Wednesday, February 01, 2012


Anniversary

சரியாக இன்றுடன் அது நடந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன. அது எது என்று கேட்கிறீர்களா? பொதுவாக ஆண்களுக்கு வெளியாட்கள் ஆப்படிக்க தேவையே இல்லை. நாமே சென்று ஆப்புகள் எங்கே இருக்கிறது என்று தேடித் தேடி அமர்ந்து கொள்வோம். அப்படி நானே தேடி நமக்கு நாமே திட்டத்தில் வைத்துக் கொண்ட ஆப்பு தான் அது. உங்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும், வேறு என்ன? திருமணம் தான் அது.

எட்டு ஆண்டுகள் ஓடியதே தெரியவில்லை. பல இனிமையான பொழுதுகள். சில மறக்க நினைக்கும் நிகழ்வுகள். இன்றைய தினமும் அப்படி ஒரு இனிமையான பொழுதாக அமைந்தது. என்றைக்கும் இல்லாத திருநாளாக இன்று தங்கமணி சமையலறையில் நுழைந்து தடால் புடால் என்று ஏதேதோ செய்தார். தங்கமணி சுத்த சைவ பட்சிணி ஆனதால் நிற்பது, நடப்பது, தாவுவது, ஓடுவது, பறப்பது, மிதப்பது ஒன்றும் இல்லை. ஆனாலும் நெடு நாட்களுக்கு பிறகு அருமையான மாலைப் பொழுதில் கிடைத்த அருமையான ஒரு உணவு.

இதோ கீழே உங்கள் பார்வைக்கு.


ஃப்ரூட் கேக்




கோபி மன்ச்சூரியன்




ஃப்ரைட் ரைஸ்




பன்னீர் பட்டர் மசாலா




தயிர் சாதம்




ரசமலாய்


4 Comments:

கோவி.கண்ணன் said...

நல்வாழ்த்துகள்

SathyaPriyan said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கோவி. கண்ணன். தொடர்ந்து வாருங்கள்.

Arunkumar said...

Congrats annathe, items soooper looking :-)

SathyaPriyan said...

நன்றி தலைவா. கேக் மட்டும் Wegmans இல் வாங்கியது. மற்றதெல்லாம் வீட்டில் செய்தது.