கு எனக்கும் சரி, அவனுக்கும் சரி புதிய இடம்/உறவு என்பதால் சிறிது பயமும் படபடப்பும் இருந்தன. எனது மனைவிதான் அலுவலகத்திற்கு இரு வாரங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு அவனை பார்த்துக் கொண்டார். பின்னர் அவனை மெதுவாக தடவுதலில் தொடங்கி, வெளியில் அழைத்து செல்லுதல், குளிப்பாட்டுதல், பல் துலக்கி விடுதல், விளையாடுதல், கொஞ்சுதல் என்று படிப் படியாக உயர்ந்து இன்று என் வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகி விட்டான் Monty.
இன்று Monty யையும் எனது மகனையும் என்னால் வேறுபடுத்தி பார்க்கவே இயலவில்லை. எனது மகனை எனக்கு அளித்ததற்காக எனது மனைவிக்கு எவ்வளவு கடன் பட்டிருக்கிறேனோ அதே அளவிற்கு Monty யை வீட்டிற்கு அழைத்து வந்ததற்காகவும் கடன் பட்டிருப்பதாக உணர்கிறேன். Monty - ஒரு அருமையான அனுபவம்.
வீட்டிற்கு வந்த முதல் வாரத்தில்:
இப்பொழுது:
1 Comments:
ச்ச..சான்சே இல்லை.எவ்வளவு அழகு இந்த Monty..என் மகன் நச்சரிப்பால் இப்போ லாப்ரடார் வகை நாய் ஒரு வருடமாய் எங்கள் வீட்டில்.ரியோ ரொம்ம்ம்ப வளர்ந்துட்டான்.
Post a Comment